Friday, July 3, 2015

வாறன் பப்பெடின் 3 வெற்றி ரகசியங்கள்

நம்மில் பெரும்போலோர், குறிப்பாக வாழ்கையில் கடை நிலையில் இருந்து  வளர நினைப்பவர்கள், பலவாறான  கஷ்டங்களும், துன்பங்களும் தமக்கு மட்டுமே நடப்பதாக நினைப்பதுண்டு. துன்பங்கள், துயரங்கள்  எல்லோருடைய  வாழ்கையிலும் நடப்பதுதான், எல்லோருக்கும்  பொதுவான ஒரே விஷயம் என்ன வென்றால் , ஒவ்வொருவர்  வாழ்க்கையில் அவரரவர் சூழ்நிலைக்கு ஏற்ப  கூடுதல் குறைவாக இருக்கும்.

நமக்கு முன்பே பலகோடி மக்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் ,  நம்மைப்போலவே அவர்களும் துன்பங்கள் அனுபவித்து, வெற்றியோ, தோல்வியோ அடைந்து மறைந்து இருக்கிறார்கள். எல்லா வகையான துறைகளில் இருந்தும் உருவாகியிருக்கிறார்கள்.  இந்த கால கட்டத்தில், நாம் அனுபவிக்கின்ற வசதிகளெல்லாம், பலருடைய  துன்பத்தில்  இருந்து திரண்டு உருவான, வெற்றிக்கனிதான்.

நாமும் சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு, மேற்கண்ட வகையான மக்களின் வாழ்கையில் பெரும் படிப்பினை இருக்கிறது.  தாம் பெற்ற வெற்றிக்கனி எப்படி, தமக்கு பின்வரும் சந்ததியினர்க்கு உபயோகமாகவேண்டும் என்று உருவாக்கி வைத்திருக்கிறார் களோ , அதே போன்று தத்தமது    வாழ்க்கை நிகழ்வுகளை  பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்  அவற்றை   படித்தால்,  நல்ல பல படிப்பினைகளை நமக்கு கிடைக்க  கூடும்.

தொலை தொடர்பு சாதனங்களால்  மிகவும் குறுகிவிட்ட உலகத்தில் வாழ்கின்ற நாம், உலகின் பல்வேறு தேசங்களில் வாழ்ந்து  கொடிருக்கிற சாதனையாளர்கள் பற்றி அன்றாடம் கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோம்,   அந்த சாதனையாளர்கள்  தம் வாழ்கையில், செயல் பட்ட விதத்தில் நாமும் செயல் பட்டால், வெற்றிக்கனியை பறிக்கக்கூடிய வாய்ப்பு நமக்கும் கிடைக்க கூடும். அவ்வகையில்  உலக பணக்காரர்களின் வரிசையில்  இருக்கும்  வாறன் பப்பே,  1950 களில்  வெறும்  $10,000 முதலீட்டில் இருந்து தொடங்கி,  இன்றைக்கு  $ 70 பில்லியன் என்ற  அளவில்  பில்லியனராகி இருக்கும்,  அவரை நேரில் கண்டு, பேச்சை கேட்க, வருடம் ஒரு முறை அவர் வாழும் கிராமத்திற்கு  40,000 முதலீட்டாளர்கள்  படை எடுக்கிறார்கள்,   அவருடைய  வெற்றியின் ரகசியங்கள்,  பல்வேறு சமயங்களில் அவரால் சொல்லப்பட்டும், அவரது வாழ்க்கையை  நுணுகி  ஆராய்ச்சி செய்தவர்களின் வாயிலாக கிடைத்த முக்கியமான மூன்று விசயங்களை பார்ப்போம்.
1. வருவாயை பெருக்கி, அதை மறுமுதலீடு செய்வது.
            நெடுங்காலம் நின்று நிலைத்து இருக்கிற கம்பனிகளை கண்டு முதலீடு  செய்வது. அவர் பாணியில் சொல்வதென்றால்
 "  ஒரு  அடி முட்டாள் நிர்வாகம் செய்தால் கூட, மிக சிறப்பாக செயல் படும் கம்பனிகளில்  பங்கு முதலீடு செய்வது,  காரணம் என்றாவது ஒரு நாள் ஒரு முட்டாள் மேனஜராக வரப்போவது உறுதி ".

நெடுங்காலமாக  டிவிடண்ட் தரக்கூடிய கம்பனிகள்,  லாபகரமாக தொடர்ந்து சம்பாதிப்போம் என்ற நம்பிக்கை உடைய யனவாக இருக்கும். வருடக்கடைசியிலோ, வருடமிரு  முறையோ  கிடைக்கும் டிவிடண்டை  அதே கம்பனியிலோ அல்லது வேறு புது கம்பனியிலோ முதலீடு செய்யலாம்.   பங்கு மார்கட்  வீழ்ந்து கிடக்கக்கூடிய காலங்களை  இது மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
            ஒரு உதாரணம்,  1995 வாக்கில்  பங்கு சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்தது, அப்பொழுது  நாளைய  நிலைமை எப்படியிருக்குமோ  ?  என்று,  பல காலமாக டிவிடண்ட் கொடுத்துவந்த கமபனிகள்   கூட  அவற்றை சிறிது குறைத்தன.  அப்பொழுது  கோகோகோலா  கம்பனி,  வாரனுக்கு  $88 மில்லியன் டிவிடண்டாக கொடுத்தது, இந்த வருடம் சுமார் $ 528 மில்லியன் கொடுக்கப்போகிறது.  கோகோகோலா கம்பனி 57 வருட மாக தொடர்ந்து  டிவிடன்ட் கொடுத்து வருகிறது.

2. சராசரி விலை மதிப்பில் பங்கு முதலீடு செய்வது
             பொதுவாக பொது மக்கள் கம்பனி பங்குகளில் முதலீடு செய்யும்போது. பங்கு விலைகள் அப்படியே இருக்கும் அல்லது விலை குறையும் என்ற நம்பிக்கை இன்றியே  முதலீடு செய்கிறார்கள்.  இன்று வாங்கினால்,  நாளையே   வானளாவ விலை உயரவேனும் என்று எதிர்பார்ப்பில் வாங்குகிறார்கள். ஆனால் பப்பெட் அப்படியல்ல, காரணம்  அவர்  முதலீடு செய்யும் கம்பனிகளை அடிக்கடி மாற்றுபவர் அல்ல.  குறுகிய கால் முதலீடோ, டிறேடிங்கோ  பெரும்பாலும் செய்வதில்லை. எல்லாமே நீண்டகால முதலீடு தான். நீண்ட காலம் என்று சொன்னாலும் நாம் நினைப்பது போல், ஐந்து வருடமோ 10 வருடமோ இல்லை, பல மாமாங்கங்கள். பங்கு சந்தையில் விலை ஏற்ற இறக்கமென்பது   இயற்கையானது.  இன்னும்  உண்மையை சொல்வதென்றால், தான் முதலீடு செய்த கம்பனிகள் விலை இறங்கினால் மகிழ்ச்சி அடைவார்,  காரணம் விலை நன்கு இறங்கும் போது மேலும்  அதிகமாக அதே கம்பனி பங்குகளை வாங்குவார். இப்படி விலை குறைய  காத்திருக்கும் காலமும், பல காலாண்டு  மற்றும் அரையாண்டு அறிக்கை காலங்கள். இப்படி பல நேரங்களில், விலை குறையும் பொது வாங்கி வாங்கி  சேர்த்த பங்குகளின்  சராசரி விலை மிக குறைவான தாகவே இருக்கும்.
                  பப்பெடின் முடிவுகள் எப்போதும் சரியாக இருந்ததா வென்றால்  அதுவும் இல்லை,  அவரும் பல நேரங்களில், இழப்பை சந்தித்திருக்கிறார்.  சமீபத்திய  எடுத்துக்காட்டாக  டெஸ்கோ வை சொல்லலாம்.  இக்கம்பணியை  விற்றதால்  பல மில்லியன்  இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
                  பல ஆண்டு காலமாக, கம்புயுடர் துறையில் ஜாம்பவானாக இருந்த ஐ.பி.எம், அத்துறையில் வியாபார சரிவை  சரிக்கட்ட  கிளவுட் கம்புடிங் போன்ற துறைகளில் கால் பதிக்க துவங்கிய போது,  கம்பனி நிர்வாகமோ,  பங்கு சந்தையோ எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாததால், பங்கு விலை  35% இல்  இருபது 50 % சரிவை சந்தித்தது. பலர் தமது ஷேர்களை விற்றதுடன்,  விற்குமாறு பரிந்துரையும் செய்தனர். இத்துணைக்கும்  12 மாத நிகர பண வருவாய் $ 17 மில்லியனாக இருக்கிறது.  இந்நேரத்தில்  பப்பெட்  $ 40 மில்லியனுக்கு அதில் முதலீடு செய்திருக்கிறார்.  அவருடைய  இன்றைய  சராசரி ஐ.பி.எம். பங்கின்  கொள்முதல்  விலை  25 ஆண்டுகளுக்கு முன்னுள்ள விலையை விட 50% ஆக இருக்கிறது. எண்ணிப்பாருங்கள்,  ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னுள்ள விலையை எட்டினாலே  போதும், அவருடைய முதலீடு எத்தனை மடங்காகும்.   கிட்டத்தட்ட  ஒரு தங்க சுரங்கத்தின்  மேல் அமர்ந்தது போல்  இருக்கிறார்

3. தொண்டனாக இருப்பதை விட தலைவனாகவே இருக்கிறார்.

              அவருடைய வீட்டில் பெரிய நூலகம் இருக்கிறது, அதில்  அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளியான  பொருளாதார, பங்கு சந்தை சம்பந்த மான நூற்கள் இருக்கின்றன. நிறைய புத்தகங்கள் படித்தும், ஆங்காங்கே நடக்கும்,  நிதி நிலை சம்பந்தமான கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்வேறு வகையான, கருத்துக்கலையும்   நுட்பங்களையும் அறிந்து கொண்டாலும்,  தமது முடிவுகளை தானே சீர்தூக்கி பார்த்து எடுப்பவராக இருக்கிறார்.  எவ்வளவு தான் அறிந்தவராக இருந்தாலும், பிறருடைய  பரிந்துரைகளை  ஏற்பதில்லை.
                  அவருடைய  பெர்கஷயர் ஹாதவே யின் ஆரம்ப கால கட்டத்திற்கு சென்று பார்த்தால்,  அவருடைய  இந்த தனி தன்மையை காணலாம். இன்றும் அவருடைய  கம்பனியின் மாதிரியை பலபேர்  பின்பற்றுவதை காணலாம். புதியவர்கள்  அவருடைய அளவிற்கு வளராததன் காரணம், இவர்களுக்கு  பபேயை போல்  அரை நூற்றாண்டு கால அவகாசம் இல்லை.
                 பப்பெட்  கூட்டத்தோடு கோவிந்தா போடுபவராக இல்லை.  பெரும்பாலோரின்  கருத்துக்கு  எதிராக சிந்திப்பவராகவே இருக்கிறார்.  எல்லோரும்  புதிய, புதிய  தொழில் நுட்பங்கள், துறைகள் என்று சிந்தித்து  முதலீடு செய்ய நினைக்கு போது,  பப்பே  பெரும்பாலும்  பல்லாண்டு காலமாக நின்று நிலைத்திருக்கிற தொழில் களிலேயே  முதலீடு செய்பவராக இருக்கிறார். இதற்க்கு ஒரு சமீபத்திய  உதாரணமாக அவர் வாங்கிய  ஹென்ஸ்  என்ற கம்பனியை சொல்லலாம். இந்த கம்பனி கடந்த 90 ஆண்டுகாலமாக  கெச்சப் தயாரித்துக்கொண்டிருக்கிறது.   இன்னொன்று  பி.என்.எஸ்.எப். என்ற ரயில் போக்குவரத்து கம்பனி.  இந்த டிரோணும்,ப்ளைட்டும் சாமான்கள் டெலிவரி செய்யும் காலத்தில், அவர் முதலீடு செய்யும் கம்பனிகளை பார்த்தீர்களா?.  அவருடைய  இந்த கோட்பாடுகளை விமர்சனம்  செய்ய நினைப்பவர்களை,  அவர் முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் வாய் மூட செய்து விடுகிறது. இந்த மாதிரியான முடிவுகள் தான் அவரை தனித்துவ மிக்க  தலைவராக  மிளிர வைத்திருக்கிறது.

இதிலிருந்து  நாம்  கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை.

1. ஆடிக்காற்றிற்கும் அசந்து கொடுக்காத என்பார்களே, அது போன்று  பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு,  ஈடு கொடுத்து நிற்க கூடிய,  பல் துறைகளில் காலூன்றியுல்ல,  பலகாலம் டிவிடன்ட் தந்து கொண்டிருக்கிற கம்பனிகளில் முதலீடு செய்ய முயச்சிப்பது.   கிடைக்கின்ற  டிவிடண்டை  திரும்பவும் முதலீடு செய்வது.

2. ஒரே  நேரத்தில்  கையில் இருப்பதை எல்லாம்  முதலீடு செய்யாமல், சிறுக சிறுக  நல்ல கால இடைவெளியில்  செய்வது.  எந்த கொம்பனாலும் நாளை சந்தையில் என்ன நடக்கு மென்று சொல்ல முடியாது.  கையில் பணம் சேர சேர முதலீடு  செய்ய நினைக்கும் சிறு முதலீட்டாளருக்கு இதுவே ஏற்றதும் கூட.

கடைசியாக ஒன்று, எந்த காலத்திலும் இல்லாமல் இன்றைக்கு  அடுத்தவருடைய  காசுக்கு ஆசைப்படுபவர்கள். கொள்ளையர்கள் நிறைந்த காலமாய் இருக்கிறது.  நாளும் செய்தித்தாள் கலை புரட்டினால்  வித விதமான் ஏமாற்றுக்காரர்கள்.  நிறைய  படித்து அறிந்து கொள்ள முயலுங்கள்.   அதே நேரத்தில் எல்லாம் தெரிந்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்று இருக்காதீர்கள். யாருடைய  கையிலும் உங்கள் பணத்தை கொடுத்து முதலீடு செய்ய சொல்லாதீர்கள், யாரையும் நம்பாதீர்கள் ( என்னையும் சேர்த்துத்தான் )

5 comments:

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........