Tuesday, August 25, 2015

வாறன் பபேயும் நம்மூர் மார்வாரிகளும்.............

 ஒரு தொழிலை தொடங்கும் போது,  நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும், தொடங்கி  நடத்தும்  போது,  உண்டாகுகின்ற தொடர்புகளை,  தகுதிக்கு  தக உருவாக்கிக் கொள்ளும் போது,  நம்மையும், நம் தொழிலையும் செம்மை படுத்திக்கொள்ளவும் பிற தொழில் வாய்ப்புக்களை இனங்கண்டு கொள்ளவும்  முடியும்.   பிறரிடம் வேலை செய்பவர்களை காட்டிலும்,  தொழில் செய்பவர்களுக்கே  முன்னேற்ற பாதை  எளிதாய் அமையும்.   படிப்பு என்பது  நமது  செயல் பாடுகளை செம்மையாக்கி தரும் ஒரு சாதனம், கருவி  தானே தவிர,  தொழில் செய்ய தேவையே   இல்லை,  அது  இருந்தால் தான் முடியும் என்பதில்லை.

ராஜஸ்தானத்து மக்களிடம்,  அதுதாங்க நாம் சேட் என்றும் மார்வாடி என்று அழைக்கிறோமே,  அவர்கள் தான்.   வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள், தொழில் செய்ய நினைப்பவர்கள், எவ்வாறெல்லாம்  தொழில் செய்து  முன்னேறலாம், தொழில் செய்யலாம்,  உபரி, கூடுதல்  வருமானம் பெற பல தரப்பட்ட வழிகள் என்று, கற்றுக்கொள்ள வேண்டிய பல விசயங்கள் இருக்கின்றன.

வறண்ட பாலைவன பூமி,  அதில் மார்வார் என்ற மலை பகுதியில் இருந்து வந்து,
இந்தியா முழுதும்  பரவி  தொழில் செய்து வருகிறார்கள்.   ஹிந்தி பேசா மாநிலங்கள் இவர்களுக்கு  சொர்க்கபுரி.   சிறிதும், பெரிதுமான  தமிழக  நகரங்களில் எல்லாம் பரவி, ஆங்காங்கே  மொத்த வியாபார கடை வீதிகளில்,   குட்டி குடியிருப்புக்களை  உருவாக்கிக்கொண்டு  வாழ்ந்து,  தொழில் செய்கின்ற இவர்கள், வரும்போது இருக்கும்  நிலைமையை கண்டிருக்கிறீர்களா ?

ஒட்டி உலர்ந்த கன்னங்கள்,  தார்பாச்சி வேஷ்டி, ஜுப்பா,  மஞ்சள் பை, கமண்டலம், கெண்டிசெம்பு  இத்துடன் தான் வருவார்கள்.  சிறிய ஊர்களில்  வீடு வாடகைக்கு பிடிப்பார்கள்.  ரூ  4000, ரூ 5000 முதலீட்டில் அடகு கடை வைப்பார்கள். தொடக்க காலங்களில்  தங்க நகைகளை அடகு பிடிக்க மாட்டார்கள்.   எதையெல்லாம் விற்று காசாக்க முடியுமோ அவைகளை எல்லாம்  அடமானமாக பெற்று கடன் கொடுப்பார்கள்,  மாதத்திற்கு  4 வட்டி (வருசத்திற்கு 48% !!!!! ), 5 வட்டி (வருசத்திற்கு 60%!!!! ).   அண்டா.  குண்டா,  கூலி வேலை செய்வோரின்  கைக்கருவிகள் என்று லிஸ்ட் நீளும்.  கொஞ்ச நாட்களில்  அக்கம் பக்கத்தில் உள்ளோர்,  வீதி ஓரங்களில் குடியிருப்போர்,  வீட்டு வாசலுக்கு நீர் தெளித்து, சாணமிட்டு  உதவி செய்வர்.  வீட்டு காரர்/ தொழில் முனைவர், கடையை திறக்கு  முன்பு   கற்பூரம் கொளுத்தி மணி அடித்து சாமி கும்பிட்டு,  யாரும் அடகு வைத்ததை திருப்ப கூடாது  என்று மனமுருகி வேண்டிக்கொண்டு  ( இது நகைசுவைக்காக எழுதப்பட்டதன்று, முற்றிலும் உண்மை ), திருநீறு  குங்குமதத்துடன்  பிரசாத்தை  எல்லோருக்கும் கொடுப்பார்.  நம் மக்கள் கள்ளம் கபடமின்றி பக்தி சிரத்தையுடன் வாங்கிகொண்டு, தாம் அடகுவைத்த அண்டா குண்டா  எல்லாவற்றையும் மறந்து வட்டியில் மூழ்க விட்டுவிடுவர்.

அடகு சீட்டில் பின்புறம்  சிறிய எழுத்தில் ஆங்கிலத்தில், அடகு ஒப்பந்த சரத்துக்கள் எழுதப்படிருக்கும், சம்மந்தப்பட்ட இருவருக்குமே படித்து புரிந்து கொள்ளுமளவிற்கு ஆங்கிலம் தெரியாது.  அடகு பிடிப்பவருக்கு எத்தனையாவது மாதத்தில் திருப்பாவிட்டால், பொருள் அவரைசேர்ந்தது  ஆகிவிடும் என்பது மட்டும் தெரியும். தவணை காலம் முடிந்த பொருட்களை  விற்று காசாக்கி திரும்ப  திரும்ப அதிலேயே போட்டு  6 மாதம்,  ஒரு வருடத்தில் பொருளாதார ரீதியில்  ஒரு  ஸ்திர நிலைக்கு வந்துவிடுவார். மேலும் முதலீடு தேவைபட்டால், அவர்களது சமுதாய சங்கங்களில் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று கொள்ளுவார்.

ஓரிரு வருடங்களில் நடையுடைகளில் ஒருமாற்றம், தெளிவு, கம்பீரம்  வந்து விடும்.  ஐந்து விரல்களிலும் மோதிரம் (வட்டியில் மூழ்கியதுதான் ),   கழுத்தில் கனமான முறுக்கு செயினில்  தொங்கும்  புலிப்பல் டாலர் இத்தியாதிகளுடன் இருக்க தொடங்குவார். சிறுக சிறுக தங்க நகைகளையும் அடகு பிடிக்க தொடங்குவார்.  இடுகல், மரத்தடி, தெருமுனை  என்று வஞ்சனை இல்லாமல் எல்லா வகை கோயில்களுக்கும்,  அப்பப்ப பொரிகடலை,  பூஜைக்கு பணம் கொடுப்பார். கோயில் கும்பாபிஷேகம். குடமுழுக்கு முன்னின்று நடத்துவார்.


சில காலங்களில்  இவரின் இந்த தான தரும காரியங்களினால், நம்மவர்க்கு அவர்மேல் மரியாதை மேலோங்கி,  ரெம்ப  பவ்வியமாய்  " சேட் " (முதலாளி)என்று அழைக்க தொடங்குவர்,  நம்மவருக்கு  அதன் அர்த்தம் தெரியாவிட்டாலும், அவருக்கு தெரிவதால்  அவர்  " இன்னாப்பா " ,  " அவன் ",   " இவன் "
என்று  சகலரையும் ஏக வசனத்தில் அழைத்து  பேசி சந்தோஷ படுத்துவார். நம்மவர்களுக்கு  சேட்டு  தமிழ் பேசுகிறார் என்று  ரெம்ம்ம்ம்ம்ப பெருமை !!!!!

இதற்கு பின்னாலே தான் இவர்களது திறமை வெளிப்பட ஆரம்பிக்கும், நம்மவர்களுக்கு  படிப்பினைகள் இருக்கிறது என்று சொன்னால் கூட
மிகையாகாது.  நம்மவர்கள் கொடுக்கின்ற அங்கொன்றும் இங்கொன்றுமான தகவல்களை  பயன்படுத்தி தேவைகளை  இனங்கண்டு தொழில் தொடங்கி,   தமக்கென தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கி, ஒரு ஞாயமான அளவினான இந்திய, தமிழக , பொருளாதாரத்தை தம் கைகளில் வைத்துள்ளனர். எப்படியென்று பாருங்கள்.  

காசுத்தேவை யாருக்குத்தான் இல்லை,  இவர்கள்  அடகு பிடிக்காத பொருட்கள் என்பதே இல்லை என்பதால் பலதரப்பட்ட தொழில் செய்கிற மக்கள் இவர்களிடம் வருவர். அவர்களிடம் பேச்சுகொடுத்தும், வியாபார பகுதிகளை சுற்றி வந்தும் வியாபாரிகளுக்கு தேவையான பொருட்களை  இனங்கண்டு ,  பம்பாய்,  கல்கத்தா போன்ற ஊர்களில் இருந்து வரவழைத்து வியாபாரிகளுக்கு மட்டும் சப்ளை செய்வார்கள. இதில் நாம் மிக முக்கியமாக  புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்,  ஒரு குறிப்பிட்ட காலம் வரை  உள்ளூர் வியாபாரிகளுக்கு போட்டியாக  எந்த வியாபாரமும்  செய்ய மாட்டார்கள்.

எடுத்துக்காட்டாக,  கொலுசு உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வியாபாரிக்கு, வெள்ளி, வெள்ளி உருக்க தேவைப்படும் சாதனங்கள், கெமிகல் ஆகியவைகளை சப்ளை செய்வார்கள். பிளாஸ்டிக்  சாமான்கள் உற்பத்தி செய்வோருக்கு அவர்களுக்கு தேவையான  மூலப்பொருள்கள் வாங்கி கொடுப்பார்கள். நம் வியாபாரிகளுக்கு இருக்கின்ற மிகப்பெரிய இடைஞ்சல் என்றால் அது பாஷை தான். பெரும் பெரும்  உற்பத்தி தொழிற்சாலைகளும்,  மொத்த வியாபாரிகளும், பெரும்பாலும் ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் இருப்பதால், இவர்களுக்கு அது சாதகமாய் விட்டது.
இவர்கள்  மிகக்குறைந்த   அளவில் உடல் உழைப்பு தேவைப்படுகிற வேலைகளில் தான்  ஈடுபடுவார்கள். " நாம் நோகாமல் நுங்கு எடுத்தல் "என்று சொல்லுவோமே அப்படி.  உண்மையில் இதுதான் " வொர்க் ஸ்மார்ட் " என்பது.  இப்படி உற்பத்தியாளர்களுடன்  உள்ள வியாபார தொடர்பு காரணமாக, இன்னும் அதிகமான வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக்கொள்கிற  நுணுக்கத்தை பாருங்கள்.
ஒரே இடத்தில் அமர்ந்து, பல உபரி வருமான வழிகளை உருவாக்க மற்றுமொரு காரணி, வட்டித்தொழிலின் மூலம் வருமானம் நிரந்தரமாக வரத்தொடங்கி விட்டாலும்,  ஒரு அளவிற்கு மேல் அடகு பிடிக்க முடிவதில்லை,  கைகளில் பணகையிருப்பு  கூடுதலாக தொடங்கு கிறது.  இந்த "சும்மா" இருக்கும் தொகையை எப்படி உபயோகிக்கிறார்கள் பாருங்கள்.

பொருள் உற்பத்தி செய்பவர்கள்,  சீசனல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், சீசன் நெருங்க நெருங்க, ஆர்டர்கள் இருக்கும்  மறு மூலபொருள் வாங்க பணம் இருக்காது.  உற்பத்தி செய்த பொருட்களை வாங்கிக் கொண்டு சில்லறை வியாபாரிகள் உடன் பணம்  கொடுக்க மாட்டார்கள்.   உற்பத்தியாளருக்கு பணம் தேவை,  இந்த சீசனில் பணம் சம்பாதிக்க வில்லை என்றால்  முழு  வருட சம்பாத்தியம் போயவிடும்.  உற்பத்தியாளர்கள்   இவர்களிடம்  உற்பத்தி செய்த பொருட்களை மொத்த விலையில் இருந்து  ரூ 1, ரூ 2 உருப்படிக்கு குறைவாக விற்று  பணம் பெற்று கொள்வார்கள்.  ஒரே ஒரு கண்டிசன், உற்பத்தியாளர்களே இவர்களுக்கு அதே சீசனில் விற்றுகொடுக்க வேண்டும், உற்பத்தியாளர்கள் ஆர்டர் அடிப்படையில் உற்பத்தி செய்வதால், விற்பதில் சிரமம் இருக்காது, இவர்களுக்கு ஒரு உருப்படிக்கு  ரூ ஒன்றோ இரண்டோ கூடுதலாக கிடைக்கும்.  எந்தவிதமான உடல் உழைப்போ,  தொழில் செய்பவருக்கு உள்ள மண்டை காய்ச்சல்களோ, எதுவும் இல்லாத வருமானம்.

இதே முறையில் அவரவர் வியாபாரம் செய்கின்ற இடத்தில் இருக்கின்ற தொழில் களுக்கு ஏற்ப செய்து பணம் ஈட்டுகிறார்கள்.  வியாபாரத்தில்  Cash is the King என்பதாக சொல்வார்கள், இவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து வட்டி மட்டுமின்றி பல வகைகளிலும், சம்பாதிக்கிறார்கள். இவ்வாறு இவர்களுடன் தொழில் செய்பவர்கள்,  ஸ்கூல் ப்ர்க் உற்பத்தியாளர்கள், சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் போன்றோர்.  இவர்களிடம் கச்சா பொருள்களை பெற்று கூலிக்கு பொருள் உற்பத்திசெய்து கொடுப்பவர்களும் இருக்கிறார்கள.  சில நேரங்களில் பெரும் தொழில்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள் தேங்கி கிடக்கும்,  கம்பனிகளுக்கு பணம் தேவைப்படும்  நேரங்களில்  சாதாரணமாக விற்கும் விலையை விட  10  %, 20 % அளவிற்கு டிஸ்கவுண்டில்  விற்பார்கள்,  அப்படி பட்ட சரக்குகளை   3, 4 மாதத்திற்காக வங்கி வைத்து பின்னர் விற்பார்கள், கிடைக்கின்ற லாபம் 40 %, 50 %  என்ற அளவில் கிடைக்கும்.  இப்படியான வாய்ப்புக்களை  எதிர்நோக்கி இருக்கும் இவர்களுக்கு,  வெவ்வேறு துறைகளில்  இருப்பவர்கள்  இவ்வாறான  வழிகளை காட்டிக்கொடுத்து கமிஷன் பெற்றுக்கொள்வார்கள்,  இப்படி  நம்மை போன்றவர்களெல்லாம் கற்பனை கூட செய்ய முடியாத வழிகளில் எல்லாம் சம்பாதிக்கிறார்கள்.

இவர்களை போன்று தான்,  வாறன் பப்பேயும், அவருடைய  ஆரம்ப கால மெயின் வருமானம் இன்சூரன்ஸ் கம்பனிகளில் இருந்து தான். பலவகையான இன்சுரன்ஸ் பாலிசிகள்,  மாதா மாதம் தவறாமல் வாடிக்கையாளர்கள் பணம் கட்டி விடுவார்கள். இப்படி சேருகின்ற தொகையையும், ஏற்கனவே முதலீடு செய்த கம்பனிகளில் இருந்து வரும் டிவிடன்ட்களையும்  சேர்த்து  புதிய கம்பனிகள் வாங்குவதற்கு உபயோகிப்பார்.  கிட்டத்தட்ட  50, 60  ஆண்டுகளாக அவரிடம் முதலீடு செய்தவர்களுக்கு டிவிடன்ட் கொடுத் ததே  இல்லை . அவர் வாங்குகின்ற கம்பனிகள் கொடுக்கும் டிவிடன்டையும், மீண்டும் புது கம்பனிகளை வாங்க உபயோகிப்பார். சமயங்களில் பெரிய பெரிய கம்பனிகளின் நெருக்கடியான் நேரத்தில், மற்றவர்கள் கடனோ முதலீடோ தர தயங்கும் நேரத்தில், மார்க்கட்டில் ஷேர் விற்கும் விலையை விட குறைவாக கொடுத்து வாங்குவார். இவர்  முதலீடு  செய்கின்ற துறைகள்  90 சதவீதத்திற்கு மேல் லாபமீட்டு தருவதாகவே உள்ளன.

Great minds think alike என்பதாக சொல்வார்கள், சாதனையாளர்கள் எல்லோருமே ஒன்று போல் சிந்திப்பார்கள் போலும்,  நம் மார்வாரிகளும் வாறன் பபெக்கு சளைத்தவர்கள் அல்ல!!!!!!. " குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை ". என்பது போல் நாம் நம்மவர்கள் என்று பெருமை பட்டுக்கொள்வோம்.   மார்வாடியும், வாறன் பப்பேயும் சம்பாதித்து நமக்கென்ன ஆக போகிறது ?  இவர்களுடைய வாழ்கையில் இருந்து நாமென்ன கற்றுக்கொள்ள போகிறோம் ?   இது தான் என் மில்லியன் டாலர் கேள்வி

Saturday, August 22, 2015

ஆட்டோமாடிக் மில்லியனர் ஆகலாமா ? ..!!!!!!!!!!!!!!!

இன்று நம்மில் பலர், படித்தும் சரியான வேலை கிடைக்க வில்லை, வருகின்ற வருவாய் போதவில்லை,  பல ஆயிரங்களை செலவிட்டாவது  வெளிநாடு செல்வோம் என்று செல்கிறோம்.  வேலை கிடைத்தும் இத்தனை ஆண்டுகளில் சாதித்தது ஒன்றுமில்லை என்று அரசு வேலையில் இருந்தும் விடுப்பெடுத்து வெளி நாடு  செல்வோரும்  குறைவன்று.    அத்துணை பேருடைய  அவாவும், கனவும் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான்.  நாளை நம்முடையவும், நம்மை  சார்ந்தோரின் எதிர்காலத்தையும் இலகுவானதாக்கி கொள்ள வேண்டும் என்ற பெரு நோக்கமும் தான். 

முதல் மூன்று மாத சம்பளங்கள் பெரும் வரை தான்,  நாம்முடைய நோக்கங்கள் எல்லாம்  நினைவில் இருக்கும் அதன் பின்பு அவையெல்லாம், பின் இருக்கையில்  இடம் பிடிக்க தொடங்கி, காலப்போக்கில் எதற்காக வந்தோம் என்ற நோக்கத்தை மறந்தவர்களாக ஆகி விடுகிறோம்.  கண்ணில் காண்பதை எல்லாம் வாங்க தொடங்குகிறோம்.  வருவாய் மாறாமல் இருந்தாலும், தேவைகள் கூடிக்கொண்டே போகின்றன.  கால ஓட்டத்தில் குழந்தை குட்டிகளாகி, அவர் தம் படிப்பு செலவு, திருமண செலவு என்பவை நெருங்கும் போது,  எதை விற்பது ?, யாரிடம் கடன் வாங்குவது ?  என்று சிந்தனை  சிறகு படபடத்து,   மன அழுத்தம், சர்க்கரை என்று சொல்லொனா நோய்கள் வருவது  தான் மிச்சம். வெளிநாடுகளில் பொருள் ஈட்டுவோரை விட உள்ளூரில் உள்ளவர்கள் சிறிது மேல், காரணம் அவர்களது நினைவில் சதா இருப்பது, குறைந்த வருவாய் எப்படி சமாளிப்பது என்ற யதார்த்தம் தான்.


இது நமக்கு மட்டும் அன்று நமக்கு முன்பும் பலபேர் பட்டிருக்கிறார்கள்,  இன்றைய தேதியில் நாம் அவர்களிடம் இருந்து ஏதாவது படித்து                            இ ருக்கிறோமா ?  இல்லை நம் குழந்தைகளுக்கு எதார்த்தத்தை சொல்லி கொடுத்திருக்கிறோமா? நம்மில் சிலர் பட்ஜெட் போட்டு செலவுகள் செய்வோம் என்று செய்வோம், " பட் " செலவுகள் " ஜெட் " வேகத்தில் செல்வது தான் மிச்சம்.

இப்படி நாம்  செய்ய நினைக்கின்ற எதையும், தொடர்ந்து செய்வதில்லை, ஒரு வேலை செய்யவேண்டும் என்று தொடங்குகின்ற நேரத்தில் வேறொரு வேலை வந்து அதை பிறகு செய்வோம் என்று ஒத்திவைத்து சுத்தமாக மறந்து விடுவது  என்பது நம்மில் பலருக்கு வழக்கமான விஷயம். நம்மை யாராவது ஒருவர் அருகிலிருந்து அறிவுருத்திக்கொண்டிருந்தால்  ஒருவேளை முடியுமோ என்னவோ  ?.   எத்துனை பேருக்கு அப்படி வாய்க்கும் !!!


நம்மை போன்று வெளிநாட்டில் வாழ்வோருக்கு பேங்குகளில் கரண்ட் அக்கவுண்ட் என்பது கண்டிப்பாக இருக்கும்.  ஊரிலே இருப்பவர்களுக்கும் இருக்கும்.  பேங்குகள் தரக்கூடிய சேவையை வைத்து   " ஆட்டோமாடிக் மில்லியனராக  " லட்சாதிபதியாக  நம்மை உருவாக்கி கொண்ட  ஒரு  தம்பதிகளின்  வாழ்க்கை நிகழ்ச்சியை  பாருங்கள்.  தனக்கு தேவையானதை, அடுத்தவரை குறை சொல்லாமல், இருக்கின்ற வாய்ப்பு வசதிகளை சிறிது மாற்றி சிந்தித்து  சாதனை செய்ததை பாருங்கள். நாமும் வெற்றி அடைவது என்பது அவரவர்  தீர்மானத்தை பொறுத்தது.  எதிர் கால் வாழ்க்கையை பற்றி கவலைப்படுபவர்கள் சிந்தித்து செயல் படுங்கள்.  

புது மணம்  மாறா இளம் தம்பதிகள், இருவரும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள்.  தனியாக குடித்தனம்  போக  போகிறார்கள், மணமகனின் பெற்றோர் இருவரையும் வைத்து உலக நிலைமைகளை சொல்லி, இருவருமே சம்பாதிக்கிறீர்கள் எதிகாலத்தை எண்ணி சிக்கனமாக இருந்து  ஆற்ம்பத்தில் இருந்தே சேமிப்பை உருவாக்கி கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார்கள்.

இருவரும் விவரமான வர்களாதளால், பட்ஜெட் போட்டு செலவு செய்கிறார்கள், மாதக்கடைசியில் நினைத்த தொகையை சேமிக்க முடியவில்லை,  ஒருவொருக்கொருவர் உன்னால் தான் என்று                                 ஒருவர் மற்றவரை குறை சொல்லிக்கொண்டு ஓரிரு மாதங்கல் ஓடுகிறது.   பின்பு இதனாலையே  கணவன் மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டு  சதா சண்டையாக இருக்கிறது.  ஒரு கட்டத்தில் பொறுக்க  முடியாமல் மனைவி தன தாயாரை அழைத்து, ஒரே  சண்டை சச்சரவாக  இருக்கிறது,  இரண்டு பேர் சம்பாதித்தும் நிம்மதி இல்லை, நான் உங்களுடன் வந்து இருக்கப் போகிறேன் என்று சொல்கிறார்.

அவரது தாயார் சிறிது நேரம் யோசனையில் இருந்து விட்டு,   பட்ஜெட் போட்டு செலவு செய்தீர்களா ?   என்று கேட்க,  மகள் ஏன் அப்படி கேட்கிறீர்கள் ?  என்கிறார்.  நானும் உங்க அப்பாவும்  பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த போகிறோம் பேர்வழி என்று ஆரம்பித்ததும் போதும் ஒரே சண்டைதான்,  என்னைக்கு  பட்ஜெட்டை தலையை  சுற்றி வீசினோமோ  அன்றிலிருந்து தான் நிம்மதி என்றார்.   அம்மா...... எனக்கு தலை சுத்துது !  நாங்க ரெண்டுபேரும் சம்பாதித்தும் ஒன்று மிஞ்சலம்மா........என்று பிரலாபிக்கிறார் மகள். தாயார் சிரித்துக்கொண்டே மகளை  ஒருபுறமாக அழைத்து செல்கிறார்.

வீட்டு வாடகை, கரண்டு பில், மளிகைக்கடை பில்.................என்று சம்பளம் வாங்கியதும் எல்லோருக்கும் பங்கு இடுகிறோமே,  என்றாவது  நமக்கு ஏதாவது கொடுக்கிறோமா ?....... அம்மா அதில் தானே பிரச்சினையே  என்று பேச தொடங்கிய மகளை அடக்கி.  திட்டமிடலின்  அரிச்சுவடியே  அது தாம்மா. எது எக்கேடு கெட்டாலும் முதலில்  உங்களுக்கு கொடுக்க வேண்டியதை முதலில் கொடுங்கள், பிறகு மற்றவர்களுக்கு கொடுக்க பழகுங்கள் என்றார். சம்பளம் பேங்குக்கு வந்ததும் ,  உங்கள் சம்பளத்தில்  5 % அல்லது 10 %  ஐ  கரண்ட் அக்கவுண்டில் இருந்து சேவிங் அக்கவுண்டுக்கு மாதா மாதம் ஆட்டோமாடிக்காக மாற்ற சொல்லுங்கள், மீதி இருக்கிற தொகையை உங்கள் இஷ்டப்படி செலவு செய்துகொள்ளுங்கள் என்று யோசனை சொல்கிறார். .

கணவன் வீடு வந்த பெண் முதலில் செய்தது,  .சம்பள பணம் வந்ததும் அதில்      10  % மாதாமாதம் ஆட்டோமாடிக்காக சேவிங் கணக்கிற்கு  டிரான்ஸ்பர் செய்யச்சொன்னது, அதே போல், கணவரையும் செய்யச்சொன்னது.  சிறிது சிறிதாக வீட்டில் மகிழ்ச்சி திரும்பியது.   ஆறேழு மாதங்களில்,  பேங்கில் சொல்லி 10 %, 15 % ஆகி, இரண்டு மூன்று வருடங்களில் 25 % அளவிற்கு   ஆனது.  சிறிது சிறிதாக கூட்டியதால், அதன் சுமையே தெரியவில்லை என்கிறார். நான்கு வருடங்களில்,  வீடு வாங்குவதற்கான  டவுன் பமென்ட் கிடைத்துவிட்டதால் எளிதாக வீடு வாங்கி விட்டோம். வீடு வாங்கினாலும் தொடர்ந்து  25 %  சேமித்துக்கொண்டே வந்தோம்.  இடையிடையே தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில், பேங்கில் சேர்ந்த தொகையையும் வீட்டு கடனுக்காக கட்டிக்கொண்டே வந்தோம், இதனால் 30 வருடங்களில் கட்டி முடிக்க வேண்டிய கடனை இருபது வருடங்களில் முடித்துவிட்டோம்.

கடன் என்பது இல்லாத தாலும், பேங்கில் பணம் சேருவதாலும். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி சந்தோசம் இருந்தது, இதற்கிடையில் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டோம், ஆறு ஏழு  மாதத்தில் மற்றொரு கவலை வந்து விட்டது.  வாடகை பணமும் மிச்சமாகிறது, 25 % சேமிப்பும் பேங்கில் சேருகிறது.  அந்த பணம் நமக்கு  "வேலை "  செய்யாமல் இருக்கிறதே என்று, எதில் முதலீடு என்று இருவரும் ஆலோசனை செய்து, இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு. நமக்கு குடியிருக்க வென்று வேறொரு வீடு வாங்குவோம் என்று வாங்கினோம். வந்த வீட்டு  வாடகை,  25 % சேமிப்பு என்று  புதிய வீட்டு கடனையும்   விரைவில் கட்டி முடித்துவிட்டோம்.   பேங்கில் ஆறு லட்சம் கேஷ்,  எட்டு லட்சம் பெறுமானமுள்ள இரு வீடுகள், மனத்திற்கு  பிடித்த  கார். இதுவரை இறை அருளால் நோய் நொடி என்று ஒன்றும் இல்லை, காரணம் எதிகாலத்தை பற்றிய கவலை இல்லை.

இறைவன் எங்களை எந்த குறையும் இன்றி வைத்திருக்கிறான், எங்களால் இயன்ற வரை தேவையானவர்களுக்கு உதவுகிறோம்,  அதிலும் நாங்கள் அனுபவத்தில் பெற்ற கல்வியை மற்றவர்க்கும் எத்திவைக்க முயல்கிறோம். இது  கம்ப  சூத்திரம் இல்லை, சிறிது கவலை, திட்டமிடல், மற்றவை இறை நாட்டப்படி நடந்தது. நாமாக சேமிப்பிற்கு என்று ஒதுக்குவோம் என்று இருந்தால் இது நடந்தே இருக்காது,  ஆட்டோமாடிக்காக செய்ததால்  தான் முடிந்தது, எங்களை என்ன சொல்வீர்கள்  "  ஆட்டோமாடிக் மில்லியனர் என்றா ? "

ஆகலாமா ?

Wednesday, August 19, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் -பகுதி 8

நாம் இதுவரை பார்த்த முதலீட்டு வகைகளிலே  மிகசிறந்ததாக வல்லுனர்களால் கருதப்படுகிற   ஷேர் மார்கட் பற்றி பார்க்கப்போகிறோம்.   பல்வேறு  வல்லுனர்களின் கருத்தை உறுதிபடுத்துகிற வகையில்  பல்வேறு கால கட்டங்களில் செய்யப்பட  ஆய்வுகளின் முடிவுகள்   காணக்கிடக்கின்றன. எப்படித்தான் புள்ளி விவரங்கள் சொன்னாலும்,  ஆங்காங்கே இது பற்றி யாரிடமாவது பேசினால், நான் அவ்வளவு பணம் இழந்திருக்கிறேன், என் நண்பன் இவ்வளவு இழந்திருக்கிறான்  என்று  பலர்  சொல்வதை கேட்டிருக்கலாம், ஏன்  நீங்களே கூட இழந்திருக்கலாம். இதே அளவிற்கு நான் இவ்வளவு சம்பாதித்தேன்,  என்னுடன் வாருங்கள்  நான் சம்பாதித்து காட்டுகிறேன் என்பதாக சொல்வோரையும்  கண்டிருக்கலாம்.  இன்று  பங்கு சந்தையில் பணம் பண்ணுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்க போகிறேன் என்று தொடங்கி,  ஒரு 10 கம்பெனிகளின்  ஷேர்களை வாங்கி விற்று   trail & error முறையில்  தாங்களே கற்றுக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும்,  தளங்களை  தான் அதிகம் காண முடிகிறது,  இது யாரையும் குறைசொல்லும் அல்லது விமர்சிக்கும் நோக்கத்துடன் சொல்வதன்று.  பலரும் தாங்கள் படித்த,  அனுபவத்தில் கற்றுக்கொண்ட விசயங்களை பகிரும் போது எல்லோருமே பயன் பெற்று  கொள்ளலாமே என்ற ஆதங்கம் தான்.   இன்டெர் நெட் மூலமாக பல்வேறு தளங்கள் நடத்தும் நண்பர்கள்,  இதனை படிக்க நேர்ந்தால் கவனம் கொள்வார்களாக என்று வேண்டிக்கொள்கிறேன்.


இப்படி இருவேறு முரண்பாடான கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது, இதில் எது உண்மை என்று குழம்புவோர்க்கு  பதில் சொல்ல வேண்டும் என்றால் பதில் இரண்டுமே சரிதான் என்றே சொல்ல வேண்டும்.  பெரும் பாலும் பணம் பண்ணியோர் விளம்பரம் செய்து கொள்வதில்லை ரகசியமாகவே வைத்திருப்பர்.  நமது நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுதுமே அப்படித்தான். நானும் அப்படி பணம் இழந்து, பாடம் படித்ததை, இத்தனை காலமும் பல்வேறு பட்ட புத்தகங்கள், அறிஞர்கள்  எழுதிய கட்டுரைகள் என்று  படித்து அறிந்து பலன் பெற்றவைகளை பகிர்ந்து கொள்ளத்தான்,  இப்படிப்பட்ட பதிவெழுதும் முயற்சி.  பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க சில அடிப்படையான தன்மைகளும், புரிதல்களும்  வேண்டும், அவைகளை  முடிந்த அளவு தெளிவாக்க முயற்சிக்கிறேன்.

பங்கு சந்தையில் வெற்றி பெற என்று யாரிடமும் கேட்டாலோ, படித்தாலோ  முதலில் சொல்லப்படுவது, நீண்ட கால முதலீடு என்பது தான், அடுத்து  நீண்ட  காலம் என்றால் ஆகக்குறைவாக ஐந்து ஆண்டுகள் என்பதாகவும் சொல்வார்கள்.  எல்லோரும் இதையே சொல்வதால், புதிய விசயமில்லை என்று சுரத்து இல்லாமல் இருப்போம்.  இதையே  இந்த நூற்றாண்டு கண்ட பிரபல்  முதலீட்டு  மேதை  வாரன் பப்பே  சொன்னால் நிமிர்ந்து அமர்ந்து கேட்போம் இல்லையா ?.   அவரிடம் நீண்ட கால முதலீடு  என்றால் எவ்வளவு காலம் ?  என்று கேட்கப்பட்ட போது, அவர் சொன்ன பதில்  பார் எவர் ( FOR EVER ) என்பதாக.   மேலும்  சொல்லும்  போது    பிரிக்சனல்                 ( FRICTIONAL) செலவுகளை எவ்வளவு குறைவாக செய்ய  முடியுமோ அவ்வளவு குறைவாக செய்ய வேண்டும் என்பதாகவும் சொல்வார்.  இது பற்றி கொஞ்சம் விளங்க முயல்வோம்.

சவுதியிலோ, துபையிலோ இருக்கும் நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு கார்வாஷ் தொடங்கினீர்கள்  என்று வைத்துக்கொள்ளுங்கள், மேனஜர் ஒருவர் வைத்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, எச்செலவும் போக ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ 10,000 கிடைக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். எவ்வளவு நாளைக்கு நடத்துவீர்கள் ?  நன்றாக யோசனை செய்துகொண்டு, பதிலை மனதில் இருத்திக்கொண்டு, அடுத்த  பத்தியை படியுங்கள்.

வருடக்கடைசியில்  விடுமுறையில் ஊர் வருகிறீர்கள்,  ஏர்போர்டில் உங்கள் பள்ளிக்கூட நண்பரை சந்திக்கிறீர்கள், வெகு காலத்திற்கு பிறகு சந்திப்பதால் பரஸ்பர விசாரணைகளுக்கு பிறகு  என்ன செய்கிறீர்கள் என்று கேட்ட போது  உங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள பெரிய நகரத்தில்  டிரை கிளீனர்ஸ்  வைத்திருப்பதாகவும்,  நேரம் கிடைக்கும் பொது வந்து சந்திக்கும் படியும் சொல்கிறார்.   சில நாட்களுக்கு பிறகு அவரை அவருடைய கடையில் சென்று சந்திக்கும்போது.  தன்னுடன்  பிசினசில் பங்குதாரராக இருந்தவர், அமெரிக்கா  செல்ல இருப்பதால் தன பங்கை விற்பதாகவும், உங்களுக்கு  இதில் பிரியம் இருந்தால் சேர்ந்து கொள்ளலாமே என்று  அது சம்மந்தமாக மேலோட்டமாக சில கணக்குகளை காண்பித்து,  10 வருட காலமாக லாபகரமாக நடத்திக்கொண்டிருப்பதாகவும்,  நல்ல நிரந்தரமான வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும்   உங்களுக்கு பிரியம் இருக்கிற பட்சத்தில், பங்குதாரராக ஆகலாம் என்று சொல்கிறார். யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்து விடுகிறீர்கள்.

நீங்கள் ஏற்கனவே ஒரு பிசினஸ் நடத்துவதால் ஓரளவிற்கு வரவு செலவுகள் ஒரளவிற்கு பார்க்க தெரியும, அந்த அடிப்படையில் நல்ல லாபகறமான தொழிலாக தெரிகிறது.  மேலும் விற்பதற்கான காரணமும் தெரிகிறது.  வாங்கலாம் என்ற அபிப்பிராயம் வந்து விட்டால், உங்களை விட விவரமான  ஆடிட்டரிடம் கணக்கு வழக்குகளை காண்பித்து அபிப்பிராயம் கேட்டுக்கொள்ளலாம் என்பதாக நினைக்கிறீர்கள்.  சில நாட்களுக்கு பிறகு, ஆடிட்டரிடமும் அபிப்பிராயம் கேட்டு அவரும், நீங்கள் போடுகின்ற முதலுக்கு, தலைக்கு  ரூ 15000  மாத வருமானம் வருவதாலும்,   50% பார்ட்னர்ஷிப் என்பதாலும்  தாரளமாக வாங்கலாம் என்று சொல்லி விடுகிறார்.  இப்பொழுது சொல்லுங்கள்,  நீங்கள் அந்த பிசினசை  வாங்குவீர்களா மாட்டீர்களா ?.  வாங்கினால் எத்தனை காலம் வைத்திருப்பீர்கள் ?.

மேற்கண்ட இரண்டு தொழிலுமே, உங்களுடைய நேரடி உழைப்பின்றி உங்களுக்கு வருவாய் ஈட்டி தரக்கூடியது, மேலும் உங்களுக்கு முழு நேர தொழிலாக வெளிநாட்டு வேலை இருக்கிறது.  ஏற்கனவே நீங்கள் ஈட்டிய தொகை பேங்கில்  உறங்காமல் உங்களுக்காக வேலை செய்யப்போகிறது.  இதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து தான் உங்களுடைய குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை, தொழிலில் இருந்து வருகிற வருமானத்தை வேறு தொழில்களிலோ,  முதலீடுகளிலோ ஈடுபடுத்தி மேலும் வருவாய்க்கு வழி  செய்து கொள்ளலாம் .

இப்பொழுது கேள்விக்கு வாருங்கள்,  இரண்டு தொழிலுக்கும் பொதுவான கேள்வி எவ்வளவு காலம் வைத்திருப்பீர்கள ? என்பது,  டிரைகிளீனர்ஸ்  தொழிலுக்கு மட்டும். இந்த தொழிலை வாங்குவீர்களா ?  என்ற கூடுதல் கேள்வி. இப்பொழுது பதில் என்னவென்று பார்ப்போம்.

எல்லோருமே முதலில் சொல்வது,  இது என்ன முட்டாள் தனமான கேள்வி, தொழில் நடத்திக்கொண்டு இருந்தாலோ, புதிதாக வாங்கினாலோ  கால வரம்பு என்ன இருக்க முடியும்?  தொழில் என்பது எக்காலத்திற்கும்   தானே ?.   அடுத்தது   டிரைகிளீனர்சை பொருத்தவரை முதலீடு இருக்கும் பட்சத்தில்,  இம்மாதிரியான வாய்ப்பு கிடைப்பதே அரிது,  கிடைத்தால் விடுவோமா என்பது தான்.

ஆக தொழில் அதிபர் என்றாலோ ,  தொழிலில்  பங்குதாரராக   என்றாலோ  அதற்கு கால வரையறை என்பது கிடையாது. சம்பந்தப்பட்ட தொழில் லாபமீட்டி தந்து கொண்டிருக்கும் வரை.  சில தொழில்கள் பல           பரமபரைகள் தாண்டியும் கூட நடக்கும்.

பங்கு மார்க்கட்டில்  இருக்கும் பெரிய பெரிய கம்பனிகள் எல்லாம் தங்களுடைய ஆரம்ப கால முதலீட்டை, 10 லட்சம், கோடி என்ற அளவினான சிறு சிறு பங்குகளாக பிரித்து, ஒவ்வொரு பங்கின் பொருமதியும்  ரூ 10, ரூ 50, ரூ 100 போன்ற  ஏதாவது ஒரு மதிப்பில் இருக்குமாறு பிரிப்பார்கள்.  ஒவ்வொரு பங்கின் மதிப்பையும், பிரித்த மொத்த ஷேர்களின்/பங்குகளின் எண்ணிக்கையையும் பெருக்கினால் வரும்  தொகை, கம்பனியின் ஆரம்ப முதலீட்டுக்கு சமமாக இருக்கும்.  இதில் கிட்டத்தட்ட 50 %  கம்பனி ஆரம்பித்தவர்களுக்கும், மீதி இருக்கும் ஷேர்கள், நம்மை போன்றவர்களுக்கும், பெரிய பெரிய நிதி  நிறுவனங்களுக்குமாக என்று விற்கப்படும் .  கிடைக்கின்ற லாபத்தின் ஒரு பகுதியை,  எத்தனை பங்குகள் இருக்கின்றவோ, அத்தனையாக பிரித்து கொடுக்கப்படும்.  ஒருவர் எத்தனை பங்குகள் வேண்டுமானாலும் வாங்கலாம்.  ஒரு பங்கு வைத்திருந்தாலும் பங்கு தாரர் தான்,  5000, 10000 வைத்திருந்தாலும் பங்கு தாரர் தான்.  லாப பங்கு  ( டிவிடண்ட் ) நீங்கள் வைத்திருக்கும் பங்கின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் குறைவாக கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக  இருந்தால்,  கம்பனி நிர்வாகத்தில் யோசனை சொல்லக்கூடிய போர்டில் கூட அமரலாம். ஒரு காலத்தில் அந்த கம்பனியை நடத்த முடியவில்ல, வேறு துறையிலும் ஈடுபட தெரியாத நிர்வாகம், இப்படிப்பட்ட பல பிரச்சினைகளால் கம்பனியை மூடிவிட முடிவு  செய்தால்,  அரசாங்க தரப்பில் இருந்து  ஒரு சிறிய கமிட்டி அமைக்கப்பட்டு, கம்பனிக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் ஏலமிட்டு விற்கப்படும். விற்ற தொகையில், கடன் கொடுத்தவர்களுக்கு எல்லாம் முதலில் பட்டுவாடா செய்யப்படும். பிறகு மிஞ்சுவதை, அந்த நேரத்தில் யார் யாரெல்லாம் பங்கு தாரராக ( share holder ) இருக்கிறார்களோ அவர்களுக்கு, அந்த தொகை ஒரு ஷேர் இக்கு இவ்வளவு என்று சரி சமமாக பிரித்து கொடுக்கப்படும்!!!!!!. சில நேரங்களில் ஷேர் கடைசியாக விற்ற விலையை விட கூடுதலாக கூட கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பம்பாயில் பழைய ஜவுளி மில்கள் விற்கப்பட்ட போது, இவ்வாறு கூடுதலாக கிடைத்தது, காரணம்  அம்மில்களிடம் இருந்த நிலங்களின் சந்தை மதிப்பு.            

இப்பொழுது சொல்லுங்கள்,  நீங்கள் வாங்கும் ஷர் உங்களை  அந்த கம்பனியின் பங்குதாரராக ஆக்குகிறது,  எவ்வளவு நாளைக்கு பங்குதாரராக இருப்பீர்கள் என்று கேட்டால் பதில் என்ன சொல்வீர்கள்.  இதைத்தான்  வாறன் பப்பே, For Ever என்று சொன்னார், நம்முடைய முதலீடும் அப்படித்தான் இருக்க வேண்டும்.  வாங்கும் முன், வரவுசெலவு, லாப நஷ்டம், எதிர்கால திட்டம், வளர்ச்சி, எவ்வளவு காலமாக தொடர்ச்சியாக லாபம் கொடுத்திருக்கிறார்கள் என்பது போன்ற விசயங்களை கவனித்து வாங்க வேண்டும். தரமான  கம்பனிகளின் பங்குகளை வாங்கும்  போது ,  அதனுடைய  அசல் மதிப்பிற்கும் கீழ் எவ்வளவு குறைவாக வாங்க முடியுமோ அவ்வளவு குறைவாக வாங்குதல் நலம. பிறகு அவற்றை எக்காலத்திலும் சரியான காரணமின்றி விற்க கூடாது.

பிரிக்சனல் செலவு   என்பதாக் ஒரு விஷயத்தை  பபே  சொன்னார்,  பங்குகள் வாங்கும் பொது செய்கின்ற, கமிசன், வட்டி இன்னும் இவை போன்ற  செலவுகளையே அப்படி குறிப்பிட்டார். நீண்ட கால முதலீடுகள் செய்யும் போது,  சிறு சிறு தொகையாக செய்யும் செலவெல்லாம், 10, 20, 30 வருடங்களில் மிகப்பெரிய தொகையாக மாறக்கூடிய வாய்ப்புள்ளவை, இதை படித்து பாருங்கள் அத்தனையும் நஷ்டமாகி விடும் என்று தான். இதனுடைய நேரடி விளக்கம்  என்ன வென்றால் அடிக்கடி பங்குகளை வாங்கி விற்காதீர்கள்,  டிரேடிங் செய்யாதீர்கள், அதில் நீங்கள் அடையும் லாபத்தை விட, புரோக்கர் தான் அதிக லாபம் அடைவார் என்பது தான் 

இறைவன் நாடினால் இன்னும் பல விசயங்களை தொடர்ந்து பார்ப்போம்..........

Friday, August 14, 2015

நெஞ்சில் ஓர் இனம்புரியாத வலி.........திகறடி.......

நாங்கள்  சிறு வயதிலிருந்தே ஒன்றாய் விளையாடி, பள்ளிக்கும் பின்பு கல்லூரிக்கும் சென்று  18, 19 ஆண்டுகளை  ஒன்றாய் கழித்து,  அடுத்தடுத்து  இருவரின்  தந்தையையும்  இழந்து, ஒருவருக்கொருவர்  ஆறுதலாய் இருந்தவரை ஒன்றுமே தெரியாது.  கோயில் திருவிழாவிலே  பாட்டுக்கச்சேரி, பட்டிமன்றம், வழக்காடு என்றால் முதலில் நிற்போம். ஒன்றாய் காலாற நடந்து வருவோம் என்று செல்லும் போது,  பாங்கொலி கேட்டால் நான் தொழ  செல்லும் போது, காத்திருந்து கூட்டிச்செல்லும் அன்னியோன்யம்.  மார்கழி மாதத்தில்  விடியற்காலையில் மூன்றரை மணிக்கு விநாயகர் கோவிலில் போடும் இசைத்தட்டுக்களை கேட்டு, கே.பி. சுந்தராம்பாள், வீரமணி பாடல்களை மனனம் செய்து பாடிக்காட்டி களித்தது எல்லாம்  இன்று நினைவாக  இருக்கவோ என்னவோ, இரை தேடி கடல் தாண்டி பயணங்கள்.


இடை இடையே அவர் ஊர் வரும்போது. நான் இல்லை. நான் வரும்போது அவர் இல்லை இப்படியான கண்ணாம்மூச்சி. சிலநேரங்களில் சந்தித்தோம், ஹாய், ஹலோ என்ற உதட்டு உறவோடு போய்விட்டது    வெகு காலத்திற்கு பின் ஊர் சென்ற போது,  அவரும் இரைதேடி பறந்திடும் வாழ்கை போதும் என்று ஊரில் இருந்தார்.  உவகையோடு, பழைய இனிய நினைவுகள் கரைபுரண்டு வர பார்க்க சென்றால்,  சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே என்னுடன் கை குலிககினார்.  கைகளின்  உரசலில் உணர்வோட்டம்,   பழைய பாந்தம்,  கண்களில் கசிந்திடும் கனிவு இல்லை,   என்னால் ஜீரணிக்க முடிய வில்லை,  என் தோற்றத்தின் விளைவா? அல்லது   தமது  குடியிருப்புக்களின் மத்தியில் மாற்று மதத்தினருடன்  சகஜமாயிருப்பதை விமர்சிப்பார்கள் என்ற பயமா?.  இத்தனை கற்றும்,  அடுத்தவர் விமர்சிப்பர்களே என்ற  முதிரா இளம்பிள்ளைகளின் நெஞ்சா,   பர தேசங்கள் சென்று வந்தும்,  மனம் பண்பட்டு, விரிவடைய வில்லையா ?.   என் தேசமும், சுற்றமும், நட்பும் ஏன்  இப்படி சுறுங்கி காய்ந்த திராட்சை  மனத்தினராய்   ஆனார்கள் ?   எனதருமை தேசமே  நினைக்கும் போதே நெஞ்சில் ஓர் இனம்புரியாத வலி.......... திகரடி.... ,திடுக்கம்  வருகிறது!!!!

இதே பிளாக்கில்  இந்திய ஜனநாயகத்தையும், பாகிஸ்தானிய ராணுவ ஆட்சியையும் ஒப்பிட்ட, ஒரு வெளிநாட்டு காரரின் கட்டுரையை தழுவி ஒரு பதிவுCLICK HERE எழுதியிருந்தேன். அது எழுதும் போது என் மனதில் நிழலாடிய விஷயம்,  நாடு விடுதலை அடைந்த போது பாகிஸ்தானில்  அரசியல் தலைவர்களுக்கு பஞ்சம்,  அரசியலுக்கு வந்த ராணுவ அதிகாரிகள், மக்கள் துன்புற்ற போது, சுகம் அனுபவித்தவர்கள், ஜால்ராக்கள்.  சுதந்திரம் அடைந்த பின்பும் முடிந்தவரை சுருட்டிக்கொண்டு,  பழைய  துரைகளின் நாட்டுக்கே சென்று விடலாம் என்று எண்ணியவர்கள்,  அதனால் தான் பாக்கிஸ்தானின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறு துரும்பை  கூட கிள்ளிப்போட வில்லை.

எங்கள்  வீட்டில் ஒருமுறை, மேலே சொன்ன நண்பரை பற்றி பேச்சு வந்த போது,  அவனைப்பார்  உடனொத்தவன்,  துபாய் போனான் இரண்டு வருடங்களில் திரும்பி வந்து வீடு கட்டி கல்யாணமும் முடித்துவிட்டான்!!!!!!.  நீயும் தான் இருக்கிறாய் பார் என்று சொன்னார்கள். அவருக்கு ஏற்கனவே சொந்தமாக வீடுகட்டுகிற மனைக்கட்டு  இருந்தது, வசதி இன்மையால்,  கீற்று வேயப்பட்ட கூரையாய்  இருந்தது.  துபாயில் இருந்து வந்ததும், அவருக்கு பெண் கொடுத்த அக்காள் வீட்டுக்காரர் சிங்கப்பூர் இல் இருப்பவர், அவர்வீடு இரண்டு மாடி காரை வீடு,   அங்கு பிறந்து வளர்ந்த தன மகள்,  குடிசையில் வாழ சென்றால்,  தன தகுதி என்னாவது  நினைத்தாரோ என்னவோ ?.   உங்களால் இயன்றதை   நீங்களும்   போடுங்கள்,  மீதியை நான் போடுகிறேன் என்று சொல்லி,  வீட்டை மாடி வீடாக,  மகளையும்  மணமுடித்து  கொடுத்து விட்டார்   கொடுத்து விட்டார். இதை நான் எங்கள் வீட்டில் சொல்ல முடியுமா ?.

என் நிலைமை அப்படி அல்ல,   அடிப்படையில் இருந்து எல்லாமே தானே செய்து கொள்ள வேண்டும், மனையும் வாங்க வேண்டும்,  வீடும் கட்ட வேண்டும்,  நிறைய பொறுப்புக்கள் இருந்தது  அதையும்  நிறைவேற்ற வேண்டும்.  காலம் எடுத்தாலும்,  இறை அருளால் எல்லாம் நலமே முடிந்தது, எல்லா புகழும் இறைவனுக்கே.

இன்று நாமெல்லால் காங்கிரஸ்காரர்களை, கரித்துக்கொட்டுகிறோம், அறுபது ஆண்டுகாலம் ஆண்டிருக்கிறார்கள், என்ன செய்து இருக்கிறார்கள் என்று ?.  நாட்டை விட்டு ஓடியபோது,   நாடு முழுதும் பஞ்சம், பசி , பட்டினி, ஆங்காங்கே குட்டி சமஸ்தானங்கள், சுதந்திரம் அடைந்த ஓராண்டிலேயே,  சுதந்திர வேள்வியை,  புதிய பாணியில் நடத்தி  உலகை  திரும்பி பார்க்க வைத்த மனிதனை காவு கொடுத்தது.  நாங்கள் இங்கிருத்து போனால் ஒரு நிமிடம் கூட உங்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது என்று ஆணவத்தால் கொக்கரித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.  இந்த சூழ்நிலையில்  தேசத்தை உருவாக்கி,  உலகப்படத்திலே இடம் வாங்கி தந்திருக்கிறார்கள். பாகிஸ்தான்  போன்று ஒரே மத மக்களல்ல இந்தியாவில்,   எத்தனை  இனம் ?   எத்தனை இனம் ?.  தியாக உள்ளம் படைத்த தேசத்தலைவர்கள். அவர் தம் இடையறா உழைப்பால் உருவானது தான் இந்த தேசம்.   

அந்த நன்மக்களை  என்னென்னவோ  சொல்லி தூற்றுகிறார்கள்.   எதிர்கால சந்ததியினரின்  மனதில் நச்சு  விதை விளைத்திட முயன்று,  சரித்திர நிகழ்வுகளை மாற்றி,  திரித்து  எழுதுகிறார்கள். பரந்த இந்திய தேசம்  ஒன்றாய் இருந்தால்,   தங்கள் ஆதிக்கம்  விலக்கப்பட்டு விடுமோ என்ற கவலையில்,ஆங்கிலேயன்   பிரித்தாள  செய்த சூழ்ச்சிகளை எல்லாம் நமக்குள் செய்கிறார்கள்.  சுதந்திரம் என்றால் என்ன என்று  தெரியுமா உனக்கு ?  என்று  யாரும் கேட்க தோன்றும் காரியங்களை செய்கிறார்கள்.  உண்மையில் சுதந்திரம் என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரியுமா ?  இவர்களின் செயல்பாடுகள் அப்படியொரு அபிப்பிராயத்தை உருவாக்க வில்லை. பெரும் பெரும்  தியாகங்கள் செய்து,  இந்திய தேசமாகிய வீட்டை கட்டி உருவாக்கி  இருக்கிறார்கள்,  இன்று வீட்டுக்கு வெள்ளை அடிக்க வந்தவன், வீட்டை உருவாக்க செய்த தியாகங்களை மறந்தவனாக  கட்டியவனை குறை சொல்கிறான். 

இன்றைய  காங்கிரசில் இருப்பவர்களெல்லாம், அரசியலில் இருப்பவர்களெல்லாம்   உத்தம புத்திரர்கள் இல்லை.  அண்ணாதுரையிடம், ஒரு முறை, நடிகை பானுமதியையும்  அவரை யும் பற்றி கிசு கிசுக்க பட்ட போது, அது பற்றி அவரிடம நேரிடையாக கேட்கப் பட ,    அவள் படிதாண்டா பத்தினியுமல்ல, நான் பதிவிரதனுமல்ல.  என்றாராம்.  அது போல இன்றைய  அரசியல்வாதிகள்   எல்லோருமே  ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்  தான்.. இன்று நம் நாட்டிலே தேச தலைவர்கள், தேசப்பிதாக்கள்  இல்லை.


காவிக்கட்சியில்  ஆட்களுக்கு பஞ்சம், அதனால் தான் நரகல் நடைக்காரனில் இருந்து , முற்றும் துறந்தவன் என்று சொல்லி ஊரை கொள்ளையிட நினைப்பவன், மொள்ளமாரி, முடிச்சவிக்கி எல்லோருக்கும்,  எல்லா பதவியும்.  இவர்கள்  கையில் நாடு சுதந்திரம் அடைந்த புதுதில் கிடைத்திருந்தால்,  சர்ச்சில் சொன்னது சரியாய் போயிருக்கும்,  பாகிஸ்தான் எவ்வளவோ மேல்  என்று சொல்லு மளவிற்கு நாடு இருந்திருக்கும். என் தேசம் சிதறுண்டு சின்னாபின்னமாய், குட்டி ராஜ்யங்கள் ஆக போய் இருக்கும். நாமும் கூட திராவிட நாட்டில் இருந்திருப்போம் !!!!!!!. 

ஒருகை ஓசையிட முடியாது,  இந்நாட்டு  இளைஞன் இன்று பாரெங்கும் பரவி, தன அறிவாற்றலால், திறமையால் இந்த தேசத்திற்கு பெருமை தேடி தந்து கொண்டிருக்கிறான்,   ஹை டெக்  என்றால் இந்தியர்கள்  தான் என்று எண்ணுமளவிற்கு, கொண்டு வந்து வைத்திருக்கிறான்.  அவர்தம்  உழைப்பில்  குளிர் காய்ந்து கொண்டு, நாட்டை நரகமாக்கி,  இந்த தேசத்தின் மேன்மையை  சீரழித்து, கற்காலத்திற்கு கொண்டு சென்று விடாதீர்கள்,  இந்திய இளைஞனின் கனவை கருக்கி விடாதீர்கள்,  எம்மையும்  எம் தேசத்தையும் வாழ விடுங்கள் என்று  இருகரம் கூப்பி அரசியல்வாதிகளை  வேண்டி,   

இந்த சுதந்திர நினைவு  நாளிலே  இறைவா, பரம்பொருளே, சர்வ சக்தி வாய்ந்தவனே, மனிதர்களின் கற்பனைக்குள் அடக்க முடியாதவனே அருள் புரிவாய் என்று வணங்கி முடிக்கிறேன்.

Wednesday, August 12, 2015

சல்லி முட்டி மில்லியனர்.....இறுதி பகுதி

இதற்கு முந்தய  பதிவில் சில்லறை காசுகளை மட்டும் சேர்த்து  இரெண்டொரு மாதங்களுக்கு ஒருமுறை சேறுகின்றவைகளை, சரியான திட்டமிடலுடன், தொடர்ந்து, ஒரு தீர்மானமான முறையில், அந்த சில்லரைகள நம்மைவிட்டு போனவைதான் என்ற எண்ணத்துடன், அவை கிடைத்த காலங்களில் மட்டும் முதலீடு செய்து, அதாவது 5 ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்து, பிறகு ஒரு பைசா கூட மேலதிகமாக முதலீடு செய்யாமல் அப்படியே விட்டு, தற்பொழுது சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு அதனுடைய வளர்ச்சியை  பார்க்கும் பொது தலை சுற்றுகிறது.  கிட்டத்தட்ட ரூ 12 லட்சம்  + .  அதே கால கட்டத்தில்            ரூ 2000 பாக்கி இருந்த சேமிப்பு வங்கி  கணக்கை,  மறந்து இருந்து விட்டு,   ஊருக்கு திரும்பி வந்து என்னெவென்று பார்க்கும் போது,  கணக்கே இல்லை என்று  அதன் பிறகு வங்கியின் சில தேடல்களுக்கு பிறகு,  கணக்கில் இருந்த தொகை ரூ 4520.!!!.   இதில் நாம் புரிந்து  கொள்ள வேண்டிய  முக்கியமான விஷயம், எந்த இடத்தில் நம் பணத்தை " வேலைக்கு " அனுப்பி இருக்கிறோம் என்பது  தான்.

பதினைந்து ஆண்டுகளா?  என கேட்பவர்களுக்கு, வெளிநாடு போக்குவரத்தாய்  உள்ளவர்களை கேட்டுப்பாருங்கள்,  இதோ இப்பத்தான் வந்தது போலிருக்கும் பத்து ஆண்டுகள்,  பதினைந்து ஆண்டுகள் ஓடிப்போயிருக்கும்.  உள்ளுரிலேயே இருப்பவர்கள் என்றால்,   பெண் குழந்தைகள்,  வயதுக்கு வரும்போது பெற்றோர்கள்,   முதலில்  சொல்லுகின்ற வார்த்தை,  " இப்பதான் பொறந்த மாதிரியிருக்கு அதுக்குள்ளே வயசுக்கு வந்திருச்சு " என்பது தான். காலம்   பறந்து ஓடுகின்ற வேகம் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

சில்லறை விஷயம் முடிந்து, பண விசயத்திற்கு வருவோம்.  இந்த பிளாக்கில் வரும் " சொத்து சேர்க்கலாம் வாருங்கள் " என்ற தொடரை படித்து அதற்கு   பின்னூட்டமிட்ட  " வலிப்போக்கன் " என்ற பதிவர் இதெல்லாம் அன்றாடம் காய்ச்சிகளுக்கு எப்படி  உதவும்என்பதாக கேட்டிருந்தார்.  அவரும் இதை  நேர்ந்தால்,  இனிப்பான நிகழ்ச்சியை படித்து  தன கருத்தை சொல்லட்டும் .

ஒரு சிறு நகரத்தின் ஒரு கோடியில், "  டைரி  குயீன் "என்று   சொல்லுகின்ற  ஐஸ் கிரீம் கடை ஒன்றை   நாயரும் அவரது மனைவியும் நடத்திவந்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆணொன்று பெண் ஒன்று. அதிலிருந்து வருகின்ற வருமானம், செலவு சம்பளம் வாடகை போக,  அவர்களுடைய வீட்டு செலவுகளுக்கு இழுத்துக்க பறிச்சுக்க என்பது போல் ஓடிக்கொண்டு இருந்தது.  சிலகாலம் நடத்திய நாயர்,  இப்படியே இருந்தால் நம்  எதிர்காலம்   என்னாவது என்று கவலை கொண்டு,  தங்களுடைய  கடை கணக்கு வழக்குகளை பார்த்துவந்த  ஆடிட்டரிடம் சொல்ல அவர்,  ஏதாவது கொஞ்சம் காசை எடுத்து, உங்க ரிடயர்மெண்டு காலத்திற்கென்று ஒதுக்கி,  ஏதாவது ஒங்களுக்கு தெரிஞ்ச கம்பனியிலே போடுங்க என்று சொல்ல,  இவர் அந்த அளவுக்கு எங்க வருமானம் வருது ?, உங்களுக்கு தெரியாததா ?, என்று கேட்க  ஆடிட்டர,  500 , 1000 இல்லாட்டியும் ,  50, 100 கூடவா ஒதுக்க முடியாது முயற்சி  பண்ணுங்க என்று சொல்லி அனுப்பினார்.

வீட்டிற்கு வந்த நாயருக்கு ஒரே யோசனை, மனைவியை அழைத்து ஆடிட்டர் சொன்ன விவரங்களை சொன்னார்.   மனைவி,  நம்மால்  தொழிலில் இருந்து பெரிய தொகையெல்லாம் எடுக்க முடியாது,  அப்படியே  சிறிய ததொகையை எடுத்தாலும்,   ஒரே தடவையாகவும் எடுக்க முடியாது  அதனால்,  கணக்கபிள்ளையிடமே  சொல்லி,  வாராவாரம் ரூ 10  எடுத்து நல்ல கம்பனியா பார்த்து போடச்சொல்லுங்க என்று யோசனை சொல்லி அவ்வாறே  முடிவும செய்தனர்.

நாயர் மனைவியிடம், கணக்கப்பிள்ளை நமக்கு தெரிஞ்ச கம்பனியா பார்த்து போடுங்க  என்று  சொல்லிவிட்டார், எனக்கு இதைபத்தி திரும்ப பேச வெட்கமாய் இருக்கிறது,  எனக்கு இந்த கடைய விட்டா வேறே ஒன்னும் தெரியாது என்று புலம்பிகொண்டிருந்தார். வார முடிவில்  அடுத்தவாரம் கடைக்கு தேவையான  பொருட்கள் என்னவென்று பார்க்கும் போது,  ஒரு யோசனை வந்தது.  மனைவியை  அழைத்து,  நம்ம  விக்கிற ஐஸ்கிரிமுக்கு வேண்டிய " டாப்பிங் ",  " குகீஸ் "   அப்பிடீன்னு எதனை வகையான சாமான் இருக்கிறது,   நம்மை போல்   எத்தனை ஐஸ்கிரீம்  கடை இருக்கிறது, அது இல்லாமே  சினிமா தியேட்டர், கடல்கரை  இந்தமாதிரி பல இடங்க லிலே இருக்கிற எல்லா கடைக்கும் வேண்டிய  சரக்கு எல்லாவற்றையும்,  மார்ஸ் கேண்டி,  ஹெர்ஷி புட்ஸ் என்ற ரெண்டே ரெண்டு கம்பனி தான் சப்ளை செய்கிறது , இது மட்டுமில்லாமே வகை வகையான் சாக்ளட்களும் தயார் பண்ணி விற்கிறார்கள்,  ரெண்டு கம்பனியில்,  ஹெர்ஷி புட்ஸ் கம்பனி மட்டும் தான் பங்கு சந்தையில் பங்கு விற்கிறது.  எனக்கு இதை விட்டா,  தெரிஞ்ச கம்பனின்னு ஒன்னும் தெரியவில்லை.  நாம அந்த கம்பனியிலே  பங்கு வாங்கினா என்ன ?  அதை பத்தி நீ என்ன நினைக்கிறாய் ? என்று கேட்க, அக்கம்  பக்கத்திலே யாருமில்லையே என்று கவனமாக பார்த்துக்கொண்ட நாயர் மனைவி,  ஓடிவந்து நாயரை கட்டிபிடித்து ஒரு  " உம்மா "  கொடுத்து நெட்டி முறித்து, எண்டே நாயருக்கு எத்தனை அறிவு என்றார். நாயருக்கு தலைகால் சிறிது நேரத்திற்கு புரியவில்லை.  அடுத்தநாள் நாயர்  ஆடிட்டரிடம், விவரம் சொல்லிவிட்டு வந்தார். ஆடிட்டரும் வாரம் தவறாமல் கம்பனிக்கு பணத்தை அனுப்பிக்கொண்டும், சில காலங்களுக்கு பிறகு கிடைக்க ஆரம்பித்த,  டிவிடண்ட் , போனஸ் எல்லாவற்றையும் திரும்பவும் புதிய பங்கு வாங்க திருப்பி கம்பனிக்கே அனுப்பிக்கொண்டும்   இருந்தார்


இவ்வாறாக பலகாலம் நடந்து கொண்டே வந்தது, கால மாற்றங்கள் பல ஏற்பட்டு நாயரின் கடையும் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் அடைந்தது. வருமான ஏற்றத்தாழ்வுகளாலும், சிறிய தொகை என்பதாலும் எல்லோரும் மறந்து விட்டனர். ஆனால் பணம் ரூ 10 மட்டும் தொடர்ந்து போய்கொண்டே இருந்தது. சில காலத்திற்கு பிறகு நாயர் இறந்து போனார்.  நாயரின் மனைவி மக்களின் துணையுடன் சிறிதுகாலம் நடத்தினார். அவரும்  இறந்ததிற்கு பின்னாள்  மகனும் மகளும் நடத்தினர்,  அவர்களுக்கும் குழந்தை குட்டிகள் என்றாகி,  பெரியவர்களாகி,  வெவேறு ஊர்களுக்கு சென்று விட்டனர்.  வயதான காலத்தில் இனிமேலும் நம்மால் நடத்த முடியாது என்ற சூழ் நிலைக்கு வந்து, அண்ணனும் தங்கையும் கடையை விற்க முடிவு செய்தனர்.  ஆடிட்டரின் கம்பனிக்கு போய் தம் முடிவை சொன்னனர்.

சொல்லி இரெண்டொரு வாரங்களில், ஆடிட்டர் ரூ 50000 திற்கு யாரோ கேட்பதாக சொன்னார்.  மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், ஆளுக்கு ரூ 25000 என்பது ஒரு ஞாயமான தொகை தான் போகட்டும் என்று  மனதை  தேற்றிக்கொண்டு,  விற்று விடுமாறு சொல்லி விட்டனர். அடுத்த இரெண்டொரு நாட்களில், அண்ணன் தங்கை இருவரையும் வரச்சொல்லி ஆடிட்டர் ஆபீசில் இருந்து ஆள் வந்தது .

நெடுநாளைய  பழக்கமானதால், ஆடிட்டர் பழைய விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு, ரூ 50000 திக்கான செக்கை கொடுத்தார்.  மனதில் ஒரு இனம்புரியாத சோகத்துடன் இருவரும் போய்  வருகிறோம் என்று சொல்லி வணங்கி கிளம்பினர்.  ஆடிட்டர்  எங்கே கிளம்பி விட்டீர்கள் ?  உங்களுக்கு சேர வேண்டிய உங்களின் பெற்றோரின் ரிடயர்மண்ட்  கணக்கு இன்னும் பாக்கி இருக்கிறது  என்று சொல்ல,   இருவரும்,   ஒ,  அந்த  பத்து ரூபாய் கணக்கா ?  அதிலே என்ன பெரிசாய் வந்துவிட போகிறது,  நீங்களே  இருக்கிற காசுக்கு செக்கை அனுப்பி விடுங்கள்  என்று சொல்லி கிளம்ப போனார்கள்.   ஆடிட்டர்  ஒரு நிமிஷம் இருங்கள் என்பதாக சொல்லி,  பைலில் இருந்து ஒரு பேப்பரை உருவி இருவரிடமும்  கொடுத்தார்.

ஸ்டேட்மெண்ட்  பேப்பரை படித்த இருவராலும் ஒன்று பேச முடியவில்லை, அதில் அவர்கள் பெற்றோர் பெயரில்  ஹெர்ஷி புட்  கம்பனியின்  226040 பங்குகள் இருப்பதாகவும்.  அந்த பங்குகளின் அன்றைய மதிப்பு ரூ 10,669,088 என்பதாகவும் அதிலிருந்து, வருடத்திற்கு கிடைக்கும் டிவிடன்ட் வருமானம் மட்டும் ரூ 2,89331,  அதாவது மாதம்  ரூ 24,111.  இதில் இந்த டிவிடன்ட் தொகை தொகையை மீண்டும் புதியதாக ஷேர்  வாங்க கம்பனிக்கே அனுப்புவதாகவும்,  இனி என்ன செய்ய வேண்டும் என்பதாக கேட்டார்.

50 ஆண்டுகளில் ரூ 10 அடைந்த வளர்ச்சியை பார்த்தீர்களா இது தான்  காம்பவுண்டிங்   சக்தி.  இது கற்பனை நிகழ்ச்சி அல்ல, உண்மையில் நடந்தது. நடந்த இடம் அமெரிக்கா,  சம்மந்த பட்ட ஆட்களின் பெயரை மட்டும், இந்திய பெயராக மாற்றியுள்ளேன்.  சல்லி முட்டி சம்மந்த பட்டவரை  ரூபாய்  ரூபாய் தான்,   நாயர் கதையில் வருவது மட்டும்  அமெரிக்க  டாலர் $ $ $. இன்றும் அந்த கம்பனி வளர்ந்து கொண்டிருக்கிறது, 

இந்த இந்திய சல்லி முட்டி மில்லியனர் அமெரிக்க பங்கு சந்தை மில்லியனர்,  இருவரின் கதையிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளப்போகும் படிப்பினை என்ன?

எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும், போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டு,  தொந்தரவு செய்யாமல் விடப்பட்டால்,  காம்பவுண்டிங் இன் சக்தியால,   மிகப்பெரிய புதையலாய் மாறக்கூடும். இவ்வாறான அபரிமிதமான வளர்ச்சியை பெற்று தரக்கூடிய வாகனங்கள் தான்,  பங்கு முதலீடுகள், ரியல் எஸ்டேட், வாடகை கட்டிடங்கள்,......மற்றும் இவை போன்றவை,

வாரம் ரூ 50 ,ரூ 100 மட்டுமே மிஞ்சக்கூடிய,  சிறு தொழில் முனைவர்கள் கூட  பெரும் தனவந்தர்களாக ஆகக்கூடிய சக்தியை தம் கைகளில் வைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமின்றி,  இது ஒரு  ராக்கட் சயன்ஸ் அல்ல என்பதும் தான்.

 



 

 



 

Saturday, August 8, 2015

சல்லி முட்டி( piggy bank ) மில்லியனர் !!!!!!!!!

நம்முடைய வீடுகளில் இன்றும் கூட சிறுவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பெரியவர்கள், மண்ணாலான  " சல்லி முட்டி " (  தற்காலத்தில் piggy bank என்று அழைக்கிறார்கள் )  வாங்கி கொடுத்து சேமிக்க பழக்குவார்கள்.  அதில் இருக்கிற சிறு இடைவெளி வழியாக காசு            ( சல்லி )  போட  முடியுமே தவிர எடுக்க முடியாது. தெருவில் கூவி விற்கிற சாமான்கள் வாங்குவதற்கு தான் காசு எடுக்க நினைப்போம்,  சல்லி முட்டியில் இருந்து எடுப்பதற்குள், வியாபாரி காத தூரம் பொய் விடுவார். இதனாலேயே நாம் எடுக்க முயற்சிப்பதே இல்லை.  இது நமது சேமிப்பை தொடர்வதற்கு ஒரு தூண்டு கோளாகவும்  இருக்கும்.

இனி சல்லி போட முடியாது என்ற நிலை வந்ததும், உடைத்து தான் எடுக்க வேண்டும்.  உடைத்து அதிலிருக்கும் சல்லிகளை எண்ணி,  எத்தனை ரூபாய் என்று பார்ப்பதிலே இருக்கும் சந்தோசம் அலாதி  தான்.  நாம்  நம் வயதிற்கு தக ஏதாவது பொருள் வாங்கி செலவு செய்து விடுவோம்.   சில காலம் இவ்வாறு சேமிக்கின்ற சில்லறையை, நம்மிடம் இருந்து வாங்கி சென்று வங்கிகளில் நம் கணக்கில் சேர்க்க வென்று,  சிலரை அனுப்பிக்கொண்டிருந்தன.   குழந்தைகளிடம்.   வாழ்க்கைக்கு தேவையான நல்ல  பழக்க வழக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தொடங்கிய அந்த செயலை,  முட்டி நிறைந்ததும் உடைத்து எடுத்து " ஏதாவது "  செய்யும் போது, அதனை செலவிடாமல், தொடர்ந்து சேமிக்க வேண்டும் என்பதாக பெரும்பாலான பெற்றோர்  சொல்லிக்கொடுக்கததால், அப்படியே மனதில் பதிந்து, பெரியவர்களான பின்பும் சேமிப்பு என்ற எண்ணமே எடுபட்டு  போய் விட்டது.  நம்மிடையே சில இனத்தார், இச்சேமிப்பு தொகையை கொண்டு,  அந்த தொகையின் மதிப்பை தக்க வைத்துக்கொள்ளும்                                           (  மோதிரம்,செயின், கம்பனிகளில் ஷேர்), தாங்களே உபயோகித்து பிறரிடம் காட்டி பெருமை பட்டுக்கொள்ள கூடிய பொருள்களை வாங்கி கொடுத்து/ வாங்கசொல்லி,  சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பார்கள்.

சிறுவர்களாக இருக்கும் போது  சல்லி முட்டியை உடைத்து எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்க்கும் போது ஏற்படுகின்ற சந்தோசம்  அலாதியானது,  அம்மாதிரியான ஒரு நிகழ்ச்சி பெரியவர்களான பின்பும்  நடந்தது.   சில காலத்திற்கு முன்பு நாங்கள் நண்பர்கள், பணி  நிமித்தமாக மாதத்தில் இருபது நாட்கள் வரை பயணத்திலேயே இருப்போம்.  நண்பர் ஒருவர்,  அவர் பிரயாணத்தில் இருந்து திரும்பி வரும்போது கையில் இருக்கின்ற சில்லறையை அப்படியே ஒரு தோல் பையில் போட்டு வருவதை பார்த்து மற்றோரும் அப்படியே செய்ய ஆரம்பித்தோம். ஒரு சிறிய மாற்றம்,  ஒரு ரூபாய்க்கு மேல் உள்ள நாணயங்களை மட்டும் தான் நாங்கள் சேர்த்தோம்.  நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை அவரவ்ருடையதை எண்ணிப்பார்க்கும் போது,   ஒரே பிரமிப்பாக இருக்கும், அதி சர்வ சாதாரணமாக  1500, 2000 ரூபாய் வரை இருக்கும், இத்தனைக்கும் அது இருந்ததாக யாரும் நினைப்பதே இல்லை.

ஒரு சின்ன கணக்கு,  என் மனதில் ஒரு கம்பனி இருக்கிறது, பெயர் சொல்ல விரும்ப வில்லை, இந்த சில்லறையை மட்டும் அந்த  கம்பனி ஷேரில் முதலீடு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் பாருங்களேன். அந்த கம்பனியின்  ஷேர்  அப்பொழுது ரூ 60 விற்றது, நான்கு மதத்திற்கு ஒருமுறை ரூ 1750 இக்கு ( சேரும் சில்லறை ரூ 1500 இக்கும் ரூ 2000 க்கும் இடையில்)  ஷேர்  வாங்குவதாக கொண்டால் வருடத்திற்கு 3 முறை, ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 90 ஷேர் வாங்கியதாக  கொள்வோம்.  வருடத்திற்கு 270 ஷேர்.  அதே பணியில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இருந்தோம்,  மொத்தம் 1620 ஷேர்கள்  இருந்ததாக கொள்வோம்.  இன்றைக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன,  அந்த கம்பனி ஷேர்   ரூ 740 இக்கு விற்கிறது.  இன்றைய நிலவரப்படி 1620 ஷேர் இன் விலை  ரூ 11,98,800 ( 740 x 1620 ) கிட்டத்தட்ட 12 லட்ச ரூபாய். போட்ட முதலீடு ரூ 31,500 (3 x 1750 x 6 ) இது  அல்லாமல் கம்பனி டிவிடண்ட்  கொடுத்திருக்கிறது,  விலை ரூ 60 ஆகவே இல்லாமல் கூடி குறைந்திருக்கிறது, போனஸ் ஷேர்  கிடைத்திருக்கிறது இவைகளையெல்லாம் கணக்கிட்டால் தொகை எங்கோ போய்  விடும்.   இதில் எதுவுமே கற்பனையல்ல, நம்புங்கள். இந்த சிறு சில்லறையின் மகிமையை பார்த்தீர்களா ?.  இப்படி செய்தவரை  சல்லி முட்டி மில்லியனர்  எனலாமா!!!!!!!

பெரிய பருப்பு மாதிரி சொல்றியே யாரு இப்பிடி இருக்கிறது ?   என்று கேட்கிறீர்களா ?. உங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கலாம்.  செட்டியார் . மார்வாடி,  சினிமாக்காரங்க, ஹி....ஹி.... நம்ம அரசியல்வாதி ....... இப்படி லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.  உங்க ஊர்லே பெரிய ஆடிட்டர் இருந்தா,  உங்களுக்கு நெருக்கமானவரா இருந்தா, இப்படியெல்லாம் இருக்கிறார்களா? என்று கேட்டு பாருங்கள்.   பணக்காரர்களின் சிதம்பர ரகசியம் எது தெர்யுமா ? ரகசியம் தான். 

இப்ப அமேரிக்கா மாதிரி நாடுகளில் எல்லாம், இந்த சேமிப்பு பாடம் எடுத்து கொள்கிற அளவுக்கு நேரமும் இல்லை, யாராவது காதை பிடித்து திருகினால் தான் அன்றி சேமிப்பு செய்ய போவது இல்லை அப்டீன்னு,  இது புதுசு, போனே செய்யும்,  ஆப்  (aap ) இருக்கிறது என்றால் உடனே செய்வார்களே!!!!!!.   மாசத்துக்கு ஒரு டாலர் கொடுத்தால் போதும், ஒங்க  வங்கி கணக்கு எண்ணை கொடுத்தால் போதும்,  நீங்கள் ஒவ்வொரு முறை சாமான் வாங்கும் போதும், வருகிற தொகையை ரவுன்டாக்கி, சில்லறையை சேமிப்பு  கணக்கில் சேர்த்துக்கொண்டே இருக்கும்.  உதாரணத்திற்கு  $ 5.25 வந்தால், $ 6.00 உங்கள் கணக்கிலிருந்து பொய் விடும், $ 0.75 உங்களுடைய சேமிப்பு கணக்கிற்கு தானே பொய் விடும!!!!!.

சாதாரண வங்கி கணக்கோடு, சேமிப்பு கணக்கையும் சேர்த்து திறந்தாள், சாதாரண  கணக்கிற்கு உள்ள சற்விஸ் சார்ஜ் கிடையாது மேலும் நாம் சொல்லுகின்ற கால இடைவெளியில், சொல்லுகின்ற தொகையை சேமிப்பு கணக்கிற்கு மாற்றவும் செய்வார்கள். நம் நாட்டிலேயும் கூட இப்படியான கணக்குகள் வந்து விட்டது,  வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

பெரும் தொகையோ, சிறு தொகையோ எதுவாக இருந்தாலும் சேமிப்பு கணக்கிலேயோ, வீட்டிலேயோ அல்லது வளரா உருவிலேயோ இருக்குமானால் அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை,  எதில் எப்படி அதனை முதலீடு செய்தால் வளரும் என்பதை அறிந்து, திட்ட மிட்டு, தொடர்ந்து செய்தால், பிரமிக்கத்தக்க முடிவுகளை காணலாம். 

தான் நடத்தி வந்த சிறு தொழிலில் இருந்து வருகிற வருமானம் மிக குறைவாக இருக்கிறதே,  உழைக்க முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று குழம்பி, கிடைப்பதற்குள் ஒரு சிறு தொகையை  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சேர்த்து கொண்டே வருவோம், நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து செய்தவர்.  காசில்லாவிட்டாலும், சரியான திட்டமிடல் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவரை, இறைவன் நாடினால் இப்பதிவின் இரண்டாவது பகுதியாக காணலாம்...........






    





இன் செர்ச் ஆப் கைடன்ஸ் அண்ட் லைட்.........

மனித இனம் தோன்றிய காலம் தொட்டே,  மனிதன் தான் தனக்கு என்ற சுயநலத்தை கொண்டவனாகவே வாழ்ந்து வந்ததாக வே தோன்றுகிறது.  எண்ணற்ற தீர்கதரிசிகள் இவ்வுலகத்தே தோன்றி, அவர் தம் கால மக்களுக்கு வழிகாட்ட முயன்று  இருக்கிறார்கள். சிலர் வெற்றி  பெற்று இருக்கிறார்கள்,  சிலகாலம் அவர்களை பின்பற்றுகின்ற மனிதன். அவர்கள் காலத்திற்கு பின்னால்,  புதியன விரும்பி,  தனக்கு  உகந்தவற்றை ஏற்றும், இயலாதவற்றை விட்டும்  நடக்க தொடங்கியதால்,  இன்று உலகத்தில்,  பல்லாயிரக்கணக்கான  மதங்கள், சமயங்கள். பல்கி பெருகி இருக்கின்றன.

இன்று வானளாவ வளர்ந்து, கற்பனைக்கு எட்டா  காரியங்களையெல்லாம்  சாதித்து, சாதனை புரிந்து கொண்டிருக்கிற கால கட்டத்தில்,  சார்பின்றி சிந்திக்கின்ற, சாதாரண மனிதனுக்கு விளங்கக்கூடிய விசயங்களை ஒட்டுமொத்தமாக விலக்கி வைத்து, கற்கால  மனிதன் போல் சிந்திக்ககூடியவனாக இருக்கிறான்.  பெற்றோர் எப்படி தன்குழந்தையை பிறரிடம் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்களோ அப்படி,  தான் கொண்ட கொள்கையை, பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்பதாக நடந்து கொள்கிறார்கள்.  இதில் பள்ளியில் மழைக்காக கூட ஒதுங்காதவர்களில்  இருந்து  பல்கலைகழகங்களில் படித்தவர்கள் வரை அடக்கம்.

தோன்றிய தீர்க்க தரிசிகளின்  உபதேசங்கள் எல்லாம் இன்று காணக்கிடைக்கின்றன்வா என்றால், உறுதியாக சொல்லமுடியாத நிலைமை தான்.  பெரும்பாலும் கரண பரம்பரை செய்திகள் தான். பதிவு செய்யப்பட்டோ, செய்யப்படாமலோ காலப்போக்கில் அழிந்து பட்டு போயிருக்கலாம். எழுத்துருக்களும், எழுதுகோல்களும் தோன்றிய  காலங்களை அறுதியிட்டு சொல்ல முடியா நிலைமை.

இன்றைய அறிவியல் வளர்ச்சியால் ஒரு 2000 3000 ஆண்டுகளுக்கு முந்தய ஏடுகள் கிடைக்கப்பெற்றால் கூட,  அவைகளின்  தொன்மை  தன்மையை  நூற்றுக்கு நூறு சதம் என்றில்லாவிட்டாலும், தொண்ணுறு சதத்திற்கு மேல் உறுதியாக சொல்லக்கூடிய நிலைமையை எட்டி இருக்கிறோம்.

இன்று நம்மிடையே புழக்கத்தில் இருக்கிற, பெரும் தொகையினரால் பின்பற்ற பட கூடிய சமயங்களின்  ஆதாரமாக  இனங்காட்ட படுகிற கிரந்தங்கள், ஒரு சில வருட இடைவெளியில்,  வெவ்வேறு நாடுகளில் பதிப்பிக்கப்பட்டவை, ஒரே செய்தியை முன்னுக்குப்பின் முரணாக சொல்லி, நம்பக தன்மையை குறைக்கின்றன. மற்றும் சில ஜீரணிக்க முடியாத. மன முரண்டான செயல்களை சொல்லி .விவாதத்தை தூண்டுபவனாக உள்ளன. இன்னும் சில, கதம்பமாய் பல்வேறு, கிரந்த சாரங்களையும் தொகுத்து, புதியனபோல் சொல்பவனவாய் உள்ளன. சில தொன்மை தன்மை நிருபிக்கப்பட்டும், விமரசிகர்களால், முயலுக்கு மூன்றுகால் தான் என்பது போன்று , விமர்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சமீபத்திய செய்தியொன்று இங்கே சொடுக்கி பாருங்கள்

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னாள், " இன் செர்ச் ஆப்  கைடன்ஸ் அண்ட் லைட்   "  என்று சொல்லி உண்மையை தேடிய மனிதனின் கதை,  அவரே சொல்வதை கேளுங்கள்.

 ஈரானின் அஸ்பஹான்  என்ற  பகுதியில் ஜீ  என்ற ஊரை சேர்ந்தவன். என் தந்தை ஊரிலே பெரும் தனக்காரர், நாங்கள் நெருப்பை வணங்கக்கூடியவர்கள்,  நெருப்பை அணையாவண்ணம் காக்கும் பொறுப்பு எங்கள்  குடும்பத்தை சார்ந்தது.  என் தந்தையார் என்மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். வயது வந்த பெண்ணை காப்பது போல், வீட்டிற்குள்ளேயே பெரும்பாலும் வைத்திருப்பார். எங்களுக்கு சொந்தமான பண்ணையோன்று  ஊருக்கு சிறிது தள்ளி இருந்தது. வீடொன்று கட்டத்தொடங்கிய சமயம் , ஒருநாள் மிகுந்த வேலையின் காரணமாக, பண்ணைக்கு செல்லமுடியாமல், என்னை அங்குள்ள வேலையை பார்த்து வருமாறு அனுப்பினார்.

செல்லுமுன்பு,  மகனே நான் உன்மீது எத்தனை அன்பு வைத்து இருக்கிறேன் என்பது நீ அறியாதல்ல,  கவனமாக சென்று வா, இருட்டும் முன் வீடுவந்து சேர் என்று பலவாறு சொல்லி அனுப்பினார். நான் செல்லும் வழியில், திரளான மக்கள் ஓரிடத்தில் குழுமி ஏதோ  செய்து கொண்டிருந்தார்கள். என்ன வென்று பார்க்கலாம் என்று அருகில் சென்றேன்.  நான் இதுவரை பார்த்திராத முறையில் வணங்கி கொண்டிருந்தார்கள், எனக்கு புதுமையாக இருந்ததால் நான் என்னைமறந்து வெகு நேரம் அங்கேயே இருந்தேன். அருகில் உள்ளவர்களிடம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன், அவர்கள்  நாங்கள் ஓரிறைவனை வணங்கககூடியவர்கள் என்று சொல்ல,  என் ஆவலை தூண்டும் பல செய்திகளை எனக்கு சொன்னார்கள்.  எனக்கு அவர்கள் சொன்ன விசயங்கள் மனதிற்கு பிடித்திருந்தது. அவர்களுடன் சேர்ந்திருந்து வந்த வேலையை சுத்தமாக மறந்து விட்டேன், இதற்கிடையில் இருட்டவும் தொடங்கி  விட்டது.

இருட்டியும் என்னை காணாததால், என்னை தேடி என் தந்தை ஆட்களை  அனுப்பினார். நான் அவர்களுடன் வீடு திரும்பியதும்,  ஏன்  இவ்வளவு நேரம் ஆனது என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன். அவர் அவர்களெல்லாம்  நம் முன்னோர்களின் மதத்தை எதிப்பவர்கள், கெட்டவர்கள்  என்பதாக சொன்னார்.  நான் அவர்கள்  தொழும்  முறை எனக்கு பிடித்திருக்கிறது, நம் மதத்தைவிட மேலான மதமாக தெரிகிறது என்றேன்.  நான் அவருடன்  வார்த்தையாடியதை வைத்து கோபமுற்று,  அவர்களுடன் சேர்ந்து விடுவேனோ என்று சந்தேகப்பட்டு அன்றிலிருந்து. என் கை கால்களை பிணைத்து ஓர் அறையில் அடைக்க தொடங்கி விட்டார்.

என் தந்தை அவர்களைப்பற்றி சொன்ன வார்த்தைகள்,  என்னை கைதியாக ஆக்கியது எல்லாமாக சேர்ந்து, என்னை மேலும் அவர்களின் " கிருஸ்துவ  மதத்தை " பற்றி மேலும் தெரிந்து  கொள்ள  வேண்டும் என்றஆர்வத்தை அதிக மாக்கியது. அவர்கள் தங்களுடைய  மத தலைமையகம்,  ஷாம் தேசத்தில் உள்ள பலஸ்தீனில் இருப்பதாக சொன்னார்கள்,  மிகவும் சிரமத்திற்கிடையில்,  என் நிலைமையை சொல்லி,  நான் ஷாம் செல்லப்போவதாகவும்  அதற்காக   அஸ்பஹானில்  இருந்து  உடனடியாக  புறப்படும் வணிக குழு  பற்றி தெரிந்தால்  தகவல் தெரிவித்து உதவுமாறு செய்தி அனுப்பினேன். சிறிது நாட்களில் அவர்களும் செய்தி அனுப்பினார்கள்.  நான் ஒருவாறாக என் வீட்டிலிருந்து தப்பித்து  வணிக குழுவினர் உதவியுடன்,  சிரியா என்ற தேசத்தை அடைந்தேன். பல்வேறு சிரமங்களுக்கு பிறகு,  எல்லோராலும் சிறப்பாக சொல்லப்பட்ட ஒரு வயதான பிஷப்  ஒருவரை சென்றடைந்தேன்.

அவருக்கு பணிவிடை செய்து அவரது மதத்தை பற்றி சிறிது காலம் கற்றுக்கொண்டிருந்தேன்,  அவர் அவ்வளவு நல்லவராக இல்லை,  ஏழை எளியவர்க்கு உதவ என்று சொல்லி மக்களிடம் வசூல் செய்கிற பணத்தையெல்லாம் அவர் தனக்காக சேர்த்துக்கொள்வதை நான் பார்த்திருந்தேன்.  சில காலத்தில் அவர் இறப்பெய்தினார்,  அவரது உடலை மக்கள் மிகவும் கண்ணியப்படுத்தும் வகையில் செயல் பட ஆரம்பித்தனர்,  நான் அவர்களிடம், இந்த பிஷப்பானவர் நீங்களெல்லாம் நினைப்பது போல் நல்லவர் அல்ல, உங்கள் எல்லோரையும் அவர் ஏமாற்றிக்கொண்டிருந்தார் என்பதாக சொன்னேன். எதைவைத்து நான் அப்படி சொல்கிறேன் என்பதாக கேட்டார்கள். நான் அவர்களை,  பிஷப் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துசென்று,  அவர் பணத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தை காண்பித்தேன்.  அதிலிருந்து  ஏழு  பாத்திரங்கள் நிறைய வெள்ளி தங்க நாணயங்களை கண்டெடுத்தனர்.  இதை கண்ட மக்கள் மிகவும் வெகுண்டு,  பிஷப்பின் உடலை சின்னாபின்னப்படுத்தினர்.

சிறிது நாட்களில் வேறொரு பிஷப் நியமிக்கப்பட்டார், இவர் மிகவும் பழுத்த பழமாக இருந்தார். நான் கண்டவர்களிலேயே இவர் மிகவும் நல்லவராகவும், நேரம்தவறாமல் தொழுபவராகவும், ஏழைகள் மீது அன்பு பாரட்டக்கூடியவராகவும் இருந்தார்.  சிலகாலம் அவருடனேயே இருந்து,  அவர்டைய மதத்தை பற்றி கற்றுக்கொண்டிருந்தேன். சிறிது நாளில் அவரும்  நோய்வாய் பட்டு   படுத்த படுக்கை ஆகி விட்டார்,  நான் அவரிடம் , என்னுடைய மார்க்க கல்வியை நான் தொடர விரும்புகிறேன்,  தங்களுக்கு  தெரிந்த அறிஞர் யாரும் இருந்தால் சொல்லுங்களேன் என்றேன். மிகவும் யோசனைக்கு பின்னால்,

மகனே......இந்த பகுதியிலே உண்மையான கிருத்துவத்தை பின்பற்றக்கூடிய மக்களும் அறிஞர்களும் இல்லாமலாகி  விட்டார்கள்,......  எங்களை  போன்ற ஒருவர்,    ஈராக் என்ற நாட்டில்  மோசல் என்ற ஊரில் இருப்பதாக கேள்விப்பட்டேன், முடிந்தால் அவரிடம் சென்று கல்வி கற்று  கொள்ள  பார் என்பதாக சொல்லி, சிலநாட்களில் அவரும் இறந்து விட்டார்.

நான் சந்தித்த எல்லோருமே மிகவும் வயதான பழங்களாகவே இருந்தார்கள்.மொசலுக்கு சென்று சிலகாலம் கல்வி கற்று, அவருடைய இறப்பிற்கு பிறகு,  அவரால் பரிந்துரை செய்யப்பட்ட   நசீபி என்ற ஊரைச்சேர்ந்த  மற்றொரு பிஷப்பிடம்  சென்று  இன்னும் சிலகாலம் கல்வி பயின்றுஅவருடைய இறப்பிற்கு பின்னால், அவரால் பரிந்துரை செய்யப்பட்ட  பைஜாண்டின் - துருக்கி ய நாட்டை சேர்ந்த  அமூரியா என்ற ஊரில் உள்ள பிஷப்பை சென்றடைந்தேன்.  இவ்வூரில்  சில காலம் கூடுதலாய் இருந்த தாலும்,  தொழில் வாய்ப்புக்கள் உள்ள இடமாகவும் இருந்ததால், வியாபாரம் ஒன்று  செய்து கொண்டே கல்வியும் கற்றுக்கொண்டிருந்தேன்.

அமூரிய நகரத்து பிஷப்பும் நோய்வாய்ப்பட்டார், அவருடைய இறுதிகாலம் நெருங்கியது போல் தெரிந்ததால் அவரிடமும்,  நான் கல்வி கற்றுக்கொள்ள தகுந்தவரை அடியாளம் காட்ட சொன்னேன், அவர்

மகனே........மக்கள் மனம்போன போக்கில் வாழ தலைப்பட்டு விட்டார்கள், வழி காட்டக்கூடிய  அறிஞர்களும் இல்லாமலாகி விட்டார்கள்.  இறை அறிவிப்பின்படி  புதிதாக ஒரு தீர்க்க தரிசி தோன்றக்கூடிய காலம் நெருங்கி விட்டது என்று சொல்லி நிறுத்தினார்.

எங்கே தோன்றுவார் ?  அடையாளங்கள் எதுவும் உண்டா ? என கேட்டேன்

கருமையான எரிமலை குன்றுகளுக்கு இடையில் உள்ள,  ஈச்சன் சோலைகள் நிறைந்த பகுதியில்  தோன்றுவார். தானப்பொருட்களை உண்ணமாட்டார், பரிசாக கொடுப்பவைகளை மட்டும்  உண்பார், இரு தோள் களுக்கும் இடையில் பின்புறத்தில் தீர்கதரிசிக்கான அடையாள சின்னம் காணப்படும் என்பதாகசொல்லி, சில காலங்களில் அவரும் இறையடி சேர்ந்தார்.

நான் என் தேடுதலை துவங்க வென்று இருந்த அனைத்தையும் விற்று தயாராய் இருக்கும் போது, ஒரு அரபு வணிகக்குழு ஒன்றை சந்தித்தேன்.  அவர்களிடம் என்னையும் அவர்களுடன் அழைத்து செல்லும்படி கேட்டேன். அவர்கள் அதற்கென்று பெரும் தொகை ஒன்றை கேட்டார்கள், நான் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்து அவர்களுடன் பயணப்பட்டேன். சிறிது நாட்கள் பயணத்திலேயே, என்னை அவர்கள்   " அல்  வாதல் குறா "  என்ற கோத்திரத்தை சார்ந்த  யூதனிடம் விற்று அவனுக்கு அடிமையாக்கி விட்டார்கள்.  அவன் தன உறவினனான  " பனு  குறைளா "  என்ற கோத்திரத்தின் மதீனாவை சேர்ந்த யூதனுக்கு விற்று விட்டான்.

 மதீனாவை கண்டதும், முதல் அடையாளங்கள் ஒத்திருந்ததால், இந்த இடத்தில் தீர்க்க தரிசி தோன்ற கூடும் என்று என் மனது எனக்கு சொன்னது.
 எனக்கு எந்நேரமும் வேலை இருந்ததால், ஏற்கனவே  தோன்றி மக்களுக்கு அழைப்பு கொடுத்துக்கொண்டிருந்த விஷயம் எனக்கு தெரியாது.

ஒருநாள் நான் ஈச்ச மரத்தில் ஏறியவனாக, அதன் தலைப்பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தேன்.  என் முதலாளியின் உறவினன் ஒருவன்,  அங்குள்ள  " அல் கஸ்ரஜ் " என்ற கூட்டத்தாரை  திட்டியவனாக,                                  நபி ( தீர்கதரிசி)  என்று ஒருவர் தன்னை அறிவித்து கொள்வதாகவும்  அதனை அவர்கள்   ஏற்று கொண்டார்கள் என்பதாகவும்  சொன்னான்,  இதை காதில் வாங்கிய நான் மரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டேன். எழுந்து ஓடோடிவந்து என்ன செய்தி என்று கேட்டதற்கு,  என் முகத்தில் ஓங்கி குத்து குத்தி  நீ போய்  உன் வேலையை பார் என்று விரட்டி விட்டான.

அன்றே  என் வேலைகளை முடித்து விட்டு, உணவு தயாரித்துக்கொண்டு,  என் இருப்பிடமான மதீனாவின் எல்லையை ஒட்டிய கூபாவை விட்டு புறப்பட்டேன்.  மதீனா சென்று  அவரை பார்த்து முகமன் கூறி. என் கையில் இருந்த உணவை கொடுத்து, இந்த தானப்பொருளை தங்களுக்காக கொண்டுவந்தேன் என்று சொல்லி கொடுத்தேன்.  அவர் தம்  தோழர்களை அழைத்து, அவர்களிடம் கொடுத்து உண்ணுமாறு சொல்லி அனுப்பினார்.  அடுத்தநாளும் அவ்வாறே உணவு கொண்டு சென்று கொடுத்து என்புரத்தில் இருந்து தங்களுக்கு பரிசு என்பதாக சொல்லி கொடுத்தேன், முன்புபோலவே தன தோழர்களை அழைத்து, அவர்களுடன் சேர்ந்து தானும் உண்டார்.  நான் கடைசியாக  கல்வி பயின்ற பிஷப் சொல்லிய, தீர்க்க தரிசிகளுக்கான  மூன்று அடையாளங்கள்  இவரிடம் இருக்கக்கண்டேன்.  இன்னும் கடைசியாக சொன்ன அடையாளமும் இருக்குமானால்,  இவரே  தீர்க்க தரிசியாக இருப்பார், இவர் காட்டும் வழியே உண்மையான இறைமார்க்க மாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே என் இருப்பிடம் சென்றேன்.

மூன்றாம் முறை சந்திக்க சென்ற பொது அவர்  இடுகாட்டில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன்,  ஒரு  பிணம் அடக்கம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது,  நான் பின்புறமாக நின்று அவருடைய  முதுகுப்புறத்தை காண முயன்று கொண்டிருந்தேன்.  என்னுடைய எண்ணத்தை அறிந்தவர்போல்  தன மேலங்கியை சரி செய்ய, முழுதுமாக நீக்கினார். நான் கண்ணார,  என் கடைசி குரு  பிஷப் சொன்ன நபி என்பதற்கான அடையாளத்தை இரு தோள்களுக்கு இடையில் கண்டேன்.

நான் என் உடல் நடுங்க கண் கலங்கியவனாக  ஓடோடிச்சென்று  நபிகளின்  காலடியில்  விழுந்து முத்தமிட்டவனாக இருந்தேன், உடனடியாக என்னை எழ சொல்லி என் கதையை கேட்டு, தன தோழர்களுக்கும் சொல்லச்சொன்னார்கள். தன தோழர்களை நோக்கி இவருக்கு உதவி செய்யுங்கள் என்பதாகவும் சொன்னார்கள்.

என்னை விடுதலை செய்வதற்கு " முக்தளபாக் " என்ற தண்டத்தொகை எவ்வளவு தர வேண்டும் என்று கேட்டதற்கு,   செழித்து வளர்ந்து கொண்டிருக்க கூடியனவாக 300 பேரிச்சை கன்றுகளும், 40 அவுன்ஸ் அளவினான தங்கமும் வேண்டும் என்பதாக என் முதலாளி சொன்னான்.

அங்குள்ள தட்ப வெட்ப நிலையில்,  300 செழிப்பான கன்றுகளை பெற வேண்டுமானால் எத்துணை கன்றுகளை பயிரிட வேண்டியிருக்கும் இது நடக்கிற காரியமா என்று கலங்கி நின்றேன்,

நபிகளார் இடத்திற்கு சென்று என் விடுதலைக்கான விலையை சொன்னேன்,  கருணையே உருவாய் தெரிந்த அவர்கள் தம் தோழர்களை நோக்கி, உங்கள் சகோதரர்க்கு விடுதலை பெற உங்களால் ஆனதை  செய்யுங்கள் என்றார்கள். என்னிடம்,  செடிகளை நட 300 குழி வெட்டிவிட்டு என்னிடம் வந்து சொல்லுங்கள் என்பதாக சொன்னார்கள்.  சில நாட்களில்  நபி தோழர்கள்,  10, 5, 15 போன்ற பல்வேறு எண்ணிக்கையில் ஈச்ச நாற்றுக்களை கொண்டு வந்து கொடுத்தார்கள்.  நானும்  குழிகள் தயாரானதும், நபிகளாரிடம்  சென்று சொன்னேன்.   நபிகளார் தாமே  300 நாற்றுக்களையும், தம் திருக்கரங்களால் நட்டார்கள்,  சிறிது நாட்களில் அவை வேர்பிடித்து செழித்து வளரத்தொடங்கின.

ஒருநாள் அவர்களுக்கு சிறிதளவு தங்கம் நன்கொடையாக கிடைத்தது,  எங்கே அந்த பார்சி தேசத்து மனிதர் என்று கேட்க, என்னை வந்து சிலர் அழைத்து சென்றனர்.  தங்கத்தை என்னிடம் கொடுத்து,  உம கடனை அடைத்து விடுதலை பெற்றுக்கொள்ளும் என்பதாக சொன்னார்கள்.  நான் போதாதது போல் இருக்கிறதே என்று சொல்ல, நீர் எடுத்து சென்று நிறுத்து கொடும், போதுமானதாக இருக்கும் என்பதாக சொன்னார்கள்.  ஐயத்துடன் சென்ற என் ஆச்சரியத்தை அதிகரிக்கும் விதமாக,  நிறுத்த போது தேவையை விட கூடுதலாகவே   இருந்தது.

அந்த தீர்க்கதரிசி, நபி  முஹம்மது  ( சல்லல்லாஹு அலைகிவசல்லம் ), இந்த நிகழ்ச்சியை, வரலாற்றை சொல்லும் நான்  ஸல்மான்  பார்சி  ( ரலி )








.


Sunday, August 2, 2015

அறியாமையா ? பொறுப்பற்ற தன்மையா ? கேட்பார் யார் என்ற மமதையா ?......

இந்த தேசத்தில், சமூகத்தில்  யாருக்கும் மனிதாபிமானம் இருப்பதாக தெரியவில்லை,  ஒவ்வொருவருக்கும்,  அவரவர்களுக்கென்று சுயமரியாதை, சுதந்திரம், உரிமை   இருப்பதை யாரும் உணர்ந்தவர்களாக   தெரியவில்லை. 
       10, 15 ஆண்டுகள்  கல்விக்கூடங்களில் பொழுதை கழித்தவர்கள், தாம் ஏதோ இமாலய சாதனையை முடித்துவிட்டது  போலும், எல்லாம் அறிந்தது போலும் எண்ணிக்கொள்கிறார்கள், நடந்து கொள்கிறார்கள். இவர்கள் படித்த படிப்பின் லெட்சனம், அவர்கள் வேலை தேடும் போது தான்,  தனக்கு நடைமுறை வாழ்வில்  உபயோகமாக கூடிய  எந்த ஒரு நுட்பத்தையும், இத்தனை  கால கல்வி  பயிற்றுவிக்க வில்லை என்பது புரியும்.  இவர்களுக்கு,அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்ற பொது மக்கள்  அதிகம் ஊடாடுகின்ற இடங்களில்  வேலை கிடைத்து விட்டால் போதும், அப்பப்பா......இவர்களின்  ஆட்டத்தை கேட்கவே வேண்டியதில்லை.
        எனது உறவினர் ஒருவர், படித்திருந்தாலும்  கிராமத்திலேயே வாழ்பவர், தன் மகனை  ஆங்கில மீடிய பள்ளியில் படிக்க வைத்திருந்தார்.  சரியாக படிக்கவில்லையென்று  வீட்டிற்கு கூட்டி வந்து விட்டார். அவரும் பாடங்கள் சொல்லிக்கொடுத்து  சரியாக படிக்கவில்லை என்பதற்காக தண்டிக்கவும் செய்வார்.  தண்டிக்கும் நேரங்களில் அவருடைய அம்மா
    "  நீந்தாப்பா  அவன் படிக்கலே, படிக்கலே என்கிறாய், சின்ன புள்ளையா இருந்தாலும், வகை வகையா எத்தனை  நோட்லே எழுதி வச்சிருக்கிறான், நல்லா இஙலீஷ் எழுதறான்,  நீ படிக்க சொன்னதும் கட கடன்னு படிக்கிறான்,  இந்த வயதிற்கு இதைவிட என்ன ?, நீ  கூட அவன் வயசில இவ்வளவு படிக்கலே, சும்மா சும்மா அவனை மாட்டடியா அடிக்காதே   "
 என்பார்கள்.

             படிப்பில்லாத  பெரியவர்கள், அவர்களை விட சிறிதளவு கூடுதலாக, ஓரளவிற்கு எழுத்துக்கூட்டி படிக்க தெரிந்தவர்களாக இருந்தால் கூட, அவர்கள்  மீது ஒரு ஈர்ப்பு ,அன்பு ,மரியாதை, பிரமிப்பு கொண்டிருக்கிறார்கள்.
           இப்படிப்பட்ட பாமரத்தனம் உடைய மக்கள், " படித்தவர்கள் " என்று இவர்களை  அய்யா, சார்  என்று மரியாதை தொனிக்க அழைப்பதை,  உண்மையிலேலே தாம் அத்தகைய தகுதிக்கு தகுந்தவர் தாமா ? என்று எண்ணாமல் மமதை கொண்டு,  அவர்களை படுத்துகிற பாடு,  துன்பம் சொல்லி மாளாது. நான் நேரிடையாக அனுபவித்த ஒரு நிகழ்ச்சி.
            சென்னையில் மண்ணடியில் உள்ள  ஒரு அரசுடைமையாக்க பட்ட வங்கி. வெள்ளிக்கிழமைகளில் கடுமையான கூட்டம் இருக்கும். தமிழ் மட்டுமே பேசும் வியாபாரிகள் நிறைந்த பகுதி, தமிழ் பேச தெரியாதவர்களை, உதவுவதற்கென்று உள்ள இடங்களில் போட்டிருக்கிறார்கள். மூன்று கேஷ் கவுண்டர்கள், ஒன்றில் லட்ச ரூபாய்க்கு மேலான  பரிவர்த்தனைக்கு, அடுத்தது வியாபாரிகளுக்கு மட்டும். இந்த கவுண்டரில் உள்ள   இருவரும், இனிமேல் வரப்போகிற வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கிறார்கள். மூன்றாவது  தான்  அப்பாவி  சனங்களுக்கானது. அதில் மற்ற இருவரும்  சும்மாவே இருக்கிறார்களே, நாம் மட்டும் இவ்வளவு வேலை பார்க்க வேண்டி இருக்கிறதே என்ற கோபமோ என்னவோ, முகத்தில் சிரிப்பே இல்லாமல்,  சிடு சிடு என்று ஒருவர். 15, 20 பேர் அதற்கான வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்,  நானும் அதிலே தான் நின்றேன்.
             மூன்றாவது கவுண்டரில் உள்ள காசாளர் வருகிற ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும், வெளியூர் வங்கியின் முழு முகவரி எழுதசொல்வது, முழு  முகவரி எழுதி  இருந்தால் பின் கோட் எழுத சொல்வது,  எண்ணால் மட்டும் எழுதியிருந்தால், எழுத்தாலும் எழுத சொல்வது. இப்படி  ஏதாவது ஒரு குறையை சொல்லி, திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.  எல்லாம் சரியாக ஆனபின்பு, பணத்தை  குறைந்து  3, 4 முறை எண்ண வேண்டியது, இடையில் அவர் எழுப்புகின்ற,                றுமல் சத்தங்கள், முக்கல்கள், கண் உருட்டல்கள்,  ( அவருக்கு என்ன நோய் என்று தெரியவில்லை, பணத்தை கையில் கொடுக்க அச்சமாகவும் இருக்கிறது )  பார்த்தால்  தான்  நம்ப முடியும். சராசரியாக ஒரு வாடிக்கையாளருக்கு அவர் எடுத்துக்கொள்ளும் நேரம்  10 அல்லது 15 நிமிடம்.
            எனக்கோ அவசரம்,  டிராப்ட் எடுத்து 3 மணிக்குள் கொடுக்க  வேண்டும், கடைசியாக என் முறை வந்தது,  நான் எனக்கு முந்தி நின்றவர்களை அவர் படுத்திய பாட்டை பார்த்து எல்லாவற்றையும்  சரியாக எழுதிக்கொண்டு போனேன்.   பேஇன் ஸ்லிப்பை  2  முறை திருப்பி பார்த்தார், எல்லாம் சரியாய் இருந்தது, என்னிடம்

டிராப்ட் கமிசனை, சேர்த்து  எழுதி கூட்டி போடணும்,  இது கூட தெரியாதா?
உங்க அப்பா அம்மா மாதிரி, எங்க அப்பா அம்மா என்னை படிக்க வைக்களைங்க!!!!
அவரால் ஒன்றும் பேச முடியவில்லை, பணத்தை விறு விறு எண்ணி, கையெழுத்து போட்டு, செல்லானில்  ஸ்டாம்ப்  அடித்து கையில் கொடுத்து விட்டார்.

15 நிமிடங்கள் பொறுத்திருந்தேன், லஞ்சுக்கு மூட ஐந்தே நிமிடம் இருந்தது,  டைப் ரைட்டருக்கு முன்பு உட்கார்ந்து ஒருவர்  பேப்பர் படித்துக்கொண்டிருந்தார், இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றவர் போலிருக்கிறது. நான் அவரிடம்

அய்யா  அவசரமா டிராப்ட் வேணும், லஞ்சுக்கு மூடிட்டா, ரெண்டு மணிக்கு மேல்  ஆயிடும், கொஞ்சம்  எடுத்து வந்து அடிச்சு தாருங்களேன்.
கேஷ் கட்டியாச்சா ?  இங்கே செல்லான் வரும்.

கேஷியர் அவருக்கு பின்னாலே உள்ள டிரேயில், கேஷ் கட்டிய  செல்லானை  வச்சுட்டார். கொஞ்சம் எடுத்திட்டு வந்து அடிச்சு தாருங்களேன்.
அவன் அங்கெ வச்சா நான் போயி எடுக்கணுமா?  இது என்ன பேன்குன்னு நெனப்பா, உங்க வீடுன்னு நெனப்பா என்று தடித்த குரலில் கேட்டார்
இதற்கிடையில்,  என்னையும் மூன்று வாடிக்கையாளர்களையும் உள்ளே வைத்து, கேட்டை அடைத்து விட்டார்கள். உள்ளே இருந்து திறந்து விடாமல் இருக்க அருகில் துப்பாக்கி சகிதமாக ஒரு காவலர்.

எங்களை மாதிரி ஆளுங்க பணம் போட்டு, எடுத்தான் தான்யா உங்க பேன்க்!!!!!, என்னைய்யா கஸ்டமர் சர்வீஸ் பண்ணுறீங்க ?, யார்யா  மேனேஜர் ?  என்று உரக்க சொல்லிக்கொண்டு, மேனேஜர் அறையை நோக்கி நடக்க தொடங்கியதும், காவலர் ஓடிவந்து குறுக்கே தடுத்தார்.

மேனேஜர் வெளியே வந்தார், லஞ்சுக்கு கிளம்பிய, கிளார்க் ஒருத்தர் சீட்டுக்கு திரும்பி வந்து, செல்லானை எடுத்து வந்து, கவுண்டர் சயின் போட்டு, டைப்ரைடர் காரரிடம் கொடுக்க, அவர் டிராப்டை டைப் அடித்து, மேனேஜரிடம் கையெழுத்து வாங்கி என்னிடம்  கொடுத்து,    என்னை கையோடு கூட்டி போய் கேட்டை திறந்து, வெளியே கொண்டு போய்  விட்டார்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது, நான் சிறிது நேரம் மழை விடட்டும் என்று ஒதுங்கி நின்றேன்,

டைபிஸ்ட் பின்புறமிருந்து,  சார், கார்பரேசன்காரன்  மோசமானவன்,  3 மணிக்குள்ளே பணம் கட்டிடணும், இன்னைக்கு விட்டா  திங்க கிழைமை தான்.  மழையை பாக்காமெ ஆட்டோ எடுத்துகிட்டு போங்க.......