Wednesday, April 23, 2014

இறைவேத வாக்கியங்களுக்கு அடிபணியும் பிராணிகள்

அளவிலா அருளும், அலகிலா அன்பும் இலங்கும் ஓர் இறையின் இனிய பேர் போற்றி. அஸ்ஸலாமு அழைக்கும்

                          அல்லாஹ் தன திருமறையிலே,  மனித ஜின் இனத்தை  தன்னை வணங்குவதற்கே யன்றி வேறெதற்காகவும் படைக்கவில்லை என்றும்,  மற்றெல்லா படைப்பினங்களையும் மனிதனுக்காகவே படைத்துள்ளதாகவும்,  மார்க்க அறிஞர்கள்  சொல்லி  அறிகிறோம்.  மனித, ஜின் இனத்தை தவிர மற்றவை, எந்நேரமும்  இறைவனை  திக்ர் செய்வதாகவும்,  நம்மை விட இறைவனை நன்கரிந்தவையாக  இருப்பதாகவும் கேள்விப்படுகிறோம். இறைவனது பெயரோ, அவனுடைய வேத வாக்கியங்களோ உச்சரிக்கப்பட்டால், அறிந்து அடிபணிவதாக கேள்விப்படுகிறோம்.

                           பெங்களூர் உணவு  ஆராய்ச்சிக்கழக,  விஞ்ஞானி ஒருவர்  உணவுக்காக அறுக்கபப்டும் பிராணி, அடித்து கொல்லப்படும்போது,  உடனடியாக இறப்பு வராததினாலும்,  பயத்தினாலும்,  அதனுடலில் ஒருவகையான திரவம் சுரந்து  மாமிசத்தை  ராப்பரைப்போன்று,  ஒரு ஒவ்வாத சுவையுடையதாய் ஆக்கி விடுவதாகவும்,  இறந்தபிறகு  இரத்தம் உடலிலேயே  இருந்தால்,   நேரமாக, நேரமாக மாமிசத்தின்  சுவை கெடுவதாகவும் சொல்கிறார்.  முஸ்லிம்கள் செய்கிற  ஹலால்  முறையில்  இவ்விதம் நேர்வதில்லை என்று கூறுகிறார்.

                             மேலேசொன்ன  செய்திகளை  உள்வாங்கி கீழே உள்ள வீடியோ வை  பாருங்கள்.   
               

அல்லாஹ்வின் கருணை மழையில் ஆஸ்திரேலிய சகோதரிகள்

அஸ்ஸலாமு அலைக்கும்,  வரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹூ

சகோதரர்களே,

                            அல்லாஹ் சுப்ஹானஹுவத்தாலாவின் 

செயல்பாடுகளை,  அவன் நாடியவர்களித்தவிர,  வேறு யாராலும்

விளங்கிக்கொள்ளவே இயலாது என்பதை மீண்டும்,  மீண்டும்  மனிதர்களுக்கு 

உணர்த்தும்  முகமாக  பல்வேறு நிகழ்வுகளை அல்லாஹ் 

நிகழ்த்திக்கொண்டே இருக்கிறான்.

                             அமெரிக்காவில்,  ட்வின்  டவர்ஸ்  தரை மட்ட மாக்கப்பட்டதும் 

உலகமெல்லாம்,  இஸ்லாமிய  எதிர் பிரச்சாரம்,   மீடியாக்கள் எல்லாம்  ஒன்று

கூடி இஸ்லாத்திற்கு  எதிராக எழுதி தீர்த்தன.  இதையே காரணமாக வைத்து,

பல்லாயிரம் மக்களுக்கு ஹிதாயத்தின் கதவுகளை அல்லாஹ் திறந்தான்.

                             செயிதினா முஹம்மது  சல்லலாஹு அலைஹிவசல்லம்

வர்களை தூற்றி  திரைப்படம் எடுத்த ஆளை,  ஹிதாயத் பெறச்செய்தான். 

இப்படி பல்வேறு நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.  யாரெல்லாம் 

மிகவும் தீவிரமான முறையில் அல்லாஹ்வையும், அவனது ரசூலையும் 

விமர்சிக்கிறார்களோ,  அவர்களுக்கு  ஹிதாயத்தின்  கதவுகளை விரைந்து

திறப்பான் போலும்.  சுபஹானல்லாஹ்.

                              மேலை நாடுகளில்,  இன்று அலை, அலையாக மக்கள் 

இஸ்லாத்தில் இணைகிறார்கள்.  காலம், காலமாக சுயமாக, சிந்திக்க 

பழக்கப்படுத்தப்பட்ட மக்கள்,  தங்கள் பழைய மார்க்கத்தில்,  பதில் கிடைக்காத 

பல விஷயங்கள்,  இம்மார்க்கத்தில் விளங்கக்கானக்கிடப்பதாக சொல்லி

 விளங்கி  இஸ்லாத்தில்  இணைகின்றனர்.  தலைமுறை,

தலைமுறையாய்  முஸ்லிம்கள்  என்று சொல்லிக்கொள்கிற  நம்

 போன்றவர்களின்  ஈமானும், மார்க்க அறிவும்,  அவர்கள்  முன்பு ஒன்றுமே

 இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது.   ஆஸ்திரேலியாவில்

  நடந்து கொண்டிருக்கிற மாற்றத்தை  காணுங்கள்.

                   

Monday, April 21, 2014

இந்து மதவாதக்க்கும்பலின் கோர தாண்டவம்

இன்று இந்திய தேசத்தின்,  வளர்ச்சிக்கு  ரோல் மாடலாக பேசப்படும்  குஜராத்,  சிறுபான்மை  இனத்தினர், அச்சமின்றி வாழ்கின்றனர்  என்று  சத்தியம் செய்து பேசும் மோடியின்  குஜராத்,  பிரதமர்  நாற்காலியை  எட்டிப்பிடித்திட,  எதையும் பேசும், செய்யும் கட்சியினர்  ஆட்சி செய்யும்  குஜராத்.

             இன்னும் தேர்தலே முடியவில்லை,  குஜராத்தில் நடக்கும்  கொடுமையைப்பாரீர்.
              குஜராத்தின் ராஜ்கோட் அருகில்  மெகானி சர்கிள் என்ற இடத்தில், ஒரு முஸ்லிம்  தொழில் அதிபர்  வீடு வாங்கி இருக்கிறார்.  இரவு நேரத்தில் அவர் வீட்டிற்கு. விஸ்வ ஹிந்து பர்சத்தின், தலைவன்  பிரவீன் தொகாடியா,   பஜ்ரங் தல  குண்டர்களுடன் சென்று அத்துமீறி வீட்டில் நுழைந்து, பஜ்ரங் தள கட்சி  போர்டை மாட்ட முயற்சி செய்திருக்கிறான். வெறி பிடித்து நின்ற  கும்பலிடம்,  தேர்தல் நேரந்தான் குழப்பம் செய்ய சரியான நேரம், வீட்டில் உள்ளவர்களை அடித்து விரட்டிவிட்டு, வீட்டை கைப்பற்றுங்கள் என்று பகிரங்கமாக தூண்டி  இருக்கிறான்.
          இன்னும் 48 மணி நேரத்தில், வீட்டுக்காரன்  வீட்டை காலி செய்ய வேண்டும்  இல்லையென்றால்,  கற்கள், டயர்கள்,  தக்காளி சகிதம்  வீட்டுக்காரன்  அலுவலகம்  செல்லுங்கள்.  இதில் எந்த தப்புமே  இல்லை,  ராஜீவ் காந்தியை  கொலை செய்தவர்களையே  இன்னும் தூக்கிலிடவில்லை. பயப்பட வேண்டாம், கேஸ் தான் நடக்கும். நான்  இதற்கு முன்பு அவ்வாறு செய்திருக்கிறேன்,  என்னால்  முஸ்லிம்கள்  சொத்தும், பொருளும்  இழந்திருக்கிரார்கல்.  இப்படி பச்சையாக  வன்முறைக்கு  தூபமிடுபவனை, குஜராத் அரசு என்ன செய்திருக்கிறது.

        இதுதான் குஜராத்,  மத வாத கும்பலுக்கு வாக்களித்தால், இந்திய தேசம்  என்னவாகும் சகோதரர்களே, சிந்தியுங்கள், பிறரையும் சிந்திக்க சொல்லுங்கள் 
நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா , 21/ 4/2014

Tuesday, April 15, 2014

ப்ல்லிலாத, உடல தளர்ந்த, தொண்ணூற்று ஐந்து வயது இளைஞர்

நாமெல்லாம் 95 வயதில் என்ன செய்வோமோ ?.  நிச்சயமாக இவர்போல், நாட்டை பற்றி கவலைப்பட்டுக்கொண்டு அலையமாட்டொம்  என்பது மட்டும் நிச்சயம்.
                     அலிகர் நகரை சேர்ந்த இவர், அப்பாஸ் அலி, நேதாஜியின்  ஐ.என்.எ. இல் கேப்டனாக இருந்தவர். இன்றும் உயிருடன் இருக்கும் நேதாஜி படையை சேர்ந்த ஒரு  சிலரில் இவரும்  ஒருவர்.
                      2011 இல் அண்ணா ஹஜாரேயும், கேஜ்ரிவாலும், ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கத்தை ஆரம்பித்த போது,  நானும் அதில் போய் சேரப்போகிறேன் என்று கிளம்பியபோது, அவருக்கு தெரிந்த  இமாம் ஒருவர், கேஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ். காரர் என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு, இவர் ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்குவார்   என்றால்,  நான் டெல்லி என்ன, எங்கு வேண்டுமானாலும் போவேன்,   சாத்தானுடன்  வேண்டுமானாலும் சேருவேன் என்று பதில் சொல்லி இருக்கிறார். 

                     இத்தனை காலங்களுக்கு பிறகு, நாடு முழுக்க மலிந்திருக்கிற  ஊழழை பற்றி விளாவாரியாக கேஜ்ரிவால் சாடுவதாகவும்,  ரிலையன்ஸ் அம்பானி போன்ற பெரிய, பெரிய தொழில் அதிபர்களெல்லாம்,  காங்கிரசையும்,  பி. ஜி.பி.யையும்  தங்களது  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக,  தான் கருதுவதாகவும்,  தான்  முழுக்க, முழுக்க  கேஜ்ரிவால் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.

                      கேஜ்ரிவாளின் ஆம் ஆத்மி குறைந்தது,   ஐம்பது  சீட்டுக்கலாவது பெற வேண்டும் ,  பெற்றால், நாட்டின் தலைவிதியே மாறிவிடும்  என்றும்,  போஸ் மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி ராம் மனோகர்  லோகியா  போன்றவர்களின்  கூட்டு பிம்பமாக கேஜ்ரிவாலை காண்பதாக சொல்கிறார்.

                     இன்றைக்கு போஸ் உயிரோடு இருந்திருந்தால், கேஜ்ரிவாளைதான் ஆதரித்திருப்பார்.  நாட்டின் முதல் பிரதமராக போஸ் தான் வந்திருக்கவேண்டும்,  அவர் மக்களுக்காகவே வாழ்ந்தார்,  ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையில் இருக்கும்  இவ்வளவு  பெரிய இடைவெளிக்கு காரணமான அரசின் கொள்கைகளை ஆதரித்து இருக்க மாட்டார் என்கிறார்.

                     கேப்டன் அப்பாஸ் அலியிடம்,  உங்கள் காலத்து அரசியல் வாதிகளையும்  தற்காலத்தவர்களையும் ஒப்பீடு செய்யுங்கள் என்றதற்கு,  மக்களுக்கும்  அவர்களுக்கும் உள்ள இடைவெளி என்றும் தான் அதைக்  கண்டு வெறுப்பதாக சொல்கிறார்.

                     தேஷ் கா நேதா ஹவா மென் நஹீன் ஜமீன் பெ ஹோதா ஹை ((தலைவன் என்பவன்  ஆகாயத்தில் இருப்பதில்லை,  தரையில் தான் இருப்பான் )   இன்றைக்கு,  எங்கு போகவேண்டும் என்றாலும், ஹெலிகொப்டரில் தான் போகிறார்கள் !  யார் இவர்களுக்கு இதற்கு  பணம் கொடுப்பது,  பறந்து போய் என்ன செய்கிறார்கள் ?  ஆகாசத்தில் என்ன கோட்டையா கட்டப்போகிறார்கள்?,  கேட்கிறார்.

                     நான் ஆங்கிலேயருடன் போராடினேன், ஐ.என்.எ.வில் பணி ஆற்றினேன்.  இருந்தும் என்னை இந்திரா காந்தி, ரயில்வே சிக்னலை மரி த்தேன்   என்று இல்லாததை சொல்லி,  இரண்டு வருடம் மிசா காலத்தில்,  ஜெயிலில் போட்டார்  என்று தன ஆதங்கத்தை சொல்லி பெருமூச்சு விட்டாலும் , நேதாஜி,லோகியா, எலக்சன், கேஜ்ரிவால்  என்று  உச்சரித்தாலே இளமை யுணர்ச்சியுடன், புது ரத்தம் பாய்வது போல் காணப்படுகிறார்.

                    நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நிலைமையை நினைத்து  அவர்  கவலைப்படுவதாக தெரிகிறது.  இந்திய முஸ்லிம்கள் மிக சக்தி வாய்ந்த வாக்காளர்கள் என்று சொல்லி, தொடர்ந்து,  இந்தியாவில் இருக்கிற 20 கோடி முஸ்லிம்களுக்கு எதிரான  அரசு மத்தியில் இருக்கவே முடியாது என்கிறார். அவர்கள் தங்கள்  சக்தியை உணர்ந்து,  கவனமாக வாக்களிக்க வேண்டும். இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைமைக்கு ஒரு முக்கிய காரணம்,  சரியான பிரதிநிதித்துவம் இல்லாததுதான்  என்கிறார்.

                   கடைசியாக, முஸ்லிம்களுக்கென்று குரல் கொடுத்தவர், முஸ்லிம் மஜ்லிஸ் பார்டி என்ற,  உ.பி. யை தலைமை இடமாக கொண்ட,  இயக்க  நிறுவன தலைவர்  டாக்டர். அப்துல் ஜலீல் பரிடி,  அவருக்குப்பின், அவர் போன்ற ஒரு தலைவர் முஸ்லிம்களுக்கு அமையவில்லை என்கிறார்.

நன்றி:டைம்ஸ் ஆப் இந்தியா,மார்ச் 26' 14

                    

Monday, April 14, 2014

சில செய்திகளை சீர்துக்கி பார்ப்போமா ?

காங்கிரஸ்,  காந்திக்கு  முன்பே  இருந்தது,  தென்னாப்ரிகாவிலிருந்து  வந்தபோது  காந்தி காங்கிரஸ்காரர் அல்ல,   ஒடுக்கப்பட்ட மக்களுக்காக  குரல் கொடுத்ததினால்,   வாய்பேச  மறந்திருந்த  மக்களுக்கு,   உரிமை பற்றி  குரல்கொடுக்க  எடுத்துச்சொல்லி,  போராடி  காண்பித்து,  போராட  வழி  சொல்லிக்கொடுத்ததால்,  நாடு  கடத்தப்பட்டு,  இந்தியா  வந்தார்.  இங்கே  வந்ததும்  காங்கிரஸ்சில்  சேரச்சொன்னார்கள்,  அவர் சேரவில்லை.   அன்றய  காங்கிரஸ்காரர்களின்  வாயில் ஹிந்தி,   நடையுடை  செயல்பாடுகளெல்லாம்  ஆங்கிலேயர்கள்   போல்தான்.

                           அன்றும்  ஆர்.எஸ்.எஸ்., ஜனசக்தி, முஸ்லிம் லீக்  இன்னும் இதர பல கட்சிகள் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு லட்சம்  உலமாகளை  கொன்று  குவித்ததால்  தேவ்பந்த்  மதரசா உருவானது.  மிகச்சிறந்த  சூபிகலான உலமாக்கள்  சுதந்திரப்போராட்டத்தில்  ஈடுபட்டு  பல்லாண்டுகள்  சிறை  தண்டனை  பெற்று சிறையில்  வாடி இருக்கிறார்கள்.  எல்லா  உலமாக்களும்  முஸ்லிம் லீகில் இருந்தார்களா  என்றால் அதுவும் இல்லை.

                           எல்லா முஸ்லிம்களும் முஸ்லிம் லீகில் இல்லை, எல்லா  இந்துக்களும்  ஆர்.எஸ்.எஸ்.ல், ஜனசக்தியில் இல்லை. காந்தியின்  எளிமையான  தோற்றமும்,  எளிய மக்களை பற்றிய பரிவான பேச்சும்  மக்களை கவர்ந்தது.  அவருடைய  ஒளிவுமறைவற்ற, சுயவாழ்வும்,  பல கோடி மக்களை,  மதத்தால் மொழியால் வேறுபட்டவர்களை, அவர்  சொல் கேட்கவைத்தது. காங்கிரசின் மேடைகளில் அவர் பேசிய பேச்சு அவரை காங்கிரச்காரர் ஆக்கியது.  இன்றும் காங்கிரசில்  பலதரப்பட்ட இன மக்கள் இருப்பதற்கு  அதுதான் காரணம்.

                           ஆர்.எஸ். எஸ். அபிமானி  நரசிம்ம ராவ் காலத்தில் இந்தியாவிற்கு விளைந்த ஒரே நன்மை,  மன்மோகன் சிங்  என்ற  மேதையை  இந்தியாவிற்கு  அறிமுகப்படுத்தியது  தான்.  இந்திய  ரிசர்வு  வங்கியில்  இருந்த  பல டன் தங்கத்தை,  மொரார்ஜி  தேசாய்  அடகு  வைத்ததை  திருப்பி கொண்டுவந்தது மட்டுமல்லாமல்,  இன்று  பல்லாயிரம் கோடி அந்நிய செலாவணி கையிருப்பிற்கு அவர் அடிகாலிட்டது  தான்  காரணம்.  முதன் முதலில்  நிதி மந்திரியானதும்,  இந்திய மக்களிடம்  இந்த பட்ஜெட் கடுமையானதாகத்தான்  இருக்கும் ,  இந்த உங்கள்  தியாகத்தின் பலன் ஐந்தண்டுகளுக்குப்பின் தான் தெரியும்  என்று சொல்லி சாதித்துக்காட்டியவர்.  அவர் சொல் வீரர் அல்ல, செயல் வீரர்.  அவர்  நிதித்துறையில் இருந்து,  இந்திய பிரதமர் ஆனது  நாட்டின் துரதிஷ்டம்.

                              பெயரே  தெரியாமல் இருந்த பி.ஜி.பி.யை  நாட்டிற்கு அறிமுகம் செய்த,  கட்டுக்கடங்கா சக்திமிக்க குதிரை அத்வானியை அரசு என்ற வண்டியில் பூட்டி,  லகான் யார்கையில்  போனது.  இந்த மோடிக்குதிரை  என்னவாகுமென்று  பொறுத்திருந்து பார்ப்போம்.

                              ஊழல் பணம்  என்பது , பெரிய தொழில் அதிபர்கள்,  தமக்கு  ஆகவேண்டிய காரியங்களை சாதித்துக்கொள்ள,  தமக்கு  சாதகமான விசயங்களை செய்துகொள்ள,  சம்மந்தப்பட்ட அனுமதிகளை  பெற்றுக்கொள்ள,  அனுமதி கொடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் பணம்.  எவன் வந்தாலும்  இதைத்தான் செய்யப்போகிறான்.  இது ஒரு கூட்டுக்கொள்ளை,  வெளியே சத்தம்போட்டு சொல்லிக்கொண்டே இருக்காமல் இருக்க  எல்லோருக்கும் கட்டிங்.  காசு கொடுத்தவன்,  போட்ட காசை  எடுக்கத்தான்  பார்ப்பான்,  சம்மந்தப்பட்ட  சாமான்களின் விலையை  ஏற்றுவான்.  இதை தடுக்க ஒரே வழி, அதிகாரத்தை பரவலாக்குவதும், தனி போர்ட் அமைத்து புப்ளிக்காக காண்ட்ராக்ட் கொடுப்பதும் தான். மீறி கொள்ளை அடிப்பவனின் சொத்தை பறிமுதல் செய்வதும், அப்பீல் செய்ய முடியாத நீண்ட கால ஜெயில் தண்டனையும் தான்.  சிலர், ஒன்றும் அறியா பாமர ஜனங்களின் வயிற்றில் அடித்து கோடி கோடியாய் சேர்த்து, பிடிபட்டு தண்டனை கிடைத்ததும்,  நான் வயதானவன் என்னை விட்டுவிடுங்கள் கெஞ்சுவது  மெகா ஜோக்.        
                 
                    பாக்கிஸ்தான், மெலிந்து , உருக்குழைந்து  போய் இருக்கிறது.  கையில் காசு  கையிருப்பில்லை, பின்லாடனை பிடித்துதருகிறென் பேர்வழி என்று அமெரிக்காவை ஏமாற்றி பணம் பறித்தது.  சிரியாவில் உள்நாட்டு போருக்கு,  யுத்த தளவாடங்கள்  வாங்குவதற்கு   பினாமியாக செயல்பட்டு,  காசடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.  போர் என்று வந்தால்  இரு நாடுகளுக்கும்  மிகப்பெரும் நஷ்டம்.  பாகிஸ்தானால் எழுந்து நிற்கவே  முடியாது.  இந்தியா இன்னுமொரு பத்து, பதினைந்து  ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும். இன்றைக்கு இருக்கிற நிலையில் சீனா ஒன்றும் செய்யாது.  யார்  ஆட்சிக்கு வந்தாலும்  இலங்கையை  ஒன்றும் கேட்கமாட்டார்கள்.  ஆரம்ப காலங்களில்  எம். ஜி. ராமச்சந்திரன்  இலங்கை போராளிகளுக்கு  ஆதரவளித்து,  தமிழக  கடற்கரை  பகுதிகளில்  இடமளித்தபோது,  இலங்கை அதிபர், அமெரிக்க அதிபரை சந்தித்து,  இந்தியாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள், அதற்கு பிரதிஉதவியாக,  அமேரிக்கா  இராணுவ தளம் அமைக்க,  நெப்போலியனால்  இராணுவத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த இடம் என்று சொல்லப்பட்ட  திரிகோணமலையை தருவதாக சொல்லி காப்பாற்றிக்கொண்டார். அந்த நேரத்தில் ஒரு இந்திய தளபதி கூட, இந்தியா நினைத்தால் மூன்று மணி நேரத்தில் இலங்கையை நசுக்கிவிடுவோம் என்று சொன்னார்.  இன்றும் அதே நிலை தான். இந்தியா  இலங்கைக்கு எதராக ஏதாவது செய்தால்,  இந்திய துணை கண்டத்திற்கே ஆபத்துத்தான்.

                    காங்கிரசுக்காவது  பாதுகாப்பு என்ற எண்ணத்தில் முஸ்லிம் ஒட்டு விழ வாய்ப்புண்டு,  மோடிக்கு விழும் என்று எதிர் பார்க்கிற ஒட்டு கூட்டாளிகளின் " புகழால் "  விழாது. வேறு வழி இல்லையென்று  இரு திராவிட கட்சிகளுக்கும் விழத்தான் வாய்ப்பு அதிகம்.

                      இன்றைய  இளைஞர்கள்  விரக்தியில் இருக்கிறார்கள்,   கல்லூரியில்,  கல்வி ஸ்தாபனங்களில்  இருந்து  கனவுகளுடன் வெளி வருகிறார்கள்.   அவைகள் அவர்களை தொழிலுக்கு தகுதியானவர்களாக  உருவாக்கவில்லை.  வெளியே வந்ததும்  தான் கனவு கலைகிறது,  பெற்ற பட்டம்,  வெறும் "  பட்டம் " தான்  என்று உணர்கிறார்கள். சுய பச்சாதாபம்  பல வார்த்தைகளை வெளியாக்குகிறது.  நம் நாட்டில் வேலை இல்லாமல் இல்லை, வேலைக்கு தகுதியானவர்கள் தான் இல்லை. 

                       இந்திரா போன்ற ஒரு தொலை நோக்கு உள்ள தலைவர் யாரும் இல்லை.  எமர்ஜென்சி வந்ததே யார் பாதிக்கப்பட்டது? நீங்களும், நானுமா ?. அரசியல் வாதிகள் தானே.  இன்று பயமற்று எதை வேண்டுமானாலும்  செய்யலாம் என்று இருப்பவர்கள் தானே,  பயந்தார்கள், பாதிக்கப்பட்டார்கள். எமர்ஜென்சி  காலம் தவிர  வேறு எப்போழுதாவது  இந்தியாவில் ரயில், பஸ் சரியான நேரத்தில் இயங்கியது உண்டா?,  அரசு அலுவலகங்களில் வேலை நேரத்தில்,  நாற்காலிகள்  காலியாக கிடக்குமா?   எல்லோருக்கும்  பயம். நமக்கு சுதந்திரம் தப்பான நேரத்தில் கிடைத்துவிட்டது.  காலம், காலமாக  பிறர் சொல்லி சொல்லியே காரியம் செய்ததால்,  இன்று நம் கடமையை செய்யக்கூட,  தார் குச்சியுடன்  ஒரு ஆள் பின்னே இருக்க வேண்டி இருக்கிறது.

                      இளைஞர்களின்  இரத்தம்  சூடானது தான்,  ஹிந்தி வேண்டாம் என்று சொன்ன கால கட்ட இளைஞர்களின்  பார்வை தூரம் தமிழக எல்லைக்குள் தான்,  படிப்பறிவும் குறைவு. இன்று தொழில் நுட்ப புரட்சி, இளைஞர்களின் பார்வை தூரத்தை பல நாட்டு எல்லைகளை கடந்து எடுத்து சென்று  இருக்கிறது.  சிந்திக்க தூண்டி இருக்கிறது.  இன்று யாரும் கேப்பையில் நெய் வடிகிறதென்றால்,   பேசாமல் இருக்க மாட்டான், உலகத்தில் எங்காவது ஒரு மூலையில், வடியும் வடியாது என்று ஆராய்ச்சி செய்து சொல்லியிருப்பான்,  அதன் முடிவைத்தான் நம்புவான்.

                   நாட்டில் தொழில் வளர வேண்டும் என்றால்,  வேலை வாய்ப்பு பெருக வேண்டும் என்றால். இடவசதி வேண்டும், எங்கே போவார்கள்?, வியாபாரிகள், தொழில் அதிபர்கள் விலை குறைவாக எங்கே கிடைக்கிறதோ? அங்கே தான் போவார்கள்.  தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன் என்றால்,  தமிழ் நாட்டு கெதி தான். ஒருசில  அரசியல் குடும்பங்களே, நாட்டையே பங்கு போட்டு எடுத்துக்கொள்வார்கள்,  அதுவும் காசே கொடுக்காமல். அடுத்தடுத்த தலைமுறையில் சிறு,சிறு சமஸ்தானங்கள் தான் மிஞ்சும்.

                          மோடி ஒரு மத வெறியன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழில் துறைக்கு மோடி, செய்ததாக சொல்லியிருப்பது உண்மையானால் வரவேர்கப்படக்கூடியதே.

                           குஜராத் எங்கே இருக்கிறது?  இந்தியாவிலே தானே, மோடி முஸ்லிம்களை கொன்று குவித்தபோது," நர "சிம்ம ராவின் மத்திய காங்கிரஸ் அரசு என்ன செய்துகொண்டிருந்தது?. ராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது?. " நர "ராவோடு  ஒப்பிடும்போது  மோடி நம்பிக்கைக்கு உரியவர் தான்.

                          எல்லா அரசியல்வாதிகளும்  சிறந்த நடிகர்கள்,  மகா பொய்யர்கள்.   எந்த மதவாத அமைப்புகளெல்லாம் காந்தியை கொன்றனவோ,  அதில் உள்ளவனெல்லாம் காந்தியவாதி என்று சொல்லிக்கொள்கிறான். காந்திக்கு பிறகு பிறந்தவன்,  காந்தியையே பார்க்காதவன், காந்தி தொப்பி போட்டுக்கொண்டு,  காந்தியின் சீடன் என்கிறான்.  நம்மை பார்த்து தைரியமாக மேடையேறி,  மாங்கா மடையர்களே என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, பொய்க்கு மேல் பொய் சொல்லுகிறான்.  இன்னும் சில காலத்தில் மோடியும் கற்றுக் கொள்ளுவார்.

                         மோடி  பொண்டாட்டியை  விட்டுப்போன்திற்கு ஆன்மிகம் காரணமல்ல, ஆர்.எஸ். எஸ்.இல்  பொறுப்புடைய பதவி வேண்டும் என்றால் கலியானமாகமல் இருக்க வேண்டும். தீவிரவாதி குடும்பம் இல்லாதவனாக இருந்தால் தான் ரகசியம் காப்பாற்றப்படும்.

                          .அராஜக ஆட்சி நடந்திருக்கிறது, ஐ. எ.எஸ். அதிகாரிகள், பழி வாங்கப்பட்டிருக்கிரார்கள்  மத்திய அரசு என்ன செய்தது என்று புரியா புதிராய் இருக்கிறது.

                           ஒரு கதம்ப அரசோ, தப்பித்தவறி மெஜொரிடியொ கிடைத்துவிட்டால் யார் பிரதமர்?.  கட்சித்தலைவர்  இன்றும் மாதம் மூன்று முறை  வாஜ்பாயை சந்திக்கிறார்!!!!!!!!,  என்ன ரகசியமோ?

                           

                                
                   
                              

Thursday, April 10, 2014

எம்.பி. மாமா அவர்களுடன் சில நாட்கள் .........., சில நினைவுகள்

எண்பதுகளில் என்று  நினைவு,  மக்கள் எல்லாம் திரைகடல் ஓடி திரவியம் தேட வாகான இடமாக  தேர்ந்தெடுத்து  படையெடுத்துக் கொண்டிருந்தது  வளைகுடா நாடுகள் தான்.  சவுதி அரேபியாவிற்கு  என்றால்  முன்னுரிமை.  தமிழகத்தின்  ஊர்கள்  தோறும் ஏஜெண்டுகள்.  நல்லவர்கள் பலர்,  ஏமாற்றுவோரும் எண்ணிக்கையில்  குறைவல்ல என்றிருந்த நேரம். முகம் தெரியாத  ஆளிடம்  பணத்தையும் பாஸ் போர்டையும் கொடுப்பதை விட தெரிந்தவர் யாராவது இருந்தால் கொடுக்கலாமே என்று எண்ணிக்கொண்டே நாட்களையும். மாதங்களையும் ஓட்டிக்கொண்டிருதேன்.
            அக்கால கட்டத்தில் சென்னையில் வேலை என்றால் நமதூர் காரர்களுக்கு பெரும்பாலும் அகமது கம்பனி  அல்லது நைனா கம்பனி தான்,   பெரிய அளவில்  உணவும், தங்க இடமும் கொடுத்து வேலையும்  நல்ல  சம்பளமும்  தருவார்கள்.   வருடத்தில்  15, 20 நாள்   வருட விடுப்பும் தருவார்கள்.  அதிலும்  சிறிது  படித்தவர்கள்  என்றால்  நைனா கம்பனிதான்  சரியாக  மாலை ஐந்து  மணியுடன்  வேலை முடிந்துவிடும்.  அந்தக்காலத்திலேயே  வருடக்கடைசியில்,  சம்பளத்திற்கு  ஏற்றார்போல்  போனசும் தருவார்கள்.  விடுப்பில் ஊருக்கு வருபவர்கள் புதிய வெள்ளைக்கைலி, சட்டை சகிதமாக வந்திரங்குவார்கள் கைலி  பழுக்கும் நேரத்தில்  சென்னை திரும்பிவிடுவார்கள்.   நானும்  நெய்னா  கம்பனியில்  காலம் கனியட்டும் என்று வேலை செய்து கொண்டு  வருடாந்திர விடுப்பிற்காக,  வெள்ளை கைலி, சன்லைட் சோப்பு சகிதமாக அதிரை வந்திறங்கினேன்.  என்னுடனே  பக்கத்துக்கு வீட்டுகாரர் ஒருவரும்  வந்தார். பேச்சுவாக்கில்,  தான் வெளி நாடு செல்ல பம்பாய்                                   செல்லப்போவதாகவும்  அன்று இரவே புறப்படுவதாகவும் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து ஊரிலேயே அவரை பார்த்தேன், என்ன ஆச்சு பம்பாய் போகவில்லையா ?. என்று  கேட்டேன்.  போய் வந்தேன்,  வேலை முடிந்துவிட்டது இன்னும் இரண்டு நாட்களில் பயணம்  என்று சொன்னார்.  என்னால் நம்பவே முடியவில்லை.   அவனவன் ஆயிரக்கணக்கில் பணத்தையும், அட்டையையும் கொடுத்துவிட்டு மாசக்கணக்கில் காததுக்கிடக்கிறான்,  இவ்வளவு விரைவில் இவருக்கு எப்படி வேலை முடிந்தது என்று எண்ணிக்கொண்டே,  ஏஜண்ட்  யார் என்று கேட்டேன், எம்.பி.முகம்மது,  மாமா என்றுதான் எல்லோரும் சொல்வார்கள் என்று சொல்லி அட்ரஸ் கொடுத்தார்.   நானும் பம்பாய் செல்வதென்று  முடிவெடுத்தேன்.

                    நமதூரில்  இன்றும் கூட ஒரு வியாபாரம் தொடங்கப்போகிறேன், பணம் கடனாக தாருங்கள் என்று,  உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்களிடம்   உதவி கேட்டால்  கிடைக்காது,  வெளிநாடு போகப்போகிறேன் என்றால் உடனே கிடைக்கும்.  பணமாக இல்லாவிட்டாலும்,   நகை இருக்கிறது என்று தருவார்கள். எனக்கும் ஒரு தாய் மனம் கொண்ட ஒரு  சகோதரி  நகை தந்து உதவினார்கள். இன்னும் சொல்லப்போனால் நான் கேட்கவே இல்லை,  என் நிலைமை தெரிந்து,  ஏன் ஊரிலேயே இருந்தால் உங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றமுடியுமா ?  வெளிநாடு  செல்ல வேண்டியதுதானே என்று கேட்டார்கள்.  பணம் நிறைய தேவைபடுகிறது,  என்னிடம் அந்த அளவு பணம் இல்லையே  என்று சொன்னதற்கு , அப்படி சொல்லாதீர்கள் "அலலாஹ் இருக்கிறான்"   என்று சொல்லி தானே தந்தார்கள்,  வல்ல நாயன் அந்த சகோதரிக்கு ஈருலகிலும் அளப்பரிய தன நற்பேறுகளை வழங்குவானாக  ஆமீன்.  இப்படி ஈர நெஞ்சம் படைத்தவர்கள் அதிரையின் தெருவெல்லாம் நிறைந்திருந்ததால்  தான் அலலாஹ் அவர்களின் மனம் போல்,  அதிரையின் மண்ணையும் ஈரமாக்கி வைத்திருந்தான்,  பத்தடி ஆழத்தில்  நீர் சுரந்தது!!!!!!!.  இன்று ?.......  ,   ஒரு பெரியார்,  தான் வழக்கமாக சவாரி செய்யும்  குதிரை   இடக்கு செய்தால்,  தம்மில் இன்று என்ன தவறு நேர்ந்தது என்று அன்றய செயல்களை சிந்தித்து பார்ப்பார்களாம்,  நாம் எப்படி இருக்கிரோம்?.....அவர்களிடையே இருந்த அதே அல்லாஹ்வுடைய கலாமும்,  நபிகளாரின் வழிமுறையும் நம்மிடமும் இருக்கிறதே?.....  எங்கே தவறு செய்தோம்?....... இடம்மாற்றி மனதில் இருந்ததை  பரணியில்  ஏற்றிவிட்டோமா?.......சிந்தனை செய்வோம். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்.

                  பம்பாய் விக்டோரியா டெர்மினஸ்ல்  வந்திறங்கி  பைதோனி என்று சொல்லக்கூடிய இடத்திற்கு செல்வதற்கு பட்டபாட்டில் தான்  தி. மு. க. காரர்கள் தமிழர்கலுக்கு செய்த துரோகம் தெரிந்தது.  இந்தியாவில் தமிழ் நாடு  தவிற,   எந்த ஒரு மாநிலத்திலும்  ஹிந்தியோ,  உறுதோ தெரியவில்லை என்றால்  ஒன்றுமே செய்யமுடியாது.  அரைகுறையாக ஹிந்தி தெரிந்தாலும்  இராணுவத்தின் தரைப்படையிலேயாயினும் வசதியற்றவர்களுக்கு வேலை கிடைக்கும்.   தமிழ்,  சென்னை சென்ட்ரலுடன்   விடைபெற்றுக்கொள்ளும்.  தான் ஆட்சியில் அமர சிறுவர்களையும், இளைஞர்களையும் தி. மு. க. கிளப்பிவிட்டு பயன்படுத்திகொண்டது.  பம்பாயில் ஆங்கிலம்  பேச தெரிந்தாலும் பிரயோஜனமில்லை,  காரணம் பதில் எல்லாமே ஹிந்தியில் தான் சொல்வார்கள்.  முஸ்லிம்களுக்கு உர்து மிகவும் அவசியம்  காரணம் அரபிக்கு அடுத்து அதிகமான இஸ்லாமிய நூற்கள் அதில் தான் உள்ளது. எம்.பி.மாமா அவர்களிடம் பணம்,  பாஸ்போர்ட் கொடுத்தாகிவிட்டது. எனக்கு முன்பே,   வெளிநாடு செல்ல மாமா  அவர்களிடம்  வந்திருந்தவர்களிடம் சொல்லி எனக்கு தங்க இடம் ஏற்பாடு செய்ய சொன்னார்கள்.

                           ஐந்து நிமிட நடை தூரத்தில், ஜக்கரியா  மஸ்ஜித் தெருவில் குஜராத் முசாபார்கானாவில்  வார வாடகையில் இடம் கிடைத்தது.  அங்கே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் மதராசிகளுக்கு இடம் தருவார்கள் அல்லது  ஏற்கனவே  தங்கி இருப்பவர்கள் யாராவது  அறிமுகப்படுத்த  வேண்டும்  காரணம்  மதராசிகள் தினமும் குளிப்பார்கள், தண்ணீர் அதிகம் செலவு செய்வார்கள் என்பதுதான்.  தினமும்  சுபுகிற்கு பிறகு  மாமா அவர்கள் வீட்டிற்கு எதிரே உள்ள டீக்கடையில் எல்லோரும் சந்திப்பார்கள்.  எல்லோருக்கும்  டீ கிடைக்கும்,  மாமா அவர்கள் தான் தன் கணக்கில் வாங்கிக்கொடுப்பார்கள்.  ஆங்கில தினசரி ஒன்று வாங்கி முதல் பக்கத்தை மட்டும் பார்ப்பார்கள்.  அங்கேயே  யார்,  யார் எங்கெங்கே போகவேண்டும் என்று சொல்வார்கள்.   தான் அவர்களை எத்தனை மணிக்கு வந்து சந்திப்பேன் என்றும் சொல்வார்கள்,  எல்லோரும் சென்றதும் ஆங்கில தினசரி என் கைக்கு வரும்.  சரியாக ஆங்காங்கே சொன்ன  நேரத்திற்கு  சென்று இண்டர்வியுவிற்கு அழைத்துச செல்வார்கள்.

                        இங்கே நான் கண்ட ஒரு நெருடலான செய்தியை சொல்லித்தான் ஆகவேண்டும்,  எல்லோரும் முதலில் வந்ததும் பணமும், பாஸ்போர்டும் கொடுப்பார்கள்.  அப்பப்ப தன் தேவைகளுக்கு,  செலவிற்கு பணம் வாங்கிக்கொள்ளுவார்கள்,  மாமா அவர்கள் ஒருபோதும் எழுதி வைப்பது கிடையாது.  வேலை முடிந்து  புறப்படும் முன்,  கணக்கு பார்க்கும் போது எவ்வளவுடா நீ வாங்கியிருக்கிறாய் ?  என்று கேட்பார்கள்,  பலர் கொடுத்ததை விட கூடுதலாகவே வாங்கியிருப்பார்கள் ஆனால் மாமா அவர்கள் தரவேண்டியிருக்கிறது என்றே சொல்வார்கள்.  மாமா அவர்கள் காசு மற்றவர்களிடம் சென்றிற்குமே அன்றி,  யாருடைய காசும் அவர்களிடம் இருந்திருக்காது.  கடைசி காலங்களில் பண முறைகேடு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக கேள்விப்பட்டு மனம் மிகவும் வேதனை அடைந்தது.  அவர்கள் தொழில் செய்த காலங்களில்,  மாமா நினைத்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாம்.  சென்னையில் விசாவிற்கு மற்றவர்கள் பதினைந்தாயிரம் வாங்கிகொண்டிருந்தபோது மாமா அவர்கள் பனிரெண்டாயிரம் தான்  வாங்கினார்கள்.  சில நேரங்களில் தன் செலவிலேயே டாக்சியில் அழைத்துசெல்வார்கள்.   வாழ்ந்து, நொடித்த குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் சிலரை,  கொடுத்த  பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு,  பாக்கியை சம்பாதித்த பின்பு தா என்று சொல்லி அனுப்பிவைத்தத்தையும் கண்டிருக்கிறேன்.  பணத்தை வைத்து விட்டுத்தான்  புறப்பட வேண்டும் என்று யாரையும் சொல்லி நான் காணவில்லை.

                         நானும், சில நண்பர்களும் மாலை நேரங்களில் முகமதலி ரோட்டில் விக்டோரியா டெர்மினஸ் வரை நடை பழக சென்று வருவதுண்டு, அப்படி செல்லும்போது ஒருநாள் ரோட்டோரத்தில் ஒருவன் எங்களை விசிலடித்து அழைத்தான், நண்பர் ஒருவர் என்ன வென்று கேட்டார். அவன் ஒரு ரொலெக்ஸ் வாட்சை காண்பித்து விலைக்கு வேண்டுமா ?. என்று கேட்டான்,  நண்பர் விலை கேட்டார்,  ஆயிரம் ரூபாய் சொன்னான்,  நண்பர் வாங்கப்போவதாக எங்களிடம் சொன்னார்,   நாங்கள் டுப்ளிகட்டாக இருக்கும்  வேண்டாம் என்று சொன்னோம்.  நண்பர் எனக்கு வாட்ச் வாங்கி விற்று பழக்கம் இருக்கிறது அதைப்பற்றி தெரியும்,  அது ஒரிஜினல் தான்.  முன்னூறு ருபாய்க்கு தந்தால் வாங்குவேன் என்று சொல்லி விலைகேட்டார்,  அவனும் சம்மதித்தான்.  பணத்தை பெற்றுககொண்டு வாட்சை பொட்டலம் போட்டுக்கொடுத்தான்.  நண்பர் கையில் கொடு என்று கேட்டார். இல்லை, இல்லை  இது திருட்டு சாமான், போலீஸ் பார்த்தால் உன்னை பிடிக்கும்,  உன் முன்னாடியே மடித்துத்தருகிறேன்  இடையில்  எங்கேயும்  பிரித்துப்பார்காதே  வாங்கிக்கொண்டு  போய் வீட்டில் பிரித்துப்பார்  என்று சொல்லி,  அவர் முன்பாகவே வாட்சை காண்பித்து  பேப்பரில்  மடித்து தந்தான்.  நாங்களும்  திருட்டு  சாமான் என்று  பயந்து கொண்டே ஓட்டமும் நடையுமாக  ரூமுக்கு வந்து சேர்ந்தோம்.  ரூமில் நண்பர் பொட்டலத்தை பிரித்துப்பார்த்து மயங்கி விழுந்தார். பொட்டலத்தில் இருந்தது வெறும் களிமண் கட்டி.

                       மாமாவுடன்  சில இண்டர்வியுவ்களுக்கு சென்றேன், ஒன்றும் சரியாக அமையவில்லை.  எனக்கு தெரிந்த  வேறு ஆளிடம்  கொடுக்கலாம்  என்று  சொல்லி, மாமா  அவர்களே    வேறு  ஆளிடம்  கொடுத்தார்கள்,   இன்று  நாளை  என்று சொல்லியே  ஐந்து  மாதங்களை  ஓட்டிவிட்டான்.  பணத்தையும்  பாஸ்போர்டையும்  தா என்று  கேட்டாலும், தர மாட்டேன்  என்கிறான்.  ஒரு வழியாக  பாஸ்போர்ட்டையும்  பணத்தையும்  பிடுங்கி ( ? )  ஆகியாகிவிட்டது  ( இது  ஒரு  தனிக்கதை ).   ஒரு வழியாக  மீண்டும்  மாமா  அவர்களுடன்  பல கம்பனிகளுக்கு  படையெடுப்பு,  எனக்கு  முன்பே  வந்தவர்கள்  சிலர் புறப்பட்டும்  போனார்கள்.  கடைசியாக  ஒருநாள்  சொடஸ்கோ என்ற கம்பனிக்கு  ஆள்  எடுக்கிறார்கள்,  படித்த  ஆள் வேண்டும்  என்கிறார்கள் என்று சொல்லி  அழைத்து  சென்றார்கள்.  

                           இரெண்டொரு  மாதங்கள் தான்  குஜராத் முஸாபர் கானாவில் தங்கியிருந்தேன்,  அதற்குமேல்  தங்க  பொருளாதாரம்  இடந்தரவில்லை.   செம்பூர்  தாண்டி  ஒரு ஏரியாவில் சில நண்பர்களுடன் தங்கியிருந்தேன்.  தினமும்  காலையில்  அங்கிருந்து  ரயிலில்  வருவேன்.   அங்கிருந்து  பைதோனி வர சரியாக  ஒரு மணி நேரமாகும்.  ரயிலில்  நான் இருந்த ஏரியாவில்  இருந்து  நகருக்கு  வேலைக்கு வருபவர்கள் கூட்டம் கடுமையாக இருக்கும். உட்கார இடம் கிடைக்காது,  எல்லோரும்  சீட்டுக்கட்டு  வைத்திருப்பார்கள், ஆங்காங்கே  நிற்பவர்கள்  நான்கு நான்கு பேராக நின்றுகொண்டே சீட்டு  விளையாடுவார்கள்,  தத்தமது  ஸ்டெசன வந்ததும்  கலைந்து சென்று விடுவார்கள். தெரிந்தவர்களாக  இருக்க  வேண்டும் என்ற அவசியம் இல்லை,  சீட்டாட தெரிந்தால் போதும்.  அடிக்கடி கை தட்டி கூப்பிடுவது போன்ற  சத்தம் கேட்கும்,  யாரும் யாரையும் கூப்பிடுவது இல்லை அது,   தம்பாக்கு போடக்கூடியவர்கள், புகையிலையும் சுண்ணாம்பையும் உள்ளங்கையில்  வைத்து,  மற்றொரு கையின் பெருவிரலால் கசக்கி, கசக்கி  தூசி தட்டுவது போல் தட்டும்போது வரும் சத்தம் தான் அது,  எனக்கு  சீட்டாடவும் தெரியாது, தம்பாக்கு பழக்கமும்  கிடையாது.  நேரம்  போக வேண்டுமே என்று ஆங்கில நாவல் வாடகைக்கு  எடுத்து,  ரயிலில்  போகும் போதும் வரும் போதும் படித்துக்கொண்டிருப்பேன். 

                              எனக்கு முன்பு இண்டர்வியு சென்றவர்கள், அங்கே என்ன படித்திருக்கிறாய் ?  இங்லீஷ்  பேச தெரியுமா? போன்ற கேள்விகளை கேட்டதாக சொன்னார்கள்.  நானும்  கையில்  நாவல் சகிதமாக உள்ளே போனேன்,   இண்டர்வியு  செய்பவர்  என்னை  மேலிருந்து கீழாக  ஒரு முறை பார்த்து விட்டு,  நீ  என்ன வேலைக்கு  போகிறாய் தெரியுமா?  என்றார்.   கிளீனர்  வேலைக்கு  போகிறேன் என்றேன்,  உன்னை சமயத்தில்  கக்கூஸ்  கழுவவும் சொல்வார்கள்,  நீ  முடியாது என்று சொல்லி திரும்பி வந்தால் உன் பணம் கிடைக்காது, மறு பணம் கட்டாமல் திரும்ப எங்கேயும்  நாங்கள் உன்னை  அனுப்பி வைக்க மாட்டோம்,  என்று சொன்னார்.  பிறகு  நீ எதுவும் கேட்க விரும்புகிறாயா? என்றார்.  நான்  எந்த வேலையும் செய்யத்தயார், சம்பளத்தை குறைத்தால் என்ன செய்வது ?  என்றேன்.  நிச்சயமாக அப்படி ஒன்றும் நடக்காது என்றார். உடனேயே  மெடிகலுக்கு சீட்டு தந்தார்.  அவர்  சொன்னது போலவே சம்பளத்தை  குறைக்கவில்லை,  ஆனால்   ஒரு மூன்று மாதம் கக்கூஸ்  கழுவினேன்,   கிட்டத்தட்ட  எட்டு ஆண்டுகள் அந்த கம்பனியில் வேலை பார்த்தேன்,  அதில் எண்ணிப்பார்த்தால்  அந்த மூன்று மாதங்கள் தான் நான் மிக மிக  சந்தோசமாக இருந்த நாட்கள்.
                              
                               மெடிக்கல் முடித்து வந்து மாமா அவர்களிடம் சொன்னேன்,   அவர்கள்  நான்  மூன்று  நாட்களுக்காக  அமா டிராவல்ஸ்  ஆட்களை  அனுப்பிவைக்க சென்னை செல்லுகிறேன், நான் பாஸ்போர்ட்  பணமெல்லாம் கொடுத்து விட்டேன், நான் திரும்பி வரும்போது உங்களுக்கு எல்லா வேலையும் முடிந்துவிடும்  பாக்கி  பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி சென்றார்கள்.  மூன்றாம் நாள் மெடிகல் ரிசல்ட் வந்தது, வாங்கி கொண்டுபோய்  டிராவல்ஸில் கொடுத்தேன்.  மேஜையில்  மூன்றெ  பாஸ்போர்ட் இருந்தது அதில் ஒன்று என்னுடையது, பணம்  ஐயாயிரம் கொடு என்று கேட்டார்கள் ,  நான்  முகமது மாமாவிடம் கொடுத்துள்ளேன் என்று சொன்னேன்.   இப்ப  பணம் தந்தால்  விசா  இன்றே அடிப்பேன்,  நாளை மறுநாள் பயணம் என்றார்கள்.  என்னிடம் பணம் இல்லை என்றதும்,  வேறு பாஸ்போர்டை வைத்து  என் முன்னேயே  விசா அடிக்க அனுப்பிவிட்டார்கள். நான் மனமுடைந்து வீடு சென்று விட்டேன்.

                            மூன்று நாள் கழித்து  மாமா வந்தார்கள்,  வழக்கம் போல் சந்திக்க சென்றேன், பார்த்தவுடன் விசா அடிச்சாச்சா ?,   என்று  கேட்டார்கள்.  நடந்த விவரங்களை சொன்னேன்.  ஊர்  பாணியில் வசைமாறி  பொழிந்தார்கள்,  என்னோடு வாங்க  கேட்கலாம் என்று சொல்லி அழைத்துசென்றார்கள்.  என்னை வெளியே நிற்க சொல்லிவிட்டு  உள்ளே சென்று பத்து நிமிடங்கள் கழித்து  திட்டிக்கொண்டே  வெளியே வந்தார்கள்.  என்னிடம்,  என் காசை  வச்சுக்கிட்டே இப்படி பண்ணி விட்டான்,  சரி  நீங்க ஒன்னு  செய்யிங்க, அமா டிராவல்சுக்கு லெட்டர் தர்றேன் உடனே போங்க உங்களை டாலி கிளார்க் வேலைக்கு எடுப்பார்கள் என்று சொன்னார்கள்.  நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன்.  என்ன பதில் சொல்லாமல் நிற்கிறீர்கள் என்றார்கள்.   நான் சொன்னேன்,  மாமா  நான் இங்கு வந்து ஆறு மாதமாகிவிட்டது,  நகையை  அடகு வைத்து  பணம் கொண்டுவந்தேன்  வட்டியும், செலவு செய்த காசும் நட்டம், ஆறு  மாதம் வேலையையும் விட்டு விட்டேன் அதுவும் நட்டம், அல்லாஹ் வுடைய  நாட்டம் இல்லை போலிருக்கிறது, தயை செய்து  நான்  செலவுக்கு வாங்கியது போக எவ்வளவு இருக்கிறதோ அதையும் பாஸ்போர்டையும்  தந்து விடுங்கள், நான் ஊர் போகிறேன், என் நசீபுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் யாரிடமும் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்றேன். இது தான் உங்கள் முடிவா?. என்று கேட்டார்கள்.  ஆம்  என்றேன். சிறிது நேர  மவுனத்திற்கு பிறகு, எனக்கு இன்னும் மூன்று நாள் டயம் தருகிறீர்களா? என்று கேட்டார்கள்.  நான்  ஆறு மாதம் இருந்துவிட்டேன் இன்னும் மூன்று நாள் பெரிதல்ல,  ஆனால் மூன்று நாளில் ஒன்றும் ஆகாவிட்டால், நான் சொன்ன மாதிரி தயைசெய்து செய்துவிடுங்கள் என்று சொல்லி சென்றுவிட்டேன்.

                                 மூன்று நாட்கள் அவர்களிடம் தலையையே காட்டவில்லை, மறுநாள் வழக்கம் போல் பார்க்கச்சென்றேன்.  உங்களுக்கு  அதே கம்பெனிக்கு விசா அடிச்சாச்சு பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்கள்.  எல்லோரும் போனபிறகு, மாமா  விசாவை பார்க்க முடியுமா? என்று கேட்டேன்,  என்னை நம்பவில்லையா? என்று கேட்டார்கள்.  நான் பட்ட பாட்டில் என்னையே என்னால் நம்ப முடியவில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள் என்றேன். சரி என்று கூட்டிக்கொண்டு போய் காண்பித்தார்கள். அட்டையில்  விசா இருந்தது. வெளியே வந்ததும் மாமா விசா காப்பி வாங்கி தாருங்கள் என்றேன். விசா காப்பியை  அவிச்சா திங்கப்போகிறீர்கள், இந்த கம்பெனி,  பெரிய கம்பெனி விசா காப்பி எல்லாம் தரமாட்டார்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு  போக்குக்காட்டிவிட்டு, அவர்கள் போனதும்  நான் கம்பெனிக்குள் சென்றேன். என்னை  இண்டர்வியு  செய்தவர்  இருந்தார்  அவரிடம்  விசா காப்பி வேண்டும் என்றேன்,  அவரும் மாமா மாதிரியே கேட்டார்.  நான் சொன்னேன்,  பணம் கடன் தான் வாங்க வேண்டும், விசா காப்பியை காண்பித்தால் தான் என்னை  நம்புவார்கள் என்றேன். அவர் மறு பேச்சு பேசாமல்,  யாரிடமும் காண்பிக்காமல் காப்பி எடுத்துக்கொண்டு  வா என்று சொல்லி ஒரு கவரில் போட்டு  விசா அடித்த பாஸ்போர்ட்டை தந்தார். காப்பி எடுத்துக்கொண்டு  திருப்பிக்கொடுத்தேன்.        

                                   இன்றும், மாதக்கணக்கில்  முடியாததை, மூன்றெ நாட்களில் எப்படி முடித்தார்கள் என்று எண்ணிஎண்ணி வியக்கிறேன். எத்துனை மனிதர்களுக்கு  இதுபோன்று உதவி செய்தார்கள? அல்லாஹ் அவர்களுடைய ஆஹிரத்துடைய  வாழ்கையை  சிறப்பாக்கி வைக்கட்டும்.