இன்று இந்திய தேசத்தின், வளர்ச்சிக்கு ரோல் மாடலாக பேசப்படும் குஜராத், சிறுபான்மை இனத்தினர், அச்சமின்றி வாழ்கின்றனர் என்று சத்தியம் செய்து பேசும் மோடியின் குஜராத், பிரதமர் நாற்காலியை எட்டிப்பிடித்திட, எதையும் பேசும், செய்யும் கட்சியினர் ஆட்சி செய்யும் குஜராத்.
இன்னும் தேர்தலே முடியவில்லை, குஜராத்தில் நடக்கும் கொடுமையைப்பாரீர்.
குஜராத்தின் ராஜ்கோட் அருகில் மெகானி சர்கிள் என்ற இடத்தில், ஒரு முஸ்லிம் தொழில் அதிபர் வீடு வாங்கி இருக்கிறார். இரவு நேரத்தில் அவர் வீட்டிற்கு. விஸ்வ ஹிந்து பர்சத்தின், தலைவன் பிரவீன் தொகாடியா, பஜ்ரங் தல குண்டர்களுடன் சென்று அத்துமீறி வீட்டில் நுழைந்து, பஜ்ரங் தள கட்சி போர்டை மாட்ட முயற்சி செய்திருக்கிறான். வெறி பிடித்து நின்ற கும்பலிடம், தேர்தல் நேரந்தான் குழப்பம் செய்ய சரியான நேரம், வீட்டில் உள்ளவர்களை அடித்து விரட்டிவிட்டு, வீட்டை கைப்பற்றுங்கள் என்று பகிரங்கமாக தூண்டி இருக்கிறான்.
இன்னும் 48 மணி நேரத்தில், வீட்டுக்காரன் வீட்டை காலி செய்ய வேண்டும் இல்லையென்றால், கற்கள், டயர்கள், தக்காளி சகிதம் வீட்டுக்காரன் அலுவலகம் செல்லுங்கள். இதில் எந்த தப்புமே இல்லை, ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களையே இன்னும் தூக்கிலிடவில்லை. பயப்பட வேண்டாம், கேஸ் தான் நடக்கும். நான் இதற்கு முன்பு அவ்வாறு செய்திருக்கிறேன், என்னால் முஸ்லிம்கள் சொத்தும், பொருளும் இழந்திருக்கிரார்கல். இப்படி பச்சையாக வன்முறைக்கு தூபமிடுபவனை, குஜராத் அரசு என்ன செய்திருக்கிறது.
இதுதான் குஜராத், மத வாத கும்பலுக்கு வாக்களித்தால், இந்திய தேசம் என்னவாகும் சகோதரர்களே, சிந்தியுங்கள், பிறரையும் சிந்திக்க சொல்லுங்கள்
நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா , 21/ 4/2014
No comments:
Post a Comment
தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........