Thursday, June 25, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் - 4

 நம்ம அன்றாடம் காய்ச்சியிலிருந்து, அரசாங்க அலுவலர் வரை தினமும் நமது நேரத்தையும், உழைப்பையும்  கொடுத்து, பிரதியாக பணத்தை சம்பளமாக பெற்றுக்கொள்கிறோம்.  நம் குழந்தைகளுக்கும் கூட, உழைப்பின் மேன்மையை சொல்லிக்கொடுக்கிறோம்.  ஒரு காலத்தில்,  முன்னேறுவதற்கான ஒரே வழி  வொர்க் ஹார்ட் என்பதாக சொல்வார்கள், ஆனால் இன்றைக்கு  வொர்க்  ஸ்மார்ட் என்பதாக சொல்கிறார்கள்.  இன்றைய கால கட்டத்தில்  ஸ்மார்ட்டாக, புத்திசாலி தனமாக செயல் பட்டால்தான்  முன்னேற  முடியும், நம் இலக்கை அடையமுடியும்.  நாம்  பணத்திற்காக   உழைப்பது  மட்டுமின்றி, சிறுக, சிறுக சேமித்த  நம் சேமிப்பையும்,  நமக்காக உழைக்க  வைக்க  வேண்டும்.  வசதியானவர்களை  கேட்டால்  அவர்களுடைய  பணம் அவர்களுக்கு உழைப்பதை  சொல்லுவார்கள்.
           வருவாயில் 10% லிருந்து  20% வரை ஆக குறைவாக  சேமிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். பெரிய வருமானக்காரர்களை  பொருத்தவரையில்  1 வருடத்திற்குள்ளேயே கூட,  ஒரு நல்ல தொகையை சேர்த்து கொள்ள முடியும்.  அதனை  இடங்கள், நிலங்கள்  வாங்குவது.  இடமிருந்தால், வாடகைக்கு கட்டிடங்கள் கட்டி விடுவது போன்று செய்து, பண வரவுகளை கூட்டி, அவைகளை முதலீடு செய்யலாம்.  இது  போன்ற  பெரிய முதலீடுகள்  செய்ய இயலாத நடுத்தர மற்றும்  சிறிய வருமானம் உடையோரும்  எப்படியெல்லாம்  சேமிப்பை முதலீடு செய்யலாம்  என்பது பற்றியதுதான்  இந்த தொடரே.
           சிறிய  வருமானக்காரர்களாய் இருந்தாலும் சரி, பெரிய வருமானக்காரர்களானும் சரி,  சேமிப்பை முதலீடு செய்யவேண்டும், அப்பொழுது தான்  சேமிப்பு வளரும். பேங்கில்  நிரந்தர வைப்பு நிதியில் வைத்தாலும், வளர்வது போல் தெரிந்தாலும், வளர்வதில்லை. நிதி முதிர்வு காலத்தில் வட்டியுடன் கிடைக்கும்  பணத்தைதைக்கொண்டு எதாவது பொருள் வாங்கப்போகும் போது, வைப்பு நிதி தொடங்கும்  போது  இருந்த விலையையும், தற்போது உள்ள விலையையும்  ஒப்பிட்டு பார்க்கும் போது தான் தெரியும். 
          நம் வீட்டு பெரியவர்கள்   " அந்த "  காலத்தை பற்றி சொல்லி கேள்விப்பட்டு இருப்போம்.  10 ரூபாயை கொண்டுபோய் பை நிறைய சாமான் வாங்கி வந்ததை பற்றி.  நம் காலத்தையே எடுத்துக்கொண்டாலும், 10 15 வருடத்திற்கு முன்பு 50 பைசாவிற்கு  விற்ற  டீ  இன்று ரூபாய்  7.  பலகாரம்   75 பைசாவிற்கு  விற்றது  ரூ 7, ரூ 8. எனக்கு தெரிய பவுன்(8 கிராம் ) ரூ 2,000 துக்கு விற்று இருக்கிறது.  இது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்கும்.
           செய்தித்தாள்களில்  வர்த்தக பக்கத்தை  புரட்டினால் அதில் பணவீக்கம் என்று பேசப்படுவதை  பார்க்கலாம். பணவீக்கம் இல்லையென்றால் பொருளாதாரம் சுழலாது, மிகவும் கூடினால் விலை வாசி  தாறுமாறாய் போய்விடும்.  அரசாங்கங்கள்  இதனை  5% க்கு மேல் போக விடாமல் இருக்க முயற்சிக்கின்றன.  மேலை நாடுகளில், 3% 4% ஆக இருக்கிறது. நமது நாட்டில் தற்பொழுது  8% ஆக இருக்கிறது, சில நேரங்களில் 12% வரை சென்று இருக்கிறது.
           இந்த பணவீக்கம் நம்மை என்ன செய்யும் ?   எத்தனை சதவீதமாக இருக்கிறதோ, அத்தனை சதவீதம் நம் பணத்தின் வாங்கும் சக்தி, வருடா வருடம் குறைந்து  கொண்டே  போகும். உதாரணத்திற்கு  இன்று  நாம் ரூ 1,000 த்திற்கு  அயர்ன் பாக்ஸ் ஒன்று  வாங்குவதாக வைத்து கொள்ளுங்கள்,  அதே அயர்ன் பாக்சை  5 வருடங்கழித்து வாங்கச்சென்றால், கிட்டத்தட்ட
ரூ 1,320  கொடுக்க வேண்டி இருக்கும் (அதுவும் பணவீக்கம் 8%ஆகஇருந்தால் ). இந்த கூடுதல்  ரூ 320 ஐ  விலைவாசி கூடுதல் என்றும் சொல்லலாம் அல்லது  ரூ 1,000 த்தின் வாங்கும் சக்தி  மதிப்பு   ரூ 320  குறைந்து விட்டது என்றும் சொல்லலாம்.
           நம்முடைய சேமிப்பு பணத்தை அப்படியே கையில் வைத்திருந்தால்  ஐந்து வருடம் கழித்து, பணம் என்னவோ அது அப்படியே இருக்கும் ஆனால், அதனுடைய வாங்கும்  சக்தி குறைந்து விடும்.  அதனால் தான் நாம், நம் பணத்தை முதலீடு செய்யும் பொது, அதிலிருந்து கிடைக்கும் வருவாய்  பணவீக்கத்தை விட, இரண்டு மடங்குக்கு மேல் வருமாறு பார்த்து  முதலீடு செய்ய வேண்டும்.  இன்றைக்கு உள்ள பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள், அப்படிப்பட்ட வருமானம், பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் இருந்து தான் கிடைக்கும் என்பதாக சொல்கிறார்கள்.
            நாமும்  பெரும்பாலும் ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்வதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.  இதுதான்  புதிதென்று இல்லாமல் எத்துணையோ தளங்கள் ஏற்கனவே  இருக்கின்றன.  இந்த தளத்தில் சேமிப்பை முதலீடு செய்து சொத்து சேர்ப்பது எப்படி என்பதற்கான விவரங்கள்  என்னவெல்லாம்  ஒரு முதலீட்டாளருக்கு  தேவையோ  அவைகளை பற்றி பார்க்கலாம்.
            
         இதில் நான் பல ஆண்டுகளாக, கூடுதலான ,  கல்விக்கட்டணம்  கொடுத்து படித்தவைகளையும். இன்று இத்துறையிலே  ஜாம்பவானகளாய் இருப்பவர்களின், வாய் மொழிகளையும் திரட்டித் தர முயல்கிறேன்
..
இறைவன் நாடினால் மீண்டும் தொடர்வோம்.........

                  

Sunday, June 21, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் - 3

இரண்டு தொடர்களாக,   எப்படி எல்லாம் சேமிப்பது  என்பது பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  சொத்து சேர்ப்பதை  நம் இலக்காக கொண்டிருக்கிற  நாம்.  நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை  ஏற்படுத்திக்கொண்டு, முன் யோசனையுடன்  செயல்பட்டால் மட்டுமே  எளிதில் நம்  இலக்கை  அடைய முடியும் . கையில் சேர்த்த பணம் ரூ 10,000 மோ, ரூ 20,000 மோ,  வைத்துக்கொண்டு, பேங்கில் நகை கடனோ,  வட்டி செலுத்துகிற  கடனோ  இருந்தால், நம்முடைய  முழு முயற்சியுமே  அர்த்தமற்ற தாகிவிடும்.  முதலில் செய்யவேண்டியது கடனை அடைப்பது தான். சிறிய உதாரணத்துடன் பார்த்தால் எளிதில் காரணம் விளங்கும்.
             பேங்கில் நகையை அடமானமாக கொடுத்து கடன்  வாங்கினால்,  9 %  வட்டி என்றாலும்,  வருடத்திற்கு ரூ 20,000 திற்கு வட்டி மட்டும்  ரூ 1845 கொடுக்க வேண்டி வரும்.  அதே நேரத்தில்  நம் பணம் அவர்களிடம் இருந்தால்  வெறும் ரூ 1000 மட்டுமே வட்டியாக தருவார்கள்..
               பேங்குகளில்  பொதுவாக  இத்தனை வட்டி என்று சொல்லும் போது  அது வருட வட்டியை தான் குறிக்கும்.  பேங்கை பொறுத்து, மூன்று மாதத்திற்கு  ஒருமுறையோ,  ஆறு மாதத்திற்கு  ஒருமுறையோ தான் வட்டியை முதலுடன் சேர்த்து கணக்கிடுவார்கள்.  இதையாவது  ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.
                  இன்னும் மிகப்பெரிய மோசடி அடகுக்கடை, கந்து வட்டிக்காரர்கள் போன்ற தனியாரிடம் கடன் வாங்கும் போது தான் நடக்கும்.  இவர்கள்  சொல்லும்  2 வட்டி, 3 வட்டி என்பது  மாதாந்திர  வட்டி விகிதத்தை  குறிக்கும்.  வருட  வட்டி விகிதத்தை  12 ஆல் வகுத்து  2 வட்டி, 3 வட்டி  என்று சொல்லி,  குறைந்த வட்டி விகிதம் என்பது போன்ற பிரமையை உண்டாக்கி ஏமாற்றுகிறார்கள். உண்மையில் அது  24 % , 36% என்பதாகும். ஒரு மாதம் பணம் கட்ட வில்லை என்றால் கூட,  அந்த வட்டியையும்  முதலுடன் சேர்த்து  விடுவார்கள். தொடர்ந்து மாதா மாதம் கட்டினாலும் ரூ 20,000 திற்கு கிட்டத்தட்ட வட்டி மட்டும் ரூ 5,000, ரூ 7,500 ( 2 வட்டி, 3 வட்டிக்கு ) வந்துவிடும்.
                  வருடம் என்பது  கண்மூடி கண் திறப்பதற்குள்  பறந்தோடிவிடும். அனாயசமாக  2, 3, 5 வருடங்கள், கடந்து விடும் போது, கடைசியாக என்ன நடக்கும் என்று நீங்களே  சிந்தித்து பாருங்கள்.  ஏழை, எளியவர், மற்றும் விபரம் அறியா பாமரர்கள் தான் இவர்களால் ஏமாற்றப்பட்டு வாழ்கையை இழக்கிறார்கள்.  இறைவன் தான் நம் எல்லோரையும் இந்த பேராபத்தில்  இருந்து  காப்பாற்ற வேண்டும்.
                   ஏற்கனவே  இதைப்பற்றி  சொல்லியிருக்கிறேன் என்று  நினைக்கிறேன், வருமானத்தை அதிகரிக்க உபரி வருமானத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பது போன்றே,  இருக்கும் வருவாயில் சிக்கனமாக இருந்து,  செலவினங்களை குறைப்பதும், ஒரு உபரி வருவாயை உண்டாக்கிக்கொள்வது போன்றது தான்.
                    நம் போன்ற  நடுத்தர குடும்பங்களின் சிரமங்களுக்கு மிகப்பெரிய காரணமே, நாம் நமது தகுதிக்கு மீறி செலவு செய்து, நமக்கென்று வாழாமல் பிறர் மெச்ச  வாழ வேண்டும்,  செலவு செய்ய வேண்டும் என்று நினைப்பதுதான்.
                   இன்றைய  கால கட்டத்தில் போனோ  பைக்கோ இல்லாத வீடுகளே இல்லையென்று  சொல்லலாம்.  அதே   செல் போனையும்,  பைக் கையும்  உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.  ஒவ்வொரு  வீட்டிலும் ஆகக் குறைவாக  இரண்டு  செல்போன்களாவது  இருக்கும்.  குறைந்த விலையுள்ள ஒரு  போனின்  விலை ரூ10,000 என்று வைத்துக்கொள்ளுங்கள்,  ஒரு 5 வருடங்கள் உபயோகிப்போமா?. மாதா மாதம்  சந்தா கட்டவேண்டும் ?   ரூ 100 கட்டுவோமா ?. இந்த பணம் நம்மை விட்டு போனது   போனதுதான். 5 வருடம் கழித்து  போனை தலையை சுற்றி வீசப்போகிறோம் அல்லது வேறொரு போன் வாங்குவோம். இதை அப்படியே முதலீடு செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?  ஒரொரு போனுக்கும்  செலவு செய்த தொகை,  5 வருடத்தில் ரூ 27,000 மாகவும், 10 வருடத்தில் ரூ 58,000 மாகவும் ஆகியிருக்கும்.  தத்தமது குடும்பத்தில் எத்தனை  போன் இருக்கிறது என்று  ஒரு சின்ன கணக்கு போட்டு,  எவ்வளவு மாதா, மாதம் செலவாகிறது என்று சிந்தித்து பாருங்கள்.
                    பைக்கை  எடுத்து கொண்டால்  பல்வேறு மாடல்கள்,  ரூ 50,000 திலிருந்து, ரூ 1,25,000 வரை இருக்கிறது. ரூ 75,000 திற்கு பைக் வாங்குவதாக வைத்துக்கொள்ளுங்கள்.
ரூ 10,000  டவுன்  கட்டுவதாக வைத்துக்கொள்ளுங்கள்.  மாதா, மாதம் ரூ 2400 வீதம்  5 வருடத்திற்கு  கட்டவேண்டியிருக்கும். சராசரியாக  ஒரு வண்டி லிட்டருக்கு 45 கி.மீ கொடுப்பதாக எடுத்துக்கொண்டால்,
ரூ 60 விலையில், கி.மீ க்கு  ரூ 1.33  பெட்ரோலுக்கு செலவாகும்.  தினம் சராசரியாக 50 கி.மீ  வண்டி ஓட்டினால்,   நாள்  ஒன்றிற்கு   பெட்ரோல் செலவு ரூ 66.50 வரும். இதற்கு மேல் இன்சூரன்சு இருக்கிறது, வருசத்திற்கு  ரூ 1000 என்றாலும், 5 வருசத்திற்கு  ரூ 5,000  ஆகிறது.  இதே தொகையை முதலீடு செய்திருந்தால், 5 வருட முடிவில் உங்களுக்கு கிடைத்திருக்ககூடிய  தொகை எவ்வளவு தெரியுமா ?. கிட்டத்தட்ட  ரூ  ( 2,13,091 + 1,61,528 + 6,801 = 3,81,420 ). இதில் 5 வருட முடிவில்  பைக்கை விற்றால் கிடைக்க கூடியது  ரூ 20000 இருக்குமா?.  பைக் வாங்கியதில் நட்டம் ரூ 3,61,420. இதில், உங்கள் உழைப்பில் வந்த  பணத்தில்  எரித்து கரியாக்கியது மட்டும்  ரூ 1,61,528.
                 இதில் போன் அல்லது  பைக்  வாங்குவதை சரியென்றோ, தப்பென்றோ சொல்லவரவில்லை.  அவரவர் சூழ்நிலைக்கும், வசதிக்கும், தேவைக்கும்  ஏற்ப வாங்கி கொள்கிறோம். எப்படியெல்லாம் நம் உழைப்பு விரையமாகிறது,  உழைக்கின்ற காலத்தில்  சரியான   திட்டமிடல் இல்லாவிட்டால்,  ஒய்வு கால வாழ்கையும், நம்  குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையும் பாதிக்கபடகூடும் என்பதை  சொல்லிக்காட்டத்தான்.
                 தெருக்கோடியிலே  இருக்கிற காக்கா கடையிலேயோ,  நாடார்   கடையிலேயோ  சில்லரையாக  மளிகை சாமான் வாங்குவதை விட்டு,  சிறிது சோம்பல் படாமல், மொத்தக்கடையில் வாங்கினால்  25% இல் இருந்து 30% மிச்சப்படுத்தலாம். மாதத்திற்கு மளிகை சாமானில் மட்டும் ரூ 150, 200 மிஞ்சி, அதை சேமித்தால் எவ்வளவாகும். யோசனை  செய்து பாருங்கள்.  ஒரு கவிஞன் சொன்னது போல்,
"தினம் கஞ்சி,கஞ்சி என்றால் பானை நிறையாது, சிந்தித்து முன்னேற வேண்டுமடி " என்று .  எது செய்தாலும் சிந்தித்து செயல் படுவது மிக சிறப்பை கொடுக்கும்.
               கையில்  பணம் வைத்திருக்கும் சிலருக்கு  இதை படித்ததும்,  நாமும் வட்டி தொழில் செய்தால்  என்ன என்று தோன்றும்,  நண்பர்களே  அந்த எண்ணத்தை தயவு செய்து  விடுங்கள், அதை போன்ற தொரு கொடுமையான தொழில் ஒன்றும் இல்லை, பல பேருடைய  வாயிற்று எரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.  வட்டிக்கு விடுபவர் வீடுகளில் பாருங்கள்,  ஒவ்வொரு  வீட்டிலும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் நிச்சயம் இருப்பார்.  அவரை பெற்றவர்களின்  வேதனையை  எண்ணிப்பாருங்கள், அவர்கள் சாகும் வரை வேதனை அவர்களை விட்டு  போகாது.  எத்தனையோ  தொழில்கள் இருக்கின்றன, குறைவாக சம்பாதித்தாலும்  நிம்மதியாக இருக்கலாம், இறைஅருளும் இருக்கும்.

இறைவன் நாடினால் மீண்டும் தொடர்வோம்.......      



                   

Tuesday, June 9, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் 2


இதற்கு  முந்தய  கட்டுரையில் சில விசயங்களை பகிர்ந்து கொண்டோம், சொத்து  சேரத்தல்  என்ற  சமன்பாட்டை  பார்த்தோமானால்  அதில் வருமானத்தில்  செலவு போக மீதமானதை  சேமிப்பது மட்டுமின்றி, சேமித்ததை,  புத்திசாலிதனமான முறையில் முதலீடு செய்வது  என்று இருக்கும் .

                   நம்மில் பெரும்பாலோர், வருகின்ற வருமானம் செலவிற்கே போதவில்லை, எங்கிருந்து சேமிப்பது ?  என்று கேட்போம்.  அன்றாடம்  காச்சியிலிருந்து,  மாத சம்பளம் வாங்குபவர் வரை, இதே பாட்டுத்தான். இன்றைக்கு பல்வேறு  "பிளாக்கு"களில் பட்ஜெட் போட்டு, செலவுகளை கட்டுப்படுத்தி,  மிச்சப்படுத்தும்  கட்டுரைகளை பலர் எழுதி வருகிறார்கள்,  பல புதிய உத்திகளை அவர்கள் சொல்லியிருப்பதை  காணலாம். உங்களுக்கு பிடித்தமானவைகளை, நீங்களும் பின்பற்றலாம்.  அவைகளையும் படித்தறிந்து கொள்ளுங்கள்.

                     வாங்குகிற  சம்பளத்தில், மிகக்குறைவாக    நூற்றுக்கு  5  இல் இருந்து 10  வரை  மிக எளிதாக சேமிக்கலாம்.  இன்றைக்கு  உலக மகா பணக்காரர்களில்  ஒருவரான  அமெரிக்காவின்  வாறன் பப்பெட்,  சொந்தப்பணம் வெறும் பத்தாயிரம்  டாலருடன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு  சேர்மார்கட்டில்  தொழில் தொடங்கி,  இன்று  அறுபது பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியாய் உள்ளவர்,  சேமிப்புக்கு  வழி இப்படிச்சொல்கிறார்

.

    " வருமானத்தில் செலவு செய்து விட்டு மிஞ்சுவதை சேமிப்பதை விட, சேமிப்புக்கு எடுத்துவிட்டு மிஞ்சுவதை செலவு செய்யுங்கள் "   என்று .


           சிந்தனையை பார்த்தீர்களா?. இன்றைக்கு  சர்வசாதரணமாக,  பெரும்பாலோர்  மிகக்குறைவாக  பார்த்தாலும் பத்தாயிரம்  ரூபாய் சம்பாதிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதில் ஐந்து   பர்சென்ட்  சேமிக்கிறார்கள்  என்று எடுத்துக்கொண்டால் கூட,  மாதம்  ஐநூறு  வருகிறது.  இந்த  ஐந்நூறு  ரூபாயை  வைத்து  எந்தக்காலத்தில்  நாம் சொத்து வாங்குவது  என்று சிலர் எண்ணக்கூடும்,

              தொடர்ந்து  மாதா, மாதம் ஐந்நூறு  என்கிற  இந்த சிறு  தொகை, ஐந்து, பத்து, பதினைந்து  ஆண்டுகளில்(  " கூட்டு வட்டி "        இது  வட்டியில்ல , ஒரு கணக்கீடு,  compound  ) என்ற வாகனத்தில்  ஏறிக்கொள்ளும்  போது அடைகின்ற வளர்ச்சி  அபரிமிதமானது.

               விஞ்ஞானி  ஐன்ஸ்டீன்னுடைய  வார்த்தைகளில் கூறவேண்டும்  என்றால்,       "  இது உலகத்தின் எட்டாவது அதிசயம்  "
                 நம் போன்ற  சாதாரண மக்களுக்கு  பளிச்சென்று  விலங்ககூடிய உதாரணம்,  நமக்கு  பக்கத்து வீட்டிலேயோ  அல்லது நமக்கோ கூட நடந்திருக்கும். அவசர  தேவை  காரணமாக  பல்லாயிரம்  பெறுமானமுள்ள  நகைகளை , அடமானமாக  கொடுத்து,  அதன்  மதிப்பில் ஒருசிறு பகுதியை  கடனாக     பெற்று,  ஒருசில மாதங்களிலேயே  நகை  முழ்கி,  ஏலம் போனதை பார்த்திருக்கலாம். அதற்கு அடிப்படையான  கணக்கீடு,  காம்ப்வுண்டிங் தான்.   அந்த பகாசுரனை, நமக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்ளும் போது, நம்மாலும்  அதன் பலனை அடைந்து கொள்ள முடியும்.  எவ்வளவு இளம் வயதில் சேமிக்க தொடங்குகிறோமோ,  அவ்வளவு விரைவாகவும், கூடுதலாகவும்,  நமது சொத்து  சேர்ப்பது  என்ற  இலக்கை   அடைந்து கொள்ள முடியும்.

                இளைஞர்களாகவும், திருமணம்  முடிக்காமலும் இருப்பவர்களிடம்  அதிகம்   இருப்பது நேரம் மட்டும் தான்.  இதில் ஒரு பெரும் பகுதியை, எதிகாலத்தை  கருத்தில் கொண்டு  பிரயோஜனமாக உபயோகித்துக்கொள்ளலாம். இக்காலங்களில் தான் அவர்களால் அதிகம் உழைக்க முடியும். வயதானாலோ, திருமணம் முடிந்தாலோ, பல்வேறு உடல் உபாதைகளும், பொறுப்புக்களும் வந்து சேர்ந்து,  ஓர் அளவிற்கு மேல் செயல்பட முடியாமல் போய்விடும். தற்பொழுது  செய்கின்ற தொழிலையோ, உத்யோகத்தையோ செய்து கொண்டு மற்ற நேரங்களில்  கூடுதல் வருமானத்திற்காக, உப தொழில் ஒன்றோ,  பகுதிநேர  உத்தியோகமோ செய்து,  வருகின்ற வருமானத்தை முழுக்க முழுக்க  சேமித்தால் சொத்து சேர்ப்பது என்ற இலக்கை அடைவது எளிதாகும்.

                 எப்படி இரண்டாவது வருமானத்திற்கு  வழி தேடுவது  என்பவர்களுக்கு.  அவரவர் திறமைக்கும், கற்பனைக்கும் , இருக்கின்ற  இடத்திற்கும் தகுந்தவாறு  செய்துகொள்ள வேண்டியதுதான். உதாரணத்திற்கு சில,  டியூசன்  எடுப்பது, வெளிநாட்டு பொருள்களை விற்றுக்கொடுப்பது, செல்போன் ரிபேர் செய்வது, சிறு சிறு ஆப்  (APP ) செய்து கொடுப்பது. இன்னும் பல.

இறைவன் நாடினால் தொடர்வோம்.......
               .
  

Monday, June 8, 2015

இந்தியாவும் பாகிஸ்தானும் இருதுருவமாய் இருப்பதேன் ?

ஒரேநாட்டில் பிறந்து,  உருண்டு, உழன்ன்று, ஒருமித்து  போராடி சுதந்திரம் பெற்று     ஒரு சில அரசியல் வாதிகளின்  சுய நலத்தினால், இரு வேறு தேசங்களாகி, எதிர் எதிர்  துருவங்களாகி, சோற்றுக்கே  திண்டாடும்  பலகோடி மக்களைப்பெற்ற  இந்தியாவும்  பாகிஸ்தானும் , மிலியன் கணக்கான ரூபாய்களை தத்தம் நாட்டின் பாதுகாப்பிற்கென்று  செலவு  செய்வதைக்கண்டு  உலகநாடுகளில் சில உள்ளுக்குள் நகைத்து கொண்டிருக்கின்றன.

          காலனி ஆதிக்க  காலத்தில் கூட, நாமே எல்லாவற்றையும்  சுரண்டி எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது, இப்பொழுது  அவர்களே யுத்த தளவாடங்கள், போர் விமானங்கள் வேண்டும் என்று நாட்டுமக்களின் வயிற்றில் அடித்து சுரண்டி, வழிய கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்று மேற்கத்திய நாடுகள்   சந்தோசத்தில்  இருக்கின்றன.  ஐந்தாறு தலைமுறைக்கு முன்பிருந்த பிரிட்டிஷ்  ஏகாதி பத்தியத்   தலைவர்களின் பிரித்தாழும் சூழ்ச்சியினால் துண்டாகிப்போன இந்தியதுணைக்கண்டம்,  தான் இழந்த சோபிதத்தை மீண்டும் அடையும் நாள் வாராதோ ?. ஒன்றாய் இருந்தால் உயர்வடைந்து விடுவார்கள்,  துண்டு துண்டாய்  இருந்தால் நீயா ? நானா ? என்று காலமேல்லாம் அடித்துக்கொண்டே, வாழ்ந்து ஒழிவார்கள், என்ற வெள்ளையரின்      தொலை நோக்கு பார்வையை நம்மாலும் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை.

          நம்மில்  பெரும்பாலோருக்கு  அடிப்படை தேவைகளே  நிறைவடையவில்லை அதனால் தானோ என்னவோ, காசு பணம்  சேர்ப்பது என்பதற்கு மேல் இன்னும் சிந்திக்க தோணவில்லை. இன்னும்  வெள்ளைக்காரன் சுவைத்து, துப்பிய  டெக்னாலஜிகளை , கழுவி துடைத்து  உபயோகிக்கிறோம். நம்முடைய  அந்த குணம் தான், மேற்கத்தியற்கு  புதியன கண்டுபிடிப்பதற்கு  உந்து சக்தியாக இருக்கும் போலிருக்கிறது. போகட்டும்  விசயத்திற்கு வருவோம்.

            மேற்கத்திய ஆய்வாளர் ஒருவர்  இந்தியாவையும் பாகிஸ்தானையும் நமக்கெல்லாம் தோன்றாத   ஒரு  கோணத்தில்  பார்த்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உருவான இரு நாடுகளில் ஒன்று மாறி மாறி சர்வாதிக்கார நாடாகவும், மற்றொன்று முழுக்க முழுக்க ஜனநாயக நாடாகவும்  இருப்பதன் மர்மம் என்னவென்று.

              அடடே நமக்குக்கூட இப்படி  யோசனை வரவில்லையே என்று சிந்திக்கிறீர்களா?. போகட்டும் விடுங்கள்  அவர்  என்ன சொன்னாரென்று பார்ப்போம்.

             ந்தியாவில்,பிரிட்டிஷ்   அரசியலில் மற்றும் இராணுவத்தில்  இருந்தவர்கள்தான்  விடுதலைக்கு பிறகும்,  இரு  நாடுகளிலும்  ராணுவ மற்றும் அரசியல்  பொறுப்பிற்கு வந்தார்கள்.

               பெரிய பிரிட்டிஷ் ராஜ்யத்தில் கொடுத்துக்கொண்டிருந்த அளவு, ஏழ்மை நிலையில் இருந்த அன்றைய இளம் இந்தியாவில், ராணுவத்தினருக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று  அது சம்பந்தமாக  பேச்சு வார்த்தை நடத்துவதற்காக  அன்றைய  பிரதமர் நேரு, ராணுவ தளபதி பீல்ட் மார்சல் கரியப்பாவை சந்திக்க செல்கிறார். அவர் அறையில் இருந்த மூன்றடுக்கு   கேபினட்டு  ஒன்றை பார்த்து, அதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார்.  அதற்கவர்  முதல் அடுக்கில் கப்பல் படை தலைவர்களின் ரகசிய பைல் என்றும், இரண்டாவதில்  விமானப்படை தலைவர்களின் ரகசிய பையில்கல்  இருப்பதாகவும் சொல்லி முடிக்கிறார்.

                 மூன்றாவது  அடுக்கில் என்ன இருக்கிறது என்று சொல்லாமலேயே  விட்ட தளபதியிடம், பிரதமர்  அதில் என்ன இருக்கிறது?  என்று  கேட்கிறார்.   சலனமற்ற கண்களுடன்  நேரடியாக பிரதமரின் கண்களை பார்த்தவராக,             " ராணுவப்புரட்சி  செய்து  உம்முடைய அரசை கவிழ்பதற்கான திட்டங்கள் அடங்கிய கோப்புக்கள் " என்று சொல்கிறார். நிர்சலனமின்றி  சிரிக்காமல் சொன்ன  தளபதியின் வார்த்தைகளை  உள்ளுர நடு, நடுங்கியவராய்  நேரு சிரித்துக்கொண்டே, கேட்டுக்கொண்டு வந்து விட்டதாக   என்று ஆய்வாளர்  எழுதுகிறார்.  பின்னாளில் பீல்ட் மார்ஷல்  கரியப்பா  ரிடையர்  ஆகி இரண்டாண்டுகளுக்கு பிறகு, பாகிஸ்தானில்  ராணுவ புரட்சி ஏற்படுத்தி  தளபதி அயூப்கான்  அதிபர் ஆனபோது,  தன முன்னால் நண்பரான அவரை  மிகவும் புகழ்ந்து  பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்து இருக்கிறார்.  அன்றிலிருந்து  நேரு தொடங்கி, பின்பு வந்த தலைவர்கள் எல்லாம்  மிகுந்த தொலைநோக்குடன் செயல்பட்டு, ராணுவ அதிகாரங்களை  ஓரிடத்தில் குவியவிடாமல், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத  அதிகாரவட்டங்களை  உருவாக்கி, ஆட்சிக்கும் ராணுவத்திற்கும் இடையில் இடைவெளி உருவாக்கி விட்டதாக சொல்கிறார்.

               பாக்கிஸ்தானில்  ராணுவ புரட்சிக்குப்பிறகு  அதிபராக  வந்த  ஜெனரல் அய்யூப் கானின் ஆட்சி  மக்கள் நலம் ஒன்றே குறிக்கோளான நல்லாட்சியாய் அமைந்ததால் மக்களுக்கு இயற்கையாகவே  ராணுவத்தைபற்றி   ஒரு நல்லெண்ணம் ஏற்பட்டு விட்டது.  அவருடைய  ஆட்சிக்குப்பின்னால்,  ஒருமுறை  கராச்சியில்  பெரிய  கலவரம் ஏற்பட்டு, போலீசால் அடக்கமுடியாமல் போய்   ராணுவம் அழைக்கப்பட்டு, கலவரம் ஓய்கிறது, அரசு உடனடியாக  ராணுவம் வாபஸ்  ஆக வேண்டும் என்று சொல்லும்போது, ராணுவ தளபதி  இருநாட்கள்  அவகாசம் தாருங்கள் என்று கேட்டு, அந்த இருநாட்களில் கலவரம் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களையும், வெகு காலமாய் பராமரிக்கப்படாமல்  கிடந்த   பழைய கட்டிடங்களையும்   செப்பனிட்டு, புதுப்பித்து,  நகரையே  பொழிவிளங்க செய்து அரசிடம் ஒப்படைத்து ராணுவம் திரும்புகிறது. இவ்வாறான செயல்பாடுகள் மக்களுக்கு  ராணுவத்தின் மீது மிகுந்த நல்லெண்ணத்தை உருவாக்கி விட்டதாகவும்.  சிவில் அரசைவிட, ராணுவ அரசையே மக்கள் விரும்பி வரவேற்பதாக   தெரிவிக்கிறார்.

Wednesday, June 3, 2015

சிறந்த முஸ்லிமாயிருக்க சீரிய வழி மூன்று

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்

             மிக விரைவில் முபாரக்கான மாதமான ரமலான் நம்மிடையே வரப்போகிறது. வந்தும்  போனது,  சென்ற காலங்களில் நம்மிடையே  என்ன மாற்றங்களை  உண்டாகியது. கடந்த காலங்ககளில் இருந்ததை  விட  எந்த வகையில்  மேலான  முஸ்லிமாக, முமினாக ஆகியிருக்கிறோம். என்று  நமக்கு நாமே  கேள்வி கேட்டுக்கொண்டோமானால்,  நம்மில் எத்துனை பேர் "அல்ஹம்துலில்லாஹ் "என்று சொல்லக்கூடியவர்களாக  இருப்போம்.  கீழே உள்ள வீடியோவை  காணுங்கள்.கீழே தமிழாக்க

முதிர்ந்த  முஸ்லிம்களாய்  இருக்கிற நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ?.  இந்த ரமலானுக்கும் அடுத்த ராமலனுக்கும் இடையில்,  அல்லது இந்த திசம்பருக்கும் அடுத்த திசன்பருக்கும் இடையில், அல்லது  இந்த குளிர் காலத்திற்கும் அடுத்த குளிர் காலத்திற்கும் இடையில்,  என்ன  செய்தால்  நான் இன்னும் சிறந்த முஸ்லிமாக ஆக முடியும்.  நான் ஒரு மூன்று விசயங்களை  சுட்டிக்காட்டப்போகிறேன்,  இதை நம் முன்னேற்றத்தை அளக்கக்கூடிய  ஒரு அளவீடாக கொள்ளலாம். முதலாவது  இபாதத்,  நம்முடைய  பஜர் சரியாக இருக்கிறதா? நமது முக்கிய கவனம் தொழுகை,  பஜர் மற்றும் இஷா சரியான நேரத்தில் ஜமாத்துடன் தொழுதோமா?. நம்மை பள்ளிக்கு அழைத்து  செல்பவர் கூட தொடர்ந்து  செல்கிறோமா?,  ஒரு இலக்கை,  ஒரு காலக்கெடு  வைத்து தொடர்ந்து செய்யச்செய்ய, பழக்கத்துக்கு வந்துவிடும்.  பஜர்  சரியாக வேண்டுமானால், இளைஞர்களே ! காலாகாலத்திலே  உறங்க செல்லவேண்டும்,  ஒரு விஷயம்  சொல்கிறேன்  காலாகாலத்த்தில் உறங்கி பஜருக்கு எழும்பவில்லையானால், வாழ்கையில் ஒன்றுமே சாதிக்க முடியாது. மார்கத்தை பற்றி  10  11 மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு  மறுநாள் பஜருக்கு  10 மணிக்கு எழுந்தால்  என்ன பலன்.
சமுதாயத்தை மாற்றப்போகிறோம் என்று சொல்லி இரவு 11 மணி வரை பேசினால் மற்றம் வராது, நம்மை,  நம்முடைய தொழுகையை. குரான் உடனான நம்முடைய  தொடர்பை சரி செய்ய முடிய வில்லை. நம்முடைய தினசரி இஸ்லாமிய கடமைகளை சரியாக்கி கொள்ள இயல வில்லை,  நம்மால் எங்கிருந்து சமுதாயத்தில் மற்றம் கொண்டுவர  முடியும்?.
        சுபுஹுக்கு எழுங்கள், குரானுடன் தொடர்பை அதிகரித்துக்கொள்ளுங்கள்  பாஜருக்குபிறகு குரான் ஓதுவதை வ்ழக்கமாக்கி கொள்ளுங்கள். நாட்களில், மாதங்களில், மாற்றத்தை கொண்டுவாருங்கள்.வாழ்கையில் மாற்றம் வரும்  எதிர்காலத்தை பற்றி கனவு  காண்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்,  வாழ்கையின் முன்னேற்றம், முன்மாதிரி, குர்ஆனில் இருந்து வரும்,  அதற்கு  குரான் மனத்தில் இருக்க வேண்டும். குரானை மனனமிட செயல் திட்டத்தை  உருவாக்கிகொள்ளுங்கள். தினமும் குரானை ஓதுங்கள், முடிந்த வரை  சிறுக சிறுக தினமும் மனனம் செய்யுங்கள். ஒன்று நான் உறுதியாக சொல்கிறேன், ஒருமுறை செய்ய ஆரம்பித்து பாருங்கள், ஒரு வாரத்திலேயே  உங்களால் வித்தியாசத்தை உணரமுடியும்,  நாட்கள் பரக்கத்தால் நிரம்பியிருக்கும்.நிறைய சாதித்து இருப்பீர்கள், திறக்காத கதவுகல் திறக்கும், வாய்ப்புக்கள் நாற்புறம் இருந்தும் வரும்,மனதில் சந்தோசமும் சந்துஷ்டியும் பெருகும். இவை எல்லாவற்றையும் அல்லாஹ் தருவான். வேறு எதனாலும் தர முடியாததை  குரானுடைய தொடபு நமக்கு ஆக்கித்தரும்.
                   நான் ஆரம்பத்தில் எத்தனை விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்னேன்?.......... மூன்று  விஷயங்கள்,  ஒன்று இபாதத், வணக்கம், வழிபாடு.  அடுத்து  நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயம், மேம்படுத்திக்கொள்ள வேண்டிய விஷயம்  இல்ம், மார்க்க அறிவு.  நான்  இங்கே  இபாதத்தையும்,  மார்க்க அறிவையும்  பிரித்திருக்கிறேன் காரணம், சிலர்  தப்சீர் மற்றும் தஜ்வீத் விசயங்களில் சிறந்தவர்களாய் இருக்கிறார்கள், ஆனால் இபாதத் களில் சோடை போய்விடுகிறார்கள். கூடுதலான இல்ம் இருந்து அமல் இலையென்றால் என்ன பிரயோஜனம். அதனால் தான் நான் முதலில் இபாதத்தையும் பிறகு இல்மையும் பேசுகிறேன். இல்ம் என்று சொல்லும் பொது,  உங்களை ஆலிம் அல்லது முப்தி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை,ஷரியா சட்டங்களை படித்து பட்டம் வாங்குங்கள் என்று சொல்லவில்லை, ஆக  வேண்டும் என்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இங்கிருக்கிற பெரும்பாலோர் இஸ்லாமிய அறிவு பெற்ற.முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான். அதற்க்கு  நீங்கள் கடந்த காலங்களில்,  சீறா, ( நபிசல்லலாஹு அலைஹிவசல்லம் அவர்களுடைய  வாழ்கை வரலாறு ) படித்திருப்பீர்கள், வருடாவருடம் தொடர்ந்து படியுங்கள், பல்வேறு  பதிப்பகங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்,  அனைத்தையும் வாங்கி படியுங்கள், மனதில் இருத்துங்கள். அம்மாமனிதரின் வாழ்கையில்  தான் நமக்கான முன்மாதிரி, வழிகாட்டல் இருக்கிறது.எந்த பதிப்பகத்தின்  பதிப்பை படிக்க என்று கேட்காதீர்கள்,  வருடத்திற்கு ஒன்றாக, தொடர்ந்து படித்துக்கொண்டே இருங்கள். சீராவை படித்துக்கொடிருக்கிற அதே நேரத்தில்,  குரானிய  அறிவையும்  போதுமான அளவு  வளர்த்துக்கொண்டே இருக்க  வேண்டும். உதாரணத்திற்கு  எடுத்துக்கொள்ளுங்கள்,  சூரத்துல் கஹ்ப்  இந்த வருடம் மனனம் செய்ய வேண்டும், அதன் கூடவே  தப்சீர், தெரிந்து கொள்ள வேண்டும், இந்த சூரா சம்மந்தமாக கிடைக்கிற எல்லா விசயங்களையும் தெரிந்து கொள்ளுதல், முக்கியமாக  மனதில்  நிற்கிற அரபி சொற்களுக்கு  பொருள் அறிந்து கொள்ளுதல்.  அடுத்த வருடம் சூரயேரஹ்மான், அதற்கடுத்த வருடம்  சூரத்துல் பகரா, எனக்கு சொல்லத்தெரியவில்லை வேறு எபத சூரா வாகவும் இருக்கலாம். இங்கொன்றும், அங்கொன்றுமாக இல்லாமல்  ஒருமித்த கவனத்தோடு  ஒவ்வொன்றாக செய்யுங்கள். வருடந்தோறும் சொல்லிக்கொல்லுமளவுக்கு இல்மை வளர்த்துக்கொள்ளுங்கள். சமீபத்தில்  ஒரு மாணவர் கேட்டார்,  நீங்கள் எதனை முக்கியமென்று நினைக்கிறீர்கள்,  மனப்பாடம் செய்வதையா ?  பொருள் அறிந்து கொள்வதையா?. 
பொருளுணர்ந்து திரும்பத்திரும்ப  ஓதும் பொது, அல்லாஹ் சிந்தனையில்  ஆயாதுக்களின். சாதாரணமாக விளங்காத விசயங்களுக்கு விளக்கம் கிடைக்க செய்வான். திரும்ப திரும்ப 10 முறை ஓதி விளங்கி கொள்கிற விசயத்திற்கும், ஓரிரு முறை ஓதி விளங்குவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
        இறைவன்மீதானையாக. குரான் திரும்ப ஓத ஓத  புதிய புதிய விஷயங்கள் விளங்ககூடியதாய் இருக்கிறது. இப்பொழுது நாம்  இரண்டு செய்திகலை  பார்த்திருக்கிறோம், ஒன்று சீறா மற்றொன்று குரான்,  இதற்குள்ளே ஒரு சின்ன விருப்ப பாடம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்,  துஆ, பெருமானார் கற்றுத்தந்த மூன்று அல்லது நான்கு  துஆக்கள்.  இவைகளை பொருளுணர்ந்து மனனம் செய்து கொள்ளவேண்டியது. இது இல்மையும் அமலையும் ஒருங்கிணைப்பது. நான் சொல்லி இருக்கிற மூன்று விஷயங்கள் அல்லாமல் இன்னும் சிலவும் இருக்கின்றன,  நான் ஏன் இவைகளுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றால் இந்த மூன்றும் உங்களை உடனடியாக சிறந்த முஸ்லிமாக ஆக்ககூடியவை. உங்களுடைய  தொழுகையில் கவனமும் ஈர்ப்பும் கூடும், சீறா  படிப்பதால். பெருமானார் மீது உள்ள பாசம் பெருகும், ஒவ்வொரு முறை சலவாத் சொல்லும்போதும் பாசம் மேலும் மேலும் கூடி, அவர்களுடனான நெருக்கம் கூடும். நீங்கள் கேட்கின்ற துஆ உங்களை அல்லாஹ்வின் அருகாமைக்கு அழைத்துசெல்லும், காரணம்  உங்களுக்கு அல்லாஹ்விடம் என்ன கேட்கிறீர்கள் என்று நன்கு விளங்கும்.
       இபாதத்தையும், இல்மையும் தனி தனியாக சொன்னாலும்  இரண்டும் ஒன்றுகொன்று தொடர்புடையதே. அமல் இல்லாத இல்மினால் எந்த உபயோகமும் இல்லை.

           மூன்றாவது விஷயம் அறப்பணி செய்வது. இது உங்களைப்பொறுத்தது, வாரத்தில் ஒருநாளோ, மாதம் ஒருமுறையோ, மக்களுக்கு, சமுதாயத்துக்கு உதவி செய்ய வேண்டியது. இது முஸ்லிம்களுக்கு மட்டும் தான் செய்யவேண்டும் என்று  இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்,  தாடி வச்ச முஸ்லிம்  கிருஸ்தவர்களுக்கு உதவுகிறார் என்று பெயர் வந்தாலும் சரி. நல்லது செய்தால் யாருக்கு செய்தாலும் சரிதான். முஸ்லிம் ஆர்கனைசேசன் மூலம் தான் என்றில்லாமல், மாற்று மதத்து குழுக்கள் செய்கின்ற சமுதாய சேவையிலும் பங்கேற்றல். நாமும் மற்றவர் துயரங்களில் பங்கு கொள்கிறோம், மாற்று மதத்தவர் உதவுகிறோம் என்ற எண்ணத்தை  மாற்று  மதத்தவர் மனதில் உருவாக்கு மாறு உதவவேண்டும். கூடியவரை பறையடிக்காமல் இருத்தல் நல்லது .