Saturday, December 5, 2015

எத்துனை காலம் தான் இப்படியே இருக்கப்போகிறதோ

இன்றைக்கு இந்தியர்களுக்கு கிடைத்திறுக்கிற வலைத்தள வசதிகள், வரப்பிரசாதமா ? அல்லது சாபமா ? என்று தலையை பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு நம்மை பலவகை குழப்பங்களுக்கு ஆளாக்கும் விசயங்கள் வலம்  வந்து கொண்டிருக்கிறது.  பலர் பலவிசயங்களை ஆதார பூர்வமாக எழுதினாலும்,  அவைகளை சீர் தூக்கி பார்க்காமல் கண்மூடித்தனமாக ஒட்டு மொத்தமாக ஒதுக்கித்தள்ளும் தன்மை விவரமறிந்தவர்களாக கருதப்படுகிற, படித்தவர்களிடத்திலும் இருப்பதை  பார்க்கும் போது என்ன  சொல்வது என்றே சொல்லத்தெரியவில்லை.

சுதந்திர போராட்ட காலம் தொட்டே,  சுய நலம் கருதி ஒருவருக்கொருவர், ஒருசாராருக்கு மறுசாரார் செய்த செயல்களின், இருட்டிக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் ஆதாரங்களுடன் வெளிவரும்போது,  ஊழலும் வஞ்சகமும் இந்த நாட்டின் பிறப்பிலேயே உருவாகி  விட்டதோ என்ற எண்ணத்தை  உருவாக்கு கிறது.


பழம் தின்று கொட்டை போட்ட பழம்பெரும், வயதான தலைவர்கள் பலரிருக்க காங்கிரசின் தலைமை பொறுப்பேற்று நாடாண்ட திருமதி இந்திராகாந்தியை பற்றி,  எப்படி அவரால் இப்படி வரமுடிந்தது என்ற கேள்விகள் அக்கால ஊடகங்களில் வலம் வந்த போது,  பெருந்தலைகளின் பலதரப்பட்ட ரகசியங்கள் கோப்பு வடிவில் அவரிடம் இருந்ததாக செய்திகள் வந்தன.  அதே போல் தான் சிரித்தே அறியாத நரசிம்ம ராவின்  சிறுபான்மை அரசு,  ஆடாமல் அசையாமல் ஐந்தாண்டுகாலம் அரசோச்சியது பற்றியும் பேசப்பட்டது.  இப்படிபட்ட இரும்புக்கரம் கொண்டவர்கள்  மறைவிற்கு  பின்னால்,  கட்டுண்டு இருந்தவர்கள்  அவரவர்க்கு ஆதரவான அரசோ, வேண்டியவர்களோ ஆட்சிக்கு வரும்போது,  ரகசிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டு,  பிடி கழன்று விடுதலையாகி !!!  விடுகிறார்கள்.  பின்னால் அடக்கியாளும்  திறனற்றவர்கள் பதவிக்கு வரும் போது, அவர்களை பெருசுகள் ஆட்டிப்பார்க்க முனைகிறார்கள்.

இந்த பழைய விசயங்களை அசைபோட காரணமானவை, சில தளங்களில் வெளியான புதிதும் பழையதுமான தகவல்கள் தான். சில ஆண்டுகளுக்கு முன்னாள் ராஜீவ் காந்தி பெயரில் இருந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி கணக்கு பற்றி ஒருவர் சாமியாடினார், அவர் வழி பற்றி இன்னும் சிலர் எழுதவும் செய்தனர். இடையில் என்ன நடந்தது ?  ஏன்  அதன் பின்பு பேச்சு மூச்சே காணோம் ?  பெட்டிகள்  கை மாறியதா ?  இல்லை  சாமியாடிகளின் குடிமி,  ராஜீவ் படுகொலை விசாரணை கமிஷன் மூலம் கிடைத்த ஆதாரம், எதிர் தரப்புக்கு கிடைத்ததா யாருக்கு தெரியும் ?.  இன்றும்  கூட ஆள்பவர்களை,   80000 கோடி  நிலக்கரி ஏல வரவு  பிளஸ்  அலைக்கற்றை ஏலவரவால், நாட்டில்  வருமான வரியையே நீக்க முடியுமே ?  என்று கோடிகாட்டி,  விரைவில்  எனக்கு பதவி தராவிட்டால் என்பது போல,  ஒரு செய்தியை குருவி சொன்னது.  இவர்கள் எல்லாம்  சேர்ந்து நம்மை வைத்து அரசியல் சதுரங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கருப்பு பணத்தை கொண்டுவந்து, ஒவ்வொரு குடிமகனின் பெயரிலும்  ரூ 15 லட்சத்தை போடப்போவதாக,  உணர்ச்சி வசப்பட்டு சொல்லி,  ஆப்பு பிடுங்கிய குரங்காக  நொந்து நூடுல்ஸாகி போனவர்கள்,  இன்னும் என்னவெல்லாம் ட்விட்டர் குருவி கூச்சளிடுமோ என்று கவலை கொன்டிருக்கிரார்கள்.

இந்த தேசத்தில்  தினசரி வாழ்க்கையையே பெரிய இமாலய சாதனையாக செய்து கொண்டிருப்பவர்கள்,  வெள்ளந்தியாய் யார் என்ன சொன்னாலும்,  மேடையேறி மைக் பிடித்து, செயற்கையாய் குரல் உடைய, நான் உங்களுடைய வீடுகளை சந்திர மண்டலத்தில் கட்டித்தரப்போகிறேன் !!  உங்களுடைய வாழ்நாளில் யாருமே இப்படியொரு வாக்குறுதியை கொடுத்து பார்த்திருக்க மாட்டீர்கள் !!!  என்றுசொல்லும் பொது நம்பி வாக்களிக்கிறார்கள். சொல்பவர்கள்,   இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு இந்த முண்டங்களுக்கு நினைவிருக்க போகிறது என்று நினைத்தவர்கள், தைரியமாக ஒருபடி  மேலே போய்,  " அப்படியெல்லாம் ஒரு உணர்ச்சி பெருக்கிலே பேசுவது தான் "  என்று தெனாவெட்டாக பேசியதின் விளைவு,  பீகாரில் பேரிடியாய் தலையில் இறங்கி விட்டது.

இப்படி ஒருவர்க்கொருவர் அவரவர் செய்த கிரிமினல் காரியங்களின் ஆதாரங்களை வைத்துக்கொண்டு மிரட்டி காரியங்களை சாதித்துக்கொண்டும், கல்லாக்களை நிறைத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.   இந்த  67, 68 கால் சுதந்திர இந்தியாவில்  சுருட்டலும் சுரண்டலும் தான் சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்கிறதே தவிர,  மக்களின் நிலைமை சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை,  இன்னும் எத்துனை காலம் தான் இப்படியே இருக்கப்போகிறதோ தெரியவில்லை.

Sunday, November 22, 2015

கம்யுனிஸ்ட்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்றைக்கு ஒரு அரை நூற்றாண்டுகலுக்கெல்லாம்  முன்பு பார்த்தோம் என்றால், அடித்தட்டு மக்களுக்கு ஒரு பாது காப்பாக இருந்த ஒரு கட்சி கம்முனிஸ்ட்.   கட்சிகாரர்கள் என்று இல்லை, யாராகிலும் எந்த பிரச்சினை களுக்கும், அவர்களது கட்சி ஆபிசுக்கு சென்றால் போதும், பாதுகாப்பு தான்.  ஒவ்வொரு வட்டத்திலும், விவரம் அறிந்த வழக்கறிஞர் ஒருவர் இருப்பார், அவரே வந்து உதவி செய்வார்.   சம்பந்த பட்டவர்களுக்கு  சட்டம் சொல்லி, உரிமையை  சொல்லி தருவார்,  போலீஸ்காரர்கள் கூட கமுனிஸ்ட் தொடர்பு என்றால் யோசித்தே செயல் படுவார்கள்.  பலருக்கு தனித்து செயல் படுவதை விட கூட்டாக செயல் பட்டால் சக்தி அதிகம் என்று காட்டி தந்தார்கள்.  ஞாயத்திற்கு போராடுபவர்களாக இருந்தார்கள்.

அண்ணாதுரை  முதல்வர் ஆனதும், சிறுக சிறுக தனியார் பஸ் கம்பனிகளை எல்லாம்  அரசுடமை ஆக்கினார்.  லாபம்  கொழித்த தொழில் அரசு கைக்கு மாறியது,  தொழிலாளிகள்  எல்லாம் அரசு ஊழியர் ஆனார்கள்.  பல்வேறு தொழில் சங்கங்கள் உருவானது. அவர்களுக்கு எது செய்தாலும் நம்மை வேலையை விட்டு தூக்க முடியாது என்ற மமதை தலைக்கேறியது.  நீண்ட தூர பயணிகள்  A/C பயணக்கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் போது,  இடைவழியில் நடத்துனர், டிரைவர் மாறும் போது,  சாதாரண கட்டண வண்டிகளில் ஏற்றி விட,  A/C  கட்டணத்தை திருப்பி தாருங்கள் அல்லது  A/C  வண்டியில் ஏற்றிவிட சொன்ன பயணிகளை தரக்குறைவாக பேசியது மட்டுமின்றி, கூடுதலாக வாதிட்டவர்களை  அடிக்கக்கூட போனார்கள், காரணம்  சங்கங்களின் பின் பலம்.  வண்டியில் இடமிருந்தால்,  அமர்ந்து பயணம் செய்ய லாயக்கு அற்ற இருக்கை இருந்தாலும், பயணியை ஏற்றிக்கொண்டு  டிக்கெட்டும் கொடுத்து,  குறை சொல்லி வாதிடும் பயணியுடன் சண்டை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  அப்பொழுது அதிகம் இருந்தது கமுனிஸ்ட் சங்கங்கள் தான், ஞாயம் யார் பக்கம் இருந்தாலும் கட்சி சங்க உறுப்பினர் பக்கமே பேச தொடங்கினார்கள். பல்லாயிரம் ரூபாய் நஷ்டத்தில் ஓடினாலும்,  தொழிலாளிகளுக்கு சம்பளமும்  விழாக்கால போனசும் வேண்டும்.  பணம் கொழித்த தொழில் இப்படியானதே என்று யாருக்கும் கவலை இல்லை,   மக்கள் பணம் என்ன ஆனது என்று கேட்பார் யாரு மில்லை.  ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்பது போல்,  அரசு தொட்ட தொழில் எதுவும் விளங்காது என்பதற்கு இலக்கணமாய் ஆகி போனது அரசு போக்குவரத்து கழகங்கள்.  போக்குவரத்து கழகங்கள்  இழக்கும்  பணம்,  அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பணமும் தான் என்று அவர்களுக்கு உணர்த்துவார் யார் ? வருவாயை உயர்த்தி நஷ்டத்தை லாபமாக்கி, கூடுதல் சம்பளமும் போனசும் தாருங்கள் என்று உரிமையோடு கேட்க சொல்லிக்கொடுப்பவர்கள் யாரிருக்கிறார்கள் ?.  ஒருவேளை நாளை ஓட்டுபொறுக்கிகள்,  இழுத்துமூடினால் விட்டு விடுவார்களா ?  அவர்களுக்கு சொல்பவர் யார் ?.

தானும் வாழ்க்கையில் ஒரு மனிதனாக வேண்டும், சாதிக்க வேண்டும் என்று சொல்லி, மனைவியின் நகைகளை விற்று,  வங்கிகளுக்கு கடன் பெற வென்று நடையாய் நடந்து, தனது வாழ்க்கையையே பணையம் வைத்து தொழில் தொடங்கி, தொழிலாளியோடு தொழிலாளியாய் உழைத்து வளர்ந்த போது,  அன்று என் முன்பு சைக்கிளில் வந்தாய் இன்று காரில் வருகிறாய், எனக்கு கூடுதல் சம்பளமும் போனசும் தா, இல்லை என்றால் தொழிலை இழுத்து மூடு என்று சொல்கிற தொழிலாளிக்கு, ஞாயத்தை எடுத்து சொல்லாத கமுநிஸ்ட், தொழில் சங்கங்களே, பழைய கமுநிஸ்ட் களே  எங்கே போனீர்கள் ?.

இந்த கம்பனியின்  ஒவ்வொரு நட்டும்  போல்டும், எனக்கு தெரியும்,  என் உழைப்பினால் வளர்ந்தது இந்த கம்பனி என்று சொல்லும் தொழிலாளி,  உழைப்புக்கு சம்பளம் வாங்க வில்லையா ?  தொழில் அறியா உனக்கு தொழில் கற்று தந்து, வேலையும் கொடுத்தவராயிற்றே ?  தொழில்முனைவர் தன வாழ்க்கையையே பணயம் வைத்தாரே ? ஊன் உறக்கம் இன்றி சுற்றி அலைந்து நீ உருவாக்கிய பொருளை விற்று காசாக்க அலைந்தாரே ?  உனக்கு சரியான நேரத்தில் சம்பளமும் தந்தாரே ?  என்று  ஞாயம் உரைக்க  ஏன்  மறந்தீர் காம்ராட்களே ?    உன்னை  வேலைக்கு தான் சேர்த்தார் பங்காளியாக அல்ல என்று சொல்ல ஏன் தயங்கு கிறீர்கள் !  இப்படி மூடிக்கிடக்கின்ற, அழியும் நிலையில் இருக்கிற தொழில்கள எத்தனை ?

வலது, இடது என்று மட்டுமே என் போன்ற அனுதாபிகள் அறிந்த கம்முநிஸ்ட் இன்று எத்தனை வகை ?  ஒற்றுமையாய்  போராடுவதன் மேன்மையை உணர்த்தியவர்கள் இன்று,  சிறு சிறு குழுவாய் ஆகி போனீர்களே ?  படித்த பல அனுதாபிகள்,  நாட்டில் தொழில் கெட்டதிற்கு,  கமுநிஸ்ட் களும் சங்கங்களும் தான் என்று பொறுமும்  அவப்பெயரை நீக்க முயல மாட்டீர்களா ?

கோவன் என்றொரு நட்சத்திரம் உதித்துத்தான் இருக்கிறது, போதாது.  சட்டம் இருக்கிறது சட்டபுத்தகங்களிலே, உறங்கி கிடக்கிறது,  உயிரூட்ட  பொது நல வழக்கு தொடர்ந்து உயிரூட்ட, தன்னலமற்ற வழக்குரைஞர்கள் எங்கே?.  தேடி கண்டுபிடித்து  முன்னிறுத்த மாட்டீர்களா ?. கட்சி சார்பற்ற அனுபவம் மிக்கவர்களை அடியாளம் காட்டுங்களேன்.

இன்று நாட்டில் உங்களுக்கான தேவை அதிகமிருக்கிறது, ஒன்று சேருங்கள், தொழிலாளி வர்க்கத்துக்கு உண்மையை உரக்க சொல்லி உணர வையுங்கள் , தொழில் துறையை மேன்மையாக்கி நாடும் நாமும் நலம்பெற வளம்பெற முயலுங்கள், உண்மையான சுயநல மற்ற  கமுநிஸ்ட் டால் தான் இது முடியும்  !!!!!,  வீறு நடை கொண்டு ஒன்று பட்டு எழுந்து வாருங்கள் தோழர்கள

Saturday, October 24, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் -பகுதி 9

பங்குகள் வாங்கும் போது  நீண்ட காலத்திற்காக வாங்க வேண்டும் என்பதாக பார்த்துக்கொண்டிருந்தோம். நண்பர்கள்,  உற்றார் , உறவினர்களுடன்  இது பற்றி பேசினோமானால் உடனடியாக பல சோகக்கதைகள் சொல்லப்படும்.  அவை முற்றிலும் உண்மையில்லை என்றும்  சொல்ல முடியாது.   பலபேர் சொல்வது உண்மைதான்.  இன்னும் நீங்கள் உறுதியாக நான் ஷேர் வாங்கத்தான் போகிறேன் என்று நின்றால்,  அடுத்து  கிடைக்கும்  அறிவுரை மியூச்சுவல் பண்டுகல் இருக்கின்றன அவற்றில் முதலீடுகள் செய்யுங்கள் என்பதாக இருக்கும்.  இன்னும் சிலர்  E T F  இருக்கின்றன  அவற்றில்  முதலீடு செய்யுங்கள் என்பதாக சொல்வார்கள்.

எந்த தொழில் யார் செய்தாலும் லாபத்திற்காக தான் செய்வார்கள்,  இதற்கு  மியுச்சுவல் பண்டுகளோ,  E T F  களோ விதி விலக்கு அல்ல.  அவர்களிடம்  வேலை பார்க்கும் விலைஉயர்ந்த கோட் சூட் போடும்  நிதி நிறுவன அதிகாரிகளின் சம்பளம், அவர்கள் அமரும் மிக நேர்த்தியாக  வடிவமைக்கப்பட்ட  குளு குளு  அறைகள்,  இவைகளுக்கு யார் செலவு செய்வது, அந்த பணம் எங்கிருந்து வரும் ?. இதற்கெல்லாம் மேலாக  அவர்களுக்கு வேலை கொடுக்கும் கம்பனி லாபம் பார்க்க வேண்டும்.  உங்களுக்கு வருடம் ஒருமுறைதான் பெரும்பாலும் டிவிடன்ட் கிடைக்கும், அவர்களது செலவுகள் மாதாமாதம் இருக்கும்,  கம்பனிகள்  அந்த செலவுகளுக்கு எங்கு போகும் ?.   உண்மை என்ன வென்றால் நீங்களும் நானும் போடும் பணத்தில் இருந்து சம்பாதித்து,  இந்த செலவுகளெல்லாம் போக மீதம் இருக்கும் தொகையை தான் நமக்கென்று, டிவிடண்டாக தருவார்கள்.  சிலவருடங்களில் செலவு போக மீதம் இருக்காது, நமக்கு ஒன்றும் கிடைக்காது,   ஆனால்  அவர்களுக்கு  வழக்கம் போல் எல்லாமே கிடைக்கும். முதல் போட்ட நமக்கு  வாயில் லாலிபாப்  தான். நாம் நம் பணத்தை அவர்களிடம் கொடுத்து எனக்குக்காக தொழில் செய்து சம்பாதித்து தாருங்கள் என்று சொன்னால், அப்படித்தான் நடக்கும் !!!!!!  தனக்கு போகத்தான் நமக்கு அவர்களை குறை சொல்ல முடியாது.  நீங்கலாயினும், நானானாலும் இதையே செய்வோம். இவற்றை ப்பற்றி  எழுதுவதன் நோக்கமே,  நம் பணத்தை நாமே முதலீடு செய்து, முடிந்த அளவு கூடுதல் லாபத்தை நாமே அடைந்து கொள்வது என்பதற்கு த்தான்

இவர்களால் நமக்கு நன்மையே இல்லையா என்றால்,  நிறைய நன்மை இருக்கிறது,  இவர்களிடம் நம்மைப்போன்றோரின் பெரும் தொகை கைவசம் இருப்பதால் சந்தையின், அன்றாட ஏற்ற தாழ்வுகளை இவர்களால் இயக்க முடிகிறது,  அப்பப்ப  இவர்களை போன்றவர்கள், பொருளாதார நிகழ்வுகளை கணிக்க முயன்று கொடுக்கும், டிப்புக்களால்  பங்கு விற்றல் வாங்கல் நடந்து, நம்மைப்போன்றவர்கள் வாங்குதற்கு வாய்ப்புக்கள் உருவாகும்.  சாதரணமாக எல்லோருக்கும் தெரியும்  ஒரு விஷயம்,  எல்லா தொழிலும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை,  உதாரணத்திற்கு  காய்கறி சந்தையில், ஒருசில காய்கறிகளின் வரத்து கூடுதல் ஆகும் போது விலை இறங்குவதும், வரத்து குறையும் போது விலை கூடுவது போல.  ஒரே நேரத்தில் எல்லா காய்கறிகளின் விலையும்  கூடுவதோ குறைவதோ சாதரணமாக  இருக்காது.  அதே போல் தான் வெவ்வேறு தொழில் துறையும்  ஓரோர் சமயத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும்,  இதன் காரணமாக லாப நட்டங்கள் ஏற்படலாம். அதனால் ஷேர் விலைகள் ஏறி இறங்கும்,  அவற்றின் தாக்கங்கல்,  நாம்  தாங்கும் அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக, வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்ய பரிந்துரை செய்வார்கள்.  நம் போன்றோர் மிக குறைந்த முதலீட்டில்  ஆரம்பிப்பதால் அப்படி செய்ய இயலாது,. அவசியமும் இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்பவர்கள் அப்படி செய்யலாம்.  கம்பனிகள் ஆரம்பித்தவர்கள் எல்லாம், அதிலேயே  சம்பாதித்து நன்கு வளர்ந்த பின்னால் தான் வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்,   இந்திய சந்தையில் பணம் பண்ணிய பெரும்பாலான கோடீஸ்வரர்கள் ஒரு கம்பனியில் முதலீடு செய்தே சம்பாதித்து இருக்கிறார்கள். நம்மை போன்றோர்  முதலீடு செய்த கம்பனியின் ஷேர்கள்  இரங்கி வரும் போது இன்னும் கூடுதலாக வாங்க வேண்டும்.

மியுச்சுவல் பண்டில், E T F  இல் முதலீடு செய்ய சொல்பவர்கள்,  ஒரு விஷயத்தை கவனித்து இருக்கிறார்களா என்பது தெரிய வில்லை.  நாம் முதலீடு செய்யப்போகும் கம்பனிகளும்,  அவர்கள் முதலீடு  செய்திருக்கும் கம்பனிகளில் தான்.  அவர்களால் லாபம் சம்பாதிக்க முடியும் போது நம்மால் என் முடியாது ?.  சில வரை முறைகளை நாமும் நமக்கென வகுத்துக்கொண்டு அதன் படி செயல் பட்டால் நம்மாலும்,  சம்பாதிக்க இயலும்.  இந்திய சந்தைகளில்  சில ஆயிரம் கம்பனிகள் தான்,  பல் வேறு  எக்செஞ்சுகளில் லிஸ்ட் செய்யப்பட்டு,  வியாபாரம் செய்யப்படுகிறது.  இவைகளில் இருந்து தான் அவர்களும்  தேர்வு செய்து முதலீடு செய்கிறார்கள்.  நூற்றுக்கணக்கான  மியுச்சுவல்  பண்டுகலும்,  E T F  களும் இருக்கின்றன,  அவற்றில் சில வற்றை எடுத்துக்கொண்டு,   எந்தெந்த கம்பனிகளில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களானால்,   பெரும்பாலான கம்பனிகளில் எல்லோருமே முதலீடு செய்திருப்பார்கள் !!!!!.   

இந்த தொடரை  தொடந்து வருபவர்களுக்கு,  நீண்ட கால முதலீட்டினால் மட்டுமே பங்கு சந்தைகளில் சம்பாதிக்க முடியும் என்பது போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்கி இருக்கும்.  பலர்  ட்ரேடிங் செய்து சம்பாதிப்பதையும், டிரைனிங் தருவதாகவும் விளம்பரம் செய்வதையும் பார்த்திருக்கலாம். இன்னும் சிலர் குறைந்த விலையில் வாங்கி, விலை ஏறியதும் விற்று  சம்பாதித்ததாக கூறுவதையும் படித்திருப்பீர்கள்.  பெரும்பாலோர்  கமிசனை பற்றி சொல்லி கணக்கிட்டு இருக்க மாட்டார்கள். கிடைத்த லாபத்தை மட்டுமே சொல்லி இருப்பார்கள், அந்த லாபம் அடைய செய்த செலவை சொல்ல மாட்டார்கள். சம்பாதிக்கவே முடியாது என்பதல்ல, அதற்க்கு  சில  அடிப்படை கணக்கீடுகள் செய்து  முயற்சி செய்ய வேண்டும்.  அதுவும் இன்று வாங்கி நாளை விற்பதால்  அல்ல !!!!.  அதற்கு நமக்கு மிகுந்த அனுபவம் வேண்டும்,  சந்தையின் போக்கை சிறிது காலம் கவனித்து, புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய முதல் நோக்கம் லாபம் சம்பாதிக்காவிட்டாலும், வாயை கட்டி வயிற்ரை கட்டி சேர்த்ததை இழந்து விடக்கூடாது,  முதலை இழந்து விடா முயற்சிகளை செய்து சம்பாதித்து கொண்டு,  அடுத்த முயற்சிகளை சிறிது சிறிதாக செய்யலாம். இதற்கிடையில் சந்தை பற்றிய புரிதலும் ஏற்படும்.

இறைவன் நாடினால் தொடர்ந்து  விபரங்களை பார்ப்போம் ............  

Thursday, October 1, 2015

இதுவும் தொழில் முயற்சிதான்.............

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் படித்து  கைநிறைய சம்பளம் வாங்கும் மக்களிடத்தில் பரவலாக இருக்கும் ஒரு எண்ணம், ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்பதாக தான் இருக்கிறது.   இதற்கெல்லாம் காரணம்  கம்ப்யூடர் துரையின் அசுர வளர்ச்சி தான்.  இத்துறையில் தொழில் தொடங்க பெரிய முதலீடு வேண்டும் என்பது அவசியமில்லை,   இன்றைக்கு வளர்ந்து பெரிய ஜாம்பாவானாக நிமிர்ந்து நிற்கும் கம்பனிகலெல்லாம், பல்கலை கழகங்களின் மாணவர் தங்கும் விடுதிகளின் பொது அறைகளிலும், வீட்டு கார் கராஜ்களிலும் தொடங்கப்பட்டவைகள் தான்.  இந்த மாதிரியான கம்பனிகளின் வளர்ச்சியின்  பின்னணியில் இருப்பவர்கள் எல்லாம் 90 % க்கு மேல் இந்தியர்கள் தான், அதிலும் சிறப்பாக தென்னிந்தியர்கள் தான்.  இதில் ஒரு நல்ல சதவீதத்தினர் ஆரம்பகாலத்தில்  இருந்தே அதே கம்பனியில் இருப்பவர்கள் என்பதால், சம்பளத்துடன், வளர்ச்சி, உழைப்புக்கு ஏற்ப கம்பனியின் ஷேர் களாகவும் கொடுக்கப்படடிருப்பார்கள் ,  கம்பனி வளரும் போது, ஷேர் விலை உயர்வினால் கிடைக்கு லாபமும் இவர்களுக்கே சேரும்.  இப்படி ஒரு மறைமுக லாபம் இருப்பதால், இதுவே ஒரு காரணியாக செயல் பட்டு,  கம்பனி வளர்ச்சி தன வளர்ச்சி என்பதாக எண்ணி நேரம் கால பாராமல் உழைக்கிறார்கள்.  சாதரணமாக ஒரு மனிதன்  நாற்பது ஆண்டுகாலம் உழைத்து 65 வயதில் பனி ஓய்வு பெறுவான் என்றால்,  இவர்கள்  அதே அளவு உழைப்பை  25, 30 ஆண்டுகளுக்குள் செய்து விடுபவர்களாக இருக்கிறார்கள்.  அங்கெ இருக்கிற வாழ்க்கை முறையும், அவர்களுடைய  வேலைக்கு ஏற்ப  இணைந்து செல்லக்கூடியதாக இருக்கிறது.

இம்மாதிரியான பன்னாட்டு கம்பனிகள் இங்கு வரும்போது, வேலை செய்பவர்களிடம் அதே உழைப்பை எதிற்  பார்க்கிறார்கள்,  சம்பளம் என்னவோ கூடுதலாக இருந்தாலும் மற்ற விசயங்கள் இருப்பதில்லை,  இந்திய வாழ்க்கை முறையும், வேலைக்கு அனுசரணையாக இருப்பதில்லை,  இதன் காரண மாகத்தான்,  பத்து, பதினைந்து ஆண்டுகள் உழைத்ததுமே  வெறுத்துப்போய்,  வேறு ஏதாவது செய்து பிழைத்து கொள்வோம் என்று,   மன அழுத்தம் இல்லாத தொழிலாக  தேடி அலைந்து,  விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட தொடங்குகிறார்கள்.  வெற்றிக்கு முக்கிய காரணி திட்டமிடலும், அதன் பிரயோகமும் என்று அனுபவ ரீதியாக அறிந்து கொண்டவைகளை, கையாண்டு வெற்றியை அடைந்து கொள்கிறார்கள்.

நம்மவர்கள் இவ்வளவு உழைக்க தயாராய் இருந்தாலும்.  அவர்களுக்கு மேல் நிலையில் உள்ள மேல் நாட்டவர், சரியாக 8 மணி நேரத்திற்கு மேல் உழைப்பதில்லை, நம்மவர்களிடம்  உள்ள தொழில் பற்று அவர்களிடம் இல்லை.  இதன் காரணமாகவே இந்தியர்களுக்கு தனி மரியாதை.   இந்தியர்கள் சிறந்த அறிவாளிகள் என்பதால் இந்நிலைமை என்று யாரும்  நினைத்து விட வேண்டாம் காரணம் , சீனர்கள்  நமக்கு எந்த விதத்திலும்   சளைத்தவர்கள் அல்ல.   சீனர்கள் நம்மவர்களை என்றோ முந்தி சென்று இருப்பார்கள், செல்லாததன் காரணம், நம்மவர்களை போன்று ஆங்கில அறிவு அவர்களிடம்  இல்லாதது தான்.!!!!!!!.   இப்பொழுது தான் சீன பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தொடங்கி  இருக்கிறார்கள்.   அவர்கள் தயாராகி வரப்போகிற   15, 20 ஆண்டுகால இடைவெளிதான் நம்மவர்களுக்கு கிடைத்திருக்கிற வரப்பிரசாதம்.  நம்மை ஆள,  நாம் வைத்திருக்கிறவர்கள்,  அடிமை மொழி நமக்கு தேவையில்லை என்று சொல்ல தொடங்கினால்,  வருங்கால சந்ததியினர் நிலைமை என்ன    ஆகுமோ ?.....

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விடுமுறையிலோ, அல்லது உறவினரை சந்திக்கவோ வரும் போது, பெரு நகரங்களில் முளைத்து இருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களும்,   பெரும்  வணிக வளாகங்களில் மக்கள் பணத்தை சர்வ சாதரணமாக், ஆயிரக்கணக்கில் செலவழிப்பதை கண்டு நம்மால் கூட இப்படி தண்ணி பட்ட பாடாக செலவழிக்க முடியாதே என்று பிரமிப்புடன் பார்த்து, இன்திய வாழ்க்கை நாம் நினைப்பது போல் இல்லை போலும் மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது என்ற பிரமையை  வெளிநாடு வாழ் இந்தியர்களின் மனதில் உருவாக்குகிறது.   எத்தனை சதவீத மக்கள் இப்படி செலவழிக்கிறார்கள் என்று பார்த்தோமானால் மிகக்குறைவே,  அதிலும்  பெரும்பாலும்  I T  துறையில் இருப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.   எதார்த்தம்  எப்படி இருக்கிறது என்றால்,  சிலநூறு எண்ணிக்கையிலான  டீ பாய் வேலைக்கு, மூன்று லட்சம் விண்ணப்பங்கள், அதிலும்  எல்லோரும்  பட்டப்படிப்பு படித்தவர்கள், மேல் பட்டப்படிப்பு படித்தவர்கள்  இன்னும் சிலரோ  டாக்டரேட் வாங்கியவர்கள் !!!!!

இந்தியா இன்று இந்த அளவிற்கு உலகில் பேசப்படுவதற்கு காரணம்,  நம்மை இத்தனை காலம் ஆள்கிறேன் பேர்வழி என்று அரசுக்கட்டிலில் இருந்தவர்களோ, இருப்பவர்களோ அல்ல,  அவரவர் தனிப்பட்ட முறையில், முயன்று வெற்றி அடைந்ததன் காரணமாகத்தான் நாடு உயர்ந்து இருக்கிறது.  அரசுகள்  கஜானாவில் இருந்த தங்கத்தை உலக நாடுகளிடம் அடகு வைத்தபோது,  குடியிருக்க வீடில்லை, கஞ்சிக்கும் வழியில்லை என்றிருந்த நேரத்தில், இருந்ததை விற்று மக்கள், சாரி சாரியாய் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்று,  இன்னது தான் செய்வது என்றில்லாமல், எந்த வேலையும் பொருள் கிடைத்தால் போதும் என்று செய்தவர்களால் தான் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது.  நாட்டின் எந்த மூலை  முடுக்கில்  சென்று பார்த்தாலும், யாரவது ஒருவர் அரபு நாடு சென்று வந்திருப்பார், சாட்சி சொல்ல கூடவே, கான்கிரீடால் ஆன வீடும் இருக்கும். எத்தனை  இளம் பெண்கள் மணமுடித்து கொடுக்கப்பட்டிருப்பார்கள்.  வெயிலுக்கு கூட பள்ளியில் ஒதுங்க இயலாதவர்களின் பிள்ளைகள் பல்களை கழகங்களுக்கு சென்றார்கள்.  இன்றைக்கும் அங்கு சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள்.  இன்று  மேற்கத்திய நாடுகளில் படித்த பலர் உழைக்கிறார்கள், தேச பொருளாதாரம் இப்படிப்பட்டவர்களால் தான் உயர்கிறது, உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இதில்  பரிதாபத்திற்கு உரிய விஷயம் என்ன வென்றால்,  நம் நாட்டிற்கு வந்து ஏதாவது தமக்கு தெரிந்த தொழில் செய்யலாம் என்று பார்த்தால், எதிலும் எங்கும் லஞ்சம், எந்தக்காரியமும் நினைத்த நேரத்தில் நடப்பதில்லை,  அனுமதிகளுக்கு அலைகின்ற காலத்தில், கையில் இருக்கும் பணம் கரைந்து, மீண்டும் வெளிநாடுகளுக்கே செல்லும் சூழ்நிலையும் உருவாகி விடும்,  இப்படி வாய்ப்பை இழந்தவர்கள் பலர். இன்னும் சிலர் தொழில் செய்கின்ற அளவிற்கு  முதல் இல்லாதவர்கள்,  வாழ்க்கையை வெளிநாடுகளிலேயே தொலைத்தவர்கள், வர விரும்பினாலும் வர இயலாதவர்கள். இவர்களுக்கெல்லாம் முடிவுதான் என்ன ?, வாழ்க்கை தொலைந்தது தொலைந்தது தானா ?,   

மனம் தளர விடாதீர்கள்,  உங்களுக்கு என்ன தொழில்லில் ஈடுபட வேண்டும்; எஞ்சினீரின்கா , கெமிகலா,ஷிப்பிங்கா  .....   நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.   நமக்கும் வெற்றியடைய வாய்ப்பு இருக்கிறது.

லஞ்ச லாவன்ய சூழ்நிலை இந்தியாவில் இன்றல்ல,  இந்தியாவின் பிறப்பிலேயே உருவானது போலும், இவ்வருட ஆரம்பத்தில்  காலமான 85 வயது வெற்றியாளர்  சந்திரகாந்த் சம்பத்,  இந்திய வாறன் பப்பே என்று புகழப்பட்டவர்,  தன்னை சுற்றி இருந்த இளைஞர் களுக்கு சொன்னதை கேளுங்கள்.  பயனடைந்த இளைஞர்களில்  ஒருவரும்,  பம்பை சந்தையின் பழம்பெரும் புரோக்கருமான பாரக் பாரிக் என்பவர்   சொல்கிறார் கேளுங்கள்.

என்  போன்று  இன்று பங்கு சந்தையில் ஈடுபட்டிருக்கும் பலபேருக்கு  உந்து சக்தியாக, வழிகாட்டியாக இருந்தவர் தான் திரு சம்பத் அவர்கள்.  இவர் எந்த அளவிற்கு இந்திய பங்கு சந்தைக்கு முக்கியமானவர் என்றால்,  பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின்  ஆரம்ப காலத்தில்  அதற்கு வருமானத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக,  ஒவ்வொரு கம்பனியும் லிஸ்ட் செய்யும் போது,  லிஸ்டிங் தொகை  என்று ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும்.  அந்த தொகை குறிப்பிட்ட அளவினதாக இல்லாமல,   ஷேர் களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இருக்கவேண்டும் அப்பொழுது  தான், கம்பனிகள் ஒவ்வொருமுறை ஷேர் வெளியிடும் போதும் வருமானம் கிடைக்கும் என்பதாக யோசனை  சொல்லி அதன்படி மாற்றி அமைக்கப்பட்டது.   அவருடைய  பம்பாய்  வொர்லியில் உள்ள   அறையை பார்த்தால் பலவகைப்பட்ட நிதி சம்பந்தமான சஞ்சிகைகளும், புத்தகங்களும் நிறைந்து கிடக்கும்.  அவர் என்னுடைய தந்தையின் நண்பர்.  நான் என்னுடைய கல்லூரி முடித்த புதிதில்,  தற்காலங்களில் பேஸ்ட் போன்றவை வரும் பிளாஸ்டிக் டியூப் செய்வதற்கான ப்ராஜெக்ட் செய்திருந்தேன், அதனை   பொருளாதார ரீதியாக சாத்தியம்  இல்லாதது என்பதாக சொல்லி நிராகரிக்க்ப்பட்டது.  இந்த ப்ரொஜெக்டின் வெற்றி,  என்வாழ்க்கையின்  ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று எண்ணியிருந்த  எனக்கு அது  பேரிடியாக இருந்தது.  என் தந்தையார் திரு சம்பத் அவர்களை சென்று சந்திக்குமாறு சொன்னார்கள்.  என் கதையை பொறுமையாக கேட்டு ,  இன்றைக்கு இந்தியாவில் தொழில் தொடங்குவது என்பது எளிதான விசயமல்ல,  முதலில் பல தரப்பட்ட அனுமதிகள் பெறவேண்டியிருக்கும், அவைகளை பெறுவதென்பது பெரும் செல்வாக்கு உடையவர்களால் தான் முடியும்.  அடுத்து மூலப்பொருள் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை இப்படி பலவகையான பிரச்சினைகள், இவற்றை சமாளிப்பதற்கு கடுமையான செல்வாக்கும் அதற்கும் மேல் பணபலமும் வேண்டும். இவைகளை சமாளித்த பின்பு தான் புராடக்ட்டை பற்றி யோசிக்க முடியும்.

இதற்கு மாற்றாக என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது, அதற்கு நீங்கள் இன்ன தொழில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை,   மனதிற்கு பிடித்த எதை வேண்டுமானாலும் செய்யலாம்,  நாளை தொழில் சரியில்லை என்றாலோ,  பிடிக்கவில்லை என்றாலோ, மிக எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்,  மாட்டிக்கொண்டு விழி பிதுங்குதல் என்பதெல்லாம் இல்லை என்று சொன்னார்.

என்ன யோசனை சொல்லுங்கள் என்றுகேட்டதற்கு ,   புதிதாக தொழில் தொடங்குவதையும்  அதில் உள்ள உள்ள பிரச்சனைகளைகளையும்   அரசியல் ரீதியான செல்வாக்கும், பணபலமும், தாக்குபிடிக்க கூடிய திண்மையும் உள்ளவர்களிடம் விட்டு விடுங்கள்.  உங்களைப்போன்ற இளைஞர்கள்................. அவர் வார்த்தைகளிலேயே  கேளுங்களேன்.............

“Pick up good companies with good managements when their share prices are at an eight-year or 10-year low. Alternatively, if you still want to do something, buy good companies that are 40% lower than their 52-week high. I will buy only those companies that are in a business that even fools can understand, have very little debt, have free cash flows or do not have much capital expenditure, which is nothing but deferred cost,”


 What is Sampat’s secret to good investing?  comes  the answer: Invest in a business you understand, the company should have either zero or very little debt, the share should be available at a P/E ratio of 13 to 14 times the current year’s earnings and lastly, it should be available between 3.5% and 4%. “It is that simple!” he says. This is all he does; he says, no more research. Follow these golden rules, and you can be as good as he can, he concluded.

கையில் மிக குறைவான முதலீட்டுடன், ஆரம்பகாலத்தில்  ஷேவிங் ரேசர், சோப்பு அழகு சாதனங்கள் போன்றவற்றை  உற்பத்தி செய்யும், கில்லட், ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற கம்பனிகளிலும், சிறு உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்த நெஸ்லே போன்ற எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய, நாளாக நாளாக தேவைகள் கூடக்கூடியது என்று யாராலும் புரிந்து கொள்ளக்கூடிய தொழில்களில்  முதலீடு செய்து  வெற்றி அடைந்த தன கதையை, சிறு சிறு வார்த்தைகளில், நம்மை போன்றோருக்காக செதுக்கி தந்திருக்கிறார்.

நண்பர்களே,  சிந்தியுங்கள்........ சரி எனப்பட்டால் முயற்சி செய்யுங்களேன் !!!!!!   Please make something happen  

தொழில், முதலீடு,அரபு நாடுகள்,

Saturday, September 19, 2015

ஷேர் மார்க்கட்டில் நஷ்டமடைந்தவரா நீங்கள் ?.......காரணி தேடி ஒரு அலசல்

நமது நாட்டில் பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் யார் என்று பார்த்தால் பெரும்பாலும் மேல்தட்டுக்காரர்களாக தான் இருப்பார்கள்.  முந்தய தலை முறையினர் யாராவது  நிதித்துறை சம்மந்தப்பட்ட  தொழிலில் ஈடுபட்டவர்களாக இருந்திருப்பார்கள், அவர்கள் மூலமாக இவர்களுக்கு  உந்துதல் கிடைத்திருக்கும்,  என்ன் தகவல்கள் எங்கிருந்து பெறவேண்டும், எப்படி அவைகளை  உபயோகித்து,  கம்பனிகளை தரம் பிரித்து, நாம் எப்படி வாங்குதல்/ விற்றல் முடிவெடுக்க வேண்டும் என்ற அடிப்படை  அறிவு அவர்களால்  போதிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறாக நம் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வழி இருக்கிறதா ? என்று ஏங்குகிறவர்களுக்கு,   ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் தேவையற்ற, ஆடம்பரமான, தகுதிக்கு மீறிய  பொருள்கள் வாங்குவதில் செலவிடும் காசை  நல்ல கம்பனிகளின் ஷேர்களை,  ஒன்றோ, ஐந்தோ, பத்தோ அவர்கள் பெயரில் வாங்கி வைத்து,  சிறிது விவரம் வந்து, ஹய் ஸ்கூல் போகின்ற வயதில், சேர்த்து அவர்களிடம் கொடுத்தால்,  இயற்கையாக ஏற்படும் ஆவலால் விவரம் அறிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.  வருடம் இருமுறை வரும் டிவிடன்டையும் காண்பித்து,  அவர்கள் அக்கவுண்டில் போட்டளுமோ  அல்லது இன்னும் குறை காசு போட்டு இன்னொரு ஷேர்  வாங்கி கொடுத்தாளுமோ தங்கள் விருப்பம்.  சிறுக சிறுக இதன் காரணமாக சந்தை மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும். அவர்களே கற்று கொள்வார்கள்.   நல்ல கம்பனி என்னும் போது, பழம்  பெரும் கம்பனிகள் பல இருந்தாலும், உதாரணத்துக்கு சில்,   TVS குரூப் கம்பனிகள்,  கோல்கேட், ஹிந்துஸ்தான் லீவர் போன்றவை.  ரூ 100 லிருந்து  ரூ 500 க்குள் வாங்கலாம்.

கம்பனிகளுடைய  வருடாந்திர, வரவு செலவு கணக்கை பார்த்திருப்பீர்கள்,  ஏறக்குறைய 7,8 வரிகளில்  பல நம்பர்களை வருசைபடுத்தி எழுதி இருப்பார்கள் .  இவைகளில் இருந்து தான், சில கூட்டல், கழித்தல்களை செய்து, இன்னும் சில தொழில் சூழ்நிலைகள், கால மாற்றங்கள்,  அரசாங்கங்களின் தொழிற்சார் ஆதரவு போன்றவற்றை கருத்தில் கொண்டு, கம்பனிகளை மதிப்பீடு செய்வார்கள்.  சாதாரண, 10 ஆம் கிளாஸ் கணக்கு தான்.  ராக்கட் சயன்ஸ் ஒன்றுமல்ல.  கணக்கிடுதல் சிரமமாக இருந்தாலும், தற்காலத்தில் போனில் கூட கால்குலேட்டர் இருக்கிறது !!!. அதற்கும் மேலே வேலையை இலகுவாக்கி தேவையான விவரங்களை, அக்கு வேறு ஆணிவேராய் பிரித்து, புள்ளி விவரங்கள்  தரக்கூடிய  பத்திரிகைகள் பல வந்து விட்டன!!!!!!.  உதாரணத்திற்கு  தலால் ஸ்ட்ரீட்,  தமிழிலும் வருகிறது என்று நினைக்கிறேன். இதன் காரணத்தால் இன்றைக்கு,  என்ன செய்கிறோம் என்ற புரிதல் உள்ள,   யார் வேண்டுமானாலும் பங்கு சந்தையில் முதலீடு செய்து பொருளீட்டலாம்

90 களின் நடுவில் என்று நினைக்கிறேன், அப்பொழுதுதான் இந்திய சந்தை உலகம் முழுக்க பெயர் பெற்றது,  இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பாமரனில்  இருந்து படித்தவன் வரை எல்லோராலும் பேசப்பட்டது.  இதெற்கெல்லாம் காரணம் ஹர்ஷத் மேத்தா என்றவர் வங்கி சட்டங்களில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி பல வங்கித்துறை நிபுணர்களின் காதில் பூ சுற்றியும்,  பூ பழம் கொடுத்தும்,  பெரும் பணம் பண்ணியது தான். அதிலிருந்து தான் எல்லா பத்திரிக்கைகளும், வணிகம் / நிதி / பொருளாதாரம்  என்பதாக ஒரு பக்கத்தையே ஒதுக்கி எழுதத்தொடங்கின.   அக்கால கட்டத்தில் தான் ஒவ்வொரு சிறு பெரு  நகரங்களிலும். ஷேர் புரோகிங் கம்பனிகள் தொடங்கப்பட்டன,  இவர்கள் மூலமாக ஆசிரியர், அரசு அலுவலர்கள் என பலர் முதலீடு செய்தார்கள்.  முழுக்க முழுக்க இந்த ஏஜெண்டுகள்  பரிந்துரைத்த கம்பநிகளிலேயே   முதலீடுகள் இருக்கும். ஹர்ஷத் மேதாவுடன்  இவர்களும் காலி. இப்படி பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு   " விட்டதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடு  ". என்று சொல்வார்களே அப்படி மிஞ்சியது போதும் என்று ஒதுங்கியவரா ?  இல்லை "துண்டை காணோம் துணியை காணோம் "  என்று எல்லாம் இழந்தவரா ?   கீழே உள்ள நிகழ்ச்சியை படியுங்கள்,  உங்களின் பழைய செயல் பாட்டை நினைவு படுத்துகிறதா என்று பாருங்கள்.

நானும்  ந்ம் தேசத்து பெரும்பாலோரை  போன்றவன் தான்.XXXXXX   படித்துக்கொண்டிருந்த காலத்தில்  எண்டமூரி வீரேந்திநாத்  என்ற தெலுகு எழுத்தாளரின், சினிமாவாக்கப்பட்ட கதையின் ஹீரோ,  காதலியின் தந்தையுடன்  போட்ட சபதத்தை நிறை வேற்ற, கம்பனி ஆரம்பித்து  ஷேர் மார்க்கட்டில் ஷேர் வெளியிட்டு இருப்பார்,  இப்படி  தான்  பங்கு சந்தை எனக்கு அறிமுகம்  ஆனது.  இவ்வளவு குறுகிய காலத்துக்குள் பெரும் பணம் ஈட்ட இப்படி ஒரு வாய்ப்பா ?   என்ற பிரமிப்புடன்,  படித்து வெளியேறி,  எதார்த்தம் எதிரில் வர எல்லாம் மறந்து  ஓடோ ஓடென்று ஓடி உழைத்து களைத்து, ஆசுவாசப்படுத்திக்கொள்ள  நின்ற போது தான் மீண்டும் நினைவு வந்தது ஷேர்  மார்கட்,  இதற்கிடையில்  பத்தாண்டுகள் பறந்தோடி இருந்தது.   இது 80 களின் ஆரம்பம்.

என்னுடைய  சர்க்கிளில் உள்ள, படித்த பணக்கார, தொழில் செய்யும், அரசுப்பணியில் இருந்தவர்கள் என்று எல்லோரிடமும், பங்கு சந்தை பற்றி தெரியுமா என்று கேட்டும், அறிந்து கொள்ள புத்தகங்கள் இருக்கிறதா என்றும் கேட்க்காதவர்கள் ஒருவரில்லை.  யாருக்கும் எதுவும் தெரிய வில்லை.  பல மாத முயற்சிக்கு பிறகு சென்னையில் இருந்த ஒரு நண்பரின் நண்பர், புத்தகம் இருக்கிறதென்று சொல்லி  பெயர் சொன்னார்.  அந்த நேரத்தில் தான்  சார்டட் அக்கவுடன்ட் க்கு பயிற்சி நடத்தும் அமைப்பு   C F A  என்ற ஸ்டாக் மார்கட் சம்மந்தப்பட்ட கோர்ஸ் ஆரம்பித்தார்கள், அதன் தலைவர்தான் புத்தகத்தின் ஆசிரியர். 

அன்றைக்கு படித்து புரிந்ததாக நினைத்து கொண்ட, அதே புத்தகத்தை இன்று படிக்கும் பொது, பல புதிய விசயங்கள் விளங்க வருகின்றன. இதை தான் ஆங்கிலத்தில்  Reading the fine lines, என்றும் Read between the lines என்பதாகவும் சொல்கிறார்கள் போலும். மிகத்தெளிவான விளக்கங்கள் தரும் டெக்னிகல் புத்தகம், ஆனால்  நடைமுறை  நுட்பங்கள் அலசப்பட வில்லை, ஒரு வேளை  அக்கால கட்டத்திற்கு தேவையில்லை என்று ஆசிரியர் கருதினாரோ என்னவோ.

அன்றைய சென்னையில் தான், CA, C W A, C F A, Company Secretary போன்ற படிப்புக்களுக்கு பயிற்சி தரும் அமைப்புகள் இருந்தன.  அவற்றில் படிப்பவர்கள் கூடுதலும் தெலுங்கர்கள்,  இன்று கூட நம்மவர்கள் அருகில் கூட செல்லாத, செல்வாக்கு மிக்க, மரியாதைக்கு உரிய, நல்ல சம்பளம் கிடைக்க கூடிய company secretary  படிப்பு.  இந்த மாதிரியான நிதி துறை படிப்பு படிக்கிற ஒருவர் மூலமாக தான், எனக்கு ஒரு சப் ப்ரோகர் அறிமுகம் செய்யப்பட்டார். 

வாரத்திற்கு ஒரு முறையோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ அவரை சென்று பார்ப்பதுண்டு.  அவர்  இந்த கம்பனி ஷேர்  பலமடங்கு ஏறப்போகிறது  இதை வாங்குங்கள் அதை வாங்குங்க என்பதாக சொல்வார்.  100, 50 என்ற கணக்கில் வாங்குவது உண்டு.  ஆரம்பத்தில் கேஷ் தான் கேட்டார். ஆனால் ரசீது கொடுப்பதில்லை.  அவரை  அறிமுகம் செய்த நண்பரை கேட்டதற்கு. பயமில்லை என்று சொன்னார்.  நான் அதன் பிறகு  செக் தான் கொடுத்தேன்.  காண்ட்ராக்ட் காப்பியோ, என் பெயரில் மாற்ற  சொல்லவோ செய்தால்,  காண்ட்ராக்ட் காப்பிக்கு அந்த இந்தா என்றும்,  நம் பெயரில் ஷேர்  சர்டிபிகேட் வர  3, 4 மாதங்கள் ஆகியது, ஆகுமென்றும் சொல்வார்.  பெயர் மாற்றாமல் இருந்தால் தான், விலை ஏறிய உடன் விற்க வசதியாய் இருக்கு மென்றும் சொல்வார்.

சில காலத்திற்கு பிறகு, வாங்கி விற்றதில்  நான் அடைந்த இலாபத்தை விட, அவருக்கு கமிசனாக நான் கொடுத்தது தான் அதிகமாக இருந்தது, இந்நிலை என்னை அதிகமதிகம் படித்து விவரங்களை தெரிந்து கொள்ள தூண்டு கோளாய் அமைந்தது.  சில கம்பனிகளில் நீண்ட  காலத்திற்கு ( ? ) என்று  ஷேர்  வாங்கி, நேம் டிரான்ச்பரும்  செய்து வைத்திருந்தேன்.  அந்த நேரத்தில்  ரூ 18 க்கு  இம்பால் விற்றது ( இன்று ரூ 740 ),  ரெட்டிஸ் லேப்  ரூ 40 இல் இருந்து ரூ 120 கு போனது ( இன்று ரூ 4000 )  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  இவைகளை எல்லாம் வாங்குங்கள் என்று சொன்ன தாக ஞாபகம் இல்லை.  சொல்லி இருந்தால் வாங்கி இருப்பேனா ?   சந்தேகம் தான்  ( அறியாமை ). நம் ஷேர்ஐ விற்க சொன்னால்,  விற்க சொன்ன விலையில் இருந்து ரூ 1, 2 குறைவாக இருக்கும்.   பணம் செட்டில்மெண்ட் செய்வதற்கும் 15 நாட்களுக்கு மேலாகும். நாம்  ஷேர்  வாங்க  ஆர்டர் கொடுத்த மூன்றாவது நாள் பணம் கொடுக்க வேண்டும்.  இப்படி பல வகையிலும்  நிழலான விசயங்கள் நடந்தது. கிடைக்கின்ற ஷேர் சர்டிபிகேட் ஒரிஜினல் தானா ?,  விற்றவரின் கையெழுத்து சரிதானா ?, சரி இல்லை என்றால்  சர்டிபிகேட் கிடைக்க  5, 6  மாத மாகும்.  சில  மெய்ன் ப்ரோகர்கள்,  டுப்ளிகட்  ஷேர் புழக்கதில் விட்டதாகவும்  செய்திகள் புழங்கியது. நெறிப்படுத்தப்பட்ட சந்தை கிடையாது. இந்த நேரத்தில் தான், ஹர்ஷத் மேத்தா குழப்பம், சந்தை சரிந்தது,  அவரால் பல புதிய நெறி முறைகள் இயற்றப்பட்டு, முன்பைவிட பாதுகாப்பானதாய்  சந்தை ஆக்கப்பட்டது.   என்னுடைய  சப் புரோக்கர்,  எங்கே போனார் என்றே தெரியவில்லை,  என்னுடைய  பெயர் மாற்றா ஷேர்  களுடன் தான் !!!!!!!.  மேலே குறிப்பிட்ட இரண்டு பழமொழிக்கும்  இலக்கணமாய் ஆனேன்.

இதே காலகட்டதை  சேர்ந்தவர்களும்,  10, 15 ஆண்டுகள் முன்புள்ளவர்களும் கூட,   இன்று பல கோடி பெறுமானமுள்ள  ஷேர்களுடன்,  எனென்ன கம்பனி ஷேர் இருக்கிறது என்று உடனடியாக சொல்ல முடியாதவர்களாய், இன்றும்  மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  நேரடியாக  J R D டாட்டா, போன்ற முதல் தலைமுறை தொழில் அதிபர்களுடன், A G M இல் கலந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் நீண்ட கால முதலீட்டில் சம்பாதித்தவர்கள் உயிருடன் உதாரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!!!!!!!.  அவர்கள் செய்த ஒரே வேலை,  ஷேர் வாங்கி, பெயர் மாற்றி பத்திரமாக பரணில் வைத்தது தான். ஒருவரின் மனைவி டிவிடன்ட் செக்கை வங்கியில் டெபாசிட் செய்வது சிரமமாக இருக்கிறது என்று சொல்கிறார் !!!!!!!!!!!

10, 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பங்கு சந்தையின் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தேன்.  2008 சந்தையில்  என் இளைய சகோதரர் ரூ 15 லட்சத்தை இழந்தார்.  ஏன்  அவசரப்பட்டு விற்றாய் ? என்று தொடங்கி,  சந்தையின் பழைய நம்பிக்கையின்மையை போன்ற விஷயங்களெல்லாம் சரி செய்யப்பட்டு,  கம்ப்யுடர் மவுசின்  கிளிக்கிலேயே காரியங்களை நடத்திக்கொள்ளலாம் என்று அறிந்து மீண்டும் வந்திருக்கிறேன்.

யாருக்காவது நினைவுகளை கிளறியதா  ?  அப்படியானால் வாருங்கள் பணம் செய்வோம்




Friday, September 18, 2015

சிங்கப்பூரும், வளர்ந்துவரும் பங்குசந்தையும்

சிங்கபூரைப்பற்றி பலரும் பலவிசயங்கள் எழுதியிருக்கிறார்கள்,  அரை நூற்றாண்டுகளுக்கு முன்னாள், சதுப்பு நிலங்கள் நிறைந்த, சட்டத்துக்கு புறம்பான செயல்பாடு உடையவர்களின் புகலிடமாகவும்,  மலேசியாவால் வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட மீன்பிடி தீவானது,  உண்மையான் தேச பற்று கொண்ட மனிதனின் கரங்களில்  ISLAND NATION  என்று பெயர்பெற்று, வளர்ந்த தேசங்களுக்கு மேலான  GDP  வளர்ச்சி கொண்டு, விரைந்து வீறுநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.

தேசத்தந்தை, தன்னை தேர்ந்தெடுத்த  மக்களின் முன்பு,  இந்த தேசத்தை நான் எப்படி முன்னேற்ற போகிறேன் என்று கண்ணீர் கரைபுரண்டோட கேட்டது மட்டுமின்றி ,  கண்களை துடைத்துக்கொண்டு, உலகின் எல்லா நாடுகளையும் உதவி வேண்டி,  முதலீடு செய்ய வேண்டி கேட்டு பயணம் செய்தார்.  இஸ்ரேல் தான் முதலில் பச்சை கொடி காட்டியது.  

முஸ்லிம்கள் நிறைந்த நாட்டிற்கு, இஸ்ரேல உதவியா?  முதலீடா ?. என்று மூக்கில் விரல் வைத்த உலகத்திற்கு முன்னாள்,  சிங்கப்பூரின் வளர்ச்சியை பாருங்கள்.  இந்தியா போன்ற  பல மத மக்கள் நிறைந்த தீவு தான்.  எந்த  அடுக்குமாடி குடியிருப்பும்,  இதில் முஸ்லிம்கள், இதில் சீனர்கள், இன்னும் இதில் ஏனையற்றோர் என்ற பிரிவினை இல்லை !!!!. எல்லா இடங்களிலும் எல்லா ஜாதியினரும் இருப்பார்கள்.  தேசத்திற்கு தியாகம் செய்யப்போகிறேன், ஏழை எளியவர்களின் கண்ணீர் துடைக்கபோகிறேன் என்பவர்களுக்கு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை  தூர வைக்க தெரிந்திருக்க  வேண்டும்

தன்னுடைய மிக நெருங்கிய நண்பன் மற்றும் அமைச்சரவை சகா, குடும்பங்களும் மிக நெருக்கம்.   நாடு வளர்ந்து வருகிற நேரத்தில்,  மிகப்பெரிய பணமோசடி செய்தான், பாரபட்சம் பாராமல்  ஜெயிலில் அடைக்கப்பட்டான்,  நண்பனின் மனைவி வீட்டிற்கு வந்து  அழுது  புலம்பி,   மோசடி என்ற அவபெயரினால்,  சீன சமுதாயத்திலே  எங்களுக்கு இருக்கிற மானம், மரியாதை போய்விடும், உங்களுக்கு தெரியாதது அல்ல,  காப்பாற்றுங்கள்  என்று கேட்க,   எனக்கு நாட்டு முன்னேற்றம் தான் முக்கியம்,  தவறு செய்தவன் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்று தண்டித்த மாமனிதன் . அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு, மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கவில்லை  என்றது தான்.   ஆம்,  தெருவிற்கு ஒரு கட்சி,  மூலைக்கு மூலை மதுக்கடைகள்  நடத்த உரிமையில்லை, வீதிகளில் குப்பை, எச்சில், துப்ப தடை என்று எதெற்கெடுத்தாலும் கட்டுப்பாடு,  சுதந்திரம் என்றால் என்னவென்று விளக்கம் தெரியாதவர்களுக்கு  சுதந்திரம் கொடுத்தால், நம் தேசத்தில் இருப்பது போல்  குரங்கு கை பூமாலை தான்.  அளவான  சுதந்திரத்தின் பலன் இன்று,  வளர்ந்த நாடுகளே பொறாமைப்படும்  வாழ்க்கைதரம், எல்லோருக்கும்  சொந்தமான வீடுகள்.

இன்றும் கூட கம்யூனிஸ்ட் சீனாவில் மக்கள் பணத்தை கொள்ளைஅடித்து, வெளி நாடுகளுக்கு ஓடிப்போய் செட்டில் ஆனவர்களை தேடிப்பிடித்து,  இன்டர் போல் மூலம் பிடித்து கொண்டுபோய், மரண தண்டனை விதிக்கிறார்கள். மரண தண்டனை கொடுத்தால் இனி எவனும் அப்படி செய்வானா ?. கொள்ளைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் நாடு வீதியில் வைத்து தலையை  சீவுகிறார்கள்  அரபு நாடுகளில்,   இப்படி இருந்தால் கட்டிய மனைவியை திரும்பி பார்க்கவே, யோசித்து தான் பார்ப்பார்கள்.   நல்லது செய்ய மனதில் உறுதி வேண்டும். அதைவிட மிகவும் தெளிவான சிந்தனை வேண்டும்.   நமது நாட்டில் உள்ள நிலைமையை பாருங்கள்,  எத்தனை வருடங்கள் பழமையான  ஊழல் ஆனாலும், புதிய பொருப்பாளிகளுக்கு பங்குகொடுத்துவிட்டால், எல்லாம் சரியாகி விடும்.

இன்றைக்கும் குடிநீர் மலேசியாவில் இருந்து தான் வருகிறது,  நாளை என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது, தண்ணீர் கிடைக்காவிட்டால் என்னசெய்வது என்ற தொலை நோக்கு பார்வையால் ,  சிங்கப்பூரில் உபயோகமாகிற நீர் அனைத்தும் ரிசைக்ளிங் செய்யப்படுகிறது.  குடிக்க உபயோகிக்கும் தண்ணீரும் ரிசைக்கில் செய்யப்பட்டது  தான் !!!!!.  சிங்கபூர் தண்ணீரை குடிக்கும் எல்லோரும் சிங்கப்பூர் தண்ணீருக்கு ஒரு தனி சுவைதான் என்று சொல்கிறார்கள் !!!!!!!.  நமது நாட்டில் இருக்கிற ஒவ்வொரு அரசியல்வாதியும் பல ஆயிரம் கோடிகளை கொள்ளை அடித்து வைத்து இருக்கிறார்கள்,  ஒவ்வொருவரிடமும் உள்ளதில்  ஒரு சிறு பகுதியை பறிமுதல் செய்து,  நாட்டின் நதிகளை இணைத்து,  போக்குவரத்திற்கும், பாசனத்திற்கும் பயன் படுத்தலாமே ?  அப்படிப்பட்ட தேச தலைவன்/தலைவி  இந்தியாவில்      உண்டா ?  ஒருவேளை  எமெர்ஜென்சி காலத்து இந்திரா காந்தி போன்ற தைரியமிக்க தலைவி/தலைவன்  தோன்றினால் நடக்குமோ என்னவோ ?   எமெர்ஜென்சி  காலத்தில் நாட்டில் இருந்த  ஒழுங்கு,  வேறு எக்காலத்திலும் இருந்ததில்லை.   சாதாரண மக்கள் வாழ்க்கை  சீராய், கவலை இன்றி சென்று கொண்டிருந்தது ,  பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லாம், மொள்ள மாரியும், முடிச்சவிக்கியும், ஒட்டு பொறுக்கிகளும் தான்.

சிங்கப்பூரில் இன்றைக்கு ஒரு சட்டம் இருக்கும்,  சிலநாட்களில் அதுவே தலைகீழாக மாறி இருக்கும்.  யாராவது பழைய சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன் படுத்தி சில்மிஷம் செய்திருப்பார்கள், உடனடியாக ஓட்டையை அடைத்து மாற்று சட்டம் வந்து விடும்.  தெளிந்த சிந்தனை, தேசனலனில் அதீத அக்கறை கொண்ட நிர்வாகிகள். கொண்ட நாடு

மிக சிறந்த கட்டுக்கோப்புள்ள, வளர்நிலையில் உள்ள பங்கு சந்தை,  தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு பணம் பண்ண நல்ல வாய்ப்புள்ள இடம். தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள் பலர், சிங்கப்பூர் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் இந்தியாவை விட  பயமின்றி துணிந்து ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்யலாம்.

இந்த தளத்தில் பங்கு சந்தை பற்றி சொல்லப்படுகிற செய்திகள். சிங்கப்பூர் சந்தைக்கும்  பொருந்தும்,  அவ்வப்போது சிங்கப்பூர் சந்தை பற்றிய சிறப்பான செய்திகளும் இடம்பெறும். தமிழும் புழங்குவதால்,  சந்தை பற்றிய தகவல்கள் வரும் பத்திரிகைகளை படித்தும் தெரிந்து கொள்ளலாம் 

வளர, பணம் செய்ய வாழ்த்துக்கள்.

ஷேர் மார்கட், பணம்,முதலீடு, பாதுகாப்பு, வரலாறு

Thursday, September 10, 2015

திருவிளையாடலும், ஐரோப்பிய முஸ்லிம் அடைக்கலமும்

அதிகாரத்திமிர்  தலைக்கேறிவிட்டால், தன்னை வளர விட்டு சகித்துக்கொண்டிருந்த தன் சொந்த மக்களையே கொடுமைப்படுத்தி, சொந்த நாட்டையும் சொத்து சுகங்களையும் விட்டு உயிருக்கு பயந்து ஓடும் நிலைமைக்கு  உருவாக்கி விடும் யதேச்சிகாரியின் கோர தாண்டவத்தை சிரியாவில் கண்டுகொண்டிருக்கிறோம்.

அக்கம் பக்கத்தில் இருக்கிற நாடுகள் சில ஆயிரங்களில் அகதிகளை ஏற்றுக்கொண்டாலும், பல அரபு நாடுகள்  சில ஆயிரம் கோடி பண உதவி செய்தாலும், அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை. ஏற்றுக்கொண்டால் பின்னால் திருப்பி அனுப்புவது என்பது எளிதல்ல  மட்டுமின்றி,  இவர்களின் காரணத்தால் தம் மக்களும்,  கூடுதல் உரிமை வேண்டி போராட தொடங்கினால்,  அதிகார பீடங்களில் இருப்பவர்களின் சொகுசு வாழ்க்கை பறிபோய் விடுமே என்ற உள் உதறல் தான்.

சிறிது, சிறிதாக பல தேசத்து மக்கள்  உயிரை துச்சமாய் மதித்து, பயங்கரங்கள் நிறைந்த வழியாய் இருந்தாலும்,  கடல் பயணம் செய்து  தப்பி பிழைத்து கிரீசையோ, இத்தாலியையோ  அடைந்து விட்டால், அங்கிருந்து  ஐரோப்பிய  யூனியனுக்குள் நுழைவது எளிதென்று  எண்ணி பயணம் செல்வது   புதிதென்று  இல்லாவிட்டாலும்,   சமீப காலங்களில்  மக்கள் வரத்து மிகவும்  அதிகமாகி விட்டது.   அதிலும் சிரியரகளின்  எண்ணிக்கை மிக  அதிக மாகி விட்டது. பல அகதிகள் கண்ணீர் மல்க சொல்லும் கதைகள் கேட்க பரிதாபமாய் இருக்கின்றன.  இந்த  சிரிய அகதிகள் கூட்டத்துடன்,  ஆப்கானிஸ்தான,  ஆப்ரிக்க, பாகிஸ்தானி இன்னும் பல தேசத்து மக்களும் அடக்கம்,  இவர்கள் அகதிகள் என்பதைவிட, பணப்பலன் கருதி, பிழைக்க வழிதேடி வந்தவர்களாகவே தெரிகிறது. சிரிய மக்கள் பால்குடி பச்சிளம் குழந்தைகளை ஏந்தி வருவதை காணும் பொது. நெஞ்சை பிழிவது போலிருக்கிறது,  இம்மாதியான மக்களின் பேட்டி,  பணப்பலன்  என்பதைவிட உயிரச்சம் என்பதையே பறைசாற்றுவதாய் இருக்கிறது.

இத்தாலிய, கிரீசு அரசுகள்  வருகின்ற அகதிகளுக்கு போதுமான அளவிற்கு கழிப்பறைவசதிகளும், உணவு தங்குமிட வசதிகளும் செய்து தரமுடியாத தம் நிலைமையை எடுத்துக்கூறி, மற்ற ஐரோப்பிய கூட்டணி நாடுகளை சுமையை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொண்டும், அவைகள்  கண்டும் காணாமல் இருந்தன.  ஐரோப்பிய யூனியன் சட்டங்கள், இத்தாலிய, கிரீசு அரசுகளின் வேண்டுகோளுக்கு  எதிராக இருந்தாலும்,  மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், மனிதாபிமான அடிப்படையிலும்,  நிலைமையின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு  ஜெர்மனி தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக சொல்லி ஏற்றுக்கொண்டது.

இதில் மிகவும் சிலாகிக்கவேண்டிய விஷயம் என்ன வென்றால், ஜெர்மானிய அரசு மட்டுமின்றி, ஜெர்மன் மக்கள் பலரும் தத்தமது வீடுகளிலும் அடைக்கலம் கொடுப்பது தான்.  இம்மக்களின்  முந்திய தலைமுறையினரா, பல லட்சம் யூத இனமக்களை கொத்துக்கொத்தாய் கொன்று ஒழித்தார்கள் என்று !!!.  இன்றும் கூட இவர்களிடையே,  அக்கொடுமை யில்  பங்கேற்ற ஓரிருவர் வேறுபெயர்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் !!.  பிடிபட்ட சிலரின் வாக்கு மூலங்கள்,  பொது மக்களும்  ஈடுபாட்டோடு  அக்கொடுமைகளை சகித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை உறுதிபடுத்துவனபோல் இருக்கிறது.   இந்த இடத்தில் ஒரு நெருடலான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும்.

ஆதரவற்ற யூத மக்களுக்கு உலகமே ஒன்று திரண்டு, அதிகார பீடத்தில் இருந்த ஹிட்லரை கொன்றொழித்து,  யூதர்கலுக்கென்று  ஒரு  தேசத்தையும், அரபு நாடுகளிடம் இருந்து பிடுங்கி,  உருவாக்கி  கொடுத்தன. உலகெங்கும் அடைக்கலமும் கொடுத்து, பயமின்றி வளர வாழ வகை செய்து கொடுத்தன. இன்று,  அன்று  ஹிட்லரிடம் இருந்தது போன்று அதிகாரம்,  யூதர்களிடம், இஸ்ரேலிடம்.   இஸ்ரேல் உருவான காலத்தில் இருந்து இன்றுவரை, தினமும் சிறுவர், வயோதிகர், பெண்கள் என்று பாராமல் பாலஸ்தீனியர்களை கொன்று ஒழித்து கொண்டிருக்கிறார்கள் !!!!.  கணக்கிட்டால்  ஹிட்லர் கொன்றதை விட, இவர்கள் கூடுதலாக கொன்றிருப்பார்கள் போலிருக்கிறது.  சில நேரங்களில், இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களுக்கு செய்யும்  கொடுமைகளை பார்க்கும் போது,  ஹிட்லர் செய்தது சரிதான் என்று எண்ணத்தோன்றுகிறது.!!!!!   இறைவனின் திருவிளையாடல் இப்படித்தான் உடனடியாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்  போலிருக்கிறது !!!!!!!

முஸ்லிம்களின் இறை  நம்பிக்கை,  என்நிலைமையிலும் மார்க்க நெறிமுறைகளை பேணும் உறுத்திப்பாடு உலகறிந்தது.  அவர்களின் உறுதிப்பாடே சில பெரிய  ஐரோப்பிய  ஊடகவியலார்களின் மத மாற்றத்திற்கு காரணமாய் இருந்திருக்கிறது. ஒருபுறம் கலாச்சார அழிவின் விளிம்பில் இருக்கிற ஜெர்மனி,  முஸ்லிம்களுக்கு  அடைக்கலம் கொடுக்கிறது.  ஜெர்மனியின் பொருளாதாரமோ,  மற்ற  ஐரோப்பிய நாடுகள்  ஜெர்மனியின் சொல்லை செவிசாய்த்து கேட்குமளவில் வைத்திருக்கிறது.  ஒரு சில  முஸ்லிம் அகதிகள்,  ஜெர்மனி திருப்பி அனுப்பிவிடாமல் இருப்பதற்காக  கிறித்துவத்திற்கு மாறி இருக்கிறார்கள், காரணம் இஸ்லாமிய நாடுகளில்  கிறித்துவத்திற்கு மாறினால் மரண தண்டனை கிடைக்கும் என்பதை காரணம் சொல்லி அடைக்கலம் பெறுவதற்காக.  அவர்களை கிருத்துவத்திற்கு மாற்றிய பாதிரியார்,  மதம் மாறியவர்கள், முதல் முறைக்கு பிறகு சர்ச்சுக்கு வருவதே இல்லை என்றும், தான் அதைப்பற்றி கவலை படுவதில்லை என்றும் தெரிவிக்கிறார்.  இந்நிகழ்ச்சிகளின் பின்னணியோ என்னவோ, ஜெர்மன் அதிபர்,  அகதிகளை திருப்பி அனுப்ப மாட்டோம் என்பதாக உறுதி கூறுகிறார். இந்த நிகழ்வுகள் உலகத்தின் என்ன மாற்றத்திற்கு முன்னோட்டமோ ?   எதுவாய் இருந்தாலும் நலமே நடக்கட்டும் 

இறைவா !,  இதயங்களின் அதிபதியே !!,  சர்வத்தின் மீதும் ஆளுமை உடையவனே !!!,  உனது  திருவிளையாடல்கள் யாராலும் அறிந்து கொள்ள முடியாது, ரட்சகனே உலக மக்களையெல்லாம் நன்மையின் பக்கம் நடத்து  வாயாக என்று நானும் வேண்டி, உங்களையும் வேண்ட வேண்டி கொள்கிறேன்.
 

Friday, September 4, 2015

ஷேர் மார்கட்டில் பணம் பண்ண பொன்னான வாய்ப்பு !!!!

சோவியத்  யூனியன்  பிளவு படுவதற்கு முன்புள்ள காலத்தில் நடக்கும்     கம்யூனிஸ்ட்  கூட்டங்களுக்கு சென்றால், அடிக்கடி ரஷ்யாவை பார், அமெரிக்காவை பார் என்பதாக  மேற்கோள் காட்டி பேசுவார்கள்.  இங்கு நாமும் கூட அடிக்கடி, உலகில் அதிகம் பேசப்படும் தலைசிறந்த  முதலீட்டு மேதைகள் அமெரிக்காவில் இருந்து வருவதால், அவர்களை பற்றியும்,  அமெரிக்க பங்கு சந்தையை மேற்கோள் காட்டியுமே  பேசக்கூடியவர்களாக  இருக்கிறோம். காரணம்  ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக  அங்கே பங்கு சந்தைகள் இருப்பதாலும்,  அவற்றின்  தினசரி நடவடிக்கைகள் பலதரப்பட்ட சந்தை நிபுணர்களால் பதிவு செய்யப்பட்டு இருப்பதுமே ஆகும்

ஷேர் மார்க்கட்டில் வியாபாரம்  செய்தவர்கள், ஒருவொருக்கொருவர் மேம்பட்டவராக  ஆகவேண்டும் என்பதற்காக,  புதிய புதிய வழிமுறைகளை  உருவாக்கினார்கள்.  தன்  சொந்த முதலீட்டை போட்டு மற்றவர்களை விட மேம்பட்ட கூடுதலான லாபத்தை காண்பிக்கும் போது,  சாதாரண முதலீட்டாளர்கள் அவர்களிடம் தம் பணத்தையும் கொடுத்து நிர்வகிக்க சொல்லுவார்கள். இதன் மூலம் நிர்வாகியும் முதலீட்டாளரும்  நல்ல முறையில் லாபம் பார்க்க முடிந்தது. 1930 களில்  இம்மாதிரியான வழிமுறைகளை  கோர்வைப்படுத்தி,  தானும் ஒரு நிதி நிறுவனத்தை நிர்வகித்துக்கொண்டே,  அம்முறைகளை  பல்கலைகழகங்களில் பாடமாக நடத்தியவர் தான்  பெஞ்சமின் கிரஹாம்.  இவரிடம்  பாடம் பயின்று,  அவரது நிதி நிறுவனத்திலும் பயிற்சியாளராய் இருந்தவர் தான்,   இன்று பெரும் புகழ் பெற்று இருக்கும்  வாறன் பப்பே..  இன்றைக்கும்  கிரஹாம் எழுதிய   THE INTELLIGENT INVESTOR ,  SECURITY ANALYSIS  என்ற இரு நூற்களும்  நிதி நிபுணர்களின்  வேத புத்தகங்களாக கருதப்படுகிறது. மேல் நாட்டாரின் நல்ல பழக்கங்களில் ஒன்று, தம் அனுபவத்தை, அறிவை பிறரிடம் பகிர்ந்து அதனை மேலும் மேம்படுத்தி எல்லோரும் பயன் பட்டுக்கொள்வது.  இப்படித்தான் பல்வேறு துறைகளும் இன்றைய  அசுர வளர்ச்சியை அடைந்து இருக்கின்றன.

நமது நாட்டிலும்  75 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து  தலைமுறையாக பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள்.  டாடா, பிர்லா  போன்றவர்கள் கம்பனியை நிர்வாகம் செய்யும் காலத்திலேயே,  கம்பனியின் வருடாந்திர 
( AGM ) மீட்டிங்களுக்கு 15 வயதில் தகப்பனாருடன் சென்று, பெரியவர்களால் ஓரத்தில் உட்கார்ந்து கவனி  என்று சொல்லப்பட்ட  நாலாம் தலைமுறை காரார்  இன்றும் உயிருடன் இருக்கிறார்.  டாடா கம்பனி குழுமத்தின் அத்துணை பங்குகளும் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கில் இவரிடம் இருக்கிறது.  இவர் இதுவரை ஷேர்களை விற்றதே இல்லை என்கிறார்.

பெண்பார்த்து பிடித்துவிட்டது என்று சொல்லி,  வரப்போகும் மருமகளுக்கு GRASIM INDUSTRIES,   அன்றைக்கு  ஜவுளி கம்பனி, அதன் 1000 ஷேர்களை  பரிசாக மாமனார் கொடுக்க,  அதிலிருந்து ஆர்வம் ஏற்பட்டு  இன்று 80 வயதாகும் அம்மையார், பல கோடி ரூபாய் மதிப்புள்ள  பல்வேறு கம்பனிகளின் ஷேர் வைத்திருக்கிறார்.  இவர்  பங்கு கொள்ளாத AGM  கூட்டங்களே இல்லை. 1975 ஆம் ஆண்டு  வீடு வாங்குவதற்காக விற்றது தவிர வேறு எதற்காகவும் ஷேர் விற்றதில்லை  என்கிறார். 

சமீபத்தில்  காலமான  சந்திரகாந்த் சம்பத் என்பவர்,  1950 வாக்கில் பங்கு சந்தையில் முதலீடு  தொடங்கியவர்.  இன்றைக்கு  மும்பை சந்தையில் முன்னணி  புரோக்கர் சிலர் உருவாக காரணமாக இருந்தவர்.  இவரும் பலகோடி ரூபாய் சம்பாதித்து  இருக்கிறார்.  இவரை இந்தியாவின்  வாரன் பபே என்பதாக சொல்கிறார்கள். இவரது அறையில்  முதலீடு சம்பந்தமான நூற்களும், இதழ்களும்  நிரம்பி இருக்குமாம்,  இவர் விஞ்ஞான முறைப்படி முதலீடு செய்தவராக அறியப்படிகிறார்.

நமது திருச்சியில்  பெண் சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஒருவர் குறுகிய காலத்தில் நாலரை கோடி ரூபாய் சம்பாதித்ததாக  சொல்கிறார்.

சிறு முதலீட்டாளர்களின்  நலனுக்கு எதிரான விசயங்கள் பெரிய கம்பனிகளில் நடக்கும் போது அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  சமீப காலங்களில்  அமெரிக்காவில்,  பல சிறு முதலீட்டாளர்களின் ஆதரவுடன், நிர்வாகத்தின் முடிவுகளை தட்டிக்கேட்க கூடிய  முதலீட்டளர்கள் உருவாகி இருக்கிறார்கள்  இவர்களை  INVESTOR ACTIVIST  என்பதாக அழைக்கிறார்கள். இம்மாதிரியான் முயற்சிகளை  மேற்சொன்ன முதல் மூவரும் இந்தியாவில் செய்திருக்கிறார்கள் !!!!!!

இவர்களைப்பற்றிய சேதி எத்தனை பேருக்கு தெரியும் ?.  சந்தை விவரம் தெரிந்த இவர்கள் எத்துனை பேர் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்கள் ?
 நம்மவர்கள் இப்படித்தான்.  ஆய கலைகள்  64 கிலும்  பாண்டித்தியம் பெற்றவர்கள், பிறருக்கு சொல்லாமல்  செத்து போனதால்,  பண்டைய  நாகரிகத்தின்  அறிவு திறமைகள் பின் சந்ததியினருக்கு கிடைக்காமலேயே போய்  விட்டது.

பங்குகள் ஒரு நிலை இன்றி ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. நாளை என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதற்கு முன்பு ஒரு பதிவு, சீனாவின் சந்தை  சரிவை தொடர்ந்து, இந்தியாவில்  என்ன நடக்குமோ என்று இந்த தளத்தில் வந்திருந்தது   CLICK HERE பாருங்கள். அமெரிக்க சந்தை இறங்க தொடங்குவதற்கு சரியாக 15 நாட்களுக்கு முன்பு  வாரன் பப்பே   37 பில்லியன்   டாலருக்கு  பிரிசிசன் காஸ்ட் பார்ட்ஸ்  என்ற கம்பனியை  ஒரு ஷேர்  $ 235 என்ற கணக்கில் வாங்கினார்.  இன்றைய தேதியில் அந்த பங்கின் விலை $ 225  அதுவும் போனவாரம் 220 இல் இருந்தது. உலக புகழ் பெற்ற முதலீட்டு மேதை,  முன்பே தெரிந்து இருந்தால் இப்படி வாங்குவாரா?.  

ஒரு விஷயம் என்னால் மிக நிச்சயமாக சொல்ல முடியும்,  சந்தை ஏறிக்கொண்டே தான் இருக்கும், இறங்கவே இறங்காது, ஏறிக்கொண்டே தான் இருக்கும். இன்றைக்கு அல்ல, நாளைக்கு அல்ல, அடுத்த மாதம் அல்ல,  ஏன் அடுத்த வருசமும் அல்ல  ஆனால் ஏறிக்கொண்டே தான் இருக்கும். என்ன கிறுக்கு தனமா இருக்குன்னு நினைக்கிறீர்களா?.

நம்ம சென்செக்ஸ் மாதிரி  டொவ்ஜோன்ஸ் ஒன்னு கேள்விப்பட்டு இருப்பீங்க, அதை கிட்ட தட்ட  1900 திலிருந்து 2012 வரை  நடந்த ஏற்ற இறக்கத்தை  கிராப் போட்டு இருக்காங்க,  அதை பாருங்க 
 https://jlcollinsnh.files.wordpress.com/2012/04/djia1900-2012.png
ஒன்னும் புரியவில்லை என்று கவலைப்படாதீர்கள் 
கீழே இருப்பதெல்லாம் 1901, 1902.....2012 என்ற வருசங்கள். வலது கை பக்கம் இருப்பதெல்லாம்  இந்த இன்டெக்ஸ் ஏறிய  அளவுகள் 62.5 இல் இருந்து 13500 வரை பல்வேறு வருடங்களில்.


உதாரணத்திற்கு பாருங்கள்,  ஒரு வருடத்தில் 381.17 இருந்தது, அடுத்தடுத்த வருடத்தில் 50.16 கு போய் விட்டது,  அதாவது கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு. அடுத்து 14164 லிருந்து  சரி பாதியாக 6547.5 ஆகி இருக்கிறது,  எவ்வளவு பேர் நிம்மதி இழந்து இருப்பார்கள், ஹார்ட் அட்டாக் கால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.  தற்கொலை கூட செய்திருப்பார்கள் என்று யோசனை செய்து பாருங்கள்.

சார்ட்டை  கவனமாக பார்த்தால், எவ்வளவு தான் விழுந்தாலும் தொடர்ந்து ஏறிக்கொண்டே தான் இருந்திருக்கிறது என்பது விளங்கும். ஆனால் ஏற்றம் என்பது ஒரே சீராக இருப்பதில்லை, மழை காலத்தில் செம்மண் ரோட்டில் மாட்டு வண்டியில் பயணம் செய்வது போல்  தான். இந்த சார்ட்டை  காண்பித்ததின் நோக்கம்,  இருண்ட குகைக்குள் தனியே போகும் போது, வவ்வால்கள் இருக்கும், சின்ன சின்ன பள்ளங்கள் இருக்கும், ஆங்காங்கே கற்கள் துருத்திக்கொண்டிருக்கும் என்று சொல்லி அனுப்பினால், இப்படிப்பட்ட ஆபத்துக்களை எல்லாம் எதிர்  பார்த்து செல்பவர், அவை எதிர்ப்படும் போது எப்படி பயப்படாமல் எச்சரிக்கையாக இருப்பாரோ? அப்படி இருக்கத்தான்.

இம்மாதிரியான காலங்கள் தான்,   "  எல்லோரும் பயந்து நடுங்கும் போது  பேராசை கொள்ளுங்கள், எல்லோரும் பேராசை படும்போது பயந்து கொள்ளுங்கள்  "  என்று  வாரன் பப்பே சொன்னது. உண்மையில் இம்மாதிரியான வாய்ப்புக்கள் அடிக்கடி கிடைக்காது.  நல்ல கம்பனிகள்  குறைந்த விலையில் கிடைக்கும்  காலமிது.

சிறுக சிறுக வாங்குங்கள்,  25 %,  30 %  குறைந்து இருக்கும் போது சிறிதும், அப்படியே இன்னும் குறையும் போது  சிறிதுமாக வாங்குங்கள்.  ஒரேயடியாக குறையும் என்று இருக்காதீர்கள்.

அமெரிக்க மார்கட் சார்ட் தானே என்று சொல்பவர்களுககாகத்தான், இந்திய முதலீட்டாளர்கள் பற்றி அறிமுக படுத்தியது,  பல மாமாங்க காலங்கள் விற்காமல் இருந்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருப்பார்கள்.  மக்களே  உங்கள் சமத்து. வாழ்த்துக்கள் 












Tuesday, August 25, 2015

வாறன் பபேயும் நம்மூர் மார்வாரிகளும்.............

 ஒரு தொழிலை தொடங்கும் போது,  நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும், தொடங்கி  நடத்தும்  போது,  உண்டாகுகின்ற தொடர்புகளை,  தகுதிக்கு  தக உருவாக்கிக் கொள்ளும் போது,  நம்மையும், நம் தொழிலையும் செம்மை படுத்திக்கொள்ளவும் பிற தொழில் வாய்ப்புக்களை இனங்கண்டு கொள்ளவும்  முடியும்.   பிறரிடம் வேலை செய்பவர்களை காட்டிலும்,  தொழில் செய்பவர்களுக்கே  முன்னேற்ற பாதை  எளிதாய் அமையும்.   படிப்பு என்பது  நமது  செயல் பாடுகளை செம்மையாக்கி தரும் ஒரு சாதனம், கருவி  தானே தவிர,  தொழில் செய்ய தேவையே   இல்லை,  அது  இருந்தால் தான் முடியும் என்பதில்லை.

ராஜஸ்தானத்து மக்களிடம்,  அதுதாங்க நாம் சேட் என்றும் மார்வாடி என்று அழைக்கிறோமே,  அவர்கள் தான்.   வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள், தொழில் செய்ய நினைப்பவர்கள், எவ்வாறெல்லாம்  தொழில் செய்து  முன்னேறலாம், தொழில் செய்யலாம்,  உபரி, கூடுதல்  வருமானம் பெற பல தரப்பட்ட வழிகள் என்று, கற்றுக்கொள்ள வேண்டிய பல விசயங்கள் இருக்கின்றன.

வறண்ட பாலைவன பூமி,  அதில் மார்வார் என்ற மலை பகுதியில் இருந்து வந்து,
இந்தியா முழுதும்  பரவி  தொழில் செய்து வருகிறார்கள்.   ஹிந்தி பேசா மாநிலங்கள் இவர்களுக்கு  சொர்க்கபுரி.   சிறிதும், பெரிதுமான  தமிழக  நகரங்களில் எல்லாம் பரவி, ஆங்காங்கே  மொத்த வியாபார கடை வீதிகளில்,   குட்டி குடியிருப்புக்களை  உருவாக்கிக்கொண்டு  வாழ்ந்து,  தொழில் செய்கின்ற இவர்கள், வரும்போது இருக்கும்  நிலைமையை கண்டிருக்கிறீர்களா ?

ஒட்டி உலர்ந்த கன்னங்கள்,  தார்பாச்சி வேஷ்டி, ஜுப்பா,  மஞ்சள் பை, கமண்டலம், கெண்டிசெம்பு  இத்துடன் தான் வருவார்கள்.  சிறிய ஊர்களில்  வீடு வாடகைக்கு பிடிப்பார்கள்.  ரூ  4000, ரூ 5000 முதலீட்டில் அடகு கடை வைப்பார்கள். தொடக்க காலங்களில்  தங்க நகைகளை அடகு பிடிக்க மாட்டார்கள்.   எதையெல்லாம் விற்று காசாக்க முடியுமோ அவைகளை எல்லாம்  அடமானமாக பெற்று கடன் கொடுப்பார்கள்,  மாதத்திற்கு  4 வட்டி (வருசத்திற்கு 48% !!!!! ), 5 வட்டி (வருசத்திற்கு 60%!!!! ).   அண்டா.  குண்டா,  கூலி வேலை செய்வோரின்  கைக்கருவிகள் என்று லிஸ்ட் நீளும்.  கொஞ்ச நாட்களில்  அக்கம் பக்கத்தில் உள்ளோர்,  வீதி ஓரங்களில் குடியிருப்போர்,  வீட்டு வாசலுக்கு நீர் தெளித்து, சாணமிட்டு  உதவி செய்வர்.  வீட்டு காரர்/ தொழில் முனைவர், கடையை திறக்கு  முன்பு   கற்பூரம் கொளுத்தி மணி அடித்து சாமி கும்பிட்டு,  யாரும் அடகு வைத்ததை திருப்ப கூடாது  என்று மனமுருகி வேண்டிக்கொண்டு  ( இது நகைசுவைக்காக எழுதப்பட்டதன்று, முற்றிலும் உண்மை ), திருநீறு  குங்குமதத்துடன்  பிரசாத்தை  எல்லோருக்கும் கொடுப்பார்.  நம் மக்கள் கள்ளம் கபடமின்றி பக்தி சிரத்தையுடன் வாங்கிகொண்டு, தாம் அடகுவைத்த அண்டா குண்டா  எல்லாவற்றையும் மறந்து வட்டியில் மூழ்க விட்டுவிடுவர்.

அடகு சீட்டில் பின்புறம்  சிறிய எழுத்தில் ஆங்கிலத்தில், அடகு ஒப்பந்த சரத்துக்கள் எழுதப்படிருக்கும், சம்மந்தப்பட்ட இருவருக்குமே படித்து புரிந்து கொள்ளுமளவிற்கு ஆங்கிலம் தெரியாது.  அடகு பிடிப்பவருக்கு எத்தனையாவது மாதத்தில் திருப்பாவிட்டால், பொருள் அவரைசேர்ந்தது  ஆகிவிடும் என்பது மட்டும் தெரியும். தவணை காலம் முடிந்த பொருட்களை  விற்று காசாக்கி திரும்ப  திரும்ப அதிலேயே போட்டு  6 மாதம்,  ஒரு வருடத்தில் பொருளாதார ரீதியில்  ஒரு  ஸ்திர நிலைக்கு வந்துவிடுவார். மேலும் முதலீடு தேவைபட்டால், அவர்களது சமுதாய சங்கங்களில் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று கொள்ளுவார்.

ஓரிரு வருடங்களில் நடையுடைகளில் ஒருமாற்றம், தெளிவு, கம்பீரம்  வந்து விடும்.  ஐந்து விரல்களிலும் மோதிரம் (வட்டியில் மூழ்கியதுதான் ),   கழுத்தில் கனமான முறுக்கு செயினில்  தொங்கும்  புலிப்பல் டாலர் இத்தியாதிகளுடன் இருக்க தொடங்குவார். சிறுக சிறுக தங்க நகைகளையும் அடகு பிடிக்க தொடங்குவார்.  இடுகல், மரத்தடி, தெருமுனை  என்று வஞ்சனை இல்லாமல் எல்லா வகை கோயில்களுக்கும்,  அப்பப்ப பொரிகடலை,  பூஜைக்கு பணம் கொடுப்பார். கோயில் கும்பாபிஷேகம். குடமுழுக்கு முன்னின்று நடத்துவார்.


சில காலங்களில்  இவரின் இந்த தான தரும காரியங்களினால், நம்மவர்க்கு அவர்மேல் மரியாதை மேலோங்கி,  ரெம்ப  பவ்வியமாய்  " சேட் " (முதலாளி)என்று அழைக்க தொடங்குவர்,  நம்மவருக்கு  அதன் அர்த்தம் தெரியாவிட்டாலும், அவருக்கு தெரிவதால்  அவர்  " இன்னாப்பா " ,  " அவன் ",   " இவன் "
என்று  சகலரையும் ஏக வசனத்தில் அழைத்து  பேசி சந்தோஷ படுத்துவார். நம்மவர்களுக்கு  சேட்டு  தமிழ் பேசுகிறார் என்று  ரெம்ம்ம்ம்ம்ப பெருமை !!!!!

இதற்கு பின்னாலே தான் இவர்களது திறமை வெளிப்பட ஆரம்பிக்கும், நம்மவர்களுக்கு  படிப்பினைகள் இருக்கிறது என்று சொன்னால் கூட
மிகையாகாது.  நம்மவர்கள் கொடுக்கின்ற அங்கொன்றும் இங்கொன்றுமான தகவல்களை  பயன்படுத்தி தேவைகளை  இனங்கண்டு தொழில் தொடங்கி,   தமக்கென தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கி, ஒரு ஞாயமான அளவினான இந்திய, தமிழக , பொருளாதாரத்தை தம் கைகளில் வைத்துள்ளனர். எப்படியென்று பாருங்கள்.  

காசுத்தேவை யாருக்குத்தான் இல்லை,  இவர்கள்  அடகு பிடிக்காத பொருட்கள் என்பதே இல்லை என்பதால் பலதரப்பட்ட தொழில் செய்கிற மக்கள் இவர்களிடம் வருவர். அவர்களிடம் பேச்சுகொடுத்தும், வியாபார பகுதிகளை சுற்றி வந்தும் வியாபாரிகளுக்கு தேவையான பொருட்களை  இனங்கண்டு ,  பம்பாய்,  கல்கத்தா போன்ற ஊர்களில் இருந்து வரவழைத்து வியாபாரிகளுக்கு மட்டும் சப்ளை செய்வார்கள. இதில் நாம் மிக முக்கியமாக  புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்,  ஒரு குறிப்பிட்ட காலம் வரை  உள்ளூர் வியாபாரிகளுக்கு போட்டியாக  எந்த வியாபாரமும்  செய்ய மாட்டார்கள்.

எடுத்துக்காட்டாக,  கொலுசு உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வியாபாரிக்கு, வெள்ளி, வெள்ளி உருக்க தேவைப்படும் சாதனங்கள், கெமிகல் ஆகியவைகளை சப்ளை செய்வார்கள். பிளாஸ்டிக்  சாமான்கள் உற்பத்தி செய்வோருக்கு அவர்களுக்கு தேவையான  மூலப்பொருள்கள் வாங்கி கொடுப்பார்கள். நம் வியாபாரிகளுக்கு இருக்கின்ற மிகப்பெரிய இடைஞ்சல் என்றால் அது பாஷை தான். பெரும் பெரும்  உற்பத்தி தொழிற்சாலைகளும்,  மொத்த வியாபாரிகளும், பெரும்பாலும் ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் இருப்பதால், இவர்களுக்கு அது சாதகமாய் விட்டது.
இவர்கள்  மிகக்குறைந்த   அளவில் உடல் உழைப்பு தேவைப்படுகிற வேலைகளில் தான்  ஈடுபடுவார்கள். " நாம் நோகாமல் நுங்கு எடுத்தல் "என்று சொல்லுவோமே அப்படி.  உண்மையில் இதுதான் " வொர்க் ஸ்மார்ட் " என்பது.  இப்படி உற்பத்தியாளர்களுடன்  உள்ள வியாபார தொடர்பு காரணமாக, இன்னும் அதிகமான வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக்கொள்கிற  நுணுக்கத்தை பாருங்கள்.
ஒரே இடத்தில் அமர்ந்து, பல உபரி வருமான வழிகளை உருவாக்க மற்றுமொரு காரணி, வட்டித்தொழிலின் மூலம் வருமானம் நிரந்தரமாக வரத்தொடங்கி விட்டாலும்,  ஒரு அளவிற்கு மேல் அடகு பிடிக்க முடிவதில்லை,  கைகளில் பணகையிருப்பு  கூடுதலாக தொடங்கு கிறது.  இந்த "சும்மா" இருக்கும் தொகையை எப்படி உபயோகிக்கிறார்கள் பாருங்கள்.

பொருள் உற்பத்தி செய்பவர்கள்,  சீசனல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், சீசன் நெருங்க நெருங்க, ஆர்டர்கள் இருக்கும்  மறு மூலபொருள் வாங்க பணம் இருக்காது.  உற்பத்தி செய்த பொருட்களை வாங்கிக் கொண்டு சில்லறை வியாபாரிகள் உடன் பணம்  கொடுக்க மாட்டார்கள்.   உற்பத்தியாளருக்கு பணம் தேவை,  இந்த சீசனில் பணம் சம்பாதிக்க வில்லை என்றால்  முழு  வருட சம்பாத்தியம் போயவிடும்.  உற்பத்தியாளர்கள்   இவர்களிடம்  உற்பத்தி செய்த பொருட்களை மொத்த விலையில் இருந்து  ரூ 1, ரூ 2 உருப்படிக்கு குறைவாக விற்று  பணம் பெற்று கொள்வார்கள்.  ஒரே ஒரு கண்டிசன், உற்பத்தியாளர்களே இவர்களுக்கு அதே சீசனில் விற்றுகொடுக்க வேண்டும், உற்பத்தியாளர்கள் ஆர்டர் அடிப்படையில் உற்பத்தி செய்வதால், விற்பதில் சிரமம் இருக்காது, இவர்களுக்கு ஒரு உருப்படிக்கு  ரூ ஒன்றோ இரண்டோ கூடுதலாக கிடைக்கும்.  எந்தவிதமான உடல் உழைப்போ,  தொழில் செய்பவருக்கு உள்ள மண்டை காய்ச்சல்களோ, எதுவும் இல்லாத வருமானம்.

இதே முறையில் அவரவர் வியாபாரம் செய்கின்ற இடத்தில் இருக்கின்ற தொழில் களுக்கு ஏற்ப செய்து பணம் ஈட்டுகிறார்கள்.  வியாபாரத்தில்  Cash is the King என்பதாக சொல்வார்கள், இவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து வட்டி மட்டுமின்றி பல வகைகளிலும், சம்பாதிக்கிறார்கள். இவ்வாறு இவர்களுடன் தொழில் செய்பவர்கள்,  ஸ்கூல் ப்ர்க் உற்பத்தியாளர்கள், சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் போன்றோர்.  இவர்களிடம் கச்சா பொருள்களை பெற்று கூலிக்கு பொருள் உற்பத்திசெய்து கொடுப்பவர்களும் இருக்கிறார்கள.  சில நேரங்களில் பெரும் தொழில்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள் தேங்கி கிடக்கும்,  கம்பனிகளுக்கு பணம் தேவைப்படும்  நேரங்களில்  சாதாரணமாக விற்கும் விலையை விட  10  %, 20 % அளவிற்கு டிஸ்கவுண்டில்  விற்பார்கள்,  அப்படி பட்ட சரக்குகளை   3, 4 மாதத்திற்காக வங்கி வைத்து பின்னர் விற்பார்கள், கிடைக்கின்ற லாபம் 40 %, 50 %  என்ற அளவில் கிடைக்கும்.  இப்படியான வாய்ப்புக்களை  எதிர்நோக்கி இருக்கும் இவர்களுக்கு,  வெவ்வேறு துறைகளில்  இருப்பவர்கள்  இவ்வாறான  வழிகளை காட்டிக்கொடுத்து கமிஷன் பெற்றுக்கொள்வார்கள்,  இப்படி  நம்மை போன்றவர்களெல்லாம் கற்பனை கூட செய்ய முடியாத வழிகளில் எல்லாம் சம்பாதிக்கிறார்கள்.

இவர்களை போன்று தான்,  வாறன் பப்பேயும், அவருடைய  ஆரம்ப கால மெயின் வருமானம் இன்சூரன்ஸ் கம்பனிகளில் இருந்து தான். பலவகையான இன்சுரன்ஸ் பாலிசிகள்,  மாதா மாதம் தவறாமல் வாடிக்கையாளர்கள் பணம் கட்டி விடுவார்கள். இப்படி சேருகின்ற தொகையையும், ஏற்கனவே முதலீடு செய்த கம்பனிகளில் இருந்து வரும் டிவிடன்ட்களையும்  சேர்த்து  புதிய கம்பனிகள் வாங்குவதற்கு உபயோகிப்பார்.  கிட்டத்தட்ட  50, 60  ஆண்டுகளாக அவரிடம் முதலீடு செய்தவர்களுக்கு டிவிடன்ட் கொடுத் ததே  இல்லை . அவர் வாங்குகின்ற கம்பனிகள் கொடுக்கும் டிவிடன்டையும், மீண்டும் புது கம்பனிகளை வாங்க உபயோகிப்பார். சமயங்களில் பெரிய பெரிய கம்பனிகளின் நெருக்கடியான் நேரத்தில், மற்றவர்கள் கடனோ முதலீடோ தர தயங்கும் நேரத்தில், மார்க்கட்டில் ஷேர் விற்கும் விலையை விட குறைவாக கொடுத்து வாங்குவார். இவர்  முதலீடு  செய்கின்ற துறைகள்  90 சதவீதத்திற்கு மேல் லாபமீட்டு தருவதாகவே உள்ளன.

Great minds think alike என்பதாக சொல்வார்கள், சாதனையாளர்கள் எல்லோருமே ஒன்று போல் சிந்திப்பார்கள் போலும்,  நம் மார்வாரிகளும் வாறன் பபெக்கு சளைத்தவர்கள் அல்ல!!!!!!. " குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை ". என்பது போல் நாம் நம்மவர்கள் என்று பெருமை பட்டுக்கொள்வோம்.   மார்வாடியும், வாறன் பப்பேயும் சம்பாதித்து நமக்கென்ன ஆக போகிறது ?  இவர்களுடைய வாழ்கையில் இருந்து நாமென்ன கற்றுக்கொள்ள போகிறோம் ?   இது தான் என் மில்லியன் டாலர் கேள்வி

Saturday, August 22, 2015

ஆட்டோமாடிக் மில்லியனர் ஆகலாமா ? ..!!!!!!!!!!!!!!!

இன்று நம்மில் பலர், படித்தும் சரியான வேலை கிடைக்க வில்லை, வருகின்ற வருவாய் போதவில்லை,  பல ஆயிரங்களை செலவிட்டாவது  வெளிநாடு செல்வோம் என்று செல்கிறோம்.  வேலை கிடைத்தும் இத்தனை ஆண்டுகளில் சாதித்தது ஒன்றுமில்லை என்று அரசு வேலையில் இருந்தும் விடுப்பெடுத்து வெளி நாடு  செல்வோரும்  குறைவன்று.    அத்துணை பேருடைய  அவாவும், கனவும் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான்.  நாளை நம்முடையவும், நம்மை  சார்ந்தோரின் எதிர்காலத்தையும் இலகுவானதாக்கி கொள்ள வேண்டும் என்ற பெரு நோக்கமும் தான். 

முதல் மூன்று மாத சம்பளங்கள் பெரும் வரை தான்,  நாம்முடைய நோக்கங்கள் எல்லாம்  நினைவில் இருக்கும் அதன் பின்பு அவையெல்லாம், பின் இருக்கையில்  இடம் பிடிக்க தொடங்கி, காலப்போக்கில் எதற்காக வந்தோம் என்ற நோக்கத்தை மறந்தவர்களாக ஆகி விடுகிறோம்.  கண்ணில் காண்பதை எல்லாம் வாங்க தொடங்குகிறோம்.  வருவாய் மாறாமல் இருந்தாலும், தேவைகள் கூடிக்கொண்டே போகின்றன.  கால ஓட்டத்தில் குழந்தை குட்டிகளாகி, அவர் தம் படிப்பு செலவு, திருமண செலவு என்பவை நெருங்கும் போது,  எதை விற்பது ?, யாரிடம் கடன் வாங்குவது ?  என்று சிந்தனை  சிறகு படபடத்து,   மன அழுத்தம், சர்க்கரை என்று சொல்லொனா நோய்கள் வருவது  தான் மிச்சம். வெளிநாடுகளில் பொருள் ஈட்டுவோரை விட உள்ளூரில் உள்ளவர்கள் சிறிது மேல், காரணம் அவர்களது நினைவில் சதா இருப்பது, குறைந்த வருவாய் எப்படி சமாளிப்பது என்ற யதார்த்தம் தான்.


இது நமக்கு மட்டும் அன்று நமக்கு முன்பும் பலபேர் பட்டிருக்கிறார்கள்,  இன்றைய தேதியில் நாம் அவர்களிடம் இருந்து ஏதாவது படித்து                            இ ருக்கிறோமா ?  இல்லை நம் குழந்தைகளுக்கு எதார்த்தத்தை சொல்லி கொடுத்திருக்கிறோமா? நம்மில் சிலர் பட்ஜெட் போட்டு செலவுகள் செய்வோம் என்று செய்வோம், " பட் " செலவுகள் " ஜெட் " வேகத்தில் செல்வது தான் மிச்சம்.

இப்படி நாம்  செய்ய நினைக்கின்ற எதையும், தொடர்ந்து செய்வதில்லை, ஒரு வேலை செய்யவேண்டும் என்று தொடங்குகின்ற நேரத்தில் வேறொரு வேலை வந்து அதை பிறகு செய்வோம் என்று ஒத்திவைத்து சுத்தமாக மறந்து விடுவது  என்பது நம்மில் பலருக்கு வழக்கமான விஷயம். நம்மை யாராவது ஒருவர் அருகிலிருந்து அறிவுருத்திக்கொண்டிருந்தால்  ஒருவேளை முடியுமோ என்னவோ  ?.   எத்துனை பேருக்கு அப்படி வாய்க்கும் !!!


நம்மை போன்று வெளிநாட்டில் வாழ்வோருக்கு பேங்குகளில் கரண்ட் அக்கவுண்ட் என்பது கண்டிப்பாக இருக்கும்.  ஊரிலே இருப்பவர்களுக்கும் இருக்கும்.  பேங்குகள் தரக்கூடிய சேவையை வைத்து   " ஆட்டோமாடிக் மில்லியனராக  " லட்சாதிபதியாக  நம்மை உருவாக்கி கொண்ட  ஒரு  தம்பதிகளின்  வாழ்க்கை நிகழ்ச்சியை  பாருங்கள்.  தனக்கு தேவையானதை, அடுத்தவரை குறை சொல்லாமல், இருக்கின்ற வாய்ப்பு வசதிகளை சிறிது மாற்றி சிந்தித்து  சாதனை செய்ததை பாருங்கள். நாமும் வெற்றி அடைவது என்பது அவரவர்  தீர்மானத்தை பொறுத்தது.  எதிர் கால் வாழ்க்கையை பற்றி கவலைப்படுபவர்கள் சிந்தித்து செயல் படுங்கள்.  

புது மணம்  மாறா இளம் தம்பதிகள், இருவரும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள்.  தனியாக குடித்தனம்  போக  போகிறார்கள், மணமகனின் பெற்றோர் இருவரையும் வைத்து உலக நிலைமைகளை சொல்லி, இருவருமே சம்பாதிக்கிறீர்கள் எதிகாலத்தை எண்ணி சிக்கனமாக இருந்து  ஆற்ம்பத்தில் இருந்தே சேமிப்பை உருவாக்கி கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார்கள்.

இருவரும் விவரமான வர்களாதளால், பட்ஜெட் போட்டு செலவு செய்கிறார்கள், மாதக்கடைசியில் நினைத்த தொகையை சேமிக்க முடியவில்லை,  ஒருவொருக்கொருவர் உன்னால் தான் என்று                                 ஒருவர் மற்றவரை குறை சொல்லிக்கொண்டு ஓரிரு மாதங்கல் ஓடுகிறது.   பின்பு இதனாலையே  கணவன் மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டு  சதா சண்டையாக இருக்கிறது.  ஒரு கட்டத்தில் பொறுக்க  முடியாமல் மனைவி தன தாயாரை அழைத்து, ஒரே  சண்டை சச்சரவாக  இருக்கிறது,  இரண்டு பேர் சம்பாதித்தும் நிம்மதி இல்லை, நான் உங்களுடன் வந்து இருக்கப் போகிறேன் என்று சொல்கிறார்.

அவரது தாயார் சிறிது நேரம் யோசனையில் இருந்து விட்டு,   பட்ஜெட் போட்டு செலவு செய்தீர்களா ?   என்று கேட்க,  மகள் ஏன் அப்படி கேட்கிறீர்கள் ?  என்கிறார்.  நானும் உங்க அப்பாவும்  பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த போகிறோம் பேர்வழி என்று ஆரம்பித்ததும் போதும் ஒரே சண்டைதான்,  என்னைக்கு  பட்ஜெட்டை தலையை  சுற்றி வீசினோமோ  அன்றிலிருந்து தான் நிம்மதி என்றார்.   அம்மா...... எனக்கு தலை சுத்துது !  நாங்க ரெண்டுபேரும் சம்பாதித்தும் ஒன்று மிஞ்சலம்மா........என்று பிரலாபிக்கிறார் மகள். தாயார் சிரித்துக்கொண்டே மகளை  ஒருபுறமாக அழைத்து செல்கிறார்.

வீட்டு வாடகை, கரண்டு பில், மளிகைக்கடை பில்.................என்று சம்பளம் வாங்கியதும் எல்லோருக்கும் பங்கு இடுகிறோமே,  என்றாவது  நமக்கு ஏதாவது கொடுக்கிறோமா ?....... அம்மா அதில் தானே பிரச்சினையே  என்று பேச தொடங்கிய மகளை அடக்கி.  திட்டமிடலின்  அரிச்சுவடியே  அது தாம்மா. எது எக்கேடு கெட்டாலும் முதலில்  உங்களுக்கு கொடுக்க வேண்டியதை முதலில் கொடுங்கள், பிறகு மற்றவர்களுக்கு கொடுக்க பழகுங்கள் என்றார். சம்பளம் பேங்குக்கு வந்ததும் ,  உங்கள் சம்பளத்தில்  5 % அல்லது 10 %  ஐ  கரண்ட் அக்கவுண்டில் இருந்து சேவிங் அக்கவுண்டுக்கு மாதா மாதம் ஆட்டோமாடிக்காக மாற்ற சொல்லுங்கள், மீதி இருக்கிற தொகையை உங்கள் இஷ்டப்படி செலவு செய்துகொள்ளுங்கள் என்று யோசனை சொல்கிறார். .

கணவன் வீடு வந்த பெண் முதலில் செய்தது,  .சம்பள பணம் வந்ததும் அதில்      10  % மாதாமாதம் ஆட்டோமாடிக்காக சேவிங் கணக்கிற்கு  டிரான்ஸ்பர் செய்யச்சொன்னது, அதே போல், கணவரையும் செய்யச்சொன்னது.  சிறிது சிறிதாக வீட்டில் மகிழ்ச்சி திரும்பியது.   ஆறேழு மாதங்களில்,  பேங்கில் சொல்லி 10 %, 15 % ஆகி, இரண்டு மூன்று வருடங்களில் 25 % அளவிற்கு   ஆனது.  சிறிது சிறிதாக கூட்டியதால், அதன் சுமையே தெரியவில்லை என்கிறார். நான்கு வருடங்களில்,  வீடு வாங்குவதற்கான  டவுன் பமென்ட் கிடைத்துவிட்டதால் எளிதாக வீடு வாங்கி விட்டோம். வீடு வாங்கினாலும் தொடர்ந்து  25 %  சேமித்துக்கொண்டே வந்தோம்.  இடையிடையே தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில், பேங்கில் சேர்ந்த தொகையையும் வீட்டு கடனுக்காக கட்டிக்கொண்டே வந்தோம், இதனால் 30 வருடங்களில் கட்டி முடிக்க வேண்டிய கடனை இருபது வருடங்களில் முடித்துவிட்டோம்.

கடன் என்பது இல்லாத தாலும், பேங்கில் பணம் சேருவதாலும். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி சந்தோசம் இருந்தது, இதற்கிடையில் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டோம், ஆறு ஏழு  மாதத்தில் மற்றொரு கவலை வந்து விட்டது.  வாடகை பணமும் மிச்சமாகிறது, 25 % சேமிப்பும் பேங்கில் சேருகிறது.  அந்த பணம் நமக்கு  "வேலை "  செய்யாமல் இருக்கிறதே என்று, எதில் முதலீடு என்று இருவரும் ஆலோசனை செய்து, இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு. நமக்கு குடியிருக்க வென்று வேறொரு வீடு வாங்குவோம் என்று வாங்கினோம். வந்த வீட்டு  வாடகை,  25 % சேமிப்பு என்று  புதிய வீட்டு கடனையும்   விரைவில் கட்டி முடித்துவிட்டோம்.   பேங்கில் ஆறு லட்சம் கேஷ்,  எட்டு லட்சம் பெறுமானமுள்ள இரு வீடுகள், மனத்திற்கு  பிடித்த  கார். இதுவரை இறை அருளால் நோய் நொடி என்று ஒன்றும் இல்லை, காரணம் எதிகாலத்தை பற்றிய கவலை இல்லை.

இறைவன் எங்களை எந்த குறையும் இன்றி வைத்திருக்கிறான், எங்களால் இயன்ற வரை தேவையானவர்களுக்கு உதவுகிறோம்,  அதிலும் நாங்கள் அனுபவத்தில் பெற்ற கல்வியை மற்றவர்க்கும் எத்திவைக்க முயல்கிறோம். இது  கம்ப  சூத்திரம் இல்லை, சிறிது கவலை, திட்டமிடல், மற்றவை இறை நாட்டப்படி நடந்தது. நாமாக சேமிப்பிற்கு என்று ஒதுக்குவோம் என்று இருந்தால் இது நடந்தே இருக்காது,  ஆட்டோமாடிக்காக செய்ததால்  தான் முடிந்தது, எங்களை என்ன சொல்வீர்கள்  "  ஆட்டோமாடிக் மில்லியனர் என்றா ? "

ஆகலாமா ?

Wednesday, August 19, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் -பகுதி 8

நாம் இதுவரை பார்த்த முதலீட்டு வகைகளிலே  மிகசிறந்ததாக வல்லுனர்களால் கருதப்படுகிற   ஷேர் மார்கட் பற்றி பார்க்கப்போகிறோம்.   பல்வேறு  வல்லுனர்களின் கருத்தை உறுதிபடுத்துகிற வகையில்  பல்வேறு கால கட்டங்களில் செய்யப்பட  ஆய்வுகளின் முடிவுகள்   காணக்கிடக்கின்றன. எப்படித்தான் புள்ளி விவரங்கள் சொன்னாலும்,  ஆங்காங்கே இது பற்றி யாரிடமாவது பேசினால், நான் அவ்வளவு பணம் இழந்திருக்கிறேன், என் நண்பன் இவ்வளவு இழந்திருக்கிறான்  என்று  பலர்  சொல்வதை கேட்டிருக்கலாம், ஏன்  நீங்களே கூட இழந்திருக்கலாம். இதே அளவிற்கு நான் இவ்வளவு சம்பாதித்தேன்,  என்னுடன் வாருங்கள்  நான் சம்பாதித்து காட்டுகிறேன் என்பதாக சொல்வோரையும்  கண்டிருக்கலாம்.  இன்று  பங்கு சந்தையில் பணம் பண்ணுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்க போகிறேன் என்று தொடங்கி,  ஒரு 10 கம்பெனிகளின்  ஷேர்களை வாங்கி விற்று   trail & error முறையில்  தாங்களே கற்றுக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும்,  தளங்களை  தான் அதிகம் காண முடிகிறது,  இது யாரையும் குறைசொல்லும் அல்லது விமர்சிக்கும் நோக்கத்துடன் சொல்வதன்று.  பலரும் தாங்கள் படித்த,  அனுபவத்தில் கற்றுக்கொண்ட விசயங்களை பகிரும் போது எல்லோருமே பயன் பெற்று  கொள்ளலாமே என்ற ஆதங்கம் தான்.   இன்டெர் நெட் மூலமாக பல்வேறு தளங்கள் நடத்தும் நண்பர்கள்,  இதனை படிக்க நேர்ந்தால் கவனம் கொள்வார்களாக என்று வேண்டிக்கொள்கிறேன்.


இப்படி இருவேறு முரண்பாடான கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது, இதில் எது உண்மை என்று குழம்புவோர்க்கு  பதில் சொல்ல வேண்டும் என்றால் பதில் இரண்டுமே சரிதான் என்றே சொல்ல வேண்டும்.  பெரும் பாலும் பணம் பண்ணியோர் விளம்பரம் செய்து கொள்வதில்லை ரகசியமாகவே வைத்திருப்பர்.  நமது நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுதுமே அப்படித்தான். நானும் அப்படி பணம் இழந்து, பாடம் படித்ததை, இத்தனை காலமும் பல்வேறு பட்ட புத்தகங்கள், அறிஞர்கள்  எழுதிய கட்டுரைகள் என்று  படித்து அறிந்து பலன் பெற்றவைகளை பகிர்ந்து கொள்ளத்தான்,  இப்படிப்பட்ட பதிவெழுதும் முயற்சி.  பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க சில அடிப்படையான தன்மைகளும், புரிதல்களும்  வேண்டும், அவைகளை  முடிந்த அளவு தெளிவாக்க முயற்சிக்கிறேன்.

பங்கு சந்தையில் வெற்றி பெற என்று யாரிடமும் கேட்டாலோ, படித்தாலோ  முதலில் சொல்லப்படுவது, நீண்ட கால முதலீடு என்பது தான், அடுத்து  நீண்ட  காலம் என்றால் ஆகக்குறைவாக ஐந்து ஆண்டுகள் என்பதாகவும் சொல்வார்கள்.  எல்லோரும் இதையே சொல்வதால், புதிய விசயமில்லை என்று சுரத்து இல்லாமல் இருப்போம்.  இதையே  இந்த நூற்றாண்டு கண்ட பிரபல்  முதலீட்டு  மேதை  வாரன் பப்பே  சொன்னால் நிமிர்ந்து அமர்ந்து கேட்போம் இல்லையா ?.   அவரிடம் நீண்ட கால முதலீடு  என்றால் எவ்வளவு காலம் ?  என்று கேட்கப்பட்ட போது, அவர் சொன்ன பதில்  பார் எவர் ( FOR EVER ) என்பதாக.   மேலும்  சொல்லும்  போது    பிரிக்சனல்                 ( FRICTIONAL) செலவுகளை எவ்வளவு குறைவாக செய்ய  முடியுமோ அவ்வளவு குறைவாக செய்ய வேண்டும் என்பதாகவும் சொல்வார்.  இது பற்றி கொஞ்சம் விளங்க முயல்வோம்.

சவுதியிலோ, துபையிலோ இருக்கும் நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு கார்வாஷ் தொடங்கினீர்கள்  என்று வைத்துக்கொள்ளுங்கள், மேனஜர் ஒருவர் வைத்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, எச்செலவும் போக ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ 10,000 கிடைக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். எவ்வளவு நாளைக்கு நடத்துவீர்கள் ?  நன்றாக யோசனை செய்துகொண்டு, பதிலை மனதில் இருத்திக்கொண்டு, அடுத்த  பத்தியை படியுங்கள்.

வருடக்கடைசியில்  விடுமுறையில் ஊர் வருகிறீர்கள்,  ஏர்போர்டில் உங்கள் பள்ளிக்கூட நண்பரை சந்திக்கிறீர்கள், வெகு காலத்திற்கு பிறகு சந்திப்பதால் பரஸ்பர விசாரணைகளுக்கு பிறகு  என்ன செய்கிறீர்கள் என்று கேட்ட போது  உங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள பெரிய நகரத்தில்  டிரை கிளீனர்ஸ்  வைத்திருப்பதாகவும்,  நேரம் கிடைக்கும் பொது வந்து சந்திக்கும் படியும் சொல்கிறார்.   சில நாட்களுக்கு பிறகு அவரை அவருடைய கடையில் சென்று சந்திக்கும்போது.  தன்னுடன்  பிசினசில் பங்குதாரராக இருந்தவர், அமெரிக்கா  செல்ல இருப்பதால் தன பங்கை விற்பதாகவும், உங்களுக்கு  இதில் பிரியம் இருந்தால் சேர்ந்து கொள்ளலாமே என்று  அது சம்மந்தமாக மேலோட்டமாக சில கணக்குகளை காண்பித்து,  10 வருட காலமாக லாபகரமாக நடத்திக்கொண்டிருப்பதாகவும்,  நல்ல நிரந்தரமான வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும்   உங்களுக்கு பிரியம் இருக்கிற பட்சத்தில், பங்குதாரராக ஆகலாம் என்று சொல்கிறார். யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்து விடுகிறீர்கள்.

நீங்கள் ஏற்கனவே ஒரு பிசினஸ் நடத்துவதால் ஓரளவிற்கு வரவு செலவுகள் ஒரளவிற்கு பார்க்க தெரியும, அந்த அடிப்படையில் நல்ல லாபகறமான தொழிலாக தெரிகிறது.  மேலும் விற்பதற்கான காரணமும் தெரிகிறது.  வாங்கலாம் என்ற அபிப்பிராயம் வந்து விட்டால், உங்களை விட விவரமான  ஆடிட்டரிடம் கணக்கு வழக்குகளை காண்பித்து அபிப்பிராயம் கேட்டுக்கொள்ளலாம் என்பதாக நினைக்கிறீர்கள்.  சில நாட்களுக்கு பிறகு, ஆடிட்டரிடமும் அபிப்பிராயம் கேட்டு அவரும், நீங்கள் போடுகின்ற முதலுக்கு, தலைக்கு  ரூ 15000  மாத வருமானம் வருவதாலும்,   50% பார்ட்னர்ஷிப் என்பதாலும்  தாரளமாக வாங்கலாம் என்று சொல்லி விடுகிறார்.  இப்பொழுது சொல்லுங்கள்,  நீங்கள் அந்த பிசினசை  வாங்குவீர்களா மாட்டீர்களா ?.  வாங்கினால் எத்தனை காலம் வைத்திருப்பீர்கள் ?.

மேற்கண்ட இரண்டு தொழிலுமே, உங்களுடைய நேரடி உழைப்பின்றி உங்களுக்கு வருவாய் ஈட்டி தரக்கூடியது, மேலும் உங்களுக்கு முழு நேர தொழிலாக வெளிநாட்டு வேலை இருக்கிறது.  ஏற்கனவே நீங்கள் ஈட்டிய தொகை பேங்கில்  உறங்காமல் உங்களுக்காக வேலை செய்யப்போகிறது.  இதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து தான் உங்களுடைய குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை, தொழிலில் இருந்து வருகிற வருமானத்தை வேறு தொழில்களிலோ,  முதலீடுகளிலோ ஈடுபடுத்தி மேலும் வருவாய்க்கு வழி  செய்து கொள்ளலாம் .

இப்பொழுது கேள்விக்கு வாருங்கள்,  இரண்டு தொழிலுக்கும் பொதுவான கேள்வி எவ்வளவு காலம் வைத்திருப்பீர்கள ? என்பது,  டிரைகிளீனர்ஸ்  தொழிலுக்கு மட்டும். இந்த தொழிலை வாங்குவீர்களா ?  என்ற கூடுதல் கேள்வி. இப்பொழுது பதில் என்னவென்று பார்ப்போம்.

எல்லோருமே முதலில் சொல்வது,  இது என்ன முட்டாள் தனமான கேள்வி, தொழில் நடத்திக்கொண்டு இருந்தாலோ, புதிதாக வாங்கினாலோ  கால வரம்பு என்ன இருக்க முடியும்?  தொழில் என்பது எக்காலத்திற்கும்   தானே ?.   அடுத்தது   டிரைகிளீனர்சை பொருத்தவரை முதலீடு இருக்கும் பட்சத்தில்,  இம்மாதிரியான வாய்ப்பு கிடைப்பதே அரிது,  கிடைத்தால் விடுவோமா என்பது தான்.

ஆக தொழில் அதிபர் என்றாலோ ,  தொழிலில்  பங்குதாரராக   என்றாலோ  அதற்கு கால வரையறை என்பது கிடையாது. சம்பந்தப்பட்ட தொழில் லாபமீட்டி தந்து கொண்டிருக்கும் வரை.  சில தொழில்கள் பல           பரமபரைகள் தாண்டியும் கூட நடக்கும்.

பங்கு மார்க்கட்டில்  இருக்கும் பெரிய பெரிய கம்பனிகள் எல்லாம் தங்களுடைய ஆரம்ப கால முதலீட்டை, 10 லட்சம், கோடி என்ற அளவினான சிறு சிறு பங்குகளாக பிரித்து, ஒவ்வொரு பங்கின் பொருமதியும்  ரூ 10, ரூ 50, ரூ 100 போன்ற  ஏதாவது ஒரு மதிப்பில் இருக்குமாறு பிரிப்பார்கள்.  ஒவ்வொரு பங்கின் மதிப்பையும், பிரித்த மொத்த ஷேர்களின்/பங்குகளின் எண்ணிக்கையையும் பெருக்கினால் வரும்  தொகை, கம்பனியின் ஆரம்ப முதலீட்டுக்கு சமமாக இருக்கும்.  இதில் கிட்டத்தட்ட 50 %  கம்பனி ஆரம்பித்தவர்களுக்கும், மீதி இருக்கும் ஷேர்கள், நம்மை போன்றவர்களுக்கும், பெரிய பெரிய நிதி  நிறுவனங்களுக்குமாக என்று விற்கப்படும் .  கிடைக்கின்ற லாபத்தின் ஒரு பகுதியை,  எத்தனை பங்குகள் இருக்கின்றவோ, அத்தனையாக பிரித்து கொடுக்கப்படும்.  ஒருவர் எத்தனை பங்குகள் வேண்டுமானாலும் வாங்கலாம்.  ஒரு பங்கு வைத்திருந்தாலும் பங்கு தாரர் தான்,  5000, 10000 வைத்திருந்தாலும் பங்கு தாரர் தான்.  லாப பங்கு  ( டிவிடண்ட் ) நீங்கள் வைத்திருக்கும் பங்கின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் குறைவாக கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக  இருந்தால்,  கம்பனி நிர்வாகத்தில் யோசனை சொல்லக்கூடிய போர்டில் கூட அமரலாம். ஒரு காலத்தில் அந்த கம்பனியை நடத்த முடியவில்ல, வேறு துறையிலும் ஈடுபட தெரியாத நிர்வாகம், இப்படிப்பட்ட பல பிரச்சினைகளால் கம்பனியை மூடிவிட முடிவு  செய்தால்,  அரசாங்க தரப்பில் இருந்து  ஒரு சிறிய கமிட்டி அமைக்கப்பட்டு, கம்பனிக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் ஏலமிட்டு விற்கப்படும். விற்ற தொகையில், கடன் கொடுத்தவர்களுக்கு எல்லாம் முதலில் பட்டுவாடா செய்யப்படும். பிறகு மிஞ்சுவதை, அந்த நேரத்தில் யார் யாரெல்லாம் பங்கு தாரராக ( share holder ) இருக்கிறார்களோ அவர்களுக்கு, அந்த தொகை ஒரு ஷேர் இக்கு இவ்வளவு என்று சரி சமமாக பிரித்து கொடுக்கப்படும்!!!!!!. சில நேரங்களில் ஷேர் கடைசியாக விற்ற விலையை விட கூடுதலாக கூட கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பம்பாயில் பழைய ஜவுளி மில்கள் விற்கப்பட்ட போது, இவ்வாறு கூடுதலாக கிடைத்தது, காரணம்  அம்மில்களிடம் இருந்த நிலங்களின் சந்தை மதிப்பு.            

இப்பொழுது சொல்லுங்கள்,  நீங்கள் வாங்கும் ஷர் உங்களை  அந்த கம்பனியின் பங்குதாரராக ஆக்குகிறது,  எவ்வளவு நாளைக்கு பங்குதாரராக இருப்பீர்கள் என்று கேட்டால் பதில் என்ன சொல்வீர்கள்.  இதைத்தான்  வாறன் பப்பே, For Ever என்று சொன்னார், நம்முடைய முதலீடும் அப்படித்தான் இருக்க வேண்டும்.  வாங்கும் முன், வரவுசெலவு, லாப நஷ்டம், எதிர்கால திட்டம், வளர்ச்சி, எவ்வளவு காலமாக தொடர்ச்சியாக லாபம் கொடுத்திருக்கிறார்கள் என்பது போன்ற விசயங்களை கவனித்து வாங்க வேண்டும். தரமான  கம்பனிகளின் பங்குகளை வாங்கும்  போது ,  அதனுடைய  அசல் மதிப்பிற்கும் கீழ் எவ்வளவு குறைவாக வாங்க முடியுமோ அவ்வளவு குறைவாக வாங்குதல் நலம. பிறகு அவற்றை எக்காலத்திலும் சரியான காரணமின்றி விற்க கூடாது.

பிரிக்சனல் செலவு   என்பதாக் ஒரு விஷயத்தை  பபே  சொன்னார்,  பங்குகள் வாங்கும் பொது செய்கின்ற, கமிசன், வட்டி இன்னும் இவை போன்ற  செலவுகளையே அப்படி குறிப்பிட்டார். நீண்ட கால முதலீடுகள் செய்யும் போது,  சிறு சிறு தொகையாக செய்யும் செலவெல்லாம், 10, 20, 30 வருடங்களில் மிகப்பெரிய தொகையாக மாறக்கூடிய வாய்ப்புள்ளவை, இதை படித்து பாருங்கள் அத்தனையும் நஷ்டமாகி விடும் என்று தான். இதனுடைய நேரடி விளக்கம்  என்ன வென்றால் அடிக்கடி பங்குகளை வாங்கி விற்காதீர்கள்,  டிரேடிங் செய்யாதீர்கள், அதில் நீங்கள் அடையும் லாபத்தை விட, புரோக்கர் தான் அதிக லாபம் அடைவார் என்பது தான் 

இறைவன் நாடினால் இன்னும் பல விசயங்களை தொடர்ந்து பார்ப்போம்..........