சிங்கபூரைப்பற்றி பலரும் பலவிசயங்கள் எழுதியிருக்கிறார்கள், அரை நூற்றாண்டுகளுக்கு முன்னாள், சதுப்பு நிலங்கள் நிறைந்த, சட்டத்துக்கு புறம்பான செயல்பாடு உடையவர்களின் புகலிடமாகவும், மலேசியாவால் வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட மீன்பிடி தீவானது, உண்மையான் தேச பற்று கொண்ட மனிதனின் கரங்களில் ISLAND NATION என்று பெயர்பெற்று, வளர்ந்த தேசங்களுக்கு மேலான GDP வளர்ச்சி கொண்டு, விரைந்து வீறுநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.
தேசத்தந்தை, தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் முன்பு, இந்த தேசத்தை நான் எப்படி முன்னேற்ற போகிறேன் என்று கண்ணீர் கரைபுரண்டோட கேட்டது மட்டுமின்றி , கண்களை துடைத்துக்கொண்டு, உலகின் எல்லா நாடுகளையும் உதவி வேண்டி, முதலீடு செய்ய வேண்டி கேட்டு பயணம் செய்தார். இஸ்ரேல் தான் முதலில் பச்சை கொடி காட்டியது.
முஸ்லிம்கள் நிறைந்த நாட்டிற்கு, இஸ்ரேல உதவியா? முதலீடா ?. என்று மூக்கில் விரல் வைத்த உலகத்திற்கு முன்னாள், சிங்கப்பூரின் வளர்ச்சியை பாருங்கள். இந்தியா போன்ற பல மத மக்கள் நிறைந்த தீவு தான். எந்த அடுக்குமாடி குடியிருப்பும், இதில் முஸ்லிம்கள், இதில் சீனர்கள், இன்னும் இதில் ஏனையற்றோர் என்ற பிரிவினை இல்லை !!!!. எல்லா இடங்களிலும் எல்லா ஜாதியினரும் இருப்பார்கள். தேசத்திற்கு தியாகம் செய்யப்போகிறேன், ஏழை எளியவர்களின் கண்ணீர் துடைக்கபோகிறேன் என்பவர்களுக்கு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தூர வைக்க தெரிந்திருக்க வேண்டும்.
தன்னுடைய மிக நெருங்கிய நண்பன் மற்றும் அமைச்சரவை சகா, குடும்பங்களும் மிக நெருக்கம். நாடு வளர்ந்து வருகிற நேரத்தில், மிகப்பெரிய பணமோசடி செய்தான், பாரபட்சம் பாராமல் ஜெயிலில் அடைக்கப்பட்டான், நண்பனின் மனைவி வீட்டிற்கு வந்து அழுது புலம்பி, மோசடி என்ற அவபெயரினால், சீன சமுதாயத்திலே எங்களுக்கு இருக்கிற மானம், மரியாதை போய்விடும், உங்களுக்கு தெரியாதது அல்ல, காப்பாற்றுங்கள் என்று கேட்க, எனக்கு நாட்டு முன்னேற்றம் தான் முக்கியம், தவறு செய்தவன் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்று தண்டித்த மாமனிதன் . அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு, மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கவில்லை என்றது தான். ஆம், தெருவிற்கு ஒரு கட்சி, மூலைக்கு மூலை மதுக்கடைகள் நடத்த உரிமையில்லை, வீதிகளில் குப்பை, எச்சில், துப்ப தடை என்று எதெற்கெடுத்தாலும் கட்டுப்பாடு, சுதந்திரம் என்றால் என்னவென்று விளக்கம் தெரியாதவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால், நம் தேசத்தில் இருப்பது போல் குரங்கு கை பூமாலை தான். அளவான சுதந்திரத்தின் பலன் இன்று, வளர்ந்த நாடுகளே பொறாமைப்படும் வாழ்க்கைதரம், எல்லோருக்கும் சொந்தமான வீடுகள்.
இன்றும் கூட கம்யூனிஸ்ட் சீனாவில், மக்கள் பணத்தை கொள்ளைஅடித்து, வெளி நாடுகளுக்கு ஓடிப்போய் செட்டில் ஆனவர்களை தேடிப்பிடித்து, இன்டர் போல் மூலம் பிடித்து கொண்டுபோய், மரண தண்டனை விதிக்கிறார்கள். மரண தண்டனை கொடுத்தால் இனி எவனும் அப்படி செய்வானா ?. கொள்ளைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் நாடு வீதியில் வைத்து தலையை சீவுகிறார்கள் அரபு நாடுகளில், இப்படி இருந்தால் கட்டிய மனைவியை திரும்பி பார்க்கவே, யோசித்து தான் பார்ப்பார்கள். நல்லது செய்ய மனதில் உறுதி வேண்டும். அதைவிட மிகவும் தெளிவான சிந்தனை வேண்டும். நமது நாட்டில் உள்ள நிலைமையை பாருங்கள், எத்தனை வருடங்கள் பழமையான ஊழல் ஆனாலும், புதிய பொருப்பாளிகளுக்கு பங்குகொடுத்துவிட்டால், எல்லாம் சரியாகி விடும்.
இன்றைக்கும் குடிநீர் மலேசியாவில் இருந்து தான் வருகிறது, நாளை என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது, தண்ணீர் கிடைக்காவிட்டால் என்னசெய்வது என்ற தொலை நோக்கு பார்வையால் , சிங்கப்பூரில் உபயோகமாகிற நீர் அனைத்தும் ரிசைக்ளிங் செய்யப்படுகிறது. குடிக்க உபயோகிக்கும் தண்ணீரும் ரிசைக்கில் செய்யப்பட்டது தான் !!!!!. சிங்கபூர் தண்ணீரை குடிக்கும் எல்லோரும் சிங்கப்பூர் தண்ணீருக்கு ஒரு தனி சுவைதான் என்று சொல்கிறார்கள் !!!!!!!. நமது நாட்டில் இருக்கிற ஒவ்வொரு அரசியல்வாதியும் பல ஆயிரம் கோடிகளை கொள்ளை அடித்து வைத்து இருக்கிறார்கள், ஒவ்வொருவரிடமும் உள்ளதில் ஒரு சிறு பகுதியை பறிமுதல் செய்து, நாட்டின் நதிகளை இணைத்து, போக்குவரத்திற்கும், பாசனத்திற்கும் பயன் படுத்தலாமே ? அப்படிப்பட்ட தேச தலைவன்/தலைவி இந்தியாவில் உண்டா ? ஒருவேளை எமெர்ஜென்சி காலத்து இந்திரா காந்தி போன்ற தைரியமிக்க தலைவி/தலைவன் தோன்றினால் நடக்குமோ என்னவோ ? எமெர்ஜென்சி காலத்தில் நாட்டில் இருந்த ஒழுங்கு, வேறு எக்காலத்திலும் இருந்ததில்லை. சாதாரண மக்கள் வாழ்க்கை சீராய், கவலை இன்றி சென்று கொண்டிருந்தது , பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லாம், மொள்ள மாரியும், முடிச்சவிக்கியும், ஒட்டு பொறுக்கிகளும் தான்.
சிங்கப்பூரில் இன்றைக்கு ஒரு சட்டம் இருக்கும், சிலநாட்களில் அதுவே தலைகீழாக மாறி இருக்கும். யாராவது பழைய சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன் படுத்தி சில்மிஷம் செய்திருப்பார்கள், உடனடியாக ஓட்டையை அடைத்து மாற்று சட்டம் வந்து விடும். தெளிந்த சிந்தனை, தேசனலனில் அதீத அக்கறை கொண்ட நிர்வாகிகள். கொண்ட நாடு
மிக சிறந்த கட்டுக்கோப்புள்ள, வளர்நிலையில் உள்ள பங்கு சந்தை, தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு பணம் பண்ண நல்ல வாய்ப்புள்ள இடம். தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள் பலர், சிங்கப்பூர் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இந்தியாவை விட பயமின்றி துணிந்து ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்யலாம்.
இந்த தளத்தில் பங்கு சந்தை பற்றி சொல்லப்படுகிற செய்திகள். சிங்கப்பூர் சந்தைக்கும் பொருந்தும், அவ்வப்போது சிங்கப்பூர் சந்தை பற்றிய சிறப்பான செய்திகளும் இடம்பெறும். தமிழும் புழங்குவதால், சந்தை பற்றிய தகவல்கள் வரும் பத்திரிகைகளை படித்தும் தெரிந்து கொள்ளலாம்
வளர, பணம் செய்ய வாழ்த்துக்கள்.
ஷேர் மார்கட், பணம்,முதலீடு, பாதுகாப்பு, வரலாறு
தேசத்தந்தை, தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் முன்பு, இந்த தேசத்தை நான் எப்படி முன்னேற்ற போகிறேன் என்று கண்ணீர் கரைபுரண்டோட கேட்டது மட்டுமின்றி , கண்களை துடைத்துக்கொண்டு, உலகின் எல்லா நாடுகளையும் உதவி வேண்டி, முதலீடு செய்ய வேண்டி கேட்டு பயணம் செய்தார். இஸ்ரேல் தான் முதலில் பச்சை கொடி காட்டியது.
முஸ்லிம்கள் நிறைந்த நாட்டிற்கு, இஸ்ரேல உதவியா? முதலீடா ?. என்று மூக்கில் விரல் வைத்த உலகத்திற்கு முன்னாள், சிங்கப்பூரின் வளர்ச்சியை பாருங்கள். இந்தியா போன்ற பல மத மக்கள் நிறைந்த தீவு தான். எந்த அடுக்குமாடி குடியிருப்பும், இதில் முஸ்லிம்கள், இதில் சீனர்கள், இன்னும் இதில் ஏனையற்றோர் என்ற பிரிவினை இல்லை !!!!. எல்லா இடங்களிலும் எல்லா ஜாதியினரும் இருப்பார்கள். தேசத்திற்கு தியாகம் செய்யப்போகிறேன், ஏழை எளியவர்களின் கண்ணீர் துடைக்கபோகிறேன் என்பவர்களுக்கு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தூர வைக்க தெரிந்திருக்க வேண்டும்.
தன்னுடைய மிக நெருங்கிய நண்பன் மற்றும் அமைச்சரவை சகா, குடும்பங்களும் மிக நெருக்கம். நாடு வளர்ந்து வருகிற நேரத்தில், மிகப்பெரிய பணமோசடி செய்தான், பாரபட்சம் பாராமல் ஜெயிலில் அடைக்கப்பட்டான், நண்பனின் மனைவி வீட்டிற்கு வந்து அழுது புலம்பி, மோசடி என்ற அவபெயரினால், சீன சமுதாயத்திலே எங்களுக்கு இருக்கிற மானம், மரியாதை போய்விடும், உங்களுக்கு தெரியாதது அல்ல, காப்பாற்றுங்கள் என்று கேட்க, எனக்கு நாட்டு முன்னேற்றம் தான் முக்கியம், தவறு செய்தவன் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்று தண்டித்த மாமனிதன் . அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு, மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கவில்லை என்றது தான். ஆம், தெருவிற்கு ஒரு கட்சி, மூலைக்கு மூலை மதுக்கடைகள் நடத்த உரிமையில்லை, வீதிகளில் குப்பை, எச்சில், துப்ப தடை என்று எதெற்கெடுத்தாலும் கட்டுப்பாடு, சுதந்திரம் என்றால் என்னவென்று விளக்கம் தெரியாதவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால், நம் தேசத்தில் இருப்பது போல் குரங்கு கை பூமாலை தான். அளவான சுதந்திரத்தின் பலன் இன்று, வளர்ந்த நாடுகளே பொறாமைப்படும் வாழ்க்கைதரம், எல்லோருக்கும் சொந்தமான வீடுகள்.
இன்றும் கூட கம்யூனிஸ்ட் சீனாவில், மக்கள் பணத்தை கொள்ளைஅடித்து, வெளி நாடுகளுக்கு ஓடிப்போய் செட்டில் ஆனவர்களை தேடிப்பிடித்து, இன்டர் போல் மூலம் பிடித்து கொண்டுபோய், மரண தண்டனை விதிக்கிறார்கள். மரண தண்டனை கொடுத்தால் இனி எவனும் அப்படி செய்வானா ?. கொள்ளைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் நாடு வீதியில் வைத்து தலையை சீவுகிறார்கள் அரபு நாடுகளில், இப்படி இருந்தால் கட்டிய மனைவியை திரும்பி பார்க்கவே, யோசித்து தான் பார்ப்பார்கள். நல்லது செய்ய மனதில் உறுதி வேண்டும். அதைவிட மிகவும் தெளிவான சிந்தனை வேண்டும். நமது நாட்டில் உள்ள நிலைமையை பாருங்கள், எத்தனை வருடங்கள் பழமையான ஊழல் ஆனாலும், புதிய பொருப்பாளிகளுக்கு பங்குகொடுத்துவிட்டால், எல்லாம் சரியாகி விடும்.
இன்றைக்கும் குடிநீர் மலேசியாவில் இருந்து தான் வருகிறது, நாளை என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது, தண்ணீர் கிடைக்காவிட்டால் என்னசெய்வது என்ற தொலை நோக்கு பார்வையால் , சிங்கப்பூரில் உபயோகமாகிற நீர் அனைத்தும் ரிசைக்ளிங் செய்யப்படுகிறது. குடிக்க உபயோகிக்கும் தண்ணீரும் ரிசைக்கில் செய்யப்பட்டது தான் !!!!!. சிங்கபூர் தண்ணீரை குடிக்கும் எல்லோரும் சிங்கப்பூர் தண்ணீருக்கு ஒரு தனி சுவைதான் என்று சொல்கிறார்கள் !!!!!!!. நமது நாட்டில் இருக்கிற ஒவ்வொரு அரசியல்வாதியும் பல ஆயிரம் கோடிகளை கொள்ளை அடித்து வைத்து இருக்கிறார்கள், ஒவ்வொருவரிடமும் உள்ளதில் ஒரு சிறு பகுதியை பறிமுதல் செய்து, நாட்டின் நதிகளை இணைத்து, போக்குவரத்திற்கும், பாசனத்திற்கும் பயன் படுத்தலாமே ? அப்படிப்பட்ட தேச தலைவன்/தலைவி இந்தியாவில் உண்டா ? ஒருவேளை எமெர்ஜென்சி காலத்து இந்திரா காந்தி போன்ற தைரியமிக்க தலைவி/தலைவன் தோன்றினால் நடக்குமோ என்னவோ ? எமெர்ஜென்சி காலத்தில் நாட்டில் இருந்த ஒழுங்கு, வேறு எக்காலத்திலும் இருந்ததில்லை. சாதாரண மக்கள் வாழ்க்கை சீராய், கவலை இன்றி சென்று கொண்டிருந்தது , பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லாம், மொள்ள மாரியும், முடிச்சவிக்கியும், ஒட்டு பொறுக்கிகளும் தான்.
சிங்கப்பூரில் இன்றைக்கு ஒரு சட்டம் இருக்கும், சிலநாட்களில் அதுவே தலைகீழாக மாறி இருக்கும். யாராவது பழைய சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன் படுத்தி சில்மிஷம் செய்திருப்பார்கள், உடனடியாக ஓட்டையை அடைத்து மாற்று சட்டம் வந்து விடும். தெளிந்த சிந்தனை, தேசனலனில் அதீத அக்கறை கொண்ட நிர்வாகிகள். கொண்ட நாடு
மிக சிறந்த கட்டுக்கோப்புள்ள, வளர்நிலையில் உள்ள பங்கு சந்தை, தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு பணம் பண்ண நல்ல வாய்ப்புள்ள இடம். தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள் பலர், சிங்கப்பூர் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இந்தியாவை விட பயமின்றி துணிந்து ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்யலாம்.
இந்த தளத்தில் பங்கு சந்தை பற்றி சொல்லப்படுகிற செய்திகள். சிங்கப்பூர் சந்தைக்கும் பொருந்தும், அவ்வப்போது சிங்கப்பூர் சந்தை பற்றிய சிறப்பான செய்திகளும் இடம்பெறும். தமிழும் புழங்குவதால், சந்தை பற்றிய தகவல்கள் வரும் பத்திரிகைகளை படித்தும் தெரிந்து கொள்ளலாம்
வளர, பணம் செய்ய வாழ்த்துக்கள்.
ஷேர் மார்கட், பணம்,முதலீடு, பாதுகாப்பு, வரலாறு
No comments:
Post a Comment
தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........