Saturday, September 19, 2015

ஷேர் மார்க்கட்டில் நஷ்டமடைந்தவரா நீங்கள் ?.......காரணி தேடி ஒரு அலசல்

நமது நாட்டில் பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் யார் என்று பார்த்தால் பெரும்பாலும் மேல்தட்டுக்காரர்களாக தான் இருப்பார்கள்.  முந்தய தலை முறையினர் யாராவது  நிதித்துறை சம்மந்தப்பட்ட  தொழிலில் ஈடுபட்டவர்களாக இருந்திருப்பார்கள், அவர்கள் மூலமாக இவர்களுக்கு  உந்துதல் கிடைத்திருக்கும்,  என்ன் தகவல்கள் எங்கிருந்து பெறவேண்டும், எப்படி அவைகளை  உபயோகித்து,  கம்பனிகளை தரம் பிரித்து, நாம் எப்படி வாங்குதல்/ விற்றல் முடிவெடுக்க வேண்டும் என்ற அடிப்படை  அறிவு அவர்களால்  போதிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறாக நம் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வழி இருக்கிறதா ? என்று ஏங்குகிறவர்களுக்கு,   ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் தேவையற்ற, ஆடம்பரமான, தகுதிக்கு மீறிய  பொருள்கள் வாங்குவதில் செலவிடும் காசை  நல்ல கம்பனிகளின் ஷேர்களை,  ஒன்றோ, ஐந்தோ, பத்தோ அவர்கள் பெயரில் வாங்கி வைத்து,  சிறிது விவரம் வந்து, ஹய் ஸ்கூல் போகின்ற வயதில், சேர்த்து அவர்களிடம் கொடுத்தால்,  இயற்கையாக ஏற்படும் ஆவலால் விவரம் அறிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.  வருடம் இருமுறை வரும் டிவிடன்டையும் காண்பித்து,  அவர்கள் அக்கவுண்டில் போட்டளுமோ  அல்லது இன்னும் குறை காசு போட்டு இன்னொரு ஷேர்  வாங்கி கொடுத்தாளுமோ தங்கள் விருப்பம்.  சிறுக சிறுக இதன் காரணமாக சந்தை மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும். அவர்களே கற்று கொள்வார்கள்.   நல்ல கம்பனி என்னும் போது, பழம்  பெரும் கம்பனிகள் பல இருந்தாலும், உதாரணத்துக்கு சில்,   TVS குரூப் கம்பனிகள்,  கோல்கேட், ஹிந்துஸ்தான் லீவர் போன்றவை.  ரூ 100 லிருந்து  ரூ 500 க்குள் வாங்கலாம்.

கம்பனிகளுடைய  வருடாந்திர, வரவு செலவு கணக்கை பார்த்திருப்பீர்கள்,  ஏறக்குறைய 7,8 வரிகளில்  பல நம்பர்களை வருசைபடுத்தி எழுதி இருப்பார்கள் .  இவைகளில் இருந்து தான், சில கூட்டல், கழித்தல்களை செய்து, இன்னும் சில தொழில் சூழ்நிலைகள், கால மாற்றங்கள்,  அரசாங்கங்களின் தொழிற்சார் ஆதரவு போன்றவற்றை கருத்தில் கொண்டு, கம்பனிகளை மதிப்பீடு செய்வார்கள்.  சாதாரண, 10 ஆம் கிளாஸ் கணக்கு தான்.  ராக்கட் சயன்ஸ் ஒன்றுமல்ல.  கணக்கிடுதல் சிரமமாக இருந்தாலும், தற்காலத்தில் போனில் கூட கால்குலேட்டர் இருக்கிறது !!!. அதற்கும் மேலே வேலையை இலகுவாக்கி தேவையான விவரங்களை, அக்கு வேறு ஆணிவேராய் பிரித்து, புள்ளி விவரங்கள்  தரக்கூடிய  பத்திரிகைகள் பல வந்து விட்டன!!!!!!.  உதாரணத்திற்கு  தலால் ஸ்ட்ரீட்,  தமிழிலும் வருகிறது என்று நினைக்கிறேன். இதன் காரணத்தால் இன்றைக்கு,  என்ன செய்கிறோம் என்ற புரிதல் உள்ள,   யார் வேண்டுமானாலும் பங்கு சந்தையில் முதலீடு செய்து பொருளீட்டலாம்

90 களின் நடுவில் என்று நினைக்கிறேன், அப்பொழுதுதான் இந்திய சந்தை உலகம் முழுக்க பெயர் பெற்றது,  இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பாமரனில்  இருந்து படித்தவன் வரை எல்லோராலும் பேசப்பட்டது.  இதெற்கெல்லாம் காரணம் ஹர்ஷத் மேத்தா என்றவர் வங்கி சட்டங்களில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி பல வங்கித்துறை நிபுணர்களின் காதில் பூ சுற்றியும்,  பூ பழம் கொடுத்தும்,  பெரும் பணம் பண்ணியது தான். அதிலிருந்து தான் எல்லா பத்திரிக்கைகளும், வணிகம் / நிதி / பொருளாதாரம்  என்பதாக ஒரு பக்கத்தையே ஒதுக்கி எழுதத்தொடங்கின.   அக்கால கட்டத்தில் தான் ஒவ்வொரு சிறு பெரு  நகரங்களிலும். ஷேர் புரோகிங் கம்பனிகள் தொடங்கப்பட்டன,  இவர்கள் மூலமாக ஆசிரியர், அரசு அலுவலர்கள் என பலர் முதலீடு செய்தார்கள்.  முழுக்க முழுக்க இந்த ஏஜெண்டுகள்  பரிந்துரைத்த கம்பநிகளிலேயே   முதலீடுகள் இருக்கும். ஹர்ஷத் மேதாவுடன்  இவர்களும் காலி. இப்படி பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு   " விட்டதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடு  ". என்று சொல்வார்களே அப்படி மிஞ்சியது போதும் என்று ஒதுங்கியவரா ?  இல்லை "துண்டை காணோம் துணியை காணோம் "  என்று எல்லாம் இழந்தவரா ?   கீழே உள்ள நிகழ்ச்சியை படியுங்கள்,  உங்களின் பழைய செயல் பாட்டை நினைவு படுத்துகிறதா என்று பாருங்கள்.

நானும்  ந்ம் தேசத்து பெரும்பாலோரை  போன்றவன் தான்.XXXXXX   படித்துக்கொண்டிருந்த காலத்தில்  எண்டமூரி வீரேந்திநாத்  என்ற தெலுகு எழுத்தாளரின், சினிமாவாக்கப்பட்ட கதையின் ஹீரோ,  காதலியின் தந்தையுடன்  போட்ட சபதத்தை நிறை வேற்ற, கம்பனி ஆரம்பித்து  ஷேர் மார்க்கட்டில் ஷேர் வெளியிட்டு இருப்பார்,  இப்படி  தான்  பங்கு சந்தை எனக்கு அறிமுகம்  ஆனது.  இவ்வளவு குறுகிய காலத்துக்குள் பெரும் பணம் ஈட்ட இப்படி ஒரு வாய்ப்பா ?   என்ற பிரமிப்புடன்,  படித்து வெளியேறி,  எதார்த்தம் எதிரில் வர எல்லாம் மறந்து  ஓடோ ஓடென்று ஓடி உழைத்து களைத்து, ஆசுவாசப்படுத்திக்கொள்ள  நின்ற போது தான் மீண்டும் நினைவு வந்தது ஷேர்  மார்கட்,  இதற்கிடையில்  பத்தாண்டுகள் பறந்தோடி இருந்தது.   இது 80 களின் ஆரம்பம்.

என்னுடைய  சர்க்கிளில் உள்ள, படித்த பணக்கார, தொழில் செய்யும், அரசுப்பணியில் இருந்தவர்கள் என்று எல்லோரிடமும், பங்கு சந்தை பற்றி தெரியுமா என்று கேட்டும், அறிந்து கொள்ள புத்தகங்கள் இருக்கிறதா என்றும் கேட்க்காதவர்கள் ஒருவரில்லை.  யாருக்கும் எதுவும் தெரிய வில்லை.  பல மாத முயற்சிக்கு பிறகு சென்னையில் இருந்த ஒரு நண்பரின் நண்பர், புத்தகம் இருக்கிறதென்று சொல்லி  பெயர் சொன்னார்.  அந்த நேரத்தில் தான்  சார்டட் அக்கவுடன்ட் க்கு பயிற்சி நடத்தும் அமைப்பு   C F A  என்ற ஸ்டாக் மார்கட் சம்மந்தப்பட்ட கோர்ஸ் ஆரம்பித்தார்கள், அதன் தலைவர்தான் புத்தகத்தின் ஆசிரியர். 

அன்றைக்கு படித்து புரிந்ததாக நினைத்து கொண்ட, அதே புத்தகத்தை இன்று படிக்கும் பொது, பல புதிய விசயங்கள் விளங்க வருகின்றன. இதை தான் ஆங்கிலத்தில்  Reading the fine lines, என்றும் Read between the lines என்பதாகவும் சொல்கிறார்கள் போலும். மிகத்தெளிவான விளக்கங்கள் தரும் டெக்னிகல் புத்தகம், ஆனால்  நடைமுறை  நுட்பங்கள் அலசப்பட வில்லை, ஒரு வேளை  அக்கால கட்டத்திற்கு தேவையில்லை என்று ஆசிரியர் கருதினாரோ என்னவோ.

அன்றைய சென்னையில் தான், CA, C W A, C F A, Company Secretary போன்ற படிப்புக்களுக்கு பயிற்சி தரும் அமைப்புகள் இருந்தன.  அவற்றில் படிப்பவர்கள் கூடுதலும் தெலுங்கர்கள்,  இன்று கூட நம்மவர்கள் அருகில் கூட செல்லாத, செல்வாக்கு மிக்க, மரியாதைக்கு உரிய, நல்ல சம்பளம் கிடைக்க கூடிய company secretary  படிப்பு.  இந்த மாதிரியான நிதி துறை படிப்பு படிக்கிற ஒருவர் மூலமாக தான், எனக்கு ஒரு சப் ப்ரோகர் அறிமுகம் செய்யப்பட்டார். 

வாரத்திற்கு ஒரு முறையோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ அவரை சென்று பார்ப்பதுண்டு.  அவர்  இந்த கம்பனி ஷேர்  பலமடங்கு ஏறப்போகிறது  இதை வாங்குங்கள் அதை வாங்குங்க என்பதாக சொல்வார்.  100, 50 என்ற கணக்கில் வாங்குவது உண்டு.  ஆரம்பத்தில் கேஷ் தான் கேட்டார். ஆனால் ரசீது கொடுப்பதில்லை.  அவரை  அறிமுகம் செய்த நண்பரை கேட்டதற்கு. பயமில்லை என்று சொன்னார்.  நான் அதன் பிறகு  செக் தான் கொடுத்தேன்.  காண்ட்ராக்ட் காப்பியோ, என் பெயரில் மாற்ற  சொல்லவோ செய்தால்,  காண்ட்ராக்ட் காப்பிக்கு அந்த இந்தா என்றும்,  நம் பெயரில் ஷேர்  சர்டிபிகேட் வர  3, 4 மாதங்கள் ஆகியது, ஆகுமென்றும் சொல்வார்.  பெயர் மாற்றாமல் இருந்தால் தான், விலை ஏறிய உடன் விற்க வசதியாய் இருக்கு மென்றும் சொல்வார்.

சில காலத்திற்கு பிறகு, வாங்கி விற்றதில்  நான் அடைந்த இலாபத்தை விட, அவருக்கு கமிசனாக நான் கொடுத்தது தான் அதிகமாக இருந்தது, இந்நிலை என்னை அதிகமதிகம் படித்து விவரங்களை தெரிந்து கொள்ள தூண்டு கோளாய் அமைந்தது.  சில கம்பனிகளில் நீண்ட  காலத்திற்கு ( ? ) என்று  ஷேர்  வாங்கி, நேம் டிரான்ச்பரும்  செய்து வைத்திருந்தேன்.  அந்த நேரத்தில்  ரூ 18 க்கு  இம்பால் விற்றது ( இன்று ரூ 740 ),  ரெட்டிஸ் லேப்  ரூ 40 இல் இருந்து ரூ 120 கு போனது ( இன்று ரூ 4000 )  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  இவைகளை எல்லாம் வாங்குங்கள் என்று சொன்ன தாக ஞாபகம் இல்லை.  சொல்லி இருந்தால் வாங்கி இருப்பேனா ?   சந்தேகம் தான்  ( அறியாமை ). நம் ஷேர்ஐ விற்க சொன்னால்,  விற்க சொன்ன விலையில் இருந்து ரூ 1, 2 குறைவாக இருக்கும்.   பணம் செட்டில்மெண்ட் செய்வதற்கும் 15 நாட்களுக்கு மேலாகும். நாம்  ஷேர்  வாங்க  ஆர்டர் கொடுத்த மூன்றாவது நாள் பணம் கொடுக்க வேண்டும்.  இப்படி பல வகையிலும்  நிழலான விசயங்கள் நடந்தது. கிடைக்கின்ற ஷேர் சர்டிபிகேட் ஒரிஜினல் தானா ?,  விற்றவரின் கையெழுத்து சரிதானா ?, சரி இல்லை என்றால்  சர்டிபிகேட் கிடைக்க  5, 6  மாத மாகும்.  சில  மெய்ன் ப்ரோகர்கள்,  டுப்ளிகட்  ஷேர் புழக்கதில் விட்டதாகவும்  செய்திகள் புழங்கியது. நெறிப்படுத்தப்பட்ட சந்தை கிடையாது. இந்த நேரத்தில் தான், ஹர்ஷத் மேத்தா குழப்பம், சந்தை சரிந்தது,  அவரால் பல புதிய நெறி முறைகள் இயற்றப்பட்டு, முன்பைவிட பாதுகாப்பானதாய்  சந்தை ஆக்கப்பட்டது.   என்னுடைய  சப் புரோக்கர்,  எங்கே போனார் என்றே தெரியவில்லை,  என்னுடைய  பெயர் மாற்றா ஷேர்  களுடன் தான் !!!!!!!.  மேலே குறிப்பிட்ட இரண்டு பழமொழிக்கும்  இலக்கணமாய் ஆனேன்.

இதே காலகட்டதை  சேர்ந்தவர்களும்,  10, 15 ஆண்டுகள் முன்புள்ளவர்களும் கூட,   இன்று பல கோடி பெறுமானமுள்ள  ஷேர்களுடன்,  எனென்ன கம்பனி ஷேர் இருக்கிறது என்று உடனடியாக சொல்ல முடியாதவர்களாய், இன்றும்  மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  நேரடியாக  J R D டாட்டா, போன்ற முதல் தலைமுறை தொழில் அதிபர்களுடன், A G M இல் கலந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் நீண்ட கால முதலீட்டில் சம்பாதித்தவர்கள் உயிருடன் உதாரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!!!!!!!.  அவர்கள் செய்த ஒரே வேலை,  ஷேர் வாங்கி, பெயர் மாற்றி பத்திரமாக பரணில் வைத்தது தான். ஒருவரின் மனைவி டிவிடன்ட் செக்கை வங்கியில் டெபாசிட் செய்வது சிரமமாக இருக்கிறது என்று சொல்கிறார் !!!!!!!!!!!

10, 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பங்கு சந்தையின் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தேன்.  2008 சந்தையில்  என் இளைய சகோதரர் ரூ 15 லட்சத்தை இழந்தார்.  ஏன்  அவசரப்பட்டு விற்றாய் ? என்று தொடங்கி,  சந்தையின் பழைய நம்பிக்கையின்மையை போன்ற விஷயங்களெல்லாம் சரி செய்யப்பட்டு,  கம்ப்யுடர் மவுசின்  கிளிக்கிலேயே காரியங்களை நடத்திக்கொள்ளலாம் என்று அறிந்து மீண்டும் வந்திருக்கிறேன்.

யாருக்காவது நினைவுகளை கிளறியதா  ?  அப்படியானால் வாருங்கள் பணம் செய்வோம்




No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........