Thursday, September 10, 2015

திருவிளையாடலும், ஐரோப்பிய முஸ்லிம் அடைக்கலமும்

அதிகாரத்திமிர்  தலைக்கேறிவிட்டால், தன்னை வளர விட்டு சகித்துக்கொண்டிருந்த தன் சொந்த மக்களையே கொடுமைப்படுத்தி, சொந்த நாட்டையும் சொத்து சுகங்களையும் விட்டு உயிருக்கு பயந்து ஓடும் நிலைமைக்கு  உருவாக்கி விடும் யதேச்சிகாரியின் கோர தாண்டவத்தை சிரியாவில் கண்டுகொண்டிருக்கிறோம்.

அக்கம் பக்கத்தில் இருக்கிற நாடுகள் சில ஆயிரங்களில் அகதிகளை ஏற்றுக்கொண்டாலும், பல அரபு நாடுகள்  சில ஆயிரம் கோடி பண உதவி செய்தாலும், அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை. ஏற்றுக்கொண்டால் பின்னால் திருப்பி அனுப்புவது என்பது எளிதல்ல  மட்டுமின்றி,  இவர்களின் காரணத்தால் தம் மக்களும்,  கூடுதல் உரிமை வேண்டி போராட தொடங்கினால்,  அதிகார பீடங்களில் இருப்பவர்களின் சொகுசு வாழ்க்கை பறிபோய் விடுமே என்ற உள் உதறல் தான்.

சிறிது, சிறிதாக பல தேசத்து மக்கள்  உயிரை துச்சமாய் மதித்து, பயங்கரங்கள் நிறைந்த வழியாய் இருந்தாலும்,  கடல் பயணம் செய்து  தப்பி பிழைத்து கிரீசையோ, இத்தாலியையோ  அடைந்து விட்டால், அங்கிருந்து  ஐரோப்பிய  யூனியனுக்குள் நுழைவது எளிதென்று  எண்ணி பயணம் செல்வது   புதிதென்று  இல்லாவிட்டாலும்,   சமீப காலங்களில்  மக்கள் வரத்து மிகவும்  அதிகமாகி விட்டது.   அதிலும் சிரியரகளின்  எண்ணிக்கை மிக  அதிக மாகி விட்டது. பல அகதிகள் கண்ணீர் மல்க சொல்லும் கதைகள் கேட்க பரிதாபமாய் இருக்கின்றன.  இந்த  சிரிய அகதிகள் கூட்டத்துடன்,  ஆப்கானிஸ்தான,  ஆப்ரிக்க, பாகிஸ்தானி இன்னும் பல தேசத்து மக்களும் அடக்கம்,  இவர்கள் அகதிகள் என்பதைவிட, பணப்பலன் கருதி, பிழைக்க வழிதேடி வந்தவர்களாகவே தெரிகிறது. சிரிய மக்கள் பால்குடி பச்சிளம் குழந்தைகளை ஏந்தி வருவதை காணும் பொது. நெஞ்சை பிழிவது போலிருக்கிறது,  இம்மாதியான மக்களின் பேட்டி,  பணப்பலன்  என்பதைவிட உயிரச்சம் என்பதையே பறைசாற்றுவதாய் இருக்கிறது.

இத்தாலிய, கிரீசு அரசுகள்  வருகின்ற அகதிகளுக்கு போதுமான அளவிற்கு கழிப்பறைவசதிகளும், உணவு தங்குமிட வசதிகளும் செய்து தரமுடியாத தம் நிலைமையை எடுத்துக்கூறி, மற்ற ஐரோப்பிய கூட்டணி நாடுகளை சுமையை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொண்டும், அவைகள்  கண்டும் காணாமல் இருந்தன.  ஐரோப்பிய யூனியன் சட்டங்கள், இத்தாலிய, கிரீசு அரசுகளின் வேண்டுகோளுக்கு  எதிராக இருந்தாலும்,  மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், மனிதாபிமான அடிப்படையிலும்,  நிலைமையின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு  ஜெர்மனி தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக சொல்லி ஏற்றுக்கொண்டது.

இதில் மிகவும் சிலாகிக்கவேண்டிய விஷயம் என்ன வென்றால், ஜெர்மானிய அரசு மட்டுமின்றி, ஜெர்மன் மக்கள் பலரும் தத்தமது வீடுகளிலும் அடைக்கலம் கொடுப்பது தான்.  இம்மக்களின்  முந்திய தலைமுறையினரா, பல லட்சம் யூத இனமக்களை கொத்துக்கொத்தாய் கொன்று ஒழித்தார்கள் என்று !!!.  இன்றும் கூட இவர்களிடையே,  அக்கொடுமை யில்  பங்கேற்ற ஓரிருவர் வேறுபெயர்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் !!.  பிடிபட்ட சிலரின் வாக்கு மூலங்கள்,  பொது மக்களும்  ஈடுபாட்டோடு  அக்கொடுமைகளை சகித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை உறுதிபடுத்துவனபோல் இருக்கிறது.   இந்த இடத்தில் ஒரு நெருடலான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும்.

ஆதரவற்ற யூத மக்களுக்கு உலகமே ஒன்று திரண்டு, அதிகார பீடத்தில் இருந்த ஹிட்லரை கொன்றொழித்து,  யூதர்கலுக்கென்று  ஒரு  தேசத்தையும், அரபு நாடுகளிடம் இருந்து பிடுங்கி,  உருவாக்கி  கொடுத்தன. உலகெங்கும் அடைக்கலமும் கொடுத்து, பயமின்றி வளர வாழ வகை செய்து கொடுத்தன. இன்று,  அன்று  ஹிட்லரிடம் இருந்தது போன்று அதிகாரம்,  யூதர்களிடம், இஸ்ரேலிடம்.   இஸ்ரேல் உருவான காலத்தில் இருந்து இன்றுவரை, தினமும் சிறுவர், வயோதிகர், பெண்கள் என்று பாராமல் பாலஸ்தீனியர்களை கொன்று ஒழித்து கொண்டிருக்கிறார்கள் !!!!.  கணக்கிட்டால்  ஹிட்லர் கொன்றதை விட, இவர்கள் கூடுதலாக கொன்றிருப்பார்கள் போலிருக்கிறது.  சில நேரங்களில், இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களுக்கு செய்யும்  கொடுமைகளை பார்க்கும் போது,  ஹிட்லர் செய்தது சரிதான் என்று எண்ணத்தோன்றுகிறது.!!!!!   இறைவனின் திருவிளையாடல் இப்படித்தான் உடனடியாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்  போலிருக்கிறது !!!!!!!

முஸ்லிம்களின் இறை  நம்பிக்கை,  என்நிலைமையிலும் மார்க்க நெறிமுறைகளை பேணும் உறுத்திப்பாடு உலகறிந்தது.  அவர்களின் உறுதிப்பாடே சில பெரிய  ஐரோப்பிய  ஊடகவியலார்களின் மத மாற்றத்திற்கு காரணமாய் இருந்திருக்கிறது. ஒருபுறம் கலாச்சார அழிவின் விளிம்பில் இருக்கிற ஜெர்மனி,  முஸ்லிம்களுக்கு  அடைக்கலம் கொடுக்கிறது.  ஜெர்மனியின் பொருளாதாரமோ,  மற்ற  ஐரோப்பிய நாடுகள்  ஜெர்மனியின் சொல்லை செவிசாய்த்து கேட்குமளவில் வைத்திருக்கிறது.  ஒரு சில  முஸ்லிம் அகதிகள்,  ஜெர்மனி திருப்பி அனுப்பிவிடாமல் இருப்பதற்காக  கிறித்துவத்திற்கு மாறி இருக்கிறார்கள், காரணம் இஸ்லாமிய நாடுகளில்  கிறித்துவத்திற்கு மாறினால் மரண தண்டனை கிடைக்கும் என்பதை காரணம் சொல்லி அடைக்கலம் பெறுவதற்காக.  அவர்களை கிருத்துவத்திற்கு மாற்றிய பாதிரியார்,  மதம் மாறியவர்கள், முதல் முறைக்கு பிறகு சர்ச்சுக்கு வருவதே இல்லை என்றும், தான் அதைப்பற்றி கவலை படுவதில்லை என்றும் தெரிவிக்கிறார்.  இந்நிகழ்ச்சிகளின் பின்னணியோ என்னவோ, ஜெர்மன் அதிபர்,  அகதிகளை திருப்பி அனுப்ப மாட்டோம் என்பதாக உறுதி கூறுகிறார். இந்த நிகழ்வுகள் உலகத்தின் என்ன மாற்றத்திற்கு முன்னோட்டமோ ?   எதுவாய் இருந்தாலும் நலமே நடக்கட்டும் 

இறைவா !,  இதயங்களின் அதிபதியே !!,  சர்வத்தின் மீதும் ஆளுமை உடையவனே !!!,  உனது  திருவிளையாடல்கள் யாராலும் அறிந்து கொள்ள முடியாது, ரட்சகனே உலக மக்களையெல்லாம் நன்மையின் பக்கம் நடத்து  வாயாக என்று நானும் வேண்டி, உங்களையும் வேண்ட வேண்டி கொள்கிறேன்.
 

3 comments:

  1. பஸ்ஸில் ஏறினால் பஸ்ஸின் ஒட்டை வழியாக கீழே விழலாம்... இல்லாத ஒன்றிடம் வேண்டினால் எதுவும் நடக்காது என்பதால் நான் வேண்டுவதில்லை..நண்பரே....

    ReplyDelete
  2. பஸ்ஸில் ஏறினால் பஸ்ஸின் ஒட்டை வழியாக கீழே விழலாம்... இல்லாத ஒன்றிடம் வேண்டினால் எதுவும் நடக்காது என்பதால் நான் வேண்டுவதில்லை..நண்பரே....

    ReplyDelete
  3. நண்பரே தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி,
    நான் திண்ணை பள்ளிக்கூடத்துக்காரன், சிந்தனைகலும் அப்படித்தானே இருக்கும். அவரவரின் சிந்தனையும் தனித்தனி தானே ?

    ReplyDelete

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........