இன்றைக்கு ஒரு அரை நூற்றாண்டுகலுக்கெல்லாம் முன்பு பார்த்தோம் என்றால், அடித்தட்டு மக்களுக்கு ஒரு பாது காப்பாக இருந்த ஒரு கட்சி கம்முனிஸ்ட். கட்சிகாரர்கள் என்று இல்லை, யாராகிலும் எந்த பிரச்சினை களுக்கும், அவர்களது கட்சி ஆபிசுக்கு சென்றால் போதும், பாதுகாப்பு தான். ஒவ்வொரு வட்டத்திலும், விவரம் அறிந்த வழக்கறிஞர் ஒருவர் இருப்பார், அவரே வந்து உதவி செய்வார். சம்பந்த பட்டவர்களுக்கு சட்டம் சொல்லி, உரிமையை சொல்லி தருவார், போலீஸ்காரர்கள் கூட கமுனிஸ்ட் தொடர்பு என்றால் யோசித்தே செயல் படுவார்கள். பலருக்கு தனித்து செயல் படுவதை விட கூட்டாக செயல் பட்டால் சக்தி அதிகம் என்று காட்டி தந்தார்கள். ஞாயத்திற்கு போராடுபவர்களாக இருந்தார்கள்.
அண்ணாதுரை முதல்வர் ஆனதும், சிறுக சிறுக தனியார் பஸ் கம்பனிகளை எல்லாம் அரசுடமை ஆக்கினார். லாபம் கொழித்த தொழில் அரசு கைக்கு மாறியது, தொழிலாளிகள் எல்லாம் அரசு ஊழியர் ஆனார்கள். பல்வேறு தொழில் சங்கங்கள் உருவானது. அவர்களுக்கு எது செய்தாலும் நம்மை வேலையை விட்டு தூக்க முடியாது என்ற மமதை தலைக்கேறியது. நீண்ட தூர பயணிகள் A/C பயணக்கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் போது, இடைவழியில் நடத்துனர், டிரைவர் மாறும் போது, சாதாரண கட்டண வண்டிகளில் ஏற்றி விட, A/C கட்டணத்தை திருப்பி தாருங்கள் அல்லது A/C வண்டியில் ஏற்றிவிட சொன்ன பயணிகளை தரக்குறைவாக பேசியது மட்டுமின்றி, கூடுதலாக வாதிட்டவர்களை அடிக்கக்கூட போனார்கள், காரணம் சங்கங்களின் பின் பலம். வண்டியில் இடமிருந்தால், அமர்ந்து பயணம் செய்ய லாயக்கு அற்ற இருக்கை இருந்தாலும், பயணியை ஏற்றிக்கொண்டு டிக்கெட்டும் கொடுத்து, குறை சொல்லி வாதிடும் பயணியுடன் சண்டை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்பொழுது அதிகம் இருந்தது கமுனிஸ்ட் சங்கங்கள் தான், ஞாயம் யார் பக்கம் இருந்தாலும் கட்சி சங்க உறுப்பினர் பக்கமே பேச தொடங்கினார்கள். பல்லாயிரம் ரூபாய் நஷ்டத்தில் ஓடினாலும், தொழிலாளிகளுக்கு சம்பளமும் விழாக்கால போனசும் வேண்டும். பணம் கொழித்த தொழில் இப்படியானதே என்று யாருக்கும் கவலை இல்லை, மக்கள் பணம் என்ன ஆனது என்று கேட்பார் யாரு மில்லை. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்பது போல், அரசு தொட்ட தொழில் எதுவும் விளங்காது என்பதற்கு இலக்கணமாய் ஆகி போனது அரசு போக்குவரத்து கழகங்கள். போக்குவரத்து கழகங்கள் இழக்கும் பணம், அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பணமும் தான் என்று அவர்களுக்கு உணர்த்துவார் யார் ? வருவாயை உயர்த்தி நஷ்டத்தை லாபமாக்கி, கூடுதல் சம்பளமும் போனசும் தாருங்கள் என்று உரிமையோடு கேட்க சொல்லிக்கொடுப்பவர்கள் யாரிருக்கிறார்கள் ?. ஒருவேளை நாளை ஓட்டுபொறுக்கிகள், இழுத்துமூடினால் விட்டு விடுவார்களா ? அவர்களுக்கு சொல்பவர் யார் ?.
தானும் வாழ்க்கையில் ஒரு மனிதனாக வேண்டும், சாதிக்க வேண்டும் என்று சொல்லி, மனைவியின் நகைகளை விற்று, வங்கிகளுக்கு கடன் பெற வென்று நடையாய் நடந்து, தனது வாழ்க்கையையே பணையம் வைத்து தொழில் தொடங்கி, தொழிலாளியோடு தொழிலாளியாய் உழைத்து வளர்ந்த போது, அன்று என் முன்பு சைக்கிளில் வந்தாய் இன்று காரில் வருகிறாய், எனக்கு கூடுதல் சம்பளமும் போனசும் தா, இல்லை என்றால் தொழிலை இழுத்து மூடு என்று சொல்கிற தொழிலாளிக்கு, ஞாயத்தை எடுத்து சொல்லாத கமுநிஸ்ட், தொழில் சங்கங்களே, பழைய கமுநிஸ்ட் களே எங்கே போனீர்கள் ?.
இந்த கம்பனியின் ஒவ்வொரு நட்டும் போல்டும், எனக்கு தெரியும், என் உழைப்பினால் வளர்ந்தது இந்த கம்பனி என்று சொல்லும் தொழிலாளி, உழைப்புக்கு சம்பளம் வாங்க வில்லையா ? தொழில் அறியா உனக்கு தொழில் கற்று தந்து, வேலையும் கொடுத்தவராயிற்றே ? தொழில்முனைவர் தன வாழ்க்கையையே பணயம் வைத்தாரே ? ஊன் உறக்கம் இன்றி சுற்றி அலைந்து நீ உருவாக்கிய பொருளை விற்று காசாக்க அலைந்தாரே ? உனக்கு சரியான நேரத்தில் சம்பளமும் தந்தாரே ? என்று ஞாயம் உரைக்க ஏன் மறந்தீர் காம்ராட்களே ? உன்னை வேலைக்கு தான் சேர்த்தார் பங்காளியாக அல்ல என்று சொல்ல ஏன் தயங்கு கிறீர்கள் ! இப்படி மூடிக்கிடக்கின்ற, அழியும் நிலையில் இருக்கிற தொழில்கள எத்தனை ?
வலது, இடது என்று மட்டுமே என் போன்ற அனுதாபிகள் அறிந்த கம்முநிஸ்ட் இன்று எத்தனை வகை ? ஒற்றுமையாய் போராடுவதன் மேன்மையை உணர்த்தியவர்கள் இன்று, சிறு சிறு குழுவாய் ஆகி போனீர்களே ? படித்த பல அனுதாபிகள், நாட்டில் தொழில் கெட்டதிற்கு, கமுநிஸ்ட் களும் சங்கங்களும் தான் என்று பொறுமும் அவப்பெயரை நீக்க முயல மாட்டீர்களா ?
கோவன் என்றொரு நட்சத்திரம் உதித்துத்தான் இருக்கிறது, போதாது. சட்டம் இருக்கிறது சட்டபுத்தகங்களிலே, உறங்கி கிடக்கிறது, உயிரூட்ட பொது நல வழக்கு தொடர்ந்து உயிரூட்ட, தன்னலமற்ற வழக்குரைஞர்கள் எங்கே?. தேடி கண்டுபிடித்து முன்னிறுத்த மாட்டீர்களா ?. கட்சி சார்பற்ற அனுபவம் மிக்கவர்களை அடியாளம் காட்டுங்களேன்.
இன்று நாட்டில் உங்களுக்கான தேவை அதிகமிருக்கிறது, ஒன்று சேருங்கள், தொழிலாளி வர்க்கத்துக்கு உண்மையை உரக்க சொல்லி உணர வையுங்கள் , தொழில் துறையை மேன்மையாக்கி நாடும் நாமும் நலம்பெற வளம்பெற முயலுங்கள், உண்மையான சுயநல மற்ற கமுநிஸ்ட் டால் தான் இது முடியும் !!!!!, வீறு நடை கொண்டு ஒன்று பட்டு எழுந்து வாருங்கள் தோழர்கள
அண்ணாதுரை முதல்வர் ஆனதும், சிறுக சிறுக தனியார் பஸ் கம்பனிகளை எல்லாம் அரசுடமை ஆக்கினார். லாபம் கொழித்த தொழில் அரசு கைக்கு மாறியது, தொழிலாளிகள் எல்லாம் அரசு ஊழியர் ஆனார்கள். பல்வேறு தொழில் சங்கங்கள் உருவானது. அவர்களுக்கு எது செய்தாலும் நம்மை வேலையை விட்டு தூக்க முடியாது என்ற மமதை தலைக்கேறியது. நீண்ட தூர பயணிகள் A/C பயணக்கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் போது, இடைவழியில் நடத்துனர், டிரைவர் மாறும் போது, சாதாரண கட்டண வண்டிகளில் ஏற்றி விட, A/C கட்டணத்தை திருப்பி தாருங்கள் அல்லது A/C வண்டியில் ஏற்றிவிட சொன்ன பயணிகளை தரக்குறைவாக பேசியது மட்டுமின்றி, கூடுதலாக வாதிட்டவர்களை அடிக்கக்கூட போனார்கள், காரணம் சங்கங்களின் பின் பலம். வண்டியில் இடமிருந்தால், அமர்ந்து பயணம் செய்ய லாயக்கு அற்ற இருக்கை இருந்தாலும், பயணியை ஏற்றிக்கொண்டு டிக்கெட்டும் கொடுத்து, குறை சொல்லி வாதிடும் பயணியுடன் சண்டை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்பொழுது அதிகம் இருந்தது கமுனிஸ்ட் சங்கங்கள் தான், ஞாயம் யார் பக்கம் இருந்தாலும் கட்சி சங்க உறுப்பினர் பக்கமே பேச தொடங்கினார்கள். பல்லாயிரம் ரூபாய் நஷ்டத்தில் ஓடினாலும், தொழிலாளிகளுக்கு சம்பளமும் விழாக்கால போனசும் வேண்டும். பணம் கொழித்த தொழில் இப்படியானதே என்று யாருக்கும் கவலை இல்லை, மக்கள் பணம் என்ன ஆனது என்று கேட்பார் யாரு மில்லை. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்பது போல், அரசு தொட்ட தொழில் எதுவும் விளங்காது என்பதற்கு இலக்கணமாய் ஆகி போனது அரசு போக்குவரத்து கழகங்கள். போக்குவரத்து கழகங்கள் இழக்கும் பணம், அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பணமும் தான் என்று அவர்களுக்கு உணர்த்துவார் யார் ? வருவாயை உயர்த்தி நஷ்டத்தை லாபமாக்கி, கூடுதல் சம்பளமும் போனசும் தாருங்கள் என்று உரிமையோடு கேட்க சொல்லிக்கொடுப்பவர்கள் யாரிருக்கிறார்கள் ?. ஒருவேளை நாளை ஓட்டுபொறுக்கிகள், இழுத்துமூடினால் விட்டு விடுவார்களா ? அவர்களுக்கு சொல்பவர் யார் ?.
தானும் வாழ்க்கையில் ஒரு மனிதனாக வேண்டும், சாதிக்க வேண்டும் என்று சொல்லி, மனைவியின் நகைகளை விற்று, வங்கிகளுக்கு கடன் பெற வென்று நடையாய் நடந்து, தனது வாழ்க்கையையே பணையம் வைத்து தொழில் தொடங்கி, தொழிலாளியோடு தொழிலாளியாய் உழைத்து வளர்ந்த போது, அன்று என் முன்பு சைக்கிளில் வந்தாய் இன்று காரில் வருகிறாய், எனக்கு கூடுதல் சம்பளமும் போனசும் தா, இல்லை என்றால் தொழிலை இழுத்து மூடு என்று சொல்கிற தொழிலாளிக்கு, ஞாயத்தை எடுத்து சொல்லாத கமுநிஸ்ட், தொழில் சங்கங்களே, பழைய கமுநிஸ்ட் களே எங்கே போனீர்கள் ?.
இந்த கம்பனியின் ஒவ்வொரு நட்டும் போல்டும், எனக்கு தெரியும், என் உழைப்பினால் வளர்ந்தது இந்த கம்பனி என்று சொல்லும் தொழிலாளி, உழைப்புக்கு சம்பளம் வாங்க வில்லையா ? தொழில் அறியா உனக்கு தொழில் கற்று தந்து, வேலையும் கொடுத்தவராயிற்றே ? தொழில்முனைவர் தன வாழ்க்கையையே பணயம் வைத்தாரே ? ஊன் உறக்கம் இன்றி சுற்றி அலைந்து நீ உருவாக்கிய பொருளை விற்று காசாக்க அலைந்தாரே ? உனக்கு சரியான நேரத்தில் சம்பளமும் தந்தாரே ? என்று ஞாயம் உரைக்க ஏன் மறந்தீர் காம்ராட்களே ? உன்னை வேலைக்கு தான் சேர்த்தார் பங்காளியாக அல்ல என்று சொல்ல ஏன் தயங்கு கிறீர்கள் ! இப்படி மூடிக்கிடக்கின்ற, அழியும் நிலையில் இருக்கிற தொழில்கள எத்தனை ?
வலது, இடது என்று மட்டுமே என் போன்ற அனுதாபிகள் அறிந்த கம்முநிஸ்ட் இன்று எத்தனை வகை ? ஒற்றுமையாய் போராடுவதன் மேன்மையை உணர்த்தியவர்கள் இன்று, சிறு சிறு குழுவாய் ஆகி போனீர்களே ? படித்த பல அனுதாபிகள், நாட்டில் தொழில் கெட்டதிற்கு, கமுநிஸ்ட் களும் சங்கங்களும் தான் என்று பொறுமும் அவப்பெயரை நீக்க முயல மாட்டீர்களா ?
கோவன் என்றொரு நட்சத்திரம் உதித்துத்தான் இருக்கிறது, போதாது. சட்டம் இருக்கிறது சட்டபுத்தகங்களிலே, உறங்கி கிடக்கிறது, உயிரூட்ட பொது நல வழக்கு தொடர்ந்து உயிரூட்ட, தன்னலமற்ற வழக்குரைஞர்கள் எங்கே?. தேடி கண்டுபிடித்து முன்னிறுத்த மாட்டீர்களா ?. கட்சி சார்பற்ற அனுபவம் மிக்கவர்களை அடியாளம் காட்டுங்களேன்.
இன்று நாட்டில் உங்களுக்கான தேவை அதிகமிருக்கிறது, ஒன்று சேருங்கள், தொழிலாளி வர்க்கத்துக்கு உண்மையை உரக்க சொல்லி உணர வையுங்கள் , தொழில் துறையை மேன்மையாக்கி நாடும் நாமும் நலம்பெற வளம்பெற முயலுங்கள், உண்மையான சுயநல மற்ற கமுநிஸ்ட் டால் தான் இது முடியும் !!!!!, வீறு நடை கொண்டு ஒன்று பட்டு எழுந்து வாருங்கள் தோழர்கள
No comments:
Post a Comment
தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........