Wednesday, April 23, 2014

அல்லாஹ்வின் கருணை மழையில் ஆஸ்திரேலிய சகோதரிகள்

அஸ்ஸலாமு அலைக்கும்,  வரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹூ

சகோதரர்களே,

                            அல்லாஹ் சுப்ஹானஹுவத்தாலாவின் 

செயல்பாடுகளை,  அவன் நாடியவர்களித்தவிர,  வேறு யாராலும்

விளங்கிக்கொள்ளவே இயலாது என்பதை மீண்டும்,  மீண்டும்  மனிதர்களுக்கு 

உணர்த்தும்  முகமாக  பல்வேறு நிகழ்வுகளை அல்லாஹ் 

நிகழ்த்திக்கொண்டே இருக்கிறான்.

                             அமெரிக்காவில்,  ட்வின்  டவர்ஸ்  தரை மட்ட மாக்கப்பட்டதும் 

உலகமெல்லாம்,  இஸ்லாமிய  எதிர் பிரச்சாரம்,   மீடியாக்கள் எல்லாம்  ஒன்று

கூடி இஸ்லாத்திற்கு  எதிராக எழுதி தீர்த்தன.  இதையே காரணமாக வைத்து,

பல்லாயிரம் மக்களுக்கு ஹிதாயத்தின் கதவுகளை அல்லாஹ் திறந்தான்.

                             செயிதினா முஹம்மது  சல்லலாஹு அலைஹிவசல்லம்

வர்களை தூற்றி  திரைப்படம் எடுத்த ஆளை,  ஹிதாயத் பெறச்செய்தான். 

இப்படி பல்வேறு நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.  யாரெல்லாம் 

மிகவும் தீவிரமான முறையில் அல்லாஹ்வையும், அவனது ரசூலையும் 

விமர்சிக்கிறார்களோ,  அவர்களுக்கு  ஹிதாயத்தின்  கதவுகளை விரைந்து

திறப்பான் போலும்.  சுபஹானல்லாஹ்.

                              மேலை நாடுகளில்,  இன்று அலை, அலையாக மக்கள் 

இஸ்லாத்தில் இணைகிறார்கள்.  காலம், காலமாக சுயமாக, சிந்திக்க 

பழக்கப்படுத்தப்பட்ட மக்கள்,  தங்கள் பழைய மார்க்கத்தில்,  பதில் கிடைக்காத 

பல விஷயங்கள்,  இம்மார்க்கத்தில் விளங்கக்கானக்கிடப்பதாக சொல்லி

 விளங்கி  இஸ்லாத்தில்  இணைகின்றனர்.  தலைமுறை,

தலைமுறையாய்  முஸ்லிம்கள்  என்று சொல்லிக்கொள்கிற  நம்

 போன்றவர்களின்  ஈமானும், மார்க்க அறிவும்,  அவர்கள்  முன்பு ஒன்றுமே

 இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது.   ஆஸ்திரேலியாவில்

  நடந்து கொண்டிருக்கிற மாற்றத்தை  காணுங்கள்.

                   

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........